search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl Child"

    • பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன.
    • கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    விழிப்புணர்வு பிரசாரங்கள் எவ்வளவோ மேற்கொண்ட பின்பும், பாலியல் வன்முறைகள் கட்டுக்குள் அடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதை கெடுக்கும் பலாத்கார விளையாட்டுகளே அதற்கு காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை. பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகளை இருட்டில் இருந்து தனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுகிறவர்கள், அப்படியே மதிமயங்கிப்போய் பின்பு அதை வெளிச்சத்தில் நிஜமாக நிறைவேற்ற விரும்பும்போதுதான் அந்த ஆபத்தின் கொடூரம் வெளியே தெரியவருகிறது.

    பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன. அவை இப்படித்தான் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. முதலில் ஸ்கிரீனில் இளைஞன் ஒருவன் தோன்றுவான். பின்பு சில பெண்கள் திரைக்கு வருவார்கள். அதில் யாரேனும் ஒரு பெண்ணை தேர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. சரியாக அந்த எண்ணை 'க்ளிக்' செய்தால் அந்த ஆடை நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆடையாக களைந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக்குவதுதான் விளையாட்டின் இறுதிக்கட்டம்.

    இந்த விளையாட்டு பெண்களை ஆடையை நீக்கிவிட்டு பார்த்து ரசிக்கவேண்டிய போகப்பொருள் என்ற எண்ணத்தை, அதை விளையாடுபவர்களின் சிந்தனையில் உருவாக்கிவிடுகிறது. அடுத்து இன்னொரு விளையாட்டு அதைவிட கொடூரம். கம்ப்யூட்டர் திரையில் தலைதெறிக்க ஓடும் பெண்ணை துரத்திப் பிடித்து, மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்வது போன்ற விளையாட்டுகள் பெருகி வருகின்றன. அதனால் பல்வேறு உலக நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஆனாலும் தடையை மீறி இவை உலாவருகின்றன.

    பாலியல் வன்முறை என்பது மிக மோசமான சமூகவிரோத செயல். அதைக்கூட விளையாட்டாக்கி பார்க்கும் மனோபாவம் மனித சமூகத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த பயம் இன்று ஒவ்வொரு குடும்பத்தையும் தாக்கத் தொடங்கி யிருக்கிறது.

    டெல்லியை சேர்ந்த பிரபலம் ஒருவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன்னாலே செலவிட்டான். மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு, அவன் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நண்பர்களுடன் அதிகம் பேசுவதில்லை. வெளியே விளையாடவும் செல்வதில்லை. படிப்பிலும் கவனக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் தனிமையில் இருக்க விரும்பினான். பெண்களை முரண்பாடான நிலையில் உற்றுப்பார்க்கத் தொடங்கியிருக்கிறான். அவனது மாற்றங் களால் கவலை அடைந்த தந்தை, அன்று அவனை கண்காணித்திருக்கிறார். கம்ப்யூட்டரில் அவன் விளையாடிக் கொண்டிருந்த 'ரேப் கேம்'மை பார்த்தவுடன் அவருக்கு இதயமே நின்று விட்டது போல் ஆகியிருக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு விளையாட்டு இருக்க முடியுமா என்று அதிர்ச்சியடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை அவரால் மகனிடம் காட்டமுடியவில்லை. காட்டினால் அவன் குணாதிசயங்கள் மேலும் மோசமாகிவிடும் என்பதை அறிந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் பெறவைத்திருக்கிறார். அதன்பின்புதான் அவனது 'அந்த விளையாட்டில்' மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    கம்ப்யூட்டரில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர், அவர்கள் எந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்று கண்காணிப்பது கஷ்டம்தான். ஆனாலும் கண்காணிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் எல்லா பெற்றோருக்கும் புரிவதில்லை. ஆனால் பிள்ளைகள் அதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத பெற்றோரால், பிள்ளைகளின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

    மனநல ஆலோசகர் அஸ்வந்த் இதுபற்றி தெரிவிக்கும் கருத்து:

    "மூடிவைப்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேகம் இளைஞர்களிடம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்திற்கு வழிகாட்டுவதுபோல், அவர்களை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் வேலையை இத்தகைய விளையாட்டுகள் உருவாக்குகின்றன. இத்தகைய போக்கை கண்டறிந்து திருத்துவது கடினம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறவேண்டும். இன்றைய கால சூழலைப்பார்த்தால் சிறுவர்களுக்குகூட அந்த விழிப்புணர்வு அவசியம் என்று நினைக்கிறோம். பொதுவான நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொண்டால், கம்ப்யூட்டரை எல்லோரும் இருக்கும் அறையில் வைக்கவேண்டும். அப்போதுதான் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமுடியும். அவர்கள் தனிமையில் அதிக நேரத்தை செலவிடும்போது அதற்கு என்ன காரணம் என்பதை உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனம் குறைந்தாலோ, நண்பர்களோடு பேசுவதை - விளையாடுவதை நிறுத்தினாலோ அதற்கான காரணத்தை கண்டறிய முன்வரவேண்டும்" என்கிறார்.

    கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர் கன்ஷிகா கூறுகிறார்:

    "ஒரு முறை இதுபோன்ற விளையாட்டுகளை டவுன்லோடு செய்துவிட்டால் மறுபடியும் அதை அழிக்க முடியாது. இது போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் சீனா, ஜப்பானில் தான் தயாரா கிறது. இதை தடுக்கவும் வழியில்லை, அழிக்கவும் முடியாது. போன் இருக்கும்வரை எல்லாமே இருக்கும். இந்நிலையில் நாம் நமது பிள்ளைகளைத்தான் பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். நமது பிள்ளைகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு அதில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு சந்தோஷப்படாமல், பெற்றோரும் அதை தெரிந்துகொண்டு கண்காணிக்கவேண்டும். அதோடு பெண்களை பெருமையாக நினைக்கவும் கற்றுத்தரவேண்டும். பாலியல் வன்முறை விளையாட்டுகள் போன்று துப்பாக்கியால் சுடும் வன்முறை விளையாட்டுகளும் நிறைய உள்ளன. அதில் ஆழ்ந்து போகிறவர்கள்தான் மேலை நாடுகளில் அவ்வப்போது துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொல்லும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதலீட்டு பத்திரம் பெற்றுள்ள பயனா ளிகளில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் முதலீட்டு பத்திரம்,

    10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழ் நகல், பயனாளிகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், பயனாளி மற்றும் அவரின் தாயின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் 1 ரூபாய் வருவாய் அஞ்சல் வில்லை ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணியா ளர்களை அணுகுமாறு தெரிவிக்க ப்படுகிறது.

    மேலும் பிரதிமாதம் 2-வது செவ்வாய்க் கிழமை "பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனா ளிகள் தினமாக" அனுசரித்து இத்திட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    எனவே 18 வயது பூர்த்தி அடைந்த பயனாளிகள் மேற்கு றிப்பி ட்ட விவரங்க ளுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறு மாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து ள்ளார்.

    • உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
    • அந்த குழந்தை இறந்தது எப்படி? என்பது தொடர்பாக பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் சரகம் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதில்நாயக்கனூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி வாசுகி (வயது21). இவர்கள் சென்னை படப்பையில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் வாசுகி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாகிய வாசுகியை பிரசவத்திற்காக கடந்த 26-ந்தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அங்கு அவருக்கு கப்பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது. தாயும்-சேயும் உடல் நலத்துடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

    இந்தநிலையில் நேற்று பகலில் அந்த பெண் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தையை உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். மேலும் அந்த குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    பிறந்த சில நாட்களிலேயே பச்சிளம் பெண் குழந்தை இறந்தது தொடர்பாக எழுமலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தை இறந்தது எப்படி? என்பது தொடர்பாக பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
    • பெற்றோர் பயிற்சி முகாம் பற்றி முழுமையாக விசாரியுங்கள்.

    தற்போதுள்ள காலகட்டத்தில் பெற்றோர் குழந்தைகளை 'சம்மர் கேம்ப்' எனப்படும் கோடை பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். அங்கு ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. "கோடை காலம் எப்போது வரும் என்று முன்பெல்லாம் குழந்தைகள் காத்திருப்பார்கள். நண்பர்கள், தோழிகளை எல்லாம் சேர்த்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்று மரம் ஏறி மாங்காய் பறிப்பார்கள். ஆறுகளுக்கு சென்று நீச்சலடித்து குளித்து மகிழ்வார்கள். கூட்டமாக சேர்ந்து விளையாடுவார்கள்.

    தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட நகரத்து குழந்தைகளால் இன்று, அதை கற்பனைசெய்துகூட பார்க்க முடிவதில்லை. அதனால் அவர்களை பெற்றோர் 'சம்மர் கேம்ப்' எனப்படும் கோடை பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். அந்த முகாம்களில் தற்காப்பு, நீச்சல், மேற்கத்திய நடனங்கள், ஓவியம் வரைதல், இசைக் கருவிகள் மீட்டுதல் போன்ற பலவிதமான பயிற்சிகளை சிறுவர்-சிறுமியர்களுக்கு வழங்குகிறார்கள். அங்கு ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அதனால் அவர்கள் மனக்குழப்பம், மனஅழுத்தம் போன்றவைகளுக்கு உள்ளாகிறார்கள்.

    இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பத்து பதினைந்து நாட்களில் அந்த முகாம்கள் முடிந்துவிடுகின்றன. பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் அதுவரை அமைதிகாத்துவிட்டு பெரும்பாலும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் காலகட்டத்தில்தான் பெற்றோரிடம் சொல்கிறார்கள். அப்போது நிறைய குழந்தைகள் கவுன்சலிங்குக்கு அழைத்துவரப்படுகிறார்கள். பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் குழந்தைகளின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு சமூகத்தை பற்றிய பயமும் அதிகரிப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த உண்மையை உணர்ந்து, பெற்றோர் இந்த கோடைகாலத்தில் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்" என்கிறார், பாலியல் பாதிப்புகளுக்கு உள்ளான குழந்தைகளின் மனநல ஆலோசகர் வித்யாரெட்டி.

    "முதலில் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக் கொடுக்கவேண்டும். முக்கியமான உடல்உறுப்புகளை பற்றி எடுத்துக் கூறவேண்டும். அதோடு 'உடல் உறுப்புகளில் எவை எல்லாம் உள் ளாடைகளால் மறைக்கப்படுகிறதோ அவை உனது தனிப்பட்ட உறுப்புகள். அவைகளை உன் உடல் ஆரோக்கிய காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் அவற்றை தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியானதல்ல' என்பதை புரியவைக்கவேண்டும். தவறான தொடுதல் எது, சரியான தொடுதல் எது என்பதையும் குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும்.

    உங்கள் குழந்தை கோடைகால பயிற்சி முகாமுக்கு செல்ல விரும்பினால், 'எங்கேயாவது போ.. எதையாவது கற்றுக்கொள்..' என்று அனுப்பிவிடாமல், பயிற்சி கொடுக்கும் அந்த அமைப்பு பற்றி முழுமையாக விசாரியுங்கள். அவர்களது பின்னணி, அனுபவம், இடம், சூழல், பயிற்சியாளர்கள் பற்றி எல்லாம் விசாரித்து திருப்தியடைந்தால் மட்டும் அங்கு கொண்டுபோய் சேருங்கள்.

    பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் அங்கு என்ன நடந்தது என்று கேளுங்கள். பயிற்சிக்கு தொடர்பில்லாத நிலையில் தொடுதல்களை உருவாக்கினால், தங்களிடம் சொல்லும்படி கூறுங்கள். பொதுவாக குழந்தைகளுக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு தர விரும்புகிறவர்கள், முதலில் அவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்வசப்படுத்தும் விதத்திலோ நடந்துகொள்வார்கள்.."

    "பெற்றோர் தங்கள் குழந்தைகளை நம்பவேண்டும். 'நீ சொன்னால் சரியாக இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்' என்று கூறவேண்டும். ஆனால் 99 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நம்புவதில்லை. 'நீ பயிற்சி முகாமுக்கு செல்ல விரும்பாமல் அவ்வாறு கூறுகிறாய்' என்று பதில்சொல்வார்கள். சிலரோ ஒருபடி மேலே போய், 'அந்த நபர் ரொம்ப நல்லவர். அவரை சந்தேகப்படக்கூடாது' என்று அவருக்கு பாராட்டுரை வழங்கிவிட்டு, தங்கள் குழந்தையை மட்டம் தட்டிவிடுவார்கள். அவ்வாறு பெற்றோர் நடந்துகொள்ளக்கூடாது. குழந்தைகளை முழுமையாக நம்பவேண்டும். குழந்தை சொன்ன உடன் அந்த சம்பவம் பற்றி ஆராயவும் முன்வரவேண்டும்"

    கோடை பயிற்சி வகுப்புகளில் நீங்கள் எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?

    "புற்றீசல்கள் போல் யார் வேண்டுமானாலும் சம்மர் கேம்ப் நடத்தலாம் என்ற நிலை இருக்கக்கூடாது. தகுதியானவர்கள், தகுதியான பயிற்சியாளர்களை வைத்தே இதை தொடங்கவேண்டும். அவர் களுக்கான நிபந்தனைகளை அரசு வகுத்து, நடத்தை விதிகளை பின்பற்றச்செய்யவேண்டும். மத்திய அரசு 2012-ம் ஆண்டில், குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றியுள்ளது. அதில் 'ஒரு நிறுவனத்தில் குழந்தைகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு' என்று கூறப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கோடைகால பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொருந்தும். அதனால் அத் தகைய நிறுவனங்களை நடத்தும் நிர்வாகிகள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். பிரச்சினைக்குரியவர்களை பயிற்சியாளர் களாக சேர்த்துவிடக்கூடாது. நாம் எல்லா மையங்களையும் குறைசொல்லவில்லை. பிரச்சினைக்குரியவைகள் மட்டும் சமூக நலன் கருதி சரிசெய்யப்படவேண்டும்"

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • 5 பெண் குழந்தைகளின் தாய் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கலெக்டருக்கு எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது.



    தற்கொலை செய்து கொண்ட நாகலட்சுமியையும், தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள் சண்முகபிரியா, பாண்டி சிவானி.

    திருமங்கலம்

    மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(வயது31). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்சினி, தேன்மொழி, சண்முகபிரியா, பாண்டி சிவானி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கணேசன் கோவையில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். இதனால் நாகலட்சுமி தனது 5 குழந்தைகளுடன் மையிட்டான்பட்டியில் வசித்து வந்தார். 5 பெண் குழந்தைகள் இருப்பதால் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென நாகலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

    அதன்பேரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் வழங்கினார். இதையடுத்து அந்த பணிக்கு நாகலட்சுமி சென்று வந்தார்.

    அப்போது மையிட்டான் பட்டி கிராமத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகிய 3 பேரும் நாகலட்சுமியை தரக்குறைவாக பேசி, அவருக்கு வேலை தரமுடியாது என கூறியுள்ளனர். இதனால் வேதனையடைந்த நாக லட்சுமி தன்னை தரக்குறைவாக பேசியது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

    ஆனால் அதன்பிறகும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 3 பேர் மீதும் நாகலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் இன்று தனது கைக்குழந்தைகளான சண்முகபிரியா, பாண்டி சிவானி ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு மையிட்டான்பட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில் சென்றார்.

    அந்த பஸ் சிவரக்கோட்டை அருகே வந்தபோது, நாகலட்சுமி தனது 2 குழந்தைகளையும் அருகில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு திடீரென ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார். கண்ணை மூடி திறப்பத்திற்குள் நடந்த இந்த சம்பத்தை பார்தது பஸ்சில் இருந்தவர்கள் அதிச்சியடைந்து அலறினர்.

    இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மற்றும் சக பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர். பஸ்சில் இருந்து குதித்த நாகலட்சுமி படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    தங்களுடன் பயணித்து வந்த பெண் பஸ்சில் இருந்து குதித்து படுகாயமடைந்து கிடப்பதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். படுகாய மடைந்து சாலையில் கிடந்த நாகலட்சுமியை பார்த்து அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதன. இதனை தொடர்ந்து நாகலட்சுமி அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே நாகலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கலெக்டரிடம் கொடுப்பதற்காக நாகலட்சுமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிளார்க் தன்னை அவதூறாக பேசி மன வருத்தத்தை ஏற்படுத்தி யதாகவும், மேலும் வேலை தரமுடியாது என மிரட்டியதாகவும் எழுதி இருந்தார்.

    இந்த காரணத்தாலேயே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் எனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகியோர்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அந்த கடிதத்தை கைப்பற்றி, அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது.
    • சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும்.

    காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

    வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

    பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

    பாலியல் குற்றங்கள்

    இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    பள்ளி, கல்லூரிகளில்

    சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியரும், டாக்டருமான பூர்ண சந்திரிகா:-

    சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும். பாலின சமத்துவத்தை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே தொடுதலில் சரி எது? தவறு எது? என்பது குறித்து சொல்லித்தர வேண்டும். இதை வெளியில் சொல்வதற்கு அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும். மாணவி சோகமாக இருந்தால் என்ன நடந்தது என்று முதலில் கேட்க வேண்டும். அதை பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்கான முதல் அடி வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். பெண்ணையும், ஆணையும் சமமாக பார்க்கும் நிலை வந்துவிட்டாலே போதும் இந்த நிலை மாறும்.

    பெண் தானே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை மாற வேண்டும். சில இடங்களில் வீட்டிலேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடப்பதால் அதை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். எது நடந்தாலும் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். பெண் பிள்ளை தான் பாதிக்கப்பட்டது குறித்து வெளியே சொல்லி பின்னரும் அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பாக அரணாக நாம் இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான வகுப்புகள் எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் பெண் குழந்தைகளுக்கு நடப்பது போல் ஆண் குழந்தைகளுக்கும் 18 சதவீதம் நடப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, இருவருக்கும் பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

    தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் அருமைநாதன்:-

    உளவியல் ரீதியாக மாணவர்களை, ஆசிரியர்கள் எதிர்கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் உளவியல் ஆசிரியர்களை அரசே நியமிக்க வேண்டும். தற்போது இருக்கும் மாணவர்கள் சின்ன அவமானத்தையோ, ஏமாற்றத்தையோ தாங்க முடியாத நிலையில்தான் வளர்கிறார்கள். ஒரு சின்ன அவமானம் ஏற்பட்டவுடன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ எந்த பிரச்சினை நடந்தாலும் அதை வெளியில் கொண்டுவருவதில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை சொன்னால் நம்மைத்தான் தவறாக நினைப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

    பாலியல் குற்றங்களுக்கு தண்டனை மட்டுமே தீர்வு கொடுக்காது. தண்டனை கொடுத்தாலும் இதை சரிசெய்ய முடியாது. பாலியல் என்பது உளவியல் ரீதியான ஒன்று. சமுதாய மனநிலை மாறவேண்டும். பள்ளியில் இருந்தே மாணவ, மாணவிகளிடம் உளவியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாள்தோறும் உளவியல் ரீதியான விஷயங்களை பேச வேண்டும். அரசு செலவினம் பார்க்காமல் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு உளவியல் ஆலோசகரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்.

    கல்லூரி மாணவி ரித்திகா ரமேஷ்:-

    12-ம் வகுப்பு படிக்கும் போது நானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் வெளியில் சொல்ல முடியாத நிறைய கதைகள் இருக்கின்றன. பெண் வெளியில் வந்து சொல்லும் போது அவர்களை மரியாதைக்குரியவர்களாக நடத்த வேண்டும். பாலியல் கல்வி கண்டிப்பாக அனைவருக்கும் தேவை. பெண் குழந்தைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதை காட்டிலும் ஆண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வளரும் போதே சொல்லி வளர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு தவறு செய்தவர்களுக்கு தண்டனை விரைந்து வழங்கப்பட வேண்டும். அப்போது தான் சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து வெளியில் வர முடியாது என்ற பயம் தவறு செய்தவர்களுக்கு வரும்.

    கல்வியாளர் கல்யாணந்தி:-

    கோடை விடுமுறையின் போது மாணவர்களுடன் பெற்றோர்கள் நீண்ட நேரம் செலவிட முடியும். இந்த நேரத்தை பயன்படுத்தி பெற்றோர்கள் அவர்களிடம் செக்ஸ் கல்வி குறித்து பேசலாம். வெளியே செல்லும் நேரங்களில் யாராவது தவறாக நடந்துகொண்டால் உடனே என்னிடம் சொல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு உடன் இருப்போம் என்று தைரியம் சொல்ல வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த ஓரிரு நாட்களில் அவர்களிடம் சிறிய மாறுதல்கள் இருக்கும். அப்போது அவர்களிடம் உட்கார்ந்து பேச வேண்டும். பெற்றோர்கள் புகார் தெரிவிக்க முன்வரும் போதுதான் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் வரும். விழிப்புணர்வு அதிகமாக அதிகமாக தான் குற்றங்கள் குறையும்.

    • ரோட்டோரம் கிடந்த 2 மாத பெண் குழந்தையை வீசிசென்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பெண் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி உணவு விடு திக்கு எதிரில் சாலை யோரம் மெத்தையுடன் கூடிய சிறிய படுக்கையில் 2 மாத பெண் குழந்தை நேற்று இரவு அநாதையாக கிடந்தது.

    இதனை கண்ட பொது மக்கள் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த குழந்தை வீசிச்சென்ற பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலையோரம் பெண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை காட்டிலும், தாய் முக்கியமானவர்.
    • பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.

    சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடங்குவது எங்கே? என்பது பற்றி மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கடந்த காலங்களில் எதுவெல்லாம் வெளிப்படையாக தெரியாதோ, அதை எல்லாம் இப்போது இணையதளம் மூலம் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடிகிறது.

    எல்லா தகவல்களையும் செல்போன் மூலம் தனியாக தெரிந்து கொள்வதே குற்றத்தின் தொடக்கமாகிறது. குறிப்பாக செல்போன் செயலிகள் (ஆப்ஸ்) அதிகரித்து விட்டன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் சிறார்களின் தொடர்புகள் அதிகரிக்கிறது. நல்லவர்களின் தொடர்பு மட்டுமின்றி கெட்டவர்களின் சகவாசமும் எளிமையாக கிடைக்கிறது.

    யாரென்றே தெரியாத நபர்களுடன் கூட பேச முடிகிறது. அவர்களை எளிதாக நம்பியும் விடுகிறார்கள். பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை காட்டிலும், தாய் முக்கியமானவர். அவருக்குதான் பொறுப்புகள் அதிகம். இது நவீன உலகம், குடும்பத்தில் தாய், தந்தை சம்பாதிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் சம்பாதிப்பதை விட குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். என் குழந்தையை நான் தான் பார்ப்பேன் என்ற மனநிலைக்கு பெற்றோர் வர வேண்டும். தாய், தனது பெண் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.

    அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்று நோக்க வேண்டும். குழந்தைகளின் கையில் எந்த வகையான செல்போன் இருக்கிறது, அதில் என்னென்ன தகவல்களை அவர்கள் பார்க்கிறார்கள், தேவைக்கு தான் செல்போன் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைக்க வேண்டும். தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள்தான் நடக்கின்றன. எனவே, பள்ளி செல்லும் பெண், ஆண் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கக்கூடாது. அப்படியே பிள்ளைகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றால், தாய் அல்லது தந்தை என ஒருவர் அவர்களுடன் இருந்து அதனை கண்காணிக்க வேண்டும்.

    ஆன்லைனில் வகுப்புகள் நடந்தால், அந்த வகுப்பு முடிந்த பின்னர் அவர்களிடம் இருந்து உடனடியாக செல்போன்களை வாங்கிவிட வேண்டும். கண் பார்வையில் செல்போன்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பிள்ளைகளின் கையில் செல்போனை கொடுத்து விட்டு பெற்றோர் தங்களின் வேலையை செய்யக்கூடாது. விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றார் போல் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் கட்டுப்பாடுகள் விதித்து தான் ஆக வேண்டும்.

    செல்போனை "ஸ்கிரீனிங்" செய்தாலே பெருமளவு குற்றங்கள் தடுக்கப்படும். காலை, மாலை, இரவு என நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளுடன் மனம்விட்டு பேச வேண்டும். பேசுவது குறைந்ததன் விளைவாகத்தான், செல்போன் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. பிள்ளைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். அந்த காலத்தில் எப்படி இருந்தோமோ, அதுபோல் தான் இந்த காலத்திலும் பெண் பிள்ளைகளை கவனமாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு படிப்பில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அதனை பிள்ளைகள் தவறாக பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். பெண் பிள்ளைகளை தைரியமாக வளர்க்க வேண்டும், எந்த பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்று கொடுப்பது கூடுதல் பலம்.

    எல்லாவற்றையும் விட முக்கியமாக, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு நல்ல விதமாக போதனைகளை எடுத்துரைக்க வேண்டும். வகுப்பு தொடங்கும் முன்பு செய்தித்தாள்களில் வரும் குழந்தைகள் தொடர்பான குற்றச்சம்பவங்களை எடுத்துரைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாரும் தொட்டாலோ, தவறாக நடக்க முயன்றாலோ, தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலோ அதுகுறித்து பெற்றோரிடம் அல்லது ஆசிரியர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.

    குறிப்பாக 12 வயது முதல் 14 வயதுக்குள் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கும் அனைத்தும் அவர்களின் மனதில் எளிதாக பதிந்து விடும். எனவே, அந்த காலகட்டத்தில் நல்லவிதமாக கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். அவ்வாறு எடுத்துரைத்தால் 18 வயதில் நல்ல கல்லூரியை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். அதுபோல், 21 வயதிற்கு பின்னர்தான் திருமணத்தை பற்றி பேச வேண்டும். பெற்றோரின் தூண்டுதலால், சிறிய வயதில் திருமணம் செய்வதாலும் ஏராளமான உடல்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. குழந்தை திருமணம் நடத்த ஏற்பாடு செய்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    பெண் குழந்தைகளை மற்றொருவர் கட்டுப்படுத்தும் விதமாக வைக்கக்கூடாது. முதலில் பெற்றோர், 2-வதாக ஆசிரியர்கள், அடுத்தது பள்ளி, அடுத்தது சமூகம் இவை எல்லாம் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இது சரியாக இருந்தால், பெண் குழந்தைகள் தவறான பாதையை தேர்வு செய்ய மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் கல்வி கற்காமல் 40 சதவீத சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் முடங்கியிருப்பதாகவும், அவர்களில் 5 சதவீதம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    ‘பெண்களின் கல்வி' என்ற தொண்டு நிறுவனம், கிராமப்புறங்களில் கல்வி கற்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடத்தில் மீண்டும் கல்வியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
     
    கிராமப்புற பெண்களின் கல்வித்திறனை மேம்படுத்தி சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் சமமான உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கமாகும். அதனை முன்னிறுத்தி இந்த கல்வி சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் இல்லை.

    இதுவரை இந்தியாவில் 13 லட்சம் சிறுமிகள் இந்த நிறுவனத்தின் முயற்சியால் கல்வி பயின்றிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தியாவில் கல்வி கற்காமல் 40 சதவீத சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் முடங்கியிருப்பதாகவும், அவர்களில் 5 சதவீதம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அவர்களுக்குப் பொதுவான கல்வி அறிவைக்கொடுத்து, அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக அரசு மற்றும் தன்னார்வலர்களுடன் அந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. '2022 தீர்வு வகுப்புகள்' என அத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மஸாசுசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு முக்கியமான 7 பாட பிரிவுகளில் கற்பிக்கவுள்ளனர்.

    தொழில்முனைவோர்கள் இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து உரையாற்றுகிறார்கள். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கிராமப்புறங்களில் வாழும் பள்ளியில் சேராத மற்றும் கல்வியை இடைநிற்றல் செய்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை இதற்காக தேர்வு செய்ய உள்ளனர்.
    பணம் பணம் என்று தாய், தந்தை வேலைக்கு சென்றுவிட்டால், குழந்தைகள் போதிய கவனிப்பு இன்றி பாலிய பருவத்திலேயே பாதை மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.
    8-ம் வகுப்பு படிக்கும் சென்னை சிறுமி...

    தன்னுடன் படிக்கும் சிறுவர்கள்4 பேரை தனது வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியும் தேர்வுக்கு படித்தாள். அந்த 4 சிறுவர்களும் சேர்ந்து அந்த மாணவியை கட்டிப்போட்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம், அனைத்து தரப்பு பெற்றோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    முதியவர்களால் சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர்களால் தொல்லை, ஆசிரியர்களால் தொல்லை, பக்கத்து வீட்டுக்காரரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... என்று அடுக்கிக்கொண்டே போனால், ஒரு சில இடங்களில் பெற்ற தந்தையாலும், சீராட்டி வளர்க்க வேண்டிய தாத்தாவாலும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கும், வன்கொடுமைக்கும் ஆளாகும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன. சமீப காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை அதிகம் அறிய முடிகிறது.

    பெண் குழந்தையை யாருடைய பாதுகாப்பில் விட்டுச்செல்வது என்பது இப்போது பலருக்கும் புரியாத புதிராகிவிட்டது.

    பணம் பணம் என்று தாய், தந்தை வேலைக்கு சென்றுவிட்டால், குழந்தைகள் போதிய கவனிப்பு இன்றி பாலிய பருவத்திலேயே பாதை மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

    வாருங்கள், அதுசம்பந்தமான பலதரப்பட்ட தகவல்களை இங்கே காணலாம்.

    தகவல் தொடர்பு சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, கடந்த 10 ஆண்டுகளில் நம் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அதற்காக அவற்றை வேண்டாம் என்று புறந்தள்ளுவது புத்திசாலித்தனமல்ல.

    இப்போதைய புள்ளி விவரங்களின்படி, போனில் அதிக நேரம் பேசுவது, அறிமுகம் இல்லாத நபர்களுடன் வலைத்தளங்களில் உரையாடுவது, பொழுது போக்குவது, தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள் மட்டுமின்றி, அந்தரங்க விஷயங்களை பகிர்வது போன்றவைதான், பெரும்பாலான பாலியல் பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருக்கின்றன.

    இவற்றை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அந்த விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் இல்லை, குறிப்பாக பெண்கள், மாணவிகள், சிறுமிகள் அனைவரிடமும் ஏற்படவில்லை என்பதே உண்மை.

    இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்புக்குழு அதிகாரி பாண்டியராஜன் கூறியதாவது:-

    தற்போது பொருளாதாரத்தை மையப்படுத்தித்தான் நமது வாழ்க்கை நகருகிறது. கிராம, நகரங்களில் வசிக்கும் நடுத்தர, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது கட்டாயம். எனவே குழந்தைகளை வளர்ப்பதில் முழுநேரத்தையும் செலவிட அவர்களால் முடிவதில்லை. இதனாலும் குழந்தைகள் தங்கள் விருப்பம்போல இருக்கவும், அடுத்தவர்களின் சீண்டல்களுக்கும் ஆளாகவும் நேரிடுகிறது.

    இணையதளம், சமூகவலைதளங்களில் வரும் ஆபத்து நிறைந்த நிகழ்ச்சிகள், தவறான பாதைக்குள் தள்ளும் தகவல்கள், இளைய சமுதாயத்தின் உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வரும் அபாய தகவல்கள் எளிதாக மாணவிகளின் மனதுக்குள்ளும் ஊடுருவி பாழ்படுத்துகின்றன.

    குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பேசிப்பழகினால் அதை போலீசார் கண்டுபிடிப்பது கடினமானது. இதில் பழகிய 14 வயது சிறுமியும், 19 வயது இளைஞரும் சென்னைக்கு சென்றனர். அங்கு ஒருவரிடம் சிக்கிய சிறுமி, பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் வெளிவந்துள்ளது. இதற்கு யார் காரணம்?

    சிறுமியின் அறியாமை என்பதா அல்லது சமூகவலைதள மோகம் என்பதா?

    பல்வேறு பாலியல் சம்பவங்களில் சிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கிறோம். அவ்வாறான நேரங்களில் அவர்களுடன் உரையாடும்போது, தங்களிடம் பழகியவர்களை அவர்கள் விட்டுக்கொடுப்பதே இல்லை. இதற்கு அவர்களின் வீட்டில் உள்ளவர்கள், இதுபோன்ற நிலையில் இருக்கும் மாணவிகளிடம் போதிய அன்பு காட்டுவதில்லை என்ற காரணத்தை அறிய முடிகிறது. எனவே பெற்றோர், தங்களின் பிள்ளைகளிடம் இணக்கமாக இருந்தால்தான், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படும்.

    பள்ளிகளில் முன்பைப்போல மாணவர்களை கண்டிக்க முடிவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பாலியல் பிரச்சினைகளில் சிக்கினால், மீண்டும் அந்த பள்ளியில் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. உடனடியாக நீக்கப்படுகின்றனர். தெரிந்ேதா, தெரியாமலோ இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிய அவர்களை அந்த பள்ளியே நிராகரித்தால் அவர்கள் எங்கே போவார்கள்?

    இளம் சமுதாயத்தினருக்கு சரியான வழியை காட்ட வேண்டுமானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பம் என அனைத்தையும் மாற்றுப்பாதைக்கு கொண்டு செல்வது அவசியம். முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனைகளை பாடங்களில் சொல்லித்தருவார்கள். அதை கேட்கும் மாணவர்களின் மனம் சரியான திசையில் செல்லும். ஆனால் தற்போதைய பாடங்கள் அப்படி இல்லை.

    அடிப்படையில் ஒருவன் நல்ஒழுக்க சிந்தனைகளை உடையவனாக இருந்தால்தான் அவனின் செயல்பாடுகளும் சிறப்பானவையாக அமையும். ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனைகளையும் இளைய சமுதாயத்திற்கு கற்றுத்தருவதற்கான கோட்பாடுகளை செயல்படுத்துவது அரசின் கடமை. இதை பள்ளிகளின் வாயிலாகத்தான் நிறைவேற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தவறு நடந்த பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பதைக்காட்டிலும், தவறு நடப்பதற்கு முன்பே அதை தடுக்கவும், தவறுக்கான வழியை அடைப்பதுவும்தான் சாலச்சிறந்தது. இது அனைத்துக்கும் பொருந்தக்கூடிய முதுமொழி.

    புரிய வேண்டிய பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் புரிந்தால் சரி...!
    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் சேராத அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளை கண்டறியவும், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    உயர் கல்வி படிப்பை தொடரும் விஷயத்தில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது. அதுபோல் பெண் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலையும் மாறிக்கொண்டிருக்கிறது.

    இதனை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதி செய்துள்ளது. பள்ளி மாணவிகள் இடை நிற்றல் விகிதம் குறைந்துள்ளதாக மத்திய மந்திரி அன்ன பூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.

    2019-2020-ம் ஆண்டில் தொடக்க கல்வி பயின்ற மாணவிகளின் இடை நிற்றல் விகிதம் 1.2 சதவீதமாக இருந்தது. 2018-19-ம் ஆண்டுகளில் மேல் நிலை படிப்பில் மாணவிகளின் இடை நிற்றல் விகிதம் 17 சதவீதத்தில் இருந்து 15.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதுவே 2017-18-ம் ஆண்டுகளில் இடை நிற்றல் விகிதம் 18.4 சதவீதமாக இருந்தது.

    பீகார் மாநிலத்தில்தான் இடை நிற்றல் விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மூன்று ஆண்டு களாக 13.3 சதவீதம் (2017-18), 12.9 சதவீதம் (2018-19), 9.2 சதவீதம் (2019-20) இடை நிற்றல் விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் 2017-18 மற்றும் 2019- 20-ம் ஆண்டுகளில் முறையே 35.2 சதவிகிதம், 32.9 சதவிகிதத்துடன் அதிக இடைநிறுத்தல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இங்கு இடை நிற்றல் விகிதம் அதிக எண்ணிக்கை கொண்டிருந்தாலும் படிப்படியாக குறைந்து வருகிறது.

    7-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் தனி கழிவறைகள் கட்டப்பட்டு வருவதாகவும் மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி தெரித்துள்ளார்.

    மேலும் ‘‘அனைத்து நிலைகளிலும் பாலின இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக, கல்வியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்களுக்கான உண்டு உறைவிட பள்ளிகளாக செயல்படும்’’ என்றும் கூறி உள்ளார்.

    தற்போது, நாடு முழுவதும் 10,5018 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் 6 லட்சத்து 65 ஆயிரம் பெண்கள் சேர்ந்துள்ளனர்.

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் சேராத அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளை கண்டறியவும், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    குடும்பப் பிரச்சினையில் தற்கொலை, கொலை நிகழ்வதால் பெண்கள் இளம் வயதில் விதவையாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும், குழந்தைகள் ஆதரவற்ற அனாதைகளாகவும் ஆகிறார்கள்.

    பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெண் குழந்தைகள் மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி, குடும்ப வன்முறை, தவறாக நடத்தப்படுதல் மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்படுதல் போன்ற குழந்தைகளின் அனைத்து உரிமைகளும், குழந்தைத் திருமணத்தின் மூலம் அப்பட்டமாக மீறப்படுகின்றது;

    கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாததால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும்; அடிக்கடி கருவுற வாய்ப்பு அதிகம்; இது உடல் நலத்தைப் பாதிக்கும்; உடல் பலவீனமடைவதால் மருத்துவச் செலவு அதிகமாகி வறுமைக்கு வழிவகுக்கும்; ரத்த சோகை மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படும்.

    பிரசவத்தின் போது சிக்கலான பிரசவம், குழந்தை இறந்து பிறப்பது, சிசு மரணம் மற்றும் தாய் மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் அதிகம்; எடை குறைவான குழந்தைகள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல்; மனவளர்ச்சி மற்றும் பாலியல் முதிர்ச்சி முழுமையடையும் முன் திருமணம் செய்வதால், கணவர் மற்றும் குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வதில் பிரச்சினைகள் அதிகமாகும்;

    இது குடும்பத்தில் விரிசலை உண்டாக்கி இரண்டாவது திருமணத்திற்கு வழிவகுக்கும். இதனால் அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள்; குடும்பப் பிரச்சினையில் தற்கொலை, கொலை நிகழ்வதால் பெண்கள் இளம் வயதில் விதவையாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும், குழந்தைகள் ஆதரவற்ற அனாதைகளாகவும் ஆகிறார்கள். இது குழந்தைத் தொழிலாளர் முறைக்கு வழிவகிக்கிறது; கல்வி மறுக்கப்படுவதுடன், அவர்களின் தன்னம்பிக்கை குறையும். குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல் செய்ய முடியாது போன்ற எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    ×