என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "free"
- 3 ஆண்டுகள் படிப்பதற்கு செலவாகும் கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள் ஒரு மாணவியருக்கு ரூ.70,000 ஆகும்.
- நர்சிங் டிப்ளமோ படிப்பில் சேர்க்கை பெற்று, அதன் விபரத்தை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம், கொல்லிமலை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில், 2023-2024-ம் ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள பழங்குடியின மாணவிகளின் மேற்படிப்பிற்காக, இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட, நர்சிங் பயிற்சி மையங்களில், நர்சிங் டிப்ளமோ படிப்பில் (Diploma in General Nursing and Midwifery Course) சேர்க்கை பெற்று, தொடர்ந்து 3 ஆண்டுகள் படிப்பதற்கு செலவாகும் கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள் ஒரு மாணவியருக்கு ரூ.70,000 ஆகும். இந்த கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும்.
எனவே 2023-2024-ம் ஆண்டில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள பழங்குடியின மாணவிகள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறும் வகையில் நர்சிங் டிப்ளமோ படிப்பில் சேர்க்கை பெற்று, அதன் விபரத்தை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம், கொல்லிமலை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
சேலம்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரி 129 பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படு வதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர், இரண் டாம் நிலை காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலா என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
- கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
- 103 பள்ளிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
நாமக்கல்:
கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
அதன்படி 145 தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற 1,892 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 103 பள்ளிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மீதம் உள்ள, 42 தனியார் பள்ளிகளில், இருக்கின்ற இடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதை யடுத்து, குலுக்கல் முறையில் மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற 103 பள்ளிக ளில் சிறப்பு முகாம் நடந்தது.
அதற்காக, ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
மேலும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி குலுக்கல் நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கை பெற, 1,600 மாணவ, மாணவியர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், 42 தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ், நேரடியாக மாணவ, மாண வியர் தேர்வு செய்யப்பட்ட னர் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.
- இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது https://forms.gle/sZxeG2nU2o7mrKoz7 என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பபிக்கலாம்.
சேலம்:
சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் சேர்க்கைக்கு 30-ந் தேதிக்குள் தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் 4 புகைப்படத்துடன் நேரில் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம். இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது https://forms.gle/sZxeG2nU2o7mrKoz7 என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பபிக்கலாம். மேலும் சேலம் ஏற்காடு மெயின்ரோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
- கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் ஏற்பாடு
- பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அழைப்பு
கரூர்,
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் உள்ள இணையதள பிரிவில் 2023-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வருகிற 8-ந் தேதி இலவசமாக பார்க்கவும், மதிப்பெண் பட்டியலலை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கரூர் மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- 7500 -க்கும் மேற்பட்ட குரூப்- பி மற்றும் குரூப்- சி ஆகிய பதவி களுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
- தேர்வுக் கட்டணமாக ரூ. 10/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து ள்ளதாவது:-
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி) 7500 -க்கும் மேற்பட்ட குரூப்- பி மற்றும் குரூப்- சி ஆகிய பதவி களுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 ஆகும்.
இத்தேர்விற்கான கல்வித்தகுதி, குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் 01.08.2023 அன்றைய நிலையில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறைவிதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக ரூ. 10/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.05.2023 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. வகுப்புகள் தொடர்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.
- 2023-ம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
- வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2023-ம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும். தினசரி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கையுந்துபந்து, கபாடி, வாள்சண்டை மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.
இந்த பயிற்சி முகாமில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளலாம்.
மாணவரல்லாத, விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேரடியாக பதிவு செய்து கொள்லாம் அல்லது dsonmk@gmail.com என்ற இமெயில் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பேட்டை ரூரல் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் கோடீஸ்வரன் நகர் சமுதாய நலக் கூடத்தில் நடந்தது.
இம்முகாமிற்கு பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன் தலைமை தாங்கினார்.
நெல்லை மத்திய மாவட்ட வர்த்தக அணி தி.மு.க. அமைப்பாளர் அவதார் ஷாஜகான், துுணை அமைப்பாளர் சுரேஷ் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சின்னதுரை வரவேற்றார்.
அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் கண் சிகிச்சை அளித்தனர். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்