search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Rate"

    • சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்தது.
    • கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 அதிகரித்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் கடந்த 22-ம் தேதி முதல் தங்கம் விலை சரிந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பவுன் ரூ.36,880ஆக இருந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.37 ஆயிரமாக அதிகரித்தது.

    இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை பவுன் ரூ.440 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.4.625-ல் இருந்து ரூ.4.680 ஆக உயர்ந்து இருக்கிறது. தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராம் ரூ.55 உயர்ந்தது.

    இதேபோல வெள்ளி விலையும் அதிகரித்தது. கிராம் ரூ.60-ல் இருந்து ரூ.61.50 ஆகவும், கிலோ ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.61 ஆயிரத்து 500 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.184-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 953-க்கும், ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 624-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #Gold #GoldRate
    சென்னை :

    தங்கம் விலை கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 900-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் விலை அதிகரித்து, கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 902 என்ற நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-ம் ஒரே நாளில் உயர்ந்தது. அதேபோல், நேற்றும் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 930-ம், பவுன் ரூ.23 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.23-ம், பவுனுக்கு ரூ.184-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 953-க்கும், ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 624-க்கும் விற்பனை செய்யப்பட்டது.



    தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு ரூ.500-ம் அதிகரித்து, ஒரு கிராம் 39 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆனது.

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி யிடம் கேட்டபோது, ‘அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமுக உறவு ஏற்பட்டு இருப்பதால், அவர்களுக்கு இடையேயான வர்த்தக உறவு பிரகாசமாகி இருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும். அதனால் தான் தங்கம் விலை அதிகரித்து இருக் கிறது.

    இனிவரக்கூடிய நாட்களிலும் தங்கம் விலை மேலும் உயரும்’ என்றார். #Gold #GoldRate
    ×