search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl dead"

    கோவில் தெப்பத்தில் பிணமாக மிதந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 19-ந் தேதி மாசி மகத்தெப்பத்திரு விழா நடந்தது.

    அதன் பின்னர் தினமும் தெப்பத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து விளக்கேற்றுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல், தெப்பக்குளத்தில் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து திருக்கோஷ்டியூர் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்வையிட்டார். இது தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை, திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் போலீசார் பெண் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மிதந்த பெண் யார்? அவவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணகுடி அருகே கிணற்றில் பிணமாக சிறுமி மிதந்ததால் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வள்ளியூர்:

    சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). அவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகையால் தங்கள் உறவுக்கார பெண்ணான அபிராமி (15) என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஊர் ஊராக சென்று குறி சொல்லும் தொழில் செய்து வந்த பாலகிருஷ்ணன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என்று பாலகிருஷ்ணன், அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டாள். பல இடங்களில் தேடியும் அபிராமியை கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இதுகுறித்து பாலகிருஷ்ணன் போலீசிலும் புகார் தெரிவிக்கவில்லை. 

    இந்த நிலையில் தெற்கு வள்ளியூர் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கிணற்றில் சிறுமியின் பிணம் அழுகிய நிலையில் மிதப்பதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், காணாமல் போன சிறுமி அபிராமி என்பது தெரியவந்தது. அவள் கொலை செய்யப்பட்டாளா? அல்லது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தாளா? ஆகிய கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரம்பாக்கம் அருகே மாதா கோவில் விழாவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் சிறுமி பலியானார். இதுதொடர்பாக கோவில் நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் காலனியில் தூய லூர்து அன்னை தேவாலாயம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 27ந்தேதி இரவு திருவிழாவையொட்டி மாதா சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    அப்போது ஒரு லோடு ஆட்டோவில் பட்டாசுகளை வைத்து அதனை சிலர் வெடித்துக்கொண்டே வந்தனர். அந்த லோடு ஆட்டோவில் சிறுவர்களும், பெண்களும் அமர்ந்திருந்தனர்.

    இந்த நிலையில், ஊர்வலத்தின் போது வெடிக்கப்பட்ட ராக்கெட் வெடியானது. மேல்நோக்கிச்சென்றபோது மின்வயர் மீது பட்டு மீண்டும் திரும்பி பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் விழுந்தது.

    ஆட்டோவில் இருந்த அனைத்து பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது. சிறுவர்கள், கல்லூரி மாணவி என மொத்தம் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷினி (வயது 10) சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே போலீசாரின் அனுமதி மற்றும் பாதுகாப்பு கோராமல் விழா நடத்தப்பட்டதாக கிராம நிர்வாக அதிகாரி தசரதன் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ உரிமையாளரான தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தசரதன் , டிரைவர் அசோக் ஆகிய 2 பேரை கடந்த 28-ந் தேதி கைது செய்தனர்.

    இந்த நிலையில் தற்போது மாதா கோவில் நிர்வாகிகளில் ஒருவரான முனுசாமி என்கிற ஜோசப் என்பவரை இன்று காலை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக மாதா கோவிலின் முதன்மை நிர்வாகியான அந்தோணி என்பவரை தேடிவருகின்றனர்.
    ×