என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Guru Bhagavan"
- குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும்.
- குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும். 1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குருமங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம். அவற்றை பற்றிய விளக்கம்:
1) கஜகேசரி யோகம்: குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் ``கஜகேசரி யோகம்'' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.
2) குருச்சந்திரயோகம் : சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்களில் காணப்பட்டால் `குருச்சந்திரயோகம்' உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.
3) குரு மங்களயோகம் : குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் `குரு மங்கள யோகம்' ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.
4) ஹம்சயோகம் : சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச' யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.
5) சகடயோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், ``சகடயோகம்'' ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும். பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும். குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.
சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.
- குருவை வணங்கினால் கோடி நன்மை என்று சொல்வர்.
- இங்கே 24 தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
ஆலங்குடியைப்பொறுத்தவரை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கருவறை கோஷ்டத்தில் தரிசனம் தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியே குரு பகவானாக , நவக்கிரக தோஷத்தை நீக்குபவராக வழிபடப்படுகிறார். வருடத்துக்கு ஒருமுறை நிகழும் குருப் பெயர்ச்சியின் போது இங்கே லட்சார்ச்சனை நடைபெறும்.
ஆலய பிரகாரத்திலேயே நெய் தீபங்கள் கிடைக் கின்றன. 25 தீபங்கள் வாங்க வேண்டும். அதில், முதல் தீபத்தைக் கலங் காமல் காத்த விநாயகர் சந்நிதியில் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர், ஸ்ரீஏலவார் குழலம்மை உட்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு, மவுன மாக பிரகார வலம் வந்து, கொடிமரம் அருகே விழுந்து வணங்கி விட்டு, குரு பகவானுக்குப் பரிகாரமாக நாம் ஏற்ற வேண்டிய 24 தீபங்களையும் ஏற்றி வைக்க வேண்டும்.
'மொத்தமாக தீபங்களை ஏற்றக்கூடாது. 24 சுற்றுக்கள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு தீபம் ஏற்ற வேண்டும்' என்ற நடைமுறையும் இங்கே சொல்லப்படுகிறது. தீபங்கள் ஏற்றுவதற்கு முன் ஆலய அர்ச்சகரை ஒரு முறை கலந்தாலோசித்துவிட்டுச் செய்வது உத்தமம்.
பிரம்மனின் மூல மந்திரம் 24 என்கிற எண்ணிக்கையில் இருப்பதால், இங்கே 24 தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இப்படிச் செய்வதால், குருவினால் ஏற்பட்ட சகல தோஷங்களும் விலகுகின்றன. தீபங்கள் ஏற்றி குரு பகவானின் அருள் பெற்ற பின்னர் திருக்கோயிலை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் கொடி மரத்தின் கீழே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிறது தல புராணம்.
சுயம்பு லிங்க மூர்த்தியான ஆபத்சகாயேஸ்வரரின் புராணக் கதைகள் இன்னும் முடிவில்லை. இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் குருவை தரிசிப்பதில் எந்த அளவுக்கு முனைப்பாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஈசனான ஆபத்சகாயேஸ்வரரையும் தரிசிக்க வேண்டும். அவர்தம் தேவியான ஏலவார் குழலம்மையையும் வணங்க வேண்டும். எத்தகைய கொடுஞ்செயல்கள் புரிந்தவனும், ஆலங்குடி சேத்திரம் வந்து, 'ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்று இறைவா' என்று வேண்டித் துதித்தால், ஆபத்சகாயேஸ்வரர் மன்னித்து அருள்வதாகத் தல புராணம் சொல்கிறது.
சுவாசனன் என்பவன் ஓர் அரசன். ஆனால், கொடுங்கோலன். நாட்டு மக்களைத் துன்புறுத்தியே வாழ்ந்தான். அவனது அட்டூழியத்தைத் தாங்க முடியாத பிற மன் னர்கள், அவனைக் கொன்றுவிட்டனர். எம தூதர்கள் வந்து அவனை எமலோகம் இழுத்துச் சென்றனர். அவன் செய்த பாவங்களைப் பட்டியலிட்டு கூறினர் எமதர்மனிடம். 'இத்தகைய கொடுங்கோலனான இவன் பூலோகத்தில் பிசாசாக அலைய வேண்டியது விதி' என்று எமன் சொல்ல, அதன்படி பூலோகத்தில் பிசாசாகத் திரிந்தான். முன் ஜென்மத்தில் செய்த நல்வினைப் பலனால், அகத்திய மாமுனியைச் சந்தித்தான் சுவாசனன். அவரது அறிவுரைப்படி, காசி ஆரண்யம் எனப் படும் ஆலங்குடித் திருத்தலம் வந்து புனித நீராடி, ஸ்ரீஆபத் சகாயேஸ்வரரை தரிசித்தான்.
பாவங்களைப் போக்குபவர் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆயிற்றே! சுவாசனனது பாவங்கள் அனைத்தையும் விலக்கி, அவன் இழந்த செல்வத்தையும், ராஜ்யத்தையும் திரும்பக் கொடுத்தாராம் இந்த ஈசன்.
ஆலயத்தினுள் எண்ணற்ற திருமேனிகளின் தரிசனம் காணலாம். கலங்காமல் காத்த விநாயகரை வணங்கி உள்ளே நுழைந்தால் முதல் பிரகாரம். எதிரே தெற்கு நோக் கிய ஏலவார் குழலி அம்மையின் தரிசனம். கொஞ்சம் உள்ளே போய் மேற்கு நோக்கித் திரும்பி இரண்டாவது வாயிலைக் கடந்ததும், உள்ளே சூரிய பகவான், உத்சவர் சுந்தரமூர்த்தி, சோமாஸ்கந்தர் தரிசனம்.இதை அடுத்து நால்வர், சூரியேசர், சோமேசர், குரு மோகே சுரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரம்மேசர் ஆகிய லிங்கத் திருமேனிகளின் தரிசனத்தோடு காசி விசுவநாதர், விசாலாட்சி மற்றும் அகத்தியரையும் வணங்கிப் பேறு பெறலாம்.
தொடர்ந்து தரிசனத்தில் நின்ற கணபதி, வள்ளி, தெய் வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கல்யாண சாஸ்தா, சப்தமாதா, நவக்கிரகம், ஸ்ரீநடராஜர், பைரவர், சந்திர பகவான் என்று தரிசனம் நீள்கிறது. கோஷ்டத்தில் காட்சி தரும் ஸ்ரீலிங் கோத்பவரும், சுக்கிரவார அம்மன் சந்நிதியும் அவசியம் தரிசிக்க வேண்டியவை.
ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் திரளான பக்தர்கள் வந்திருந்து குருவை ஆராதித்துச் செல்கிறார்கள். குருப்பெயர்ச்சி காலம் என்றால், கூட்டத்துக்கும் கோலாகலத்துக்கும் கேட்கவே வேண்டாம். ஆலங்குடி திமிலோகப்படும். குருவின் பார்வை என்பது ஒவ்வொரு ஜாதகருக்கும் முக்கியம். குருவின் பார்வை சிறக்காததால்தான், பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் போக நேரிட்டது. வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைக்கும்படி ஆனது. ஒரு ஜாதகத்தில் சுலபமான இடத்தில் குருவின் பார்வை விழுந்தால்தான், அந்த ஜாதகரின் வாழ்க்கை சிறக்கும். உத்தி யோகம், குழந்தைப் பேறு உள்ளிட்ட பல வளங்களையும் வழங்குபவர் குரு பகவான்.
மூலவர் குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வணங்க, ஆலயத்தில் கட்டணம் கட்ட வேண்டும். உத்சவருக்கு அபிஷேகம் என்றால், கட்டணம் கட்ட வேண்டும். அபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குரு பகவான் உருவம் பதித்த இரண்டு கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. குரு பகவானின் அனுகிரகம் பெற விரும்பு வோர், வியாழக் கிழமைகளில் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு அபிஷேகம் செய்து, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, வெண் முல்லைப் பூக்களால் அலங்காரம் செய்து, கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வது நல்லது.
கொட்டிக் கொடுப்பவர் குரு, குருவை வணங்கினால் கோடி நன்மை என்றெல்லாம் சொல்வர். இத்தகைய சிறப்புகள் பெற்ற ஆலங்குடி குரு பகவானை, குடும்பத்துடன் சென்று வழிபட்டு பயன்பெறலாம்.
- தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி.
- கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும்.
நவகிரகங்களில் ஒருவரான குரு எனப்படும் வியாழ பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாதகப்படி குருவின் பார்வை பட்டால் தான் திருமணம், குழந்தை செல்வம், சிறந்த பதவி, செல்வச்சிறப்பு ஆகியவை ஏற்படும். ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தாலோ, கொடூரமானவராக இருந்தாலோ, கோசார ரீதியாகக் கெட்டவரானாலோ குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும். வியாழன் தோறும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
தட்சிணாமூர்த்தியை தரிசித்து பூஜித்து தியானித்து அர்ச்சனை முதலியவை செய்தால் குரு தோஷம் விலகும் என்று சூரியனார் கோவில் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி. குருதோஷத்துக்கு ஆலங்குடி பரிகாரத்தலம் என்று அதன் தலபுராணமும் குறிப்பிடுகிறது.
குருபகவானுக்கு வியாழக்கிழமையில் விரதம் இருந்து அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவானை வணங்க வேண்டும். அரசமர சமித்துகளால் ஹோமம் செய்து கடலைப்பொடி அன்னத்தால் அல்லது எலுமிச்சை ரச அன்னத்தால் ஆகுதி செய்து வேள்வியை முடிக்க வேண்டும். கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும். குரு கீர்த்தனைகளை அடாணா ராகத்தில் பாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவற்றால் குரு தோஷம் நீங்கும்.
- குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம்.
- குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.
குரு பகவான் ஆண் கிரகமாகக் கருதப்படுகிறார். ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களைப் பார்க்கும் உரிமையை இவர் பெற்றிருக்கிறார். செல்வம், குழந்தைப் பேறு ஆகியவற்றிற்கு இவர் அதிபதி. மூத்த சகோதரர்கள், சகோதரிகளைப்பற்றிய விவரங்களையும் கூறுவார்.
இவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களிடம் நற்குணங்கள், இரக்கம், ஞானம், தலைமை தாங்கும் தகுதி, புகழ், சாஸ்திர அறிவு, பக்தி, சிறப்பான செயல்களைச் செய்யும் ஆற்றல் போன்றவை காணப்படும்.
குரு பகவான் கணவன் - மனைவிக்கிடையே நல்ல உறவை ஏற்படுத்துவார். குளிர்ச்சியான சுபநோய்களைக் கொடுப்பார். அடக்கம், நேர்மை, நாணயம் போன்றவற்றைக் கொடுப்பார்.
குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள் கற்றோரையும், பெரியோரையும் மதித்துப் பணிவாக நடந்து கொள்வார்கள். இவர்களிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் காணலாம். மற்றவர்களுக்குத் தங்களால் முடிந்த அளவு உதவி செய்வார்கள். உழைப்பதற்குச் சற்றும் தயங்கமாட்டார்கள்.
இவர்கள் எந்த காரியத்தையும் அவசரப்பட்டுச் செய்ய மாட்டார்கள். நன்கு சிந்தித்துப்பார்த்து முடிவு செய்த பிறகே செயலில் இறங்குவார்கள். குறுக்கு வழியிலோ அல்லது சட்டத்திற்குப் புறம் பான வழியிலோ பணம் சம்பாதிக்க ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.
இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறம்-மஞ்சள், அதிர்ஷ்டம் கொடுக்கும் கல்- புஷ்ப ராகம், மலர்- முல்லை. உலோகம்- பொன். தானியம்-கடலை, மரம்- அரசு, திசை- வடகிழக்கு, சுவை- இனிப்பு, குரு ஒரு ராசியைக் கடந்து செல்லும் காலம்- ஒரு ஆண்டு.
குருவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியவை நட்பு கிரகங்களாகவும், புதனும் சுக்கிரனும் பகைக்கிரகங்களாகவும், சனி, ராகு, கேது ஆகியவை இரண்டும் சமமாகக் கலந்த கிரகங்களாகவும் விளங்குகின்றன.
குரு தனுசு ராசியிலும், மீன ராசியிலும் ஆட்சியும், கடக ராசியில் உச்சமும், மகர ராசியில் நீசமும் அடைகிறார். அவருக்கு மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியவை நட்பு வீடுகளாகவும், ரிஷபம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகள் பகை வீடுகளாகவும் விளங்குகின்றன.
- குருவுடன் ராகு சேர்ந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும்.
- குருவுடன் சந்திரன் சேர்ந்தால் மிகவும் யோகமான பலன்கள் கிடைக்கும்.
குருவுடன் சூரியன் சேர்ந்தால் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் கிட்டும். செல்வாக்கைப் பயன்படுத்தி வாழ்க்கையில் பல வெற்றிகளை எளிதாகப் பெற முடியும். சில சாதனைகளைப் புரிந்து மற்றவர்களுடைய பாராட்டைப் பெறுவார்கள். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும்.
குருவுடன் சந்திரன் சேர்ந்தால் மிகவும் யோகமான பலன்கள் கிடைக்கும். செல்வச் செழிப்பில் மிதப்பார்கள். ஏராளமான வருமானம் வரும். எவ்வளவு செலவு செய்தாலும் செல்வம் குறையாது. வாழ்க்கையில் மிகவும் வசதியாக வாழ்வார்கள். கவுரவப்பதவிகள் தேடி வரும். உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.
குருவுடன் செவ்வாய் சேர்ந்தால் மிகவும் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். ஏராளமாகச் செல்வம் சேரும். வீடு, நிலம், பூமி, பொன்னாபரணங்கள் சேரும். வாகன வசதி உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும். தெய்வீகப்பணிகளில் சிறப்பாகச் செயலாற்றுவார்கள்.
குருவுடன் புதன் சேர்ந்தால் தொழில், வியாபாரத்தில் பல நெருக்கடிகள் தோன்றும். எதிர்பார்க்கும் லாபம் கிட்டாது. வருமானத்தை விடச் செலவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சண்டையும் சச்சரவுமாக இருக்கும். நினைப்பது போல் எதுவும் நடக்காது. பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் திணற வேண்டியிருக்கும்.
குருவுடன் சுக்கிரன் சேர்ந்தால் அவர்கள் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தாலும் அதை வெளிக்காட்டுவதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்காது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறுவது போல் தோன்றினாலும் லாபம் குறைவாகக் கிட்டும். செல்வாக்கு நன்றாக இருக்கும்.
குருவுடன் சனி சேர்ந்தால் தொழில், வியாபாரத்தில் தாராளமாக லாபம் கிட்டினாலும் பல சிக்கல்கள் தோன்றும். மனைவியாலும் உடன் பிறந்தவர்களாலும் பல பிரச்சினைகள் ஏற்படும். சொத்துகள் சம்பந்தமாக விவகாரங்களும் வழக்குகளும் ஏற்படும். கடுமையாகச் செயல் பட்டே எந்த வெற்றியையும் பெற முடியும்.
குருவுடன் ராகு சேர்ந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகளும் பொன்னாபரணங்களும் சேரும். வாகன வசதி உண்டாகும். கவுரவப் பதவிகளும் உயர்பதவிகளும் தேடி வரும். விவாகரத்து பெற்ற பெண்கள், விதவைகள், நடிகைகள் போன்றோருடைய தொடர்பால் பல நன்மைகள் ஏற்படும். வளமான வாழ்க்கை அமையும்.
குருவுடன் கேது சேர்ந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும். அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் கிட்டும். வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவார்கள். வேறு மொழி பேசும் மனிதர்களால் பல பயனுள்ள நன்மைகள் ஏற்படும். செல்வ வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.
- நாம் பல ஆலயங்களில் பலவிதமான தட்சிணாமூர்த்தியை காணலாம்.
- தேவியுடன் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியன் திருக்கோலம் உலகின் வேறெங்கும் காண முடியாது.
நாம் பல ஆலயங்களில் பலவிதமான தட்சிணாமூர்த்தியை காணலாம்.
ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, விணா தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி என்று பலவிதமான தட்சிணாமூர்த்தியை பல ஆலயங்களில் தரிசித்து இருக்கிறோம்.
ஆனால் சுருட்டப்பள்ளியில், இந்த புனிதத் திருத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி தன் மனைவியுடன் மிக அழகான சிலை வடிவில் வேறெங்கும் காணமுடியாத வகையில் காணும் பக்தர்க்கெல்லாம் அருள் காட்சியளிக்கிறார். அம்பாள் கவுரி வாமபாகத்தில் இருந்து ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியே தம்பதிசமேத தட்சிணாமூர்த்தி ஆகும்.
"மதிநுதல் மங்கையோடு வடவாலிந்து
மறையோதும் எங்கள் பரமன்"
என்று திருஞானசம்பந்தர் தம்பதி சமோதரர்களாக விளங்கும் தம்பதிசமேத தட்சிணாமூர்த்தியை சிறப்பிக்கிறார்.
சாந்த சொரூபமாக தனது இடதுபுறத்தில் தனது தேவியுடன் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியன் திருக்கோலம் உலகின் வேறெங்கும் காண முடியாது.
சுருட்டப்பள்ளியில் உள்ள இந்த தாம்பத்திய தட்சிணாமூர்த்தியை வணங்குபவர்களுக்கு ஞானம், கல்வி, குழந்தைப்பேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியமும், சகல மங்களங்களையும் பெறுவார்கள்.
பள்ளிகொண்டீஸ்வரரை வலம் வந்து வணங்குவோம். பாரினிலே பல்லாண்டு காலம் மங்களமாய் வாழ்வோம். இந்த திருத்தலத்தில் மூலவரான ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரின் சன்னதியில் பக்தர்களின் தலைமீது சடாரி சார்த்துவார்கள். காரணம் ஈஸ்வரனின் பாத தரிசனம் இருப்பதால் சடாரி பக்தர்களின் தலைமீது சார்த்துகிறார்கள். உள்ளே மகாவிஷ்ணு இருப்பதால் தீர்த்தப் பிரசாதமும் தருகிறார்கள்.
விசேஷ தினங்கள்
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்து இருக்கும்.
ஒவ்வொரு பிரதோஷ தினமும், திருவாதிரை, மகா சிவராத்திரி, ஆங்கில, தமிழ், தெலுங்கு வருடப்பிறப்பு நாட்கள், நவராத்திரி ஆகிய தினங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
- தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம்.
- குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.
தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல.
ஆனால் நிறைய பேர் தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அது தொடர்பான விவரங்கள் வருமாறு:
தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.
இவர் சிவன், அவர் பிரகஸ்பதி
தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி.
தட்சிணாமூர்த்தி சிவகுரு, குரு தேவகுரு.
தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.
தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.
இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல...
தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள். சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள்.
குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.
குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள்.
சிலர் குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள். அதுவும் தவறு. குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.
எனவே தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.
- குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.
- குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
"வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!
நிலையாய் தந்திட நேரினில் வருக!''
"நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!
வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!
என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.
- குரு பகவானுக்கு உரிய நாளாகிய வியாழக்கிழமை விரதம் இருப்பது சிறப்பானது.
- மஞ்சள் நிற ஆடையைத் தானம் செய்யலாம்.
குரு பகவானை விரதம் இருந்து வழிபாடு செய்வதற்குக் குருபகவான் உச்சம் பெறும் ஆடி மாதமும், ஆட்சி பெறும் மார்கழி, பங்குனி மாதங்களும், குரு நட்சத்திரங்கள் ஆகிய விசாகம், புனர்பூசம், பூரட்டாதி வியாழக்கிழமைகளில், குரு ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்வது மிக, மிகச் சிறப்பாகும்.
வியாழக்கிழமையில் குரு ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் ஆகும்.
குரு கிரக பரிகாரங்கள்
வியாழபகவானுக்கு உரிய நாளாகிய வியாழக்கிழமை விரதம் இருந்து மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்தும், குருபகவானுக்கு மஞ்சள் நிற ஆடையாலும், சரக்கொன்றை, முல்லை மலர்களாலும் அலங்கரித்தும் வழிபட வேண்டும். அரசமர சமீத்து கொண்டு தூபம் காட்ட வேண்டும். கடலைப் பொடி சாதம், வேர்க்கடலைக் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் இவற்றை குரு பகவானுக்கு நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் செய்திடல் வேண்டும்.
மஞ்சள் நிற ஆடையைத் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்குத் தானம் செய்து விட வேண்டும். குரு பகவானின் ஆதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் இவர்களை வழிபட்டாலும் குரு மகிழ்வார். குரு பகவானை, அடாணா ராகத்தில் குருபகவானின் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
ஜாதகத்தில் குரு பலவீனமுற்றோ, தோஷமுற்றோ இருந்தால், நவமி அன்று சண்டிஹோமம் செய்ய சிறப்பாகும்.
- சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு உள்ளது.
- குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன
குரு பகவான் ஆங்கிரஸ முனிவருக்கும், சித்ராதேவிக்கும் பிறந்தவர். இவருக்கு தாரை என்ற மனைவி உண்டு. ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் பெற்ற குருவிற்கு மகன் ஒருவர் உண்டு. அவர் பெயர் பரத்வாஜர்.
குரு பகவான் நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறார். இவர் மிகவும் சுபத்தன்மை வாய்ந்தவர். இவர் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கிரகங்களிலேயே மிகவும் தூரத்தில் பெரிய கிரகமாக வீற்றிருக்கிறார். ஒரு ராசியைக் கடக்க ஓராண்டு எடுத்துக் கொள்ளும் குரு பகவான் பன்னிரண்டு ராசிகளையும் கடக்கப் பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன.
குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் உலவும் போது சந்திரன் மக நட்சத்திரத்தில் வந்து குருவைத் தொட்டு விட்டால் அன்றுதான் மகாமகம்.
குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன.
காசிக்குச் சென்று குரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பதினாறாயிரம் ஆண்டுகள் சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார். இவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு உள்ளது.
குருவிற்கு பிருஹஸ்பதி என்றும், வியாழன் என்றும், மந்திரி என்றும், அரசன் என்றும் பல பெயர்கள் உண்டு. குரு பகவான் தமிழகத்தில் தென் குடித்திட்டை, பட்டி, திருச்செந்தூர் ஆகிய மூன்று ஸ்தலங்களுக்குச் சென்று ஈஸ்வரனை, பூஜித்துப் பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது.
- தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி.
- கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும்.
நவகிரகங்களில் ஒருவரான குரு எனப்படும் வியாழ பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாதகப்படி குருவின் பார்வை பட்டால் தான் திருமணம், குழந்தை செல்வம், சிறந்த பதவி, செல்வச்சிறப்பு ஆகியவை ஏற்படும். ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தாலோ, கொடூரமானவராக இருந்தாலோ, கோசார ரீதியாகக் கெட்டவரானாலோ குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும். வியாழன் தோறும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
தட்சிணாமூர்த்தியை தரிசித்து பூஜித்து தியானித்து அர்ச்சனை முதலியவை செய்தால் குரு தோஷம் விலகும் என்று சூரியனார் கோவில் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி. குருதோஷத்துக்கு ஆலங்குடி பரிகாரத்தலம் என்று அதன் தலபுராணமும் குறிப்பிடுகிறது.
குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவானை வணங்க வேண்டும். அரசமர சமித்துகளால் ஹோமம் செய்து கடலைப்பொடி அன்னத்தால் அல்லது எலுமிச்சை ரச அன்னத்தால் ஆகுதி செய்து வேள்வியை முடிக்க வேண்டும். கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும். குரு கீர்த்தனைகளை அடாணா ராகத்தில் பாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவற்றால் குரு தோஷம் நீங்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்