search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Graduate"

    கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக என்ஜினீயர்கள், பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவையை சேர்ந்த என்ஜினீயர்கள், பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் தனியார் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று எங்களுக்கு கனடா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள நிறுவனங்களில் வேலை நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியது.

    இதை நம்பி நாங்கள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தோம். ஆனால் நிறுவனத்தினர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து நாங்கள் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுவனத்தை மூடி விட்டு நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். எங்களது பாஸ் போர்ட்டும் அந்த நிறுவனத்தினரிடம் தான் உள்ளது.

    எனவே எங்களை ஏமாற்றிய நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணம் மற்றும் பாஸ்போர்ட்டு ஆகியவற்றை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகார் கொடுத்தவர்கள் கூறுகையில், கோவை மட்டு மல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் இந்நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக தெரிவித்தனர். #tamilnews
    தேவதானப்பட்டி பகுதியில் கவனிப்பார் யாருமின்றி பிச்சை எடுத்து வரும் மன நலம் பாதிக்கப்பட்ட வாலிபரை அரசு அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியைச் சேர்ந்த காமராஜ் மகன் சங்கர் (வயது 32). பட்டதாரி வாலிபரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களது குடும்பத்தில் நேர்ந்த அடுத்தடுத்த துயர சம்பவங்களால் பெற்றோர் உயிரிழந்தனர்.

    இதனால் சங்கர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார். உறவினர் யாரும் கண்டு கொள்ளாததால் தெருக்களில் பிச்சை எடுத்து பொதுமக்கள் தரும் காசுகளை வைத்து டீ மட்டும் குடித்து வருவார்.

    மேல் சட்டை அணியாத நிலையில் கைலி மட்டும் அணிந்து தெருக்களில் சுற்றி வரும் இவரை காண்பதற்கு பரிதாபமாக இருக்கும். அரசு சார்பில் சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தெருக்களில் இதுபோல சுற்றித்திரியும் வறியவர்களை மீட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்து வருகின்றனர்.

    ஆனால் பல வருடங்களாக இதே பகுதியில் சுற்றி வரும் இந்த வாலிபரை யாரும் கண்டு கொள்ள வில்லை. தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இது போல கேட்பாரற்ற வறியவர்கள் சுற்றித் திரிகின்றனர்.

    ஆண்களை விட பெண்கள் மற்றும் முதியவர்களின் நிலைமை மிகவும் கவலை தரும் நிலையாக உள்ளது. எனவே அதிகாரிகள் இது போன்றவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மறு வாழ்வு அளிக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இவ்வி‌ஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி பிச்சைக்காரர்கள் மற்றும் வறியவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ×