search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Horticulture"

    • 1 தீவு சுமார் 5000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்த தீவில் நந்தியா, பலா, கொய்யா, தேக்கு, பாதாம், வேம்பு, மா உள்பட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டன.
    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரில் போட்டிங், குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சமுத்திரம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஏரியானது தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமுத்திரம் ஏரியில் இன்று வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலர்கள், கவின்மிகு இயக்கம் தஞ்சை சார்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தஞ்சை சமுத்திரம் ஏரி பொதுப்பணித்துறை, கல்லணை கோட்டம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு திட்டங்களையும் இணைத்து சமுத்திரம் ஏரியில் 3 தீவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மரங்கள் நடப்பட்டு அது பறவைகள் வாழ்விடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று 1 தீவு சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்தத் தீவில் நந்தியா, பலா, கொய்யா, தேக்கு, பாதாம், வேம்பு, மா உள்பட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டன. மேலும் இரண்டு தீவுகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக தீவுகளின் பரப்பளவு 1 ஏக்கர் அளவில் இருக்கும். இந்த தீவுகள் அனைத்திலும் பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் இதற்காக உழைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும், கவின்மிகு தஞ்சை நிர்வாகிகளுக்கும் குறிப்பாக டாக்டர் ராதிகா மைக்கேல், பாண்டியன் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமுத்திரம் ஏரி ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரில் போட்டிங், குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது. இதன் மதிப்பு ரூ.8.8 கோடி ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் கலைச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1240 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
    • கடந்த 3 ஆண்டுகளாக 11 வகுப்பறைகள் தகர கொட்டகையில்செயல்படு கின்றன. இதற்கான செலவினங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தானூல் ஆரிபின் ஈடு செய்து வருகிறார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியுடன் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இங்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் தகரக் கொட்டகையில் இயங்கி வருவது பெற்றோர்களிடம் வேதனையை ஏற்படுத்தி யுள்ளது.

    இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1240 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டில் இப்பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவி மு.அபிநயா நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயிலும் வாய்ப்பை பெற்று மருத்துவம் பயின்று வருகிறார்.

    இப்படி பல சிறப்புகளை பெற்ற இந்த பள்ளியில் மாணவா்கள் பயில போதுமான கட்டிடவசதிகள் இல்லாததால் அவதிக்கு ள்ளா கின்றன றனர்.

    நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் 11 வகுப்புகள் தகரக் கொட்டகையில் நடைபெறு கின்றன. அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காததால் இந்த ஆண்டு மாணவர்கள் சோ்க்கையை மேற்கொள்ள ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    இப்பள்ளியில் கடந்த 2011-12 ஆம் ஆண்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக சமூக ஆர்வலர் சுல்தானூல் ஆரிபின் வழங்கிய நன்கொடை ரூ.15 லட்சம் உள்பட ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. மொத்தம் உள்ள 15 வகுப்பறைகளும் அதிநவீன இணைய சேவை வசதி மற்றும் தொடு திரையுடன் கூடிய டிஜிட்டல் வகுப்பறையாக உள்ளன.

    இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக 11 வகுப்பறைகள்தகர கொட்டகையில்செயல்படு கின்றன. இதற்கான செலவினங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தானூல் ஆரிபின் ஈடு செய்து வருகிறார்.

    கூடுதலாக 28 வகுப்புகளு க்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து 3 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.இப்பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகள் இருந்தாலும் ஆய்வகம் மற்றும் முறையான நூலக வசதி இல்லை. விளையாட்டு அரங்கம், கழிப்பறை வசதியும் குறைவானஅளவில் உள்ளன.

    கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இப்பள்ளியையும் அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தேவையான அடிப்படை வசதிகளை உடன் செய்து கொடுக்க வேண்டும் என்பது இப்பகுதி பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×