search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grant"

    • கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்களில், தொழில் தொடங்க விரும்பு வோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் புதிய திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது.
    • றைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியும், வேலை வாய்ப்பு விசா வுடன் 2 ஆண்டு களு க்கு குறையா மல் வெளி நாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்களில், தொழில் தொடங்க விரும்பு வோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் புதிய திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன டைய விண்ணப்பிப்போர், பொதுபிரிவினர் வயது 18 முதல் 45 வரையிலும், பெண்கள் எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி, சிறு பான்மையினர் திரு நங்கை கள், மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 55 வயது வரையிலும், குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியும், வேலை வாய்ப்பு விசா வுடன் 2 ஆண்டு களு க்கு குறையா மல் வெளி நாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும்.

    1.1.2020 அல்லது அதற்கு பிறகு வெளி நாட்டிலிருந்து தமிழ்நாடு திருப்பி யவராக இருத்தல் வேண்டும். தொழில் தொடங்கு வோருக்கு அதிகபட்ச திட்ட செலவு உற்பத்தி துறைக்கு ரூ.15 லட்சமும், அதிகபட்ச திட்ட செலவு சேவை மற்றும் வணிக துறைக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.

    தொழில் தொடங்கு வோரின் பங்களிப்பாக பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும், அரசின் மானியத் தொகை திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் என அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.

    விண்ணப்பிப்போர் பாஸ்போர்ட், விசா நகல், கல்விச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிசான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று ஆகிய வற்றின் நகல்கள் மற்றும் திட்ட விபரங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொழில் மையங்களில் அல்லது தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக வழங்கினார்கள்
    • மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது

    கடலூர்:

    கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் கடலூர் வருவாய் கோட்டத்தில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் 3 சக்கர மோட்டார் சைக்கிள், வங்கி கடன், மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக வழங்கினார்கள்.

    இதனை தொடர்ந்து மாற்றத்திறனாளிகள் வழங்கிய மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அப்போது சமூக பாதுகாப்பு தாசில்தார் பிரகாஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் பழனி, மண்டல துணை தாசில்தார் துரைராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 51 எண்கள் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • முதலீட்டு மானியம் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக ஆக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சியைக் கல்வித் தகுதியாகப் பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு மூன்று வாரக் கால, தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள் (அ) தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 51 எண்கள் (மானியம் ரூ.503.00 லட்சம்) என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.500 லட்சம் வரையிலான உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (மகளிர் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்த ப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ், தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்குத் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.75 லட்சம் வரை) முதலீட்டு மானியம் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.

    சிறப்பு பிரிவினரான மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவினால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

    எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீதம் மானியம் திட்ட மதிப்பீட்டில் வழங்கப்படும். ஆர்வமுள்ள படித்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.msmeonline.tn.gov.in/needs ஆகும்.

    மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும், தொலை பேசி எண் - 04362 257345, 255318. எனவே, ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • 77 பயனாளிகளுக்கு ரூ. 167 லட்சத்து 55 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.
    • 7 பயனாளிகளுக்கு ரூ. 106 லட்சத்து 33 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கிய வகையில் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் வரை மயிலாடுதுறை மாவட்டம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி), படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாயப்பு உருவாக்கும் திட்டம், (யு.ஒய்.இ.ஜி.பி.), புதிய தொழில் முனைவோர் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டம் (நீட்ஸ்) மற்றும் பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்க ளுக்கான முறைப்படுத்தும் திட்டம்;-

    (பி.எம்.எப்.எம்.இ) ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.இ.ஜி.பி,) திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 114 பயனாளிகளில் 176 பயனாளிகளுக்கும், இதன் நிதி இலக்கீடான ரூ. 331.50 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ. 361.27 லட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 77 பயனாளிகளுக்கு ரூ.167.55 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

    படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாயப்பு உருவாக்கும் (யு.ஒய்.இ.ஜி.பி.), திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 42 பயனாளிகளில் 32 பயனாளிகளுக்கும் இதன் நிதி இலக்கீடான ரூ.34 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ.32.9 லட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 30 பயனாளிகளுக்கு ரூ.29.59 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

    புதிய தொழில் முனை வோர் வேலைவாயப்பு உருவாக்கும் (நீட்ஸ்) திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 17 பயனாளிகளில் இதுவரை 13 பயனாளிகளுக்கும் இதன் நிதி இலக்கீடான ரூ.168 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ.456.95 இலட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 7 பயனாளிகளுக்கு ரூ.106.33 இலட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.எப்.எம்.இ.) திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.20.94 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் சிறப்பாக கடனுதவி வழங்கிய 33 வங்கி மேலாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.இ.ஜி.பி.) திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கிய வகையில் மாநிலத்திலேயே மயிலாடுதுறை மாவட்டம் ஜனவரி மாதம் வரை 3-வது இடத்தை பெற்றுள்ளது.

    மேலும், இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    மேலும், தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், பொதுமேலாளர் மாவட்டதொழில் மையம், 2-ம் தளம், செந்தில் பைப்ஸ் வளாகம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை அல்லது தொலைபேசி எண்: 04364-212295, கைபேசி எண்: 9788877322 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம் என்றார்.

    • ஆந்தை பந்தல் அமைத்து எலிகளை இரவு நேரங்களில் கட்டுப்படுத்தலாம்.
    • உளுந்து விதை போன்றவை பற்றிய மானிய விவரங்களை கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் ஆதனூர் கிராமத்தில் விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    பயிற்சியில் விதை சான்று துறை, விதை சான்று அலுவலர் அசோக் கலந்து கொண்டு பேசுகையில், விதை தேர்வு, வயல் பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப் பின் விதையின் ஈரப்பத அளவு போன்றவை பற்றியும் தரமான விதைகளை உற்பத்தி செய்வது குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    மேலும் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பதிவு செய்தல் பற்றியும் மற்றும் விதைகளின் நிலைகள் பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு விளக்கினார்.

    வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் பேசுகையில், நடப்பு சம்பா தாளடி பருவத்தில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் அதன் மேலாண்மை பற்றியும் மற்றும் எலி ஒழிப்பு மேலாண்மை பறவைக்குடில் ஆந்தை பந்தல் அமைத்து எலிகளை இரவு நேரங்களில் கட்டுப்படுத்தலாம் என்றும் ப்ரோமோ டைலான் மருந்தினை பயன்படுத்தி எலிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி ஆத்மா திட்ட செயல்பாடுகள் பற்றி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் ரவி பேசுகையில், வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பில் உள்ள உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள், உளுந்து விதை போன்றவை பற்றிய மானிய விவரங்களை கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    பயிற்சியில் உதவி விதை அலுவலர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அகல்யா மற்றும் ஆதனூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மகேஷ் செய்திருந்தார்.

    • ரூ.186.35 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்குதல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 ன் கீழ் தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை மேம்படுத்திடும் நோக்குடன் மீன்வளம் தொடர்பான ரூ.186.35 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கீழ் காணும் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்குதல் திட்டம் ஆகிய திட்டத்திற்கு பொதுப்பயனாளிக்கு 40 சதவீதம் மானியமும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.

    மேற்கண்ட திட்டத்திற்கு மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

    முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் தஞ்சாவூர் கீழவாசல் எண்.873/4 அறிஞர் அண்ணா சாலை என்ற முகவரியில் இயங்கும் தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணபங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிராக்டர் வாங்குவதற்கான கடன் விபரங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
    • முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிற்றரசு நன்றி கூறினார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அன்னப்பன்பேட்டையில் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை துறை மற்றும் மெலட்டூர் பரோடா வங்கி, இணைந்து விவசாயிகள் தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மெலட்டூர் பரோடா வங்கி மேலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.

    கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஒன்றிய கவுன்சிலர் சுமத்ராமோகன், அன்னப்பன்பேட்டையில் ஊராட்சி தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அம்மாபேட்டை வேளாண்மை உதவிஇயக்குனர் மோகன், பரோடா வங்கி உதவி மேலாளர் கார்த்திக் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன், மான்ய விலையில் உழவு, நடவு இயந்திரங்கள், டிராக்டர் வாங்குவதற்கான கடன் விபரங்கள் குறித்து எடுத்து ரைத்தனர்.

    இந்த விழாவில்வேளா ண்மைத்துறை,தோட்ட க்கலைத்துறை, மீன்வள த்துறை, கால்ந டைத்துறை உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு தங்கள் துறை சம்மந்தமான திட்ட ங்கள் குறித்து விவசாயி களுக்கு எடுத்து கூறினர்.

    கூட்டத்தில் மெலட்டூர், கொத்த ங்குடி, அன்னப்பன்பேட்டை அதனை சுற்றியுள்ள கிராம ங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இறுதியில் வேளாண் உதவி அலுவலர் சிற்றரசு நன்றி கூறினார்

    ஏற்பாடுகளை வேளாண்மைத்துறை, மற்றும் மெலட்டூர் பரோடா வங்கி ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டது.‌
    • உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டது.‌ இந்த மனுக்களை விசாரணை செய்து பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்ப ந்தப்பட்டதுறைஅலுவ லர்களுக்கு அறிவுறு த்தப்பட்டு உள்ளது. மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரங்களை உடனடியாக மனுதாரருக்கு தெரிவி க்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜமாபந்தியில் 71 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெருமகளூர் புனிதகுமார் உள்பட 4 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும், முதியோர் உதவி தொகையும் வழங்க ஆணை வழங்கினார்.
    • வருகிற 28-ந் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 29-ந் தேதி பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    பேராவூரணி:

    பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகத்தில் 1431 பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தொடங்கியது. நேற்று பெருமகளூர் உள்வட்டம் கிராம கணக்கு வழக்குகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஜமாபந்தியில் 71 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெருமகளூர் புனிதகுமார் உள்பட 4 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும் 2 முதியோர் உதவி தொகை வழங்க ஆணையை வழங்கினார்.அப்போது, தாசில்தார் சுகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், வேளாண் துறையினர், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மற்ற துறையினர் கலந்து கொண்டனர்.இன்று குருவிக்கரம்பை உள்வட்டத்திற்கு ஜமாபந்தி நடைபெற்றது. வருகிற, 28-ந் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 29-ந் தேதி பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    • பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    மதுரை

    தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் "வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்" மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்க த்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மை யங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமை க்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண்மைப் பொறியியல் துறையின் மதுரை மற்றும் உசிலம்பட்டி உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

    மாவட்ட கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும். மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை (வே.பொ) அணுகி பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    ×