என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl dead"
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 19-ந் தேதி மாசி மகத்தெப்பத்திரு விழா நடந்தது.
அதன் பின்னர் தினமும் தெப்பத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து விளக்கேற்றுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல், தெப்பக்குளத்தில் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திருக்கோஷ்டியூர் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்வையிட்டார். இது தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை, திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் போலீசார் பெண் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மிதந்த பெண் யார்? அவவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் காலனியில் தூய லூர்து அன்னை தேவாலாயம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 27ந்தேதி இரவு திருவிழாவையொட்டி மாதா சிலை ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது ஒரு லோடு ஆட்டோவில் பட்டாசுகளை வைத்து அதனை சிலர் வெடித்துக்கொண்டே வந்தனர். அந்த லோடு ஆட்டோவில் சிறுவர்களும், பெண்களும் அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில், ஊர்வலத்தின் போது வெடிக்கப்பட்ட ராக்கெட் வெடியானது. மேல்நோக்கிச்சென்றபோது மின்வயர் மீது பட்டு மீண்டும் திரும்பி பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் விழுந்தது.
ஆட்டோவில் இருந்த அனைத்து பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது. சிறுவர்கள், கல்லூரி மாணவி என மொத்தம் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷினி (வயது 10) சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே போலீசாரின் அனுமதி மற்றும் பாதுகாப்பு கோராமல் விழா நடத்தப்பட்டதாக கிராம நிர்வாக அதிகாரி தசரதன் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ உரிமையாளரான தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தசரதன் , டிரைவர் அசோக் ஆகிய 2 பேரை கடந்த 28-ந் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில் தற்போது மாதா கோவில் நிர்வாகிகளில் ஒருவரான முனுசாமி என்கிற ஜோசப் என்பவரை இன்று காலை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மாதா கோவிலின் முதன்மை நிர்வாகியான அந்தோணி என்பவரை தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்