search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "homam"

    • நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் ஹோமம் நடந்தது.
    • பஞ்சமூர்த்திகள் வைபவம் நடந்தது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. முதலில் கணபதி ஹோமம், சுப்பிரமணியசாமி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், பைரவர் ஹோமம், நவக்கிரக ஹோமம், காமாட்சி ஹோமம், கபிலேஸ்வரர் ஹோமம் நடந்து வந்தது.

    நிறைவு நாளான நேற்று சண்டிகேஸ்வரர் ஹோமம் நடந்தது. பின்னர் மகா பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம், திரிசூல ஸ்நானம், அங்குரார்ப்பணம் நடந்தது. மாலை லட்சதீப ஆராதனை, பஞ்சமூர்த்திகளான விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், சண்டிகேஸ்வரருக்கு ஆராதனை, அதன்பிறகு பஞ்சமூர்த்திகள் வைபவம் நடந்தது. இத்துடன் ஒரு மாதம் நடந்த ஹோம மஹோற்சவம் முடிந்தது.

    • திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நடைபெற்று வந்தது.
    • இன்று சண்டிகேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நடைபெற்று வந்தது. 11 நாட்கள் நடைபெறும் இந்த ருத்ர யாகம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இதன் ஒரு பகுதியாக காலையில் மூலவர் கபிலேஸ்வர சுவாமிக்கு ருத்ரயாகம் சமாப்தி, மஹாபூர்ணாஹுதி, மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது.

    இன்று (புதன் கிழமை) சண்டிகேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.

    • இன்று முதல் 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.
    • கடந்த 3-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் நடந்து வந்தது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து கார்த்திகை ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 3-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடந்து வந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி யாகசாலையில் நேற்று காலை 8 மணியில் இருந்து பகல் 11 மணி வரை சண்டி ஹோம சமாப்தி, மகாபூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா அபிஷேகம், மூலவர் காமாட்சி தாயாருக்கு கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கபிலேஸ்வரருக்கு கலச ஸ்தாபனம், பூஜை, ஜெபம், ஹோமம், நிவேதனம், ஆரத்தி நடந்தது.

    ஹோமத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசலு, கண்காணிப்பாளர் பூபதி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் எனப்படும் ருத்ர யாகம் நடக்கிறது.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • சரப சூழினிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரியில் காமாட்சி கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு அஷ்ட பைரவர்கள் சூழ சரபசூழினி அம்மன் அருள் பாலிக்கிறார். நேற்று பவுர்ணமியையொட்டி சரபசூழினி அம்பாளுக்கு ஜெயமங்களா யாகம் நடைபெற்றது.

    பரம்பரை அறங்காவலர் சரப சூழினி உபாசகர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். மகா தீபாராதனையை தொடர்ந்து சரப சூழினி சன்னதிக்கு எடுத்துவரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சரப சூழினிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    ஜெயமங்களா யாகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். யாக ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் என். கண்ணன் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
    • சண்டியாகம் வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று காமாட்சி ஹோமம் எனப்படும் சண்டியாகம் தொடங்கியது. நேற்று காலை யாக சாலையில் உற்சவர் காமாட்சி தாயாரை எழுந்தருள செய்தனர். தாயார் முன்னிலையில் சிறப்புப்பூஜைகள், நித்ய ஹோமம், சண்டிஹோமம், லகுபூர்ணாஹுதி, நிவேதனம் நடந்தது. சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    மாலை ஹோமம், சண்டிபாராயணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சண்டியாகம் வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது.

    • காமாட்சியம்மனுக்கு கலச ஸ்தாபனம், சிறப்பு தீப ஆராதனை நடந்தது.
    • இன்று முதல் 11-ந்தேதி வரை சண்டி யாகம்நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கால பைரவர் ஹோமமும், நேற்று நவகிரக ஹோமமும் நடந்தது. அதையொட்டி காலை யாகசாலையில் நவக்கிரகஹோமம், பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், நவக்கிரக கலசாபிஷேகம் நடந்தது. மாலை காமாட்சியம்மனுக்கு கலச ஸ்தாபனம் மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடந்தது.

    ஹோம மஹோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசுலு, கண்காணிப்பாளர்கள் பூபதி, சீனிவாசலு, கோவில் ஆய்வாளர் பாலகிருஷ்ணா மற்றும் அர்ச்சகர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடக்கிறது.

    • தட்சிணாமூர்த்திக்கு கலச ஸ்தாபனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
    • இன்று கால பைரவர் ஹோமம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி 28-ந்தேதியில் இருந்து 3 நாட்கள் சுப்பிரமணியசாமி ஹோமமும், நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சுப்பிரமணியசாமி திருக்கல்யாணமும் நடந்தது.

    அதைதொடர்ந்து நேற்று தட்சிணாமூர்த்தி ஹோமம் நடந்தது. யாகசாலையில் காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரை தட்சிணாமூர்த்தி ஹோமம், பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், தட்சிணாமூர்த்தி கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணியளவில் தட்சிணாமூர்த்திக்கு கலச ஸ்தாபனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    அதில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு மேல்துண்டு, ஜாக்கெட், அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) கால பைரவர் ஹோமம் நடக்கிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வதுநாளான நேற்று கணபதி ஹோமம் நிறைவடைந்தது.

    முன்னதாக காலை 8 மணியில் இருந்து காலை 11 மணிவரை யாக சாலையில் கணபதி பூஜை, நித்யஹோமம், மகா பூர்ணாஹுதி, கணபதி கலச உத்வாசனம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், நிவேதனம், ஆரத்தி நடந்தது.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை சுப்பிரமணியசாமிக்கு கலச ஸ்தாபனம், லகு பூர்ணாஹுதி, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நாளை முதல் 30-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது.
    • அனைத்துப் பக்தர்களும் ஹோமத்தில் பங்கேற்று வழிபடலாம்.

    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கணபதி ஹோமத்துடன் ஹோம மஹோற்சவம் தொடங்கியது.

    அதையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் திருமஞ்சனம் நடந்தது. மாலை கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், வாஸ்துபூஜை, பர்யாக்னிகரணம், மிருதசங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம், அக்னிபிரதிஷ்டை, கணபதி ஹோமம், லகு பூர்ணாஹூதி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) கணபதி ஹோமம் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 31-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், நவம்பர் மாதம் 1-ந்தேதி கால பைரவர் ஹோமம், 2-ந்தேதி நவக்கிரஹ ஹோமம், 3-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டியாகம்), 12-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் (ருத்ர யாகம்) நடக்கிறது. 22-ந்தேதி சிவன்-பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது. 23-ந்தேதி சண்டிகேஸ்வரர் ஹோமம், திரிசூல ஸ்நானம், பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடக்கிறது.

    அனைத்துப் பக்தர்களும் ஹோமத்தில் பங்கேற்று வழிபடலாம். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த ஹோம மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக புனித கபில தீர்த்தத்தில் நீராடி கபிலேஸ்வரர் சன்னதியில் நடக்கும் ஹோமத்தில் பங்கேற்று வழிபட்டால் பாவம் விலகி புண்ணிய பலன் கிடைக்கும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

    • மூட்டை, மூட்டையாக காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு யாகம் நடந்தது.
    • பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை பகுதியில் ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி மகா பிரத்யங்கராதேவி பூஜை நேற்று நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அங்குள்ள கோசாலையில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கி கோ பூஜை நடந்தது. மேலும் ஆஞ்சநேயர், நாகர் சன்னதியிலும் பூஜை நடந்தது. பின்னர் மாலை 6 மணி அளவில் மகா பிரத்யங்கரா தேவி பூஜை நடைபெற்றது.

    இதில் மூட்டை, மூட்டையாக காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு யாகம் நடந்தது. இதில் திண்டுக்கல், மதுரை, கோவை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • புரட்டாசி மாத மகாபிஷேகம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
    • இன்று இரவு நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் மகா ருத்ர அபிஷேகம் நடக்கிறது.

    உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்கள் என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புரட்டாசி மாத மகாபிஷேகம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனையொட்டி நேற்று முன்தினம் முதல் கோவில் வளாகத்தில் யாக சாலை அமைத்து நவகிரக ஹோமம், மகா ருத்ர ஜபம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணிக்கு சிவகாமசுந்தரிக்கும் ஸ்ரீமந் ஆனந்த நடராஜருக்கும் லட்சார்ச்சனையும், காலை 10 மணிக்கு மகா ருத்ர ஜப பாரானமும், மதியம் 2 மணிக்கு மேல் மகா ருத்ர ஜெப ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு மேல் நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் மகா ருத்ர அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
    • மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    மெலட்டூர் அருகே உள்ள காவளூர் கிராமத்தில் வீரனார் கோவில் திருப்பணி இளங்கோவன், சௌந்தராஜன், தீபக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் உதவியுடன் நடைபெற்று வந்தது. திருப்பணி முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவளூர் ஊராட்சிமன்ற தலைவர் செந்தில்குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.

    ×