search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Help"

    • அரியலூர் மாவட்டத்தில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது,

    மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அளிக்கும் மனுக்களின் மீது அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதே போன்று கல்வி, மருத்துவ உதவிக் கேட்டு வரும் மக்கள் அளிக்கும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அளிக்கும் மனுக்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். துறை சார்ந்த கோரிக்கைகள் தமிழக முதலவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில் அலுவலர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    முதல்வர் தெரிவித்ததை போன்று ஏழை, எளிய மக்கள் அளிக்கும் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அவர்களது வாழ்க்கையாக உணர்ந்து பார்ப்பதுடன் அவர்களது மனுக்களை நிராகரிக்காத வகையில் மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.

    முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் உதயநிதி, அவ்வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள சிவசங்கர், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, அரசு சிறப்பு திட்ட செயலாகத்துறை செயலர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கபபட்டது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    அரியலூர் 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 282 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் அரியலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு வரப்பெற்ற இணைமானிய தொகையிலிருந்து 6 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வாங்கிடும் வகையில் தலா ரூ.10,000 வீதம் என மொத்தம் ரூ.60,000 மதிப்பில் காசோலைகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அரியலூரில் சுதந்திரதின விழாவில் ரூ.1.56 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 77வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தேசியகொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

    அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 255 அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார். பின்னர் ரூ.1.56 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிகளில் அரியலூர் எம்எல்ஏ வக்கில் கு.சின்னப்பா, மாவட்ட வருவாய்அலுவலர் கலைவாணி, மாவட்ட திட்ட அலுவலர் பாலமுரளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்பூங்கோதை, கலெக்டர் அலுவலக மேலாளர் குமரைய்யா, ஆர்டிஓ அரியலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிமளம், மருத்துவத்துறை துணைஇயக்குனர் அஜீதா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர்சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், தீயணைப்பு அலுவலர்செந்தில்குமார், தாசில்தார் அரியலூர் கண்ணன், செந்துறை பாக்கியம்விக்டோரியா, ஆண்டிமடம் இளவரசன், ஜெயங்கொண்டம் துரை, யூனியன் கமிஷனர் அரியலூர் முத்துகுமார், அருளப்பன்,திருமானூர் ஜெயகுமாரி, பொய்யாமொழி, செந்துறை பிரபாகரன், ஜாகிர்உசேன்,ஜெயங்கொண்டம் செந்தில், முருகன், ஆண்டிமடம் ஸ்ரீதேவி, விஸ்வநாதன், தா.பழுர் நாராயணன்,

    அமிர்தலிங்கம், கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் தீபாசங்கரி, காவல்துறை சார்பில் மாவட்ட கூடுதல்கண்காணிப்பாளர் அந்தோணி, ஆரி, டிஎஸ்பி சங்கர் கணேஷ், ரவி ச்சந்திரன், வெங்கடேசன், சுரேஷ்குமார், உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர் களும், மக்கள்பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.சுதந்திரதினவிழா நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • பெரம்பலூர் சுதந்திர தின விழாவில் ரூ.2.05 கோடி நில திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • 286 பயனாளிகளுக்கு கலெக்டர் கற்பகம் வழங்கினார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திரத்திருநாள் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் கற்பகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 286 பயனாளிகளுக்கு ரூ.2,04,74,026 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 286 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    • அகரப்பட்டி கிராம மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1. 55 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • 655 பயனாளிகள் பயனடைந்தனர்

    விராலிமலை,

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதம் தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி அகரப்பட்ட்டி கிராமத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பல்லுயிர் பரவல், பசுமையாக்குதல் மற்றும் காலநிலைமாற்றம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 655 பயனாளிகளுக்கு ரூ 1கோடியே 54லட்சத்தி 70ஆயிரத்து 104 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் கலெக்டர் பேசியதாவது:-அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின் திட்டங்களை அறிந்துகொள்வதுடன் அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதபிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, தாசில்தார் சதீஸ், ஊராட்சிமன்ற தலைவர் தனபாக்கியம் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டையில் 1584 பயனாளிகளுக்கு ரூ.82.19 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது
    • கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைந்து நடத்தும், தொழில்களுக்கான அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் முகாம் நடைபெற்றது. முன்னோடி வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளி ன் மூலம் 1,584 பயனாளி களுக்கு ரூ.82.19 கோடி முதலீட்டு தொகைக்கான கடன் உதவிகளை தொழில் முனை வோர்களுக்கு, மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சு.திரிபுரசுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.ஆனந்த், தாட்கோ மேலாளர் ஆர்.விஜயகுமார், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் கலை ச்செல்வி, புதுக்கோ ட்டை மாவட்ட சிறு தொழில் அதிபர்கள் நலச்சங்கத் தலைவர் ராஜ்குமார், வங்கி மேலாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.17.77 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
    • கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்

    கரூர், 

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 517 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்தி றனாளிக ளிடம் 80 மனுக்கள் பெறப்ப ட்டது.கூட்டத்தில் ரூ.17.77 வமடசதட தாடிபடபடீமடவைட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, 6 நபருக்கு தலா 2,760 மதிப்பில் ரூ.16.580 மதிப்பிலான காதொலிக்கருவிகளும், 1 நபருக்கு ரூ1,344 மதிப்பீட்டில் பிரெய்லி கை கடிகாரமும், 3 நபர்களுக்கு ரூ.2,280 மதிப்பீட்டில் ஊான்று கோலும். 1 நபருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.7,170 மதிப்பீட்டில் சலவை ப்பெட்டியும், குளித்தலை வட்டத்தை சேர்ந்த பில்லூர் கிராமத்தை சேர்ந்த தீனதயாளன் சாலை விபத்தில் உயிர் இழந்ததை தொடர்ந்து அவரது தாயார் கற்பகத்திடம் ரூ.2 லட்ச த்திரிகான முதலமைச்சர் நிவாரண நிதியும். 1 நபருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை சார்பில் நத்தம் பட்டாக்கான ஆணைகளும், 2 நபருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிணமத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் தலா ரூ.25 ஆயிரம் வைப்புநிதி பத்திரத்தையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 35 மகளிர் சுய ஊதவிக்குழு தொழில் முனைவோர் நபர்களுக்கு ரூ.15 இலட்சத்திற்கான நுண் கடன் நிதி உதவியும் ஆக மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 77 ஆயிரம் 474 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளார்ச்சி முகமை), சீனிணசன்(மகளிர் திட்டம், தனித்துணை ஆட்ரியர்(ச.பா.தி)சைபுதீன், மற்றும் அனை த்துத்துறை அலுவ லர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில்ம களிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது
    • கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி சார்பில் வளர்பிறை, அப்பாஸ், அல்லி, ரோஜா, ரோஜா, சர்க்கரை பாவா, அன்னை இந்திரா, ஆலீப் , துளசி, ஜாம்யாலம், ரோஜா, ஹாஸ்லீன், ஹக் ஆகிய பள்ளப்பட்டியை சேர்ந்த 13 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன். கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராசா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், கரூர் மாவட்ட இந்தியன் வங்கி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார். பள்ளப்பட்டி இந்தியன் வங்கி மேலாளர் வாலண்டினா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உருமி மேள கலைஞர் பாரதமணியின் குடும்பம் வறுமையில் இருந்து வந்தது.
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாரதமணிக்கு புதிய உறுமி வழங்கப்பட்டது.

     விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தை சேர்ந்த உருமி மேள கலைஞர் பாரதமணி. இவரது குடும்பம் வறுமையில் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உருமி வாங்குவதற்கு போதிய பொருளாதார வசதியின்றி இல்லை என்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு ஒன்றை பாரதமணி கொடுத்தார். இந்நிலையில் மனு கொடுத்த 2 நாட்களில் இது குறித்து நடிவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உருமி மேள கலைஞர் பாரதமணிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய உறுமியை வழங்கினார்.

    அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருச்சி வந்த முதல்வரின் கவனத்தை ஈர்த்த கோவை மாணவிக்கு கல்வி உதவித்தொகை ரூ.61 ஆயிரம் வழங்கப்பட்டது
    • அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

    திருச்சி,

    திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஈர்த்தார். இதனை தொடர்ந்து அவருக்கு உதவிட திருச்சி மாவட்ட கலெக்டருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறைகளின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. தாயார் கவிதாவிடம் குழந்தையின் கல்வி கட்டணத்திற்காக ரூ.61 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார். அருகில் கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்தியநாதன், காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், அப்துல் சமது மற்றும் பலர் உள்ளனர்.

    • புதுக்கோட்டை பயனாளிகளுக்கு ரூ.8.03 லட்சத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது
    • கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தாட்கோ மற்றும் கூட்டுறவு த்துறையின் சார்பில், ரூ.8.03 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை பயனாளிகளுக்கு, கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்.தாட்கோ மூலம் தொழில் முனைவோராக்கும் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், நிலம் வாங்கும் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், விரைவு மின்இணைப்புத் திட்டம், பால்பண்ணை அமைக்கும் திட்டம், சிமெண்ட் விற்பனை முனையம், ஆவின் பாலகம், தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 2 பயனாளிகளின் குழந்தைகளுக்கு தலா ரூ.1,500 வீதம் ரூ.3,000 -ம், தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இலுப்பூர் கிளையின் மூலம் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்கு ழுவினர்களுக்கு தாட்கோ மானியமாக ரூ.2,25,000 உட்பட ரூ.8,00,000 மதிப்பிலான வங்கிக் கடன்களுக்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.மேலும் கல்வி உதவித்தொகை பெற்றுள்ள மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யவும், வங்கி கடன் உதவித் தொகை பெற்றுள்ள மகளிர் சுயஉதவிக்கு ழுவினர்கள் அனைவரும் தங்களது தொழிலில் சிறப்பாக செயல்பட்டு, தங்களது வாழ்வா தாரத்தை மேம்படுத்தி க்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சாத்தான்குளம் வட்டத்தில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் 100 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது.
    சாத்தான்குளம்:
     
    சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. திருச்செந்தூர் ஆர்.டி.ஓ.  புகாரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.   

    2-ம் நாளான நேற்று பிடானேரி, எழுவரைமுக்கி, சாத்தான்குளம், உள்வட்டம், பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டியிருப்பு, புதுக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குறை தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். 

    அதில் பெறப்பட்ட 206 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் உடனடியாக 100 பேர்களுக்கு  பட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட  உதவிகள் வழங்கப்பட்டன.  

    இதில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், தாசில்தார் தங்கையா, மண்டல துணை தாசில்தார் மைக்கேல், தலைமையிடத்து  துணை தாசில்தார் கோமதி சங்கர், வருவாய் ஆய்வாளர் பாலசுந்தரம் உள்பட பலர் கொண்டனர்.

    ×