search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goddess"

    • ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • 29-ந் தேதி பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்கை கொண்டு மாவிளக்கு பூஜையும் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு வேல் எடுத்து சென்று புனித நீராடி, தீர்த்து குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர்.

    பின்னர் வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. 29-ந் தேதி பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்கை கொண்டு மாவிளக்கு பூஜையும் செய்தனர். வானவேடிக்கை நடைபெற்றது. இரவு அம்மன் ஊர் விளையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்றுகாலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊஞ்சப்பாளையம் ஊர் தர்மகர்த்தா முன்னிலையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் காலை முதல் இரவு வரை ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து அம்மனை தரிசித்தனர்.
    • ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    ராசிபுரம்:

    ஆடி வெள்ளியை முன்னிட்டு ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் காலை முதல் இரவு வரை ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து அம்மனை தரிசித்தனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அப்போது அம்மன் அண்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதேபோல் ராசிபுரம் டவுன், ஈபி. காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர். அப்போது துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். ராசிபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அப்போது அம்மன் வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா லித்தார். அதேபோல் எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், பாரக்கல் புதூர் அத்தனூர் அம்மன் கோவில், புதுப்பாளையம் காமாட்சி அம்மன் கோவில், அத்தனூர் அத்தனூர் அம்மன் கோவில் உள்பட ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    • ஆடிப்பூரத்தை முன்னிட்டு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி 108திருவிளக்கு பூஜை நடந்தது.
    • சிவல் விளை புதூர் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் பக்தர்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கினர்

    உடன்குடி:

    உடன்குடி அருகே காரங்காடு சிவசந்தடி–யம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழாவையொட்டி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வளைகாப்பு பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தொடர்ந்து கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

    மேலும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி 108திருவிளக்கு பூஜை நடந்தது.திருமணமான பெண்களுக்கு பெண்மணி ஒருவர் வளைகாப்பு விழா நடத்துவதாக பாவித்து பெண்களுக்கு குங்குமம், மஞ்சலிட்டு, வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழா நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில்நிர்வாகத்தினர் செய்திருந்தனர். உடன்குடிசந்தையடியூர் முத்தாரம்மன் கோவில், பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில், கொட்டங்காடு பத்ரகாளி அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில்அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டுசிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.உடன்குடி வடக்கு காலன் குடியிருப்பு, சிவல் விளை புதூர் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் பக்தர்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கினர்.உடன்குடி அருகே பிறை குடியிருப்பு தேவி முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.

    • இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் , கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பேட்டை பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் ,விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தனர்.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில், பரமத்தி வேலூர் செல்லாண்டிஅம்மன் கோவில், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன் கோவில்,கொந்தளம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பரமத்தி அங்காளம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத 2வது வெள்ளிக்கி ழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்த அருள் பெற்றனர்.

    ×