search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foundation"

    • திருப்புல்லாணி பகுதியில் திட்டப்பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புல் லாணி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    கோரைக்கூட்டம் ஊராட்சி தன்ரம்பல் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர், தினைக்குளத்தில் சைக்கிள் நிறுத்தம், மரைக்கா நக ரில் நிழற்குடை, பெரிய பட்டினத்தில் 63 கே.வி. திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், ரேசன்கடை, வண்ணாங் குண்டு ஊராட்சி நேருபுரம் கிராமத்தில் கலையரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    தினைக்குளத்தில் கலையரங்கம் கட்டவும், வண்ணாங்குண்டு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் அடிக்கல் நாட்டினார். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அனைத்து கிரா மங்களிலும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மின்வாரிய செயற்பொ றியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சோமசுந்தரம், ராமநாதபுரம் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், ஊராட்சி துணைத் தலைவர் புரோஸ் கான்.

    எஸ்.டி.பி.ஐ. நகர் தலைவர் மீராசா, நகர் செயலாளர் பீர் மைதீன், எஸ்.டி.டி.யூ. நகர் தலைவர் இஜாஸ், ஹக் அம்பலம், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகர்மன்ற உறுப்பினர்கள் நசீருதீன், மீரான் அலி, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேசுவரன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், பெரியபட்டினம் தி.மு.க. செயலாளர் அன்சாரி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் அபிபுல்லா, ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தன், டி.கே.குமார், ரகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபால கிருஷ்ணன், திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி.திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலை வர் கஜேந்திரமாலா முத்துகி ருஷ்ணன், வண்ணாங் குண்டு ஊராட்சி தலைவர் தியாகரா ஜன், ஜமாத் தலைவர் நிஜாப் கான், தி.மு.க.நிர்வாகி பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    உலகக் கல்வியுடன் திருக்குரானை மனப்பாடம் செய்து முடித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் நடந்தது. அதாயி கல்வி குழுமத்தின் சார்பில் சுப்ரீம் நிறுவனர் முஹம்மது நிசார் பாஜில் ஜமாலி, சென்னை மற்றும் கீழக்கரை அதாயி பெண்கள் ஹிப்ளு பள்ளி தலைவர் ஹபிபுல்லாகான், கீழக்கரை அதாயி இஸ்லாமிக் பள்ளி தலைவர் ஜஹுபர் கமால், கீழக்கரை சுன்னத்துல் ஜமாத் பவுண்டேஷன் ஒபூர் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் தலைவர்-தொழிலதிபர் ஹபிபுல்லா கான் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். இதில் குரானை மனப்பாடம் செய்த 25 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார். விழாவில் கீழக்கரை பல்வேறு ஜமாத், சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

    • சிங்கம்புணரி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றி யங்களில் வேலைவாய்ப்பு முகாம், பள்ளி மற்றும் மயான பகுதிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், நியாயவிலைக் கடை திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தனியார் கல்வி நிறுவனமான எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஒன்றிய, நகர தி.மு.க. ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    அதில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான ஆணையை முகாமில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பாக ரூ.19 லட்சம், அரசு நிதியில் இருந்து ரூ.38 லட்சம் என மொத்தம் ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு மேல்நி லைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடந்தது.

    மேலும் முஸ்லிம்களின் மயான பகுதிக்கு சுற்றுச்சுவர் கட்ட அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சம், அரசு நிதி ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் சார்பில் முறையூர், அரளிப்பட்டி, கிருங்கா கோட்டை, சூரக்குடி, காளாப்பூர், சிங்கம்புணரி போன்ற பகுதிகளில் உள்ள 91 பயனாளிகளுக்கு ரூ.27.01 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன், புதிய வாகனம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு மற்றும் பிரான்மலை ஊராட்சி போன்ற பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கையான முழுநேர புதிய நியாய விலை கடைகளை அமைச்சர் திறந்து வைத்து அந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் மகளிர் சுயநிதி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கோ.ஜினு, துணைப் பதிவாளர் குழந்தை வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல்,ஆவின் பால்வளத் தலைவர் சேங்கை மாறன், பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ஜான் முகமது, கவுன்சிலர் செந்தில் கிருஷ்ணன், 2-வது வார்டு கவுன்சிலர் முகமது நிஷா ஷேக் அப்துல்லா, பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விரிவாக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் விரிவாக்க கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். நகராட்சித் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விழாவில் பங்கேற்று விரிவாக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அவர் பேசியதாவது:-

    பேரூராட்சியாக இருந்த மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அதிகமாக செய்துதர வேண்டும். பொதுமக்கள் அலுவலகத்துக்கு வந்து செல்லும் வகையில் நகராட்சிக்கு போதுமான கட்டிடங்கள், பணியாளர்கள் தேவைப்படும் நிலையில் முதல்கட்டமாக தற்போது ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய விரிவாக்க கட்டிடம் 4800 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. இன்னும் பல திட்டங்கள் மானாமதுரை நகராட்சிக்கு வர உள்ளது.

    கடந்த 1½ ஆண்டுகால முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் அமலில் இருந்த பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் தற்போது நகர்புறங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மானாமதுரை நகராட்சியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் எந்த திட்டங்களையும் ரத்து செய்யாமல் மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்து நிதி நெருக்கடியான இந்த கால கட்டத்திலும் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பொதுமக்கள் எப்போதும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அர் பேசினார்.

    விழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட விழிப்புணர்வுக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றியத்தலைவர் லதா அண்ணாதுரை, ஆணையாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள், பணியா ளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் இடைக்காட்டூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு மற்றும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் வரவேற்றார்.

    • ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடந்தன.
    • அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் விவேகானந்த கேந்திரமும், என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவிலான நகர்ப்புறப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கேந்திர கிளை தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். கிளை பொருளாளரும். தலைமையாசிரியருமான ரமேஷ் வரவேற்றார். விவேகானந்த கேந்திர மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை மாணவர்களுக்கு ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார்.

    இதில் 32 பள்ளிகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் கே.ஆர்.விஸ்வநாதன், தங்கமயில் ஜூவல்லரி மேலாளர் பாலாஜி, பாபு ஆகியோர் மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். முதலிடம் பிடித்த மாணவர்கள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறவிருக்கும் 2 நாள் முகாமில் கலந்துகொண்டு மாநில அளவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா, ராகஜோதி, என்.கே.ராம்வெங்கட் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கிளை செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
    • விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளோம்.

    தஞ்சாவூர்:

    ஸ்ரீவிஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் நிறுவனரும் ஓம் ஸ்ரீ நாகம்மாள் அறக்கட்டளை, அகில இந்திய சாதுக்கள் இயக்கம் மாநிலத் தலைவருமான டாக்டர் ஸ்ரீராம ரெங்கசாமி சுவாமிகள் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-

    தரணி போற்றும் தஞ்சாவூரில் விரைவில் பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளோம்.

    அனைவருக்கும் பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 2 ரேஷன் கடைகளுக்கும் சொந்தமாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் உள்ள ராஜமன்னியபுரம், மடத்துவிளை ஆகிய இடங்களில் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதுவும் மடத்துவிளையில் உள்ள கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 2 ரேஷன் கடைகளுக்கும் சொந்தமாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா ராஜமன்னியபுரம் மற்றும் மடத்துவிளையில் நடைபெற்றது.

    விழாவிற்கு பேரூராட்சியின் துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். பொறியாளர் ஆவுடையப்பன் வரவேற்று பேசினார். பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் புதிய கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சிகளில் ஏ.கே.எல். கூட்டுறவு சங்க தலைவரும் வார்டு கவுன்சிலருமான வெங்கடேஷ், வார்டு கவுன்சிலர்கள் தயாவதி, சிவக்குமார், தீபா, முன்னாள் கவுன்சிலர்கள் மகராஜன், சண்முகசுந்தரம், நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், நகர காங்கிரஸ் பொதுச் செயலாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
    • ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர்.

    நாகப்பட்டினம், அக்.5-

    நாகப்பட்டினம் நகராட்சியில் டாடா நகர் மற்றும் சேவா பாரதி பகுதிகளில், தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    விழாவில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர்.

    இதில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானமணி, கமலநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துலிங்கம், நகராட்சி பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குட்டம் பஞ்சாயத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கும், ஆனைகுடி பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.34 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், மகாதேவன்குளம் பஞ்சாயத்தில் ரூ.32 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
    • குட்டம் பள்ளிக்கு ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் கழிப்பறை வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தெரிவித்தார்.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஒன்றியம் மகாதேவன்குளம், குட்டம் மற்றும் ஆனைகுடி ஆகிய பகுதிகளில் பல்வேறு நிதிகளின் கீழ் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் பள்ளிகளுக்கு தேவையான கட்டிடம் ஆகியவற்றுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்.

    குட்டம் பஞ்சாயத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கும், ஆனைகுடி பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.34 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், மகாதேவன்குளம் பஞ்சாயத்தில் ரூ.32 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

    குறிப்பாக குட்டம் பள்ளிக்கு ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் கழிப்பறை வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் யூனியன் தலைவர் இளையபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் புளோரன்ஸ் விமலா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், இசக்கிபாபு, ஜெஸி பொண்கலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், ராதிகா சரவணகுமார், வைகுண்டம் பொன் இசக்கி, பஞ்சவர்ணம் ஜெயகுமார், ஆனந்த், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பொன்மணி நடராஜன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை 2-ம் ஆண்டு தொடக்க விழா பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சங்க வரவு,செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்திகேயன் படித்துக் காண்பித்தார். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளர் ஜோதி காமாட்சி பேசினார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை 2-ம் ஆண்டு தொடக்க விழா பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் செல்வம் வரவேற்று பேசினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் கதிரேசன், சண்முகசுந்தரம், காளிராஜ், மாரிமுத்து, முத்து மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்க வரவு,செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்திகேயன் படித்துக் காண்பித்தார். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளர் ஜோதி காமாட்சி பேசினார். சங்கரேஸ்வரி, ஜெயக்கொடி, ராஜ ராஜேஸ்வரி பாண்டியன், சத்தியபாமா அசோக்குமார், பிச்சை மாரியம்மாள் தங்கராஜ், ஹேமலதா ஜெயக்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, நகர் மன்ற தலைவர் கருணாநிதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதுநிலை குடிமை மருத்துவர் கமல வாசன், குழந்தைகள் நல மருத்துவர் பிரபு, கே. என். சுப்புராஜ் நினைவுக் கல்வியியல் கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன், நிறுவனத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நிர்வாக குழு உறுப்பினர் நடராஜன், லவ ராஜா, பாலமுருகன், பாண்டியன், முருகன் , சுடலைமுத்து, விக்னேஷ் என்டர்பிரைசஸ் அசோக், அருண் பேக்கரி மாடசாமி, காமாட்சி அம்மன் டிரேடிங் அசோக் மாறன், சண்முகவேல், தனபால், சக்திவேல், கருப்பசாமி, மாரிமுத்து, குமார், சக்தி மேட்ச் வொர்க் கிருஷ்ணமூர்த்தி, சேகர், கணபதி ,சூடாமணி, கண்ணன் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடிக்கான நிதியை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளைக்கு கல்வி மற்றும் மருத்துவசேவை பணிகளுக்காக ரூ.1 கோடி வழங்க தெற்குமாவட்ட தி.மு.க. முடிவுசெய்தது.

    இதையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ.விடம் மதுரை தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் ரூ.1 கோடிக்கான வரைவோலை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தெற்குமாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்பாண்டியன், மாவட்ட துணை சேர்மன் முத்துராமன், பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ்.என்.எல். செல்வம், இளைஞரணி துணைஅமைப்பாளர்கள் விமல், சுரேஷ்குமார், பகுதி அமைப்பாளர் காளிதாஸ், ஒன்றிய துணை அமைப்பாளர் தனசேகர், கிளைசெயலாளர் ராதாகிருஷ்ணன், நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திட்டக்குடி அருகே ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இறையூர் கிராமத்தில் உள்ள காலனி மக்கள் அரிசி கோதுமை பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரேசன் கடைக்கு சென்று வருவதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் நாங்கள் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடிவதில்லை எனவே எங்கள் பகுதியில் புதிய ரேசன் கடை வேண்டி அமைச்சரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து இறையூர் காலனி பகுதியில் சுமார் ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது விரைவில் கட்டிடம் கட்டப்பட்டு புதிய பகுதி நேர ரேசன் கடை விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.

    ×