search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gavaskar"

    எந்த வீரரும் காயம் அடையாத பட்சத்தில் கடைசி இரு டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கக்கூடாது என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். #SunilGavaskar #KLRahul #IndiavsAustralia
    மும்பை:

    பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. பெர்த் டெஸ்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக இந்த டெஸ்டில் சொதப்பிய ராகுலை (2 ரன் மற்றும் 0) கடுமையாக விமர்சித்துள்ளார். கவாஸ்கர் கூறியதாவது:-



    தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து நமது அணியில் வீரர்கள் தேர்வில் தொடர்ந்து மிகப்பெரிய தவறு நடந்து வருகிறது. இதனால் பாதிப்பு அணிக்கு தான். வீரர்கள் தேர்வு சரியாக இருந்திருந்தால் பல போட்டிகளில் வெற்றி பெற்று இருக்க முடியும். குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை களைந்து, சரியான கலவையில் அணியை தேர்வு செய்தால் நிச்சயம் எஞ்சிய இரு டெஸ்டில் வெற்றி பெற முடியும். ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியாமல் போனால், அதன் பிறகு இந்திய கேப்டன், பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு குறித்து தேர்வு குழு சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

    எந்த வீரரும் காயம் அடையாத பட்சத்தில் கடைசி இரு டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கக்கூடாது. அவர் தாயகம் திரும்பி, கர்நாடக அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று கருதுகிறேன். பெர்த் டெஸ்டின் முதலாவது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் மார்கஸ் ஹாரிசும், ஆரோன் பிஞ்சும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலை நன்றாக சமாளித்து நிலைத்து நின்று ஆடியதே போட்டியில் திருப்பு முனையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.  #SunilGavaskar #KLRahul #IndiavsAustralia
    மும்பை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தேசிய தேர்வுக்குழு மீது கவாஸ்கர் கடுமையாக தாக்கியுள்ளார். #Gavaskar
    இந்திய தேசிய அணியில் சமீப காலமாக மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. தேசிய தேர்வுக்குழு மிகப்பெரிய ஓரவஞ்சனை செய்கிறது என்று முன்னாள் இந்திய அணி கேப்டனும், தற்போதைய வர்ணனையாளரும் ஆன கவாஸ்கர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘மும்பையைச் சேர்ந்த சித்தேஷ் லாட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதிலும், இந்தியா ஏ அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. மும்பை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    ஒரு தொடரில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட புதுமுக வீரர்கள் மற்ற மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். அமோல் முசும்தார் முதல்தர கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஆனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல் சித்தேஷ் லாட்டிற்கு நடக்காது என்று நம்புகிறேன்.

    ஆனால், இதுவரை இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை. இது சித்தேஷ் லாட்டிற்கு மட்டுமல்ல, கிரிக்கெட் கிரிக்கெட் இதுபோன்ற ஓரவஞ்சனை மற்றும் முட்டாள் தனமான முடிவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டாவது இது மாறுமா? நாம் பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
    பெண்கள் உலகக்கோப்பை அரையிறுதியின்போது நடைபெற்ற விவகாரத்தில் மிதாலி ராஜிற்காக நான் வருந்துகிறேன் என்று கவாஸ்கர் தனது கவலையை தெரிவித்துள்ளார். #MithaliRaj
    பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. லீக் சுற்றில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினார்கள். இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி ராஜ் அரையிறுதிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    மிதாலி ராஜ் அணியில் இடம்பெறாததற்கு கேப்டன்தான் காரணம் என்று கூறப்பட்டது. பின்னர் பயிற்சியாளர் ரமேஷ் பவார் - மிதாலி ராஜ் இடையே ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்று தெரியவந்தது.

    இந்நிலையில் மிதாலி ராஜிற்காக தான் வருந்துகிறேன் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘நான் மிதாலி ராஜிற்கான வருந்துகிறேன். அவர் சிறந்த வீராங்கனை. கடந்த 20 ஆண்டுகளாக அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தார். இரண்டு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    அவர் ஒரு போட்டியில் காயம் அடைந்த போதிலும், அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றார். இதை அப்படியே ஆண்கள் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால், விராட் கோலி ஒரு போட்டியில் காயம் அடைந்து, அதன்பின் உடற்தகுதி பெற்று அடுத்த போட்டிக்கு தயாரானா், அவரை நீங்கள் நீக்கி விடுவீர்களா?.



    நாக்அவுட் போட்டியில் நீங்கள் சிறந்த வீரர்களை களம் இறக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ் ஆட்டம் அணிக்கு முக்கியமானது. ரமேஷ் பவார் உடன் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இங்கிருந்து கருத்து கூறுவது மிகக்கடினம். ஆனார், எந்தவொரு காரணமாக இருந்தாலும் அவரை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    மிதாலி ராஜ் இல்லாத 11 பேர் கொண்ட அணியில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இது சரியான காரணம் என்று என்னால் நினைக்க இயலவில்லை. மிதாலி ராஜ் போன்ற ஒருவரை நீக்கக்கூடாது’’  என்றார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார என்ற கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் தற்போது ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரின்போது 10 ஆயிரம் ரன்னை அதிக வேகத்தில் கடந்து சாதனை படைத்தார். இந்த ஆண்டில் அவர் ஒருநாள் போட்டியில் 14 ஆட்டத்தில் விளையாடி 1,202 ரன் எடுத்துள்ளார். சராசரி 133.55 ஆகும்.

    இந்த நிலையில் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது தொடர் பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலியின் பேட்டிங் நாளுக்குநாள் மிகவும் அபாரமாக இருக்கிறது. அவரது இந்த திறமை வாய்ந்த ஆட்டத்தால் எந்த ஒரு சாதனைக்கும் உத்தரவாதம் இல்லை. அவரால் அதிக ரன், அதிக சதம் என பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க முடியும்.

    விராட் கோலியின் உடல் தகுதியும் நன்றாக இருக்கிறது. அவரால் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகள் இல்லாமல் 10 வருடங்களுக்கு மேல் ஆட இயலும். சச்சின் தெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். இதேபோல் கோலியும் 40 வயது வரை ஆடினால் டெஸ்ட் சாதனை, ஒருநாள் போட்டி சாதனைகள் அனைத்தையும் முறியடிக்க இயலும். கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளும் அவர் பெயரில் இருக்கும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
    இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சாதிக்க விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-4 எனத் தொடரை இழந்தது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் இந்தியா வெற்றியை நெருங்கி வந்து தோல்வியடைந்தது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி 593 ரன்கள் குவித்த போதிலும், கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படவில்லை என்று விமர்சனம் இருந்து வருகிறது. முக்கியமான கட்டத்தில் அவரால் சிறந்த முடிவை எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.



    இந்நிலையில் விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலி இன்றும் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் பீல்டர்களை சரியான இடத்தில் நிற்க வைப்பது அல்லது பந்து வீச்சை சரியான நேரத்தில் மாற்றுவது ஆகியவற்றில் விராட் கோலியின் செயல்பாட்டில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதன்மூலம் அவருடைய அனுபவ குறைபாடு தெளிவாக தெரிகிறது’’ என்றார்.
    கபில்தேவுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். #ENGvIND #SunilGavaskar #KapilDev

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக திகழ் பவர் ஹர்த்திக் பாண்ட்யா.

    அவரது ஆட்டத்தை வைத்து முன்னாள் வீரர்கள் சிலர் கபில்தேவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர். இதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் நிராகரித்துள்ளார்.

    இதுகுறித்து தனியார் டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    கபில்தேவை யாருடனும் ஒப்பிட முடியாது. அவர் ஒருதலைமுறை வீரர் இல்லை. ஒரு நூற்றாண்டின் கிரிக்கெட் வீரர். டான் பிராட்மேன், தெண்டுல்கரை போன்றவர் ஆவார். இதனால் நாம் கபில்தேவுடன் யாரையும் ஒப்பிடக்கூடாது.

    டெஸ்ட் போட்டியில் தவானின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அவர் தனது விளையாட்டு முறையை மாற்ற விரும்பவில்லை. வெளிநாடுகளில் அவர் டெஸ்டில் ரன்களை எடுக்க தடுமாடுகிறார்.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்டில் இந்திய அணி கூடுதலாக ஒரு பேட்ஸ் மேனுடன் ஆடவேண்டும். புஜாராவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். உமேஷ் யாதவ் இடத்தில் சேர்க்கலாம். ஹர்த்திக் பாண்ட்யா நீடிக்கலாம். ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்த முடிவை மேற்கொள்ளலாம்.

    லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற இந்தியா ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜோகன்ஸ்பர்க் டெஸ்டில் 200 ரன்னுக்குள் சுருண்டது போல் நடந்து விடக்கூடாது.

    பெரும்பாலான அணிகள் 4-வது இன்னிங்சில் 200 ரன் இலக்கை எடுக்க தடுமாறுகின்றன. முதல் டெஸ்டில் சேஸ் செய்து இருந்ததால் இங்கிலாந்து அணியும் திணறி இருக்கும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக உலககோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் 131 டெஸ்டில் விளையாடி 5248 ரன் எடுத்துள்ளார். 434 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 225 ஒருநாள் போட்டியில் 3783 ரன் எடுத்துள்ளார். 253 விக்கெட் கைப்பற்றியுள்ளார். #ENGvIND #SunilGavaskar #KapilDev

    ×