search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forgery"

    • போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்துள்ளனர்.
    • ரமேஷ், தினேஷ் லிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் 7 ஏக்கர் 9 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் எங்களது நிலத்தை கிரையம் செய்து கொடுக்குமாறு கேட்டார். அதற்கு மறுத்து விட்டோம்.

    இந்த நிலையில் தெலுங்கானா அரசு பதிவுத்துறையில் இருந்து எங்களது நில கிரையம் தொடர்பாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் தெலுங்கானா சென்று கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்.

    இந்த நிலையில் மீண்டும் எனது சகோதரர் பெயரில் போலி பத்திரம் தயாரித்து தெலுங்கானாவில் உள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த தினேஷ்லிங்கத்திடம் கேட்ட போது, நிலத்தை கிரையம் செய்து தருமாறும், இல்லாவிடில் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதற்கு ரமேஷ் உள்பட 4 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ், தினேஷ் லிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஸ்டெல்லா பேபி படித்த இளைஞர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வந்துள்ளார்.
    • ஓமன் நாட்டில் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை உள்ளது என சிதம்பரத்திடம் ஸ்டெல்லா பேபி கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி ஸ்டெல்லா பேபி (வயது 51). இவர் அப்பகுதியை 'டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' நிறுவனம் நடத்தி வருகிறார்.

    பட்டதாரி வாலிபர்

    இவர் படித்த இளைஞர்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வந்துள்ளார். இந்நி லையில் தியாகராஜ நகரை சேர்ந்த பட்டதாரி வாலிபரான சிதம்பரம் (27) என்பவர் ஓமன் நாட்டு வேலைக்காக ஸ்டெல்லா பேபியை அணுகி உள்ளார்.

    அப்போது அவர் சிதம்பரத்திடம் ஓமன் நாட்டில் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை உள்ளது. தினமும் 8 மணி நேரம் தான் வேலை, ரூ. 2 லட்சம் தந்தால் உன்னை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறியுள்ளார். ஸ்டெல்லா பேபி கூறியதை நம்பி சிதம்பரம் ரூ.2 லட்சம் கொடுத்து ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

    ஆனால் அங்கு அவருக்கு தினமும் 12 மணி நேரம் வேலை வழங்கப்பட்டதோடு மாதம் ரூ.25 ஆயிரம் தான் சம்பளம் தருவோம் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிதம்பரம் சொந்த ஊர் திரும்பினார்.

    மேலும் தன்னை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி செய்த ஸ்டெல்லா பேபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டெல்லாபேபியை கைது செய்தனர்.

    • மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை கண்காணிக்க, எஸ்.ஐ., இளையசூரியன் தலைமை யிலான போலீசார், பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கள்ளத்தன மாக டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி, இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. ராஜூ (மதுவிலக்கு) ஆகி யோர் உத்தரவின் பேரில், மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை கண்காணிக்க, எஸ்.ஐ., இளையசூரியன் தலைமை யிலான போலீசார், பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், மோகனூர் காவிரி ஆற்றின் கரை யில் உள்ள, செங்கத்துறை ரெயில்வே பாலம் அருகில், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், அவர் மோகனூர் உப்பிலியர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் லோகநாதன் (வயது 37) என்பது தெரியவந்தது. மேலும், அவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி, இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

    தொடர்ந்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அப்போது, 2 குவாட்டர் பாட்டில்களில், விஷநெடியுடன் கூடிய வாசம் வீசியதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து, லோக நாதனிடம் விசாரணை நடத்தியதில், போதை அதிகரிக்க ஊமத்தை சாறை மதுபானத்தில் கலந்ததாக அவர் கூறினார். போலீசார் லோகநாதனை கைது செய்து மேலும் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை நீதிமன்ற பரிசோதனைக்கும், ரசாயன பகுப்பாய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    கள்ளத்தனமாக விற்கும் மதுபானங்களில், போதை அதிகரிக்க, இது போன்ற விஷத்தன்மை கொண்ட ஊமத்தை செடியின் சாறைக் கலந்து விற்பதால், அந்த மதுபானத்தை குடிப்ப வர்களின் உடல்நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.

    மேலும், தனி நபருக்கு அதிக அளவில் மது பாட் டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர் குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜான்சி ராணி.

    இந்த நிலையில் காளியப் பனுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. இதைத் ெதாடர்ந்து இருவரும் சென்னை சென்று குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. ஒரு மாதம் கழித்து மீண்டும் ஊருக்கு வந்து காளியப்பன் பழைய வேலையில் சேர்ந்துள்ளார்.

    பின்னர் மீண்டும் அந்த பெண்ணை பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் ஊருக்கு திரும்பி வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர்கள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாடி அறைக்கு சென்றவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஜான்சிராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி சமுத்திரக்கனி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தார். இதனையடுத்து தனது மூத்த மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2-வது மகளை வருசநாடு அருகே உள்ள காந்திபுரம் பகுதியிலும் திருமணம் செய்து கொடுத்தார்.

    2-வது மகளை திருமணம் செய்து கொடுத்த காந்திபுரம் பகுதியிலேயே வீடு எடுத்து சமுத்திரக்கனி தங்கி இருந்தார். பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டு முன்பு சமுத்திரக்கனி ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார்.

    அந்த பகுதிக்கு பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது கை, கால், மார்பு என பல இடங்களில் அரிவாளால் வெட்டி கொடூரமான நிலையில் சமுத்திரக்கனி கிடந்தார்.

    அவரை சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இசம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புகார் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.
    • ஒவ்வொரு வாரமும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சா ராயம் காய்ச்சுபவர் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை விற்பனை செய்வதை தடுப்பது குறித்த கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் முன்னிலையில், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்ததாவது:-

    கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து நாகை மாவட்டத்தில் விற்பனை செய்வதை தடுப்பது, அனுமதி பெற்ற பார்களை தவிர பிற பார்களில் மதுபானங்கள் விற்பது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பது போன்றவை தெரியவந்தால் 94981 81257 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

    புகார் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும், புகாரில் உண்மை தன்மை இருப்பின் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், ஒவ்வொரு வாரமும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் /எரிசாராயம் காய்ச்சப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    மேலும் ஸ்பிரிட் உரிமம் பெற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை காவல் துறையினர், கலால் துறையினர், வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து முறைகேடு நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். உரிமம் விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு), காவல் ஆய்வாளர்கள், மற்றும் கோட்டகலால் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற புகார் தொடர்பான இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.

    • போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாராயம் பதுக்கல் மற்றும் சாராயம் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்த 30 பேர்மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தம்பியை வெட்டிய அண்ணன் கைது
    • தனது தம்பியின் செயலால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக கருதினார்.

    மதுரை

    மதுரை விளாங்குடி பேங்க் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தெரியவந்ததும் வெங்கடேசை, அவரது அண்ணன் வினோத்குமார் கண்டித்தார். அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகராறில் ஈடுபட்ட இருவரையும், அவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். அவர்மீது வினோத்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    தம்பி வெங்கடேசனின் செயலால் தனது குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அவர் கருதினார். இதனால் வினோத்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு தம்பியை தேடிச்சென்றார். அப்போது காளவாசல் பகுதியில் வெங்கடேஷ் இருந்தார். அவருடன் வினோத்குமார், தன்னிடம் இருந்த அரிவாளால் வெங்கடேசை வெட்டினார்.

    இதில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து வினோத்குமார் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். படுகாயமடைந்த வெங்கடேசை, அவரது உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வெங்கடேசை அவரது அண்ணன் வெட்டியது குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்புகாரின் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வினோத்குமாரை கைது செய்தனர்.

    • ராஜபாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம அருகே உள்ள சட்டிக்கிணறு பகுதிைய சேர்ந்தவர் விஜயராகவன்(வயது 38). இவர் ெசாந்தமாக ஆட்ேடா வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது ஆக்டிங் கார் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.

    இந்தநிலையில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சத்துணவு கூடத்தில் பணியாற்றும் 35 வயதுடைய பெண் பொறுப்பாளருக்கும், விஜயராகவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்கா தலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது தொடர்பை நீடித்து வந்துள்ளனர்.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம், அந்த பெண்ணின் கணவர் ராஜசேகருக்கு தெரிய வந்தது. விஜயராக வனுடனான கள்ளத்தொ டர்பை கைவிடுமாறு மனைவியை அவர் கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று சட்டி கிணறு பகுதியில் விஜய ராகவன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜசேகர் மற்றும் அவரது நண்பர் சண்முகசுந்தரம் உள்பட 3 பேர் தகராறு செய்து விஜயராகவனை கல்லால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவரது மண்டை உடைந்தது. அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விஜயராகவன் புகாரின் கொடுத்தார். அதன்பேரில் கீழராஜ குலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.அங்குள்ள கருவேலம் மரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது போலீசாருக்கு தெரிய வந்தது
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு நின்றவரை விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த மருதூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டான் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.அங்குள்ள கருவேலம் மரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு நின்றவரை விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதன் அடிப்படையில் அவரை மருதூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர் புவனகிரி அடுத்த நாலாம் தெத்து கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 43 )என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் மலைப்பகுதியில் ரகசியமாக சிலர் அடுப்புகள் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாகவும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் போலீசார் சோதனைக்கு வருவதற்குள் சாராய காய்சுபவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்து தப்பி விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

    இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பரண்டு ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்தார்.

    இந்த தனிப்படையினர் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சினாலும் விற்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு செல்போன் என்னை கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து பூங்குளம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சசும் தகவல் தனிப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டு அடிக்கடி சாராய ஊறல்களை அளித்தனர்.

    நேற்று மாலையில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தததை தொடர்ந்து குடியாத்தம் போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் பூங்குளம் மலைப்பகுதிக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தபோது 15 பேரல்கள் கள்ளச்சாராயம் ஊறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதிலிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை உடனடியாக போலீசார் அழித்தனர் மேலும் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த 2 அடுப்புகளையும் போலீசார் அடித்து உடைத்தனர். மேலும் லாரி டியூப் களிலிருந்த கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்

    கள்ளச்சாராய ஊறல்கள் காய்ச்சியது சம்பந்தமாக பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, செம்மட்ட சரவணன் ஆகியோர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ×