என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » india meteorological department
நீங்கள் தேடியது "India Meteorological Department"
கேரளாவில் வருகிற 29-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதை வானிலை ஆய்வு மையம் கண்டறிந்ததுள்ளது. #Kerala #SouthWestMonsoon
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும்.
இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படி, வருகிற 29-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதை வானிலை ஆய்வு மையம் கண்டறிந்தது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.
அந்தமான் கடல் பகுதியிலும் தென்கிழக்கு வங்கக்கடலிலும் மழைக்கான அறிகுறிகள் உருவாக தொடங்கி உள்ளது. 23-ந் தேதிக்கு பிறகு இது தெளிவாக தெரிய வரும். அதன் பிறகு 29-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்பு தமிழகம், ஒடிசா மாநிலங்களிலும் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும். ஒடிசாவில் ஜூன் மாதம் 10-ந்தேதியும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஜூன் மாதம் 2-வது வாரத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வால்பாறை, அவலாஞ்சி, பாஞ்சிடபால் பகுதிகளிலும் புலிகள் சரணாலய காடுகளிலும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி வனப்பகுதியில் இப்போது காணப்படும் சீதோஷ்ணத்தால் இங்கு மழைக்கான அறிகுறி தென்படுவதாக நீலகிரி வனப்பகுதி ரேஞ்சரும் தெரிவித்தார். #Kerala #SouthWestMonsoon
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும்.
இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படி, வருகிற 29-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதை வானிலை ஆய்வு மையம் கண்டறிந்தது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.
அந்தமான் கடல் பகுதியிலும் தென்கிழக்கு வங்கக்கடலிலும் மழைக்கான அறிகுறிகள் உருவாக தொடங்கி உள்ளது. 23-ந் தேதிக்கு பிறகு இது தெளிவாக தெரிய வரும். அதன் பிறகு 29-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
வானிலை மைய கணிப்புப்படி இது 4 நாட்கள் முன்னதாக அல்லது 4 நாட்களுக்கு பிறகு பெய்யத் தொடங்கும். இந்த அறிகுறிகள் மூலம் கேரளாவில் 3 நாட்கள் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வால்பாறை, அவலாஞ்சி, பாஞ்சிடபால் பகுதிகளிலும் புலிகள் சரணாலய காடுகளிலும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி வனப்பகுதியில் இப்போது காணப்படும் சீதோஷ்ணத்தால் இங்கு மழைக்கான அறிகுறி தென்படுவதாக நீலகிரி வனப்பகுதி ரேஞ்சரும் தெரிவித்தார். #Kerala #SouthWestMonsoon
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X