search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IAS Officers"

    வேதாரண்யம் குடிமராமத்து பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #Chennairain

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தால்ககா தலைஞாயிறு பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு மற்றும் கீழையூர் ஒன்றியங்களில் சிகார் கிராமம் அண்டக்குடி வாய்க்காலில் ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், மேலநாகலூர் கிராமம் நாகலூர் வாய்க்காலில் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், எட்டுக்குடி கிராமம் வடக்கு காட்டாறு எட்டுக்குடி கிளை வாய்க்காலில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் தலைஞாயிறு ஒன்றியம் தொழுதூர் வடக்கில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தொழுதூர் வாய்க்கால் மதகு பழுதுபார்த்தல் பணிகளையும், மாராச்சேரி கிராமம் கோடிவி நாயநல்லூர் வாய்க்காலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், அருந்தவம்புலம் கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மல்லியனாறு வடிகால் இடதுகரையில் மதகு பழுதுபார்த்தல் பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தங்கமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். #Chennairain

    குடிமராமத்து பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்தை வரவேற்கிறோம் என்று பி.ஆர்.பாண்டியன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Chennairain #PrPandian

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காவிரியில் இருந்து உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வழங்க முடியும் என்ற கர்நாடகாவின் உள்நோக்கத்திற்கு ஆணையம் துணைபோய்விடக் கூடாது. உரிய நீரை உரிய காலத்தில் திறக்கப்படுவதை தான் கணக்கில் கொள்ள வேண்டும்.

    நடப்பாண்டு ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

    இந்நிலையில் கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டியே தீருவோம் என பேசியுள்ளார். இது குறித்து ஆணைய தலைவர் தனது கண்டனத்தை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவது தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும்.

    மேலும் ஒரு போக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என்று நம்பி எதிர்பார்த்து தமிழக விவசாயிகள் உள்ளனர். எனவே இது குறித்து ஆணைய தலைவர் மசூத் உசேனை விரைவில் சந்தித்து பேச உள்ளோம்.

    குடிமராமத்துப் பணிகளில் ஊழல் முறைகேடுகளின்றி உரிய காலக்கெடுவுக்குள் பணிகள் முழுமையும் நிறை வேற்றுவதை கண்காணிக்க அரசுத் துறை செயலாளர்கள் நியமிக்க வேண்டுமென முதல்-அமைச்சரை வலியுறுத்தியதன் பேரில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உள்ளதை வரவேற்கிறோம்.

    இக்குழு தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகளை உடன் தொடங்குவதோடு, பணிகளின் நிலை குறித்து மாவட்டம் தோறும் விவசாயிகளோடு ஆய்வு கூட்டங்கள் நடந்திட வேண்டுமென குழு தலைவரும் வேளாண் துறை முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடியை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Chennairain #PrPandian

    தமிழ்நாட்டில் ரூ.328.95 கோடியில் நடக்கும் 1,151 குடிமராமத்து திட்ட பணிகளை கண்காணிக்க 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக ரூ.100 கோடி செலவில் 1513 ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்தொடர்ச்சியாக,  மொத்தம் 328.95 கோடி செலவில் 1511 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து ஏரிகள் புனரமைப்பு பணிகளை முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில், ரூ.328.95 கோடியில் நடக்கும் 1,151 குடிமராமத்து திட்ட பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க ககன்தீப் சிங் பேடி, அமுதா, பவன்குமார் பன்சால் உட்பட ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார். #IASofficers #TNdesiltingworks
    தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலத்துக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகள் விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலத்துக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகள் விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் தலைமையகத்தை விட்டு வெளியே தமிழகத்துக்குள் அரசு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரின் அனுமதி உத்தரவைப் பெறவேண்டும்.

    வெளிமாநிலங்களுக்கு அரசுத் துறை செயலாளர்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், தலைமைச் செயலாளர் மூலமாக முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

    அரசு துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் வெளிமாநிலங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், துறை செயலாளர்கள் அல்லது தலைமைச் செயலாளர் அல்லது முதல்-அமைச்சர் மூலம் அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும்.

    அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் தவிர மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமையகத்தை விட்டு வெளியே தமிழகத்துக்குள் அரசு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் அவர்களின் மேல் அதிகாரியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தமிழகத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட துறை செயலாளரின் உத்தரவைப் பெறவேண்டும். #IAS ChiefSecretary #GirijaVaidyanathan
    ×