search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gambling"

    • போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், முத்தூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவத்தன்று வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், முத்தூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கந்தசாமி என்பவர் தோட்டத்தில் வேலம்பாளையத்தை சேர்ந்த காங்குசாமி (வயது 68), துரைசாமி (51) ,ரவி (60) ,சுப்பிரமணி (52) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. ஆயிரத்து 300ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 9 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
    • போலீசார் பிரிதிவிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையிலான போலீசார் பிரிதிவிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காலனி தகன மேடை அருகே சிலர் அமர்ந்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 10- க்கும் மேற்பட்ட வர்கள் தப்பி ஓடினர். போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து மகன் வரதன் (வயது 38) உள்ளிட்டோர் தப்பி ஓடியது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.560 பணம் மற்றும் 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் வரதன் உள்ளிட்ட தப்பி ஓடிய வர்களை தேடி வருகின்ற னர்.

    • வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • ரூ.1,150ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்,ஆக.22-

    வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வெள்ளகோவில், மூலனூர் ரோடு, ஈஸ்வரன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அங்குராஜ் (வயது 25),கோபிநாதன் (27), மகாதேவன் (37), கார்த்தி( 28) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,150ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழக - ஆந்திரா எல்லையோரம் சூதாட்டம்
    • ரூ.52 லட்சம் பறிமுதல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை ஒட்டியபடி உள்ள வனப்பகுதிகள், தோப்புகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து சிலர் சூதாட்டம் நடத்துவதாகவும்,

    இதில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி விளையாடுவ தாகவும் தொடர்ந்து புகார் கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் குடியாத் தம் அருகே உள்ள தமிழக-ஆந் திர மாநில எல்லையோர முள்ள சைனகுண்டா கிரா மம் அருகே ஒரு மாந்தோப் பில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண் ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்து சாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், வேலூர் உதவி போலீஸ் சூப் பிரண்டு (பயிற்சி) பிரசன்னகு மார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் பைக்கில் மாந்தோப்புக்குள் நேற்று மாலை திடீரென சென்றனர்.

    அப்போது அங்கு சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் 20-க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாயுடன் வாகனங்களில் தப்பிச் சென்றனர்.

    17 பேரை போலீசார் பிடித்த னர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் கள், 15 செல்போன்கள், 500 ரூபாய் கட்டுக்களுடன் 2 பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அந்த பணத்தை குடியாத் தம் தாலுகா போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்து நகைக்கடையில் இருந்து பணம் எண்ணும் எந்திரம் எடுத்து வந்து எண்ணப்பட் டது. அப்போது அதில் ரூ.52 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது.

    மேலும் இது சம்பந்தமாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகி யோர் வழக்குப் பதிவு செய்து சூதாடிய குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பூங்குளம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்ற பிரபாகரன் (வயது 36), கிருஷ்ணகிரியை சேர்ந்த சீனி வாசன், ஆற்காடு பாரதி, சென்னையை சேர்ந்த பாஸ்கர், சேட்டு, திருப்பத்தூரை சேர்ந்த வெற்றிவேல், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார்த்தி, உபேந்திரன், பெங்களூருவை சேர்ந்தரவிக்குமார், ராஜி, முனிராஜ், ஸ்ரீதர்குமார், ஜிதேந்திர குமார் உள்பட 17 பேரை போலீசார் கைது செய் தனர்.

    ஒரே இடத்தில் 52 லட்ச ரூபாய் சூதாட்ட கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெறாத சம்பவம் ஆகும்.

    குடியாத்தம் சுற்றுப்புற பகுதிகளில் மலைகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகம் இருப்பதால் அங்கு சூதாட்டம் நடைபெறு வதாகவும், காவல்து றையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    • கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.
    • 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் புது உச்சிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியப்பன் கோவில் அருகே உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் பாலாஜி (வயது 27), நாராயணன் மகன் ரவி (35), சுப்பிரமணியன் மகன் சிலம்பரசன் (27), ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (34), கோவிந்தசாமி மகன் முருகன் (45), ராஜமாணிக்கம் மகன் பாலகிருஷ்ணன் (39) மற்றும் கூத்தக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஏழுமலை (29) என்பதும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சார வாரிய அலுவலகம் அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • 7 பேரை போலீசார் கைது செய்தும் தொடர்நது அவர்களிடமிருந்து ரூ.8,350ஐ கைப்பற்றப்பட்டது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளகோவில் மின்சார வாரிய அலுவலகம் அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராமகிருஷ்ணன் (53), சக்திவேல் (66), ஈஸ்வரன் (60), பழனிச்சாமி (47), அழகர் (55), சண்முகம் (50), கோபால் (65) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ.8,350ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒரு மேசையில் 7 பெண்களும் மற்றொரு மேசையில் 5 பெண் தொழிலதிபர்கள் சீட்டு கட்டுகள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மதுர நகரில் சாய் கணேஷ் ரெசிடென்சி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசதி படைத்த ஏராளமான தொழிலதிபர்கள் வசித்து வருகின்றனர்.

    குடியிருப்பில் வசிக்கும் 50 வயது முதல் 75 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரவு நேரங்களில் சூதாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

    கடந்த 2 மாதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    சூதாட்டம் நடப்பது குறித்து குடியிருப்பை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலீல் பாஷா தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்புகள் நுழைந்தனர்.

    அப்போது ஒரு மேசையில் 7 பெண்களும் மற்றொரு மேசையில் 5 பெண் தொழிலதிபர்கள் சீட்டு கட்டுகள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    இதனைக் கண்ட போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் மற்றும் சூதாட்டம் நடத்திய 52 வயது பெண் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கட்டுகட்டாக ரூ.1.12 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் 5 பேர் பெண் தொழிலதிபர்கள் 7 பேர் குடும்ப தலைவிகள் என தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவர்களின் அனுமதியோடு இவர்கள் சூதாட்டத்தில் ஈடபட்டது தெரியவந்தது. சூதாட்டத்தில் பெண்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் கிளப்பிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
    • சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கிளப்பிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு சூதாட்டம் நடத்தி வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.57 ஆயிரம் பறி முதல் செய்யப்பட்டது.

    • நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
    • விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சேவேரிக்கொட்டாய், சோழியானூர், மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கரடு சார்ந்த பகுதியில், விவசாய நிலங்கள்,

    கிராமப்புற வீடுகள் நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில், ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சூதாட்ட த்தில் ஈடுபடுவது போன்று, சிமெண்ட் அட்டை குடில்கள் அமைத்து, மதுவிருந்து மற்றும் கறி விருந்தோடு இரவு-பகலாக லட்சகணக்கில் பகிரங்கமாக சூதாட்டத்தை கும்பல் நடத்தி வருகிறது.

    இந்த சூதாட்டத்தில் தருமபுரி, சேலம், நாமக்கல், பெங்களூர் ஆகிய பல்வேறு பகுதிகளை சேர்ந்த சூதாட்ட பித்துக்கள் கலந்து கொண்டு, பல லட்சங்களை, சூதாட்டத்தில் இழந்து வருகின்றனர்.

    நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.

    ஒரு கட்டத்தில் அதிகளவு பணம் இழந்தவர்கள் மற்றும் சூதாட்ட கும்பலுக்கிடையே சண்டை ஏற்படும் போது, அடியாட்கள் கொண்டு பணம் இழந்தவர்களை அங்கிருந்து மிரட்டி வெளியேற்றும் சம்பவமும் அவ்வப்போது நடைபெறுகிறது.

    இந்த சூதாட்டத்தால் விவசாய பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் மாணவிகள் முதல் நாள்தோறும் அச்ச நிலையில் இருந்து வருகின்றனர்.

    பல குடும்பங்கள் சீரழிய காரணமாக உள்ள சூதாட்டத்தை தடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதுடன், அடியாட்களோடு லட்ச கணக்கில் நடக்கும் சூதாட்டத்தை, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 4 பேரை கைது செய்து அவரிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கம் ரூ.1,600 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கருப்பராயன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மணிகண்டன், சிவராஜ், பரமசிவம் ஆகிய 4 பேரை கைது செய்து அவரிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கம் ரூ.1,600 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ராஜேந்திரன் (58) என்பவரை அவினாசி போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அவினாசி:

    அவினாசி போலீசார் அவினாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டறை பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக பழனிச்சாமி மகன் ரமேஷ் (வயது 34), ஆனந்த் மகன் தினேஷ் (27) மற்றும் சீனிவாசன் (58) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து பணம் ரூ. 450 ,சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவரை அவினாசி போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் புகையிலை பொருட்கள் இருந்தன. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து 5 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    • காங்கயம் நகரில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடுவதாக கிடைத்தது.
    • 4 பேரை போலீசார் கைது செய்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் நகரில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தத்தின் பின்புறம் சீட்டு விளையாடிக்கொண்டிருந்த காங்கயம் வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்த கந்தசாமி, அய்யாசாமி காலனி பகுதியைச் சோ்ந்த மூா்த்தி, ஏ.சி.நகரைச் சோ்ந்த சுரேஷ், அமராவதி நகரைச் சோ்ந்த சிவகுமாா் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனா்.

    ×