search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Highest Mark"

    • "சிராஜுல் மில்லத்"விருது மற்றும் பரிசு வழங்கும் விழா இக்பால் நகரில் நடைபெற்றது.
    • 33-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது அலி பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ -மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் இக்பால் நகர் "சிராஜுல் மில்லத் அறக்கட்டளையின் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கடையநல்லூர் நகரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு "சிராஜுல் மில்லத்"விருது மற்றும் பரிசு வழங்கும் விழா இக்பால் நகரில் நடைபெற்றது.

    விழாவிற்கு ஜபருல்லாஹ்கான் தலைமைதாங்கினார். தலைமை ஆசிரியர்கள் செய்யது முகைதீன், அப்துல் கனி, சிக்கந்தர் சாகிப், ஹுசைன் , முஸ்லிம் லீக் முன்னாள் மாவட்ட தலைவர் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அறக்கட்டளை தலைவர் ஹாஜா மைதீன் வரவேற்றார். கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் , டாக்டர் சஞ்சிவீ, வரலாற்று எழுத்தாளர் இப்ராகீம், மடத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செய்யது இப்ராகீம், 33-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது அலி பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ -மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினர்.

    இதில் முஹம்மது கோயா, இஸ்மத், அப்துல் லத்தீப், யூசுப், ரஹமத்துல்லாஹ், சேகுதுமான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். யாகூப் நன்றி கூறினார்.

    ×