search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HomeMade Recipes"

    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ  
    மிளகாய் தூள் - தேவைக்கு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    பஜ்ஜி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனுடன் அரிசி மாவு, பஜ்ஜி மாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் மாவு கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பக்கோடாவாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேரட் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், சோயா சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோயா - 100 கிராம்,
    துருவிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    தனியா, சோம்பு, சீரகம், மிளகாய், மஞ்சள் தலா - 1 டீஸ்பூன்,
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்,
    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    நெய் - 1/2 டீஸ்பூன்,
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1.



    செய்முறை :

    சோயாவை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சோயா மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு, மசாலா வகைகளை சேர்த்து நன்கு வேக விடவும்.

    கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    சத்தான கேரட் - சோயா சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ், இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 2 கப்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    வெதுவெதுப்பான தண்ணீர்,
    உப்பு - தேவைக்கு.
    இறால் -  200 கிராம்,
    சீஸ் - 100 கிராம்,
    வெங்காயம் - 2,
    பெங்களூர் தக்காளி - 1,
    குடைமிளகாய் - 1/4 கப்,
    கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை

    கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.

    சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் பாஸ்தா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் சேர்த்து எளிய முறையில் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா - 150 கிராம்
    வெங்காயம் - 1
    பூண்டு - 6 பற்கள்
    மொசரெல்லா சீஸ் - ¼ கப் (Mozzarella cheese)
    கோதுமை / மைதா - 2 மேஜைக்கரண்டி
    பால் - 1 கப்
    காய்ந்த துளசி - 1 தேக்கரண்டி
    காளான் - 200 கிராம்
    காய்ந்த ஆர்கனோ - 1 தேக்கரண்டி
    நல்ல மிளகு தூள் - தேவையான அளவு
    பட்டர் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும். 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பட்டரை போட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

    கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.

    கடைசியாக வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    காளான் பாஸ்தா ரெசிபி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்ச்சல், சளி உள்ளவர்கள் புதினா ரசம் செய்து குடித்தால் உடலுக்கு தொம்பு கிடைக்கும். இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புதினா - ஒரு கப்,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    தனியா - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சை அளவு,
    பெருங்காயம் - சிறிதளவு,
    கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும்.

    மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும்.

    புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும்.

    புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும்.

    நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரி, சாதம், நாண், இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கருப்பு உளுந்து தால். இன்று இந்த கருப்பு உளுந்து தால் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைக்கட்டிய கருப்பு உளுந்து - ஒரு கப்,
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 2,
    தக்காளி - 4,
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    தனியாத்தூள் (மல்லித் தூள்) - ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, சீரகம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, கருப்பு உளுந்து சேர்த்து கலந்து மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.

    ஆறிய பின் திறந்து உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி மேலே கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கருப்பு உளுந்து தால் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு செய்து கொடுக்க தக்காளி - புதினா சாதம் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    உப்பு - தேவையான அளவு.

    அரைக்க:

    புதினா - ஒரு கைப்பிடி,
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி,
    பச்சை மிளகாய் - 4,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 4 பல்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    தனியே அரைக்க:

    தக்காளி - 3.

    தாளிக்க:

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பட்டை - ஒரு துண்டு.



    செய்முறை:

    அரிசியை உப்பு சேர்த்து உதிராக வேக வைத்த கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    தக்காளியைத் தனியே அரைத்து வடிகட்டுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்டு தாளித்த பின்னர், புதினா-கொத்தமல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.

    பிறகு, தக்காளி சாறு, சிறிது உப்பு சேர்த்து, தக்காளி சாறு சற்று பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும்.

    ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் பரிமாறுங்கள்.

    சூப்பரான தக்காளி, புதினா சாதம் ரெடி.

    குறிப்பு: சற்றுப் புளிப்புச் சுவை விரும்புபவர்கள், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மிளகு சீரக இடியாப்பம் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இடியாப்ப வகைகளுள் ஒன்று. இன்று மிளகு சீரக இடியாப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு / இடியாப்ப மாவு - ¾ கப்
    மிளகு - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 2 தேக்கரண்டி
    துருவிய தேங்காய் - ¼ கப்
    நெய் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    முந்திரிப் பருப்பு - 8
    கறிவேப்பிலை - 1 கொத்து
    பெருங்காயம் - 2 சிட்டிகை



    செய்முறை

    தண்ணீரில் சில சொட்டுகள் நல்லெண்ணெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசி மாவில் சேர்த்து, மாவாக பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை இடியாப்பமாக பிழிந்து இட்லி சட்டியில் வேக வைத்து கொள்ளவும்.

    இடியப்பம் செய்து ஆறியவுடன் உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.

    மிளகு சீரகத்தை கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் சேர்த்து, உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    மிளகு சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    இதனை, வேகவைத்து உதிர்த்த இடியாப்பம், துருவிய தேங்காய், உப்பு (தேவைபட்டால்) சேர்த்து, கலந்து வைக்கவும்.

    சூப்பரான மிளகு சீரக இடியாப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இஞ்சி புளி ஊறுகாய். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்),
    புளி - சிறிய எலுமிச்சை அளவு,
    வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.

    தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    பச்சை மிளகாய், இஞ்சி சிறிது வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும்.

    அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

    சூப்பரான இஞ்சி - புளி ஊறுகாய் ரெடி.

    குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு அதிக அளவு கால்சியத்தை கொண்டிருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி சுவையான உருளைக்கிழங்கு புட்டு செய்முறை பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் - அரை மூடி
     
    தாளிக்க :

    கடுகு - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    சின்ன வெங்காயம் - 10
    நல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு


     
    செய்முறை :

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

    வாணலியில் தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கினைச் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறவும்.

    இரண்டு நிமிடங்கள் கழித்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

    சுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.

    இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பழுத்த மாம்பழம் - 4
    சர்க்கரை - 200 கிராம்
    லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி



    செய்முறை :

    மாம்பழங்களை நன்றாக கழுவி அதன் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை விழுதை போட்டு 5 நிமிடம் வரை கிளறவும்.
        
    பிறகு அதனுடன் சர்க்கரை, லெமன் ஜூஸ் சேர்த்து ஜாம் பதம் வரும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

    ஜாம் பதம் தெரிந்து கொள்ள ஒரு சிறிய தட்டை ப்ரீஸரில் வைக்கவும். ஜாமை சிறிது எடுத்து அந்த குளிர்ந்த தட்டில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் ஜாம் உடனே ரூம் டெம்பரேச்சருக்கு வந்து விடும். அதை ஒரு விரலால் நடுவே கோடு போடவும். இரண்டு பக்கமும் ஒட்டாமல் தனித்தனியாக பிரிந்தால் அது தான் சரியான பதம். ஜாம் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். பிரிஜ்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

    தோசை, இட்லி, பூரி பிரெட்டுடன் சேர்த்து  சாப்பிட நன்றாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகள், வேர்க்கடலை பொடி தூவி ஊத்தப்பம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊத்தப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்,
    வேர்க்கடலைப் பொடி - தேவையான அளவு,
    வெங்காயம், தக்காளி - தலா 1,
    கொத்தமல்லி -  சிறிது,
    தோல் சீவிய இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்,
    கேரட் துருவல் - 5 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் பொடியை தூவவும்.

    பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×