search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Erode district"

    • ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவில் தற்போது 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
    • இதுவரை மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 677 நபர்கள் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் அணைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 10 தாலுகாவில் தற்போது 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    இதில் மலைப்பகுதியில் மட்டும் 9 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆம்பு லன்ஸ் தேவை தொடர்பாக அழைப்பு பெறப்பட்டதில் இருந்து 8 முதல் 14 நிமிடங்களில் நகர்புறம் மற்றும் கிராமபுற ங்ககளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இந்த நேரத்தை மேலும் குறைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறியதாவது:

    108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 677 நபர்கள் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதிலும் குறிப்பாக 84 ஆயிரத்து 105 கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 1 லட்சத்து 992 பேர் சாலை விபத்திற்காக உபயோகித்துள்ளனர்.

    இதில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பினி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு 709 குழந்தைகள் ஆம்புலன்சில் பிறந்துள்ளன.

    இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்ப தற்காக வெண்டிலேட்டர் ஈ.சி.ஜி மானிட்டர் போன்ற அதிநவீன கருவிகள் ஈரோடு மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லுரி ஆம்புல ன்ஸ்களில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    பிறந்த 28 நாட்களுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தை கள் ஆம்புலன்ஸ் ஈரோடு மற்றும் கோபிசெட்டி பாளையம் மருத்துவ மனையில் இன்குபேட்டர் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 40-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழ ந்தைகள் காப்பாற்றபட்டு வருகின்றனர்.

    108 சேவையை இன்னும் செம்மைபடுத்த வேண்டும் என்பதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. கர்ப்பிணி பெண்கள் இலவசமாக இச் சேவையை 24 மணி நேரமமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஹாட்ஸ்பாட் எனும் அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து வாகன விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது.
    • இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. அனல் காற்று அதிக அளவில் இருந்ததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

    இந்நிலையில் மாலை 5:45 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. இதைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 20 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    இதேபோல் கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவானது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி -24, ஈரோடு -19, நம்பியூர் -14, கவுந்தப்பாடி -10.20, பெருந்துறை -8, குண்டேரிபள்ளம் -6, பவானிசாகர் -2.

    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11, 626 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 380 மாணவ மாணவிகள் எழுதினர்.
    • ஈரோடு மாவட்டத்தில் 93.85, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.45 என மொத்தம் 95.72 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ் -2 தேர்வுகள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மே மாதம் கடைசி வாரத்தில் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணியும் முடிவடைந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை பிளஸ்- 2 தேர்வுகள் முடிவுகள் வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11, 626 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 380 மாணவ மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 93 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 329 பேரும் என மொத்தம் 21, 422 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.85, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.45 என மொத்தம் 95.72 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 108 அரசு பள்ளிகளை சேர்ந்த 4696 மாணவர்களும், 5839 மாணவிகள் என மொத்தம் 10,535 பேர் பிளஸ்- 2 பொது தேர்வை எழுதினர். இதில் 4158 மாணவர்களும், 5,597 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95.86, மொத்த தேர்ச்சி விகிதம் 92.60 சதவீதமாகும்.

    பிளஸ் 2 பொதுத் தேர்வை 36 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 35 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளை எளிதில் அறியும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    மாணவ மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் செல்போனுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது. 

    ×