search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Glass Window"

    • நன்கொடை தரவேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது.
    • ஆத்திரமடைந்தவர்கள் கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 31). அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிலர் நன்கொடை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.சந்திரமோகன் இப்போது இல்லை பிறகு வாருங்கள் என கூறியுள்ளார். மீண்டும் வரமுடியாது, இப்போதே நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது .இதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள் கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதையடுத்து சந்திரமோகன் கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார் அருள்புரத்தை சேர்ந்த சரவணன் (28) என்பவரை கைது செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×