search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "immunity"

    • இது விலை குறைந்த சத்து மிக்க பழம்.
    • இது எலுமிச்சை குடும்ப வகையை சேர்ந்தது.

    சாத்துக்குடி இனிப்பும் புளிப்பும் நிறைந்த, விலை குறைந்த சத்து மிக்க பழம். இது எலுமிச்சை குடும்ப வகையை சேர்ந்தது. இந்த சிட்ரஸ் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இது உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவதோடு மட்டுமின்றி, உடலைக் குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்கிறது.இந்த சிட்ரஸ் பழத்தில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. இருப்பினும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்-சி என நிறைவான சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

    இந்த பழத்தின் சிறப்பு, இதில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு பெரிய அளவு சாத்துக்குடியில் அதிகபட்சமாக 43 கலோரிகள் இருக்கும். எடையைக் குறைக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், உங்கள் டயட்டில் சாத்துக்குடி ஜூஸை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உடல் எடை வேகமாகவும், ஆரோக்கியமான முறையிலும் குறைவதைக் காணலாம்.

    சாத்துக்குடி உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம். உடல், நீர் பற்றாக்குறையை சந்திக்கும் போது அதிக களைப்பை உணரும். அப்போது களைப்பை தீர்க்கும் பானமாகவும், ஆற்றல் தரும் பானமாகவும் சாத்துக்குடி ஜூஸ் இருக்கும்.

    தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப் பதன் மூலம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். இதில் இருக்கும் வைட்டமின்-சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நமது உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வைட்டமின்-சி அத்தியாவசியமானது என்பதால், அடிக்கடி சாத்துக்குடி ஜூஸ் குடித்து உடலை ஆற்றலாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள்.

    அல்சர், நீரிழப்பு, செரிமான பிரச்சினைகளை குணப்படுத்தும் சக்தி சாத்துக்குடிக்கு உண்டு. மேலும் கண்களை பாதுகாக்கவும் உதவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

    செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.

    செர்ரி பழம் அனைவருக்கும் பிடித்தமானது. புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். ஆழமான சிவப்பு நிறத்தை உடையது. செர்ரிகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை இழப்பிற்கு ஏற்றது.

    மேலும் வைட்டமின் சி, ஏ மற்றும் கே போன்றவைகள் காணப்படுகிறது. பொட்டாசியம், மெக்னீசியம் கால்சியம், பீட்டா கரோட்டீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதிலுள்ள வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பொட்டாசியம் தசைகளின் சுருக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.

    செர்ரிகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் காணப்படுகின்றன. இவை உயிரணுக்களுக்கு ஏற்படும் அன்றாட சேதத்தை சமாளிக்க உதவுகிறது. மேலும் செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.

    செர்ரி பழங்களை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். செர்ரி பழத்தில் வைட்டமின் 'ஈ' நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண விரும்புபவர்கள் செர்ரி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.

    தலைமுடி உதிர்வு, இளநரை, பொடுகு போன்ற பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதில் செர்ரி பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும், செர்ரி பழங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

    • இது ஏழைகளின் பழம் எனவும் அழைக்கப்படுகிறது.
    • இப்பழத்தில் கொட்டைப்பகுதியை சுற்றி சதைப்பகுதி இருக்கும். இது மிகவும் சுவை மிகுந்தது.

    https://www.maalaimalar.com/healthஆப்பிள், திராட்சையை விட இலந்தை பழம் அதிக சத்துக்களை உடையது. அதிக ஊட்டச்சத்து கொண்ட இந்த பழத்தின் விலை மிக குறைவு என்பதால் ஏழைகளின் பழம் எனவும் அழைக்கப்படுகிறது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருப்பதால் நினைத்தாலே நாவில் உமிழ்நீர் சுரக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். இப்பழத்தில் கொட்டைப்பகுதியை சுற்றி சதைப்பகுதி இருக்கும். இது மிகவும் சுவை மிகுந்தது.

    இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டிற்கு முன்பே இருந்துள்ளது. இதன் வேர், இலை, பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது. ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இதை சாப்பிட்டால் மன அமைதி ஏற்படுவதுடன் ஆழ்ந்த உறக்கமும் வரும்.

    இதை சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கிறது. உடல் சூட்டை போக்கி குளிர்ச்சியை தருகின்றது. பஸ்சில் செல்லும்போது சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் வரும். இதை தவிர்க்க இலந்தை பழம் சாப்பிடலாம். உடல் வலியும் நீங்கும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அவஸ்தைகளை தடுக்கும் மருந்தாகவும் இலந்தை பழம் பயன்படுகிறது.

    நமக்கு பல வழிகளிலும் நன்மை தரும் இந்த பழத்தினை அளவுக்கு மீறியும் உண்ணக் கூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு மாறுபடும். பழம் விலை குறைவு என்று அலட்சியம் காட்டாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தை பழத்தை கிடைக்கும் காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள். சந்தோஷமாக இருங்கள்...!

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு உறுப்போ ஒரு தசையோ ஒரு செல்லோ மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லை.
    • நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள நாம் என்ன செய்வது என்று கீழ்வருமாறு பார்ப்போம்.

    வெளியே மழை பொழிகிறதோ வெயில் அதிகமாக காய்கிறதோ இல்லை குளிர் உடலைத் தாக்குகிறதோ. நாம் மழையையோ வெயிலையோ குளிரையோ நிறுத்த முடியாது. ஆனால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள குடை பிடித்துக் கொள்கிறோம், நிழலை தேடுகிறோம் மற்றும் கம்பளி உடைகளை அணிந்து கொள்கிறோம்.. அதைப் போலத்தான் நம்மை சுற்றிலும் வைரஸ் பாக்டீரியா ஃபங்கஸ் போன்ற நோய் தொற்று கிருமிகள் இருக்கின்றன அவையெல்லாம் நம் மூச்சுக்காற்று மூலமாகவும், உணவு தண்ணீர் மூலமாகவும் நம் உடலுக்குள் சென்று கொண்டு தான் இருக்கும். இந்த கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்க இதற்காகத்தான் இயற்கை ஒரு அரணை நமக்கு கொடையாக கொடுத்துள்ளது. அதுதான் நம் நோய் எதிர்ப்பு சக்தி.

    இந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு உறுப்போ ஒரு தசையோ ஒரு செல்லோ மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லை. நம் உடலின் மொத்த உறுப்புகளின், தசைகளின் இணக்கமான ஒத்திசைவே நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது. எனவே நம் உடலின் எல்லா உறுப்புகளையும் எல்லா தசைகளையும், ரத்த ஓட்டங்களையும், நிணநீர் ஓட்டங்களையும், நரம்புகளையும் நாம் நல்ல முறையில் சீரமைத்துக் கொள்ள வேண்டும். நம் உடல் மட்டுமின்றி நம் மனதை மிகவும் முக்கியத்துவத்துடன் நாம் பாதுகாத்து சரியான முறையில் இயக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம் உடலின் எதிர்ப்பு சக்தி மிகவும் துல்லியமாக செயல்படும். சரி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள நாம் என்ன செய்வது என்று கீழ்வருமாறு பார்ப்போம்.

    புகை பிடித்தல்: புகை பிடித்தலை அறவே ஒழிப்போம். ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும் போதும் நம் வாழ்நாளில் ஒரு சில நிமிடங்களை நாம் இழக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புகை பிடிப்பது நம் உடலின் நுரையீரலை மட்டுமின்றி ரத்த ஓட்டங்களையும் பாதிக்கிறது. உடலில் நச்சுப் பொருட்கள் தேங்குவதை கூட்டுகிறது. இதனால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி மிகவும் பாதிப்படைகிறது என்பதை மறுக்க முடியாது. மேலும் புகைபிடிப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் குடும்பத்தில் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களும் இதனால் பாதிப்படைகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே புகை என்பதை அறவே ஒழிக்க வேண்டும்.

    ஆரோக்கியமான உணவு பழக்கம்: நம் உணவில் நிறைய பழங்களும் பச்சைக் காய்கறிகளும் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் மாவுச்சத்து புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருப்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும். உணவை நன்கு ரசித்து நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து உண்ண வேண்டும். பசி இல்லாத போது எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நிதானமாக சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டாலும் நாம் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

    மிதமான உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. துரித நடை பயிற்சி சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஓட்டம், நடனம் ஆடுதல், யோகாசனம் என்று நம் மனதிற்கு பிடித்த எந்த ஒன்றை வேண்டுமானாலும் செய்யலாம். வாரத்தில் ஐந்து நாட்களாவது இதை கடைபிடிப்பது நல்லது.

    சரியான எடை: உடல் பருமன் என்பது பலவிதமான நோய்களுக்கு வழி கோல்வதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே உடல் எடையை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம்.

    தூக்கம்: குறைந்தபட்சமாக 7 மணி நேர தூக்கம் ஒருவருக்கு மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு இன்னும் சற்று அதிகமான தூக்கம் நல்லது. தூங்கும் இடம் வசதியானதாகவும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருப்பது அவசியம்.

    உடல் சுகாதாரம்: பலவிதமான நோய்கிருமிகள் சுகாதாரமற்ற சூழலில் பெருகி வளர்ந்து நம்மை தாக்குகிறது. எனவே சமைக்கும் பொருட்களை சுத்தமானதாக தேர்ந்தெடுத்து நன்கு கழுவி சமைப்பது நல்லது. குறிப்பாக இறைச்சி உணவுகளை நீண்ட பொழுது வைத்திருக்காமல் அவ்வப்பொழுது சமைத்து உண்பது நல்லது. சாப்பிடும் முன்பும் வெளியில் சென்று வந்தாலும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

    மன உளைச்சல்: மனதை லேசாக அமைதியாக வைத்துக் கொள்ள பழக வேண்டும். இதற்கு தியானம் பெரிதும் உதவுகிறது. வீட்டிலும் பணியிடங்களிலும் முடிந்தவரை தேவையற்ற விஷயங்களை தவிர்ப்பதும் நல்லது. உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படும் பொழுது உடனடியாக அதை பேசி தீர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

    நாம் செய்ய வேண்டிய கடமையாக நம் உடலையும் மனதையும் சரியாக ஆரோகியமாக வைத்துக்கொண்டாலே போதும், நம் உடலுக்குள் நுழையும் வேண்டாத கிருமிகளை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம் துணை மற்றும் உதவி இன்றியே துரிதமாக விரட்டி அடித்து விடும்.

    • அன்னாசிப் பூ மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
    • நட்சத்திர வடிவில் இருப்பதால் இது ‘நட்சத்திரப்பூ’ என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களில் அன்னாசிப்பூவும் ஒன்று. நட்சத்திர வடிவில் இருப்பதால் இது 'நட்சத்திரப்பூ' என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரியாணிக்கு மணம், சுவை கொடுப்பதில் இதற்கு நிகர் வேறில்லை. அன்னாசிப் பூ மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

    * இந்த எண்ணெய் சரும அழற்சி அனைத்தையும் தீர்க்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கவும் மற்றும் நரம்புகளை வலுவாக்கவும் உதவும். இதில் முக்கியமாக அனெத்தோல், எஸ்ட்ராகோல், மெத்தில் சாவிகோல், லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் மற்றும் லிமோனின் உள்ளன.

    * இப்பூவை பொடி செய்து ½ முதல் 1 கிராம் எடை வீதம் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை உட்கொள்ள, செரியாமை, மாந்தம், புளித்த ஏப்பம் நீங்கும்.

    * அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும்.

    * அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அதனுடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகும். இந்த தைலத்தை நெற்றியில் தடவினால் மன இறுக்கத்தை போக்கும்.

    * துருக்கி, சீனா, பெர்சியா போன்ற நாடுகளில் மக்கள் செரிமானத்திற்கு இதனை பயன்படுத்துகின்றனர். இந்த மசாலா, வாயுவால் ஏற்படும் வயிற்று பிடிப்பை நீக்கும். இது பெருங்குடல் நோய் உள்ள குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.

    * குழந்தைகளுக்கு இதை தேநீர் போன்று காய்ச்சி வழங்குவதால் வாந்தி, வலிப்புத் தாக்கங்கள், பிற நரம்பியல் விளைவுகளை குணப்படுத்தும்.

    * இதில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளை கொல்லும் பயோஆக்டிவ் பொருட்கள் உள்ளன.

    * வைரஸ் கிருமியை அழிக்கக்கூடிய மருந்தான சிகிமிக் அமிலம் அன்னாசிப் பூவில் உள்ளது. இது 'ஆசெல்டாமிவிர்' (டாமிபுளூ) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தாக பன்றி காய்ச்சலுக்கு தரப்படுகிறது.

    * இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருளாகும். இது இதயத்தின் மென்மையான தசைகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது, திசுக்களில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றுகிறது.

    • ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு.
    • அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

    ஸ்ட்ராபெர்ரியில் இருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிற மூட்டியாகவும் பயன்படுகிறது.

    நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்குத் தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். இவ்விரண்டும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் நிறைந்திருக்கின்றன.

    ஸ்ட்ராபெர்ரி பழம் சுவையாக இருப்பதுடன், தோலின் வறட்சியைப் போக்கும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யும் மற்றும் செல் அழிவைத் தடுக்கும் பணிகளைச் செய்கிறது. ஆம்...! அதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலை வலுப்படுத்துகிறது.

    ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவைத் தடுக்கும் ஆன்டி-ஆக்சிடெண்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி-6, வைட்டமின் கே, அயோடின், செலினியம் போன்ற சத்துப்பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.

    ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபிளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும் பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன. இவையும், உடலை வலுவாக்குகின்றன.

    5 பழங்களில் 250 மி.லி. அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.

    இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் முகத்தில் தோன்றும் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க ஸ்ட்ராபெர்ரி, சிறப்பான மருந்து.

    • மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது.
    • வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.

    கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும். அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகை சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும். மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரி செய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது.

    வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால் சீதபேதி கட்டுப்படும்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ராசயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.

    வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும். பாதாம்பருப்பில் வைட்டமின் 'ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும். தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட்ஸ் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். இதிலும் வைட்டமின் 'ஈ' சத்து நிறைந்துள்ளது.

    • நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
    • எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.

    பீன்ஸ் பல உலக நாடுகளில், பல்வேறு விதமான வண்ணங்களில் விளைகிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் பீன்ஸில் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும்.

    பீன்ஸ் உங்களுக்கு பிடிக்குமா...? அது சுவையில் மட்டுமல்ல, சத்து விஷயங்களிலும் சூப்பரானது. இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…!

    பேப்பேசி குடும்ப,த்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பேசில்லஸ் வல்கரிஸ். செடியில் வளரும் பீன்ஸ், கொடியில் விளையும் பீன்ஸ் வகைகள் உள்ளன. புதிதாக பறிக்கப்பட்ட பீன்ஸ்கள் குறைந்த அளவு கலோரி ஆற்றல் தரக்கூடியவை. 100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும். பச்சை பீன்ஸில் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.

    100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் நார்ச்சத்து உள்ளது. ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும். நார்ச்சத்தானது பெருங்குடல் நோய் எதிர்ப்புத் தன்மையுடன் இருக்க உதவும். குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். மேலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கும். மிக அதிக அளவிலான வைட்டமின்-ஏ, பீன்ஸில் இருக்கிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும். குழந்தைகளுக்கு நோயை உருவாக்கும் ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கலுக்கு எதிராக செயல்படும்.

    பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது. பச்சை பீன்ஸ் வகைகள் ஏ.ஆர்.எம்.டி. எனப்படும் வயது முதிர்வு சம்பந்தமான வியாதிக்கு எதிராக உடலுக்கு ஆற்றல் தரும். 100 கிராம் பீன்ஸில் 37 மைக்ரோ கிராம் போலேட்ஸ் உள்ளது. இது வைட்டமின் டீ 12 உடன் இணைந்து, டி.என்.ஏ. இணைப்பு மற்றும் செல் பகுப்பில் பங்கெடுக்கிறது. மேலும் மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக் குழாய்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவுகிறது. பைரிடாக்சின் எனும் வைட்டமின் பி-6, தையமின் பி-1, வைட்டமின் சி ஆகியவை பீன்ஸில் நிறைந்துள்ளது.

    வைட்டமின்-சி, கிருமித் தொற்றுக்கு எதிராக உடலை காக்கக்கூடியது. ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கல்ஸ் உடலில் சேரவிடாமல் சுத்தமாக்குகிறது. ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்றத்திற்கு ரொம்பவும் அவசியமானது.

    மாங்கனீசு நொதிகளின் செயல்பாட்டில் துணைக்காரணியாக செயல்படக்கூடியது. பிரிரேடிக்கல்ஸை விரட்டி யடிக்கக் கூடியது. பொட்டாசியம் தாது உப்பு செல் மற்றும் உடலில் ஈரத்தன்மைக்கு அவசியமானது. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.

    • இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
    • குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.

    நட்சத்திர பழம் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் அதனை நட்சத்திர பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.

    குளிர் காலத்தில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக் குளம் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.

    இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும். அதேபோல், மழைக்கால சரும பாதிப்புகளில் இருந்து விடுபடவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நட்சத்திர பழம் உதவுகிறது. இந்த நட்சத்திர பழம் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகிறது.

    • குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள்.
    • குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம்.

    குழந்தைகள் வளர்ச்சியில் பருவகாலநோய்களை தடுப்பது சிரமமானதாக இருந்தாலும் சரியான உணவை தேர்ந்தெடுப்பதன் மூலம் தொற்றுவராமல் தடுக்கலாம். தற்போது குளிர்காலம் என்பதால் குழந்தைகளுக்கு இயல்பாகவே காய்ச்சல், வைரஸ் தொற்று உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த தொற்றை எதிர்க்கும் வகையில் குளிர்காலத்தில் உணவின் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய வேண்டும். அப்படி குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான முதன்மையான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

    சமையலறையில் இருக்கும் மசாலா பொருள்கள் எல்லாமே சமையலுக்கு சுவை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. இவை உடலுக்கு எதிர்ப்புசக்தி தரக் கூடியது. அப்படியான பொருள்களில் முதன்மையானது மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை, அன்னாசிப்பூ, இலவங்கம், கொத்துமல்லி விதைகள், சீரகம், மிளகு போன்றவை எல்லாமே குழந்தைகளின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியவை. இந்த பொருள்கள் அதிகம் பயன்படுத்தும் உணவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள்.

    அதிலும் குழந்தைகளுக்கு பால் தரும் போது மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சிட்டிகை கலந்து கொடுக்கலாம். சீரகம்,அன்னாசி சேர்த்த நீரை கொடுக்கலாம். பூண்டை பாலில் வேகவைத்து கொடுக்கலாம். கஷாயத்தில் இஞ்சி சேர்த்துகொடுக்கலாம். இவை எல்லாமே பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டவை.

    குழந்தைகளுக்கு பழங்கள் நன்மை செய்யும். ஆனால் பல பெற்றோர்கள் குளிர்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் குளுமையை உண்டாக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை.

    குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும் போது கொய்யா, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, சிவப்பு நிற பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம். காய்கறிகளில் சிவப்பு குடைமிளகாய். தக்காளி, ப்ரக்கோலி அடர்ந்த நிற காய்கறிகள் சேர்க்கலாம். இவை எல்லாமே வைட்டமின் சி நிறைந்த ஆதாரத்தோடுஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை. இது உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. .

    உடல் ஆரோக்கியமும் அதிக ஊட்டச்சத்துகளும் வைட்டமின்களும் நிறைந்தவை கொட்டைகள். அம்மாக்கள் குழந்தைக்கு ஆறுமாதங்களுக்கு பிறகு கொட்டைகளை தவிர்க்காமல் கொடுப்பார்கள். இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை போராடுவதற்கான ஆற்றலை கொடுக்கும்.

    அம்மாக்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை இதை கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெரும்பாலும் இதில் கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் தினசரி கொட்டைகளில் இரண்டையாவது கொடுக்க முயற்சியுங்கள். பாதாமை ஊறவைத்து தோலுரித்து கொடுங்கள். அக்ரூட் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை கொடுக்கலாம்.இது ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.

    கொட்டைகள் போன்று விதைகளும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும். விதைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பெறமுடியும். ஒரே விதமான விதைகளாக இல்லாமல் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளை கலந்து கொடுக்கலாம். இதை சாலட் வகையில், சிற்றுண்டியின் போது அப்படியே கொடுக்கலாம்.

    முட்டை, கோழி இறைச்சி என இரண்டுமே புரதத்தின் நிறைந்த மூலமாக இருக்கும். வைட்டமின் டி இயற்கையாக இருக்கும் உணவு பொருளில் இதுவும் ஒன்று. உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இது உதவுகிறது. மேலும் முட்டையில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி உள்ளது. குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம். முட்டையை ஆம்லெட் ஆக மாற்றி கொடுக்கலாம். முட்டையை பொரித்தும் கொடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள். தினம் ஒர் டம்ளர் பாலை கொடுக்க தவறாதீர்கள் குழந்தைகள் பால் குடிக்க மறுத்தால் பால் பொருள்களை தயிர், சீஸ் போன்றவற்றை சேர்க்கலாம். குறிப்பாக தினசரி தயிர் சேர்க்கலாம்.

    • தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
    • தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது.

    எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தக்காளி. இது அதிக மருத்துவ குணம் நிறைந்தது. தக்காளி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

    ஊட்டச்சத்து கலவை:

    தக்காளியில், வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் பி 9 போன்றவை நிறைந்திருக்கின்றன. இவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் பைலோகுவினோன் என்றும் அழைக்கப்படும், 'வைட்டமின் கே 1' ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

    எலும்பு ஆரோக்கியம்:

    எலும்புகள் வலுவாக இருப்பதற்கு தக்காளியை தினமும் உணவில் சேர்க்கலாம். வைட்டமின்-கே மற்றும் கால்சியம் சத்து தக்காளி பழத்தில் வளமான அளவில் இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

    கண் பார்வை:

    தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தி, மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. குணப்படுத்த முடியாத கோளாறான மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை தினமும் தக்காளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

    பொலிவான கூந்தல்:

    தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும், இதனால் கூந்தல் அழகாக மாறும்.

    புற்றுநோய்:

    இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. செல்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்டுகளும் தக்காளியில் உள்ளன. இதனால் புரோஸ்டேட் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

    உடல் எடை குறைய:

    தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் தக்காளி பழத்தில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் தக்காளி பழத்தை சாப்பிடலாம்.

    100 கிராம் தக்காளியில்...

    நீர்ச்சத்து- 95 சதவிகிதம்

    புரதச்சத்து- 0.9 கிராம்

    கார்ப்ஸ்- 3.9 கிராம்

    சர்க்கரை- 2.6 கிராம்

    நார்ச்சத்து- 1.2 கிராம்

    கொழுப்பு- 0.2 கிராம்

    மொத்த கலோரிகள்- 18

    • 100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது.
    • ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது.

    பூசணி விதையில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் ஈ, கரோட்டினாய்டுகள், அதிகமாக உள்ளதால் உடம்பில் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

    100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் உடலுக்கு தேவையான துத்தநாகம் உள்ளதால் நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், புண்கள் விரைவில் ஆறும். வாசனை மற்றும் சுவையறிதலுக்கு இது இன்றியமையாதது.

    பூசணி விதையில் மெக்னீசியம் இருப்பதால், தசைகள், நரம்புகள் நல்ல முறையில் இயங்கும். எலும்புக்கு நல்ல வலிமையைத் தரும். தசை பிடிப்பு, சுளுக்கு நீங்கும். ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை அளவை குறைக்கும்.

    பூசணி விதையில் உடலுக்கு தேவையான வைட்டமின் கே, மாங்கனீசு, நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. புற்று நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் பூசணி விதையை உண்பது மிகச் சிறந்தது. ஏன் எனில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை, தடுக்கும் ஆற்றல் பூசணி விதைகளில் உள்ளது.

    இதை இள வறுப்பாக வறுத்து 10 முதல் 15 கிராம் (30 கிராமுக்கு அதிகமாக சாப்பிட கூடாது) அளவு மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் எடுத்தால், ரத்த அழுத்தம் சீரடையும், சர்க்கரை அளவு குறையும், உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு, ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    ×