என் மலர்
நீங்கள் தேடியது "Inauguration"
- திருப்பூரின் மிக முக்கிய ஜூவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் ஜூவல்லரி மாறி இருக்கிறது.
- தங்க மாங்கல்யம் எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியது.
திருப்பூர் :
தங்கமயில் ஜூவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை பதித்துள்ளது. ஆடை உலகம் திருப்பூர் விரும்பும் ஆபரண உலகமாக திகழும் தங்கமயில் ஜூவல்லரி மிகச்சிறந்த நகைகளை மிகக்குறைந்த சேதாரத்தில் வழங்கி வருகிறது.
ஆகையால் திருப்பூரின் மிக முக்கிய ஜூவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் ஜூவல்லரி மாறி இருக்கிறது. தற்போது திருப்பூர் தங்கமயில் ஜூவல்லரி முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜுவல்லரி திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு தங்கமயில் ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்த தாஸ், இணை நிர்வாக இயக்குனர்கள் பா.ரமேஷ், என்.பி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தொழில் அதிபர் பாண்டீஸ்வரன் ரத்தினம்மாள் திறந்து வைத்தார். தொழிலதிபர்கள் ரமணி ரமேஷ், சோபியா பரமேஸ்வரன், திவ்யா ரமேஷ், ரஜினிகாந்த், கிராம நிர்வாக அதிகாரி சித்ரா விஜயராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.
திறப்பு விழாவின் மிக முக்கிய அம்சமாக தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் தங்க மாங்கல்யம் எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியது.
- சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பாண்டியர் 12-வது வார்டில் குப்பை வளமீட்பு மைய கட்டிட திறப்பு விழா நடந்தது.
- நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட மருது பாண்டியர் 12-வது வார்டில் மத்திய மானிய நிதிகுழு திட்டத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிட்டில் குப்பை வள மீட்பு மைய புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
இதில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேலிங் எந்திரத்தின் மூலம் மக்காத நெகிழித்தாள்களை சுருக்கம் செய்து அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர அமைப்பு அலுவலர் திலகவதி, துப்புரவு ஆய்வாளர் மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார், ஆறு சரவணன், ராம்தாஸ், பொதுப்பணி மேற்பார்வையாளர் உலகநாதன், ஒப்பந்ததாரர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி திறப்பு விழா நடந்தது.
- போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்கிறது என விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு சட்டக்கல்லூரிகாரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதை அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி வரவேற்றார்.
இதில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அன்று நான் டெல்லியிலிருந்து சிவகங்கையை பார்க்கிறேன் என்று சொன்னார். இன்று சிவகங்கையில் இருந்து கொண்டு டெல்லியையும் பார்க்கிறார். சிவகங்கையையும் பார்க்கிறார். சிவகங்கை மண்ணுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற பணியாற்றி வருவது, அவரை விட நாங்கள் இன்னும் உற்சாகத்தோடு பணியாற்ற வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறது. காரைக்குடிக்கு சட்டக்கல்லூரி வந்திருப்பதற்கு முழு காரணம் ப.சிதம்பரம்தான்.
என்னுடைய மாவட்டத்திற்கு கொண்டு வர முடியாவிட்டாலும் பக்கத்து மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நல்ல கல்லூரி கிடைக்க வேண்டும் என்றால் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். மதிப்பெண்கள்தான் மதிப்பை உயர்த்தும். இல்லையென்றால் பெற்றோரின் பர்சுதான் காலியாகும். அரசு கல்லூரியில் 10 ஆயிரம் ரூபாயில் படிப்பை முடித்து சென்று விடலாம். ஸ்காலர்ஷிப் இருந்தால் அந்த பணமும் திரும்ப கிடைத்து விடும். தனியார் கல்லூரியில் பல லட்சங்களை செலவு செய்ய வேண்டிவரும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பு சட்ட படிப்பு என்றார்.
அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மாணவர்கள் அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும் என்ற அடிப்படையில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சட்டக்கல்லூரியின் தேவை அத்தியாவசியமானதாக திகழ்கிறது.
பொறியியல், மருத்துவ படிப்புக்கு இணையாக சட்ட படிப்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது, என்றார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15-வது அரசு சட்டக்கல்லூரியான இதில் 80 இடங்கள் ஒதுக்கப்பட்டு முதல் கவுன்சிலிங் முடிந்து முதல் கட்டமாக 22 மாணவர்கள் குறிப்பாக சிவகங்கை, புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இன்று சேர்ந்துள்ளனர்.
போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்கிறது. சட்ட கல்வி பயின்ற பெண்கள் அதிக அளவில் நீதிபதிகளாக உள்ளனர். இதுபோன்று இன்னும் புதிதாக பல்வேறு கல்லூரிகள் இந்த ஆட்சியில் தொடங்கப்பட வேண்டும்.
விரைவில் கட்டிடப் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க விரும்புகிறேன் என்றார்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோரும் பேசினர்.
அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக்சோலை, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் மற்றும்
உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழில் வணிக கழகத்தினர், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், தி.மு.க.- காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கல்லூரின் தனி அலுவலர் ராமபிரான் ரஞ்சித்சிங் நன்றி கூறினார்.
- உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் ஷோஹோ நிறுவனம் இணைந்து புல்லுக்காட்டு வலசையில் கிராமிய சேவை திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
- திட்டத்தில் மனநல ஆலோசனை முகாம், மருத்துவமுகாம், ஆரோக்கியம் மேம்பாட்டு முகாம், சுற்றுப்புற சுகாதார முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை நடைபெற்றது.
தென்காசி:
உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் ஷோஹோ நிறுவனம் இணைந்து புல்லுக்காட்டு வலசையில் கிராமிய சேவை திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஷோஹோ நிறுவன முதன்மை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்கினார்.
உலக சமுதாய சேவா சங்க திருநெல்வேலி மண்டல தலைவர் அண்ணாமலையார் வரவேற்றார்.
ஷோஹோ நிறுவன அலுவலர் கீர்த்தி வாசன், உலக சமுதாய சேவா சங்க இணை இயக்குனர்கள் ராசாசுடலைமுத்து, பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் குருரங்கதுரை, திருநெல்வேலி மண்டல செயலாளர் அரசுஈஸ்வரன், மண்டல துணைத் தலைவர் சுடலையாண்டி, குற்றாலம் மனவள கலை மன்ற செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேவா சங்க இயக்குனர் முருகானந்தம் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி மற்றும் பலர் பேசினர்.
அருமைக்கலை க்காரியாலயம் குழுவினரின் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் குணராமநல்லூர் பஞ்சாயத்து தலைவி சுபா சக்தி, கீழப்பாவூர் யூனியன் துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன்னுத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தில் மனநல ஆலோசனை முகாம், மருத்துவமுகாம், ஆரோக்கியம் மேம்பாட்டு முகாம், சுற்றுப்புற சுகாதார முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை நடைபெற்றது.
- விளை பொருள்களை நியாயமான விலைக்கு விற்று பயன்பெறலாம்.
- குன்னத்தூா், தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தன.
குன்னத்தூர் :
குன்னத்தூரில் ரூ.3.75 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, குன்னத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தாா். இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசியதாவது: - தமிழக முதல்வரால் திறக்கப்பட்டுள்ள இந்த விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தங்களுடைய விளை பொருள்களை இடைத்தரகா்களின் குறுக்கீடு இன்றி நியாயமான விலைக்கு விற்று பயன்பெறலாம். விலை வீழ்ச்சி காலங்களில் விளைபொருள்களை கிடங்கில் இருப்புவைத்து பொருளீட்டு கடன் பெறலாம். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குன்னத்தூா், தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மட்டுமே வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தன.தற்போது குன்னத்தூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சொந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.அதிலும் சேமிப்பு கிடங்கு, பரிவா்த்தனை கூடம், உலா்களம், அலுவலக கட்டடம், சுகாதார வசதி, சுற்றுச்சுவா் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ளாா் என்றாா்.
இதைத்தொடா்ந்து, 2 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மானிய விலையில் மின்கல ெதளிப்பான்கள், ரூ. 6 ஆயிரம் மதிப்பில் விதை, உரங்கள் உள்ளிட்டவைகளை அமைச்சா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன், வேளாண் இணை இயக்குநா் சின்னச்சாமி, வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சண்முக சுந்தரம், திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் பாலசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- முதல்கட்டமாக 609 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆணையை அமைச்சர் வழங்கினார்.
- திருப்பூர் மாவட்டத்தில் 2014 பேர் பயன் பெற கண்டறியப்பட்டுள்ளனர்.
பல்லடம் :
அரசுப்பள்ளிகளில் படித்து தற்போது உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்ட தொடக்க விழா பல்லடம் அருகே அருள்புரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதல்கட்டமாக 609 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 க்கான ஆணையை வழங்கி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 2014 பேர் பயன் பெற கண்டறியப்பட்டுள்ளனர். அதில் முதல் கட்டமாக 609 மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மாணவிகளின் வங்கி சேமிப்பு கணக்கிற்கு அந்த தொகை அரசால் செலுத்தப்பட்டுவிடும். ஒரு பெண் உயர் கல்வி கற்பதின் மூலம் அக்குடும்பமே முன்னேற்றம் அடையும் என்கிற தொலைநோக்கு சிந்தனையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பெண் கல்வி வளர்ச்சி அடையும், எதிர்கால சமுதாயம் மேம்பாடு அடையும் என்றார்.விழாவில் திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம் , பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி,பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், மாணவிகள்,பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் மாவட்ட சமூக நல துறை அலுவலர் அம்பிகா நன்றி கூறினார்.
- புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளைத் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனா்.
- புதிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.
உடுமலை :
திருப்பூா் மாவட்டம் உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தனா். அதேபோல தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டுமானப் பணிகளையும் தொடங்கிவைத்தனா். முன்னதாக, தாராபுரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கான கட்டட கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் ஜஷ்வந்த் கண்ணன், உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வா் ஆா்.ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
- 1.50 டன் குப்பைகள் அவினாசியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் கொண்டு செல்லப்பட்டு உரங்களாக தயாரிக்கப்படுகிறது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஓட்டல், பேக்கரி, தள்ளுவண்டி கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பெறப்படுகிறது.
தினமும் 11.50 டன்குப்பைகள் அவினாசியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரம், மண்புழு உரம் ஆகிய உரங்களாக தயாரிக்கப்படுகிறது. தரமான இந்த உர விற்பனையை அவினாசி பேரூராட்சி அலுவலகம் மற்றும் வளம் மீட்பு பூங்காவில் பேரூராட்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) கணேசன், அவினாசி பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி, செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இது குறித்து பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி கூறுகையில், வளம் மீட்பு பூங்கா, மற்றும் பேரூராட்சி அலுவலகத்தின் மூலம் உரவிற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மாடி தோட்டம், வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் மண்புழு உரம் 5 கிலோ 50 ரூபாய், இயற்கை உரம் 10 கிலோ 50 ரூபாய் என பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
பேரூராட்சி அலுவலகம் மற்றும் வளம் மீட்பு பூங்காவில் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த இயற்கை உரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என்றார்.
- தூய்மை திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
- ‘‘நம்ம ஊரு சூப்பரு’’ தூய்மை திட்டம் மற்றும் சுகாதாரப் பணிகள் தொடக்க விழா நடந்தது.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி யூனியன் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் தமிழக அரசின் ''நம்ம ஊரு சூப்பரு'' தூய்மை திட்டம் மற்றும் சுகாதாரப் பணிகள் தொடக்க விழா நடந்தது. யூனியன் தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமை தாங்கினார்.
ஆணையாளர் கண்ணன், துணை ஆணையாளர் தெய்வராமன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, துணைத்தலைவர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி பன்னீர்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் மற்றும் தெருக்களில் சாக்கடை, குப்பைகளை அப்புறப்படுத்துவது, கிராமத்தை சுகாதார முறையில் வைத்துக் கொள்வது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
- பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் கைப்பேசி செயலி தொடக்கவிழா நடைபெற்றது
- அமைச்சர் சிவசங்கா் தொடங்கிவைத்தார்
அரியலூா்:
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவா்கள், பணியாளா்களின் வருகையை முக அங்கீகார முறையில் பதிவு செய்யும் கைப்பேசி செயலி தொடக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து செயலியைத் தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் பேசியது:
நான் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சராக இருந்தபோது மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தியதன்பேரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியானது மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 32 விடுதிகளில் மாணவா்கள், பணியாளா்களின் வருகையை பதிவு செய்யும் என்றாா்.