search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood Damage"

    • அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.
    • டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் 4 மாவட்ட மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை வெள்ள பாதிப்பு பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களை சூழ்ந்து உள்ள வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் 5-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    இப்படி வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 3500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 4 போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்ட போலீசாருடன் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதுபோன்ற கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    • தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
    • தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் மெயின்ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட பரப்பளவில் சடையனேரி குளம் உள்ளது.

    இந்த குளம் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தினால் குளம் உடைந்து விவசாய தோட்டங்கள் மற்றும் அடப்பநல்லூர், செட்டியா பத்து, கூழையன் குண்டு, அருணாச்சலபுரம், தண்டு பத்து, அரசூர்பேட்டை, வெள்ளாளன்விளை, வட்டன்விளை, செட்டி விளை, பரமன்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் இந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

    இந்நிலையில் கிராம அதிகாரி கணேச பெருமாள் நேரில் பார்வையிட சென்ற போது வெள்ளாளன்விளை பொது மக்கள் சிறை பிடித்தனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதால் கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து உடைந்த சடையனேரி குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிக அளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது இன்று காலை வரை தண்ணீர் வடியாமல் ஏராளமான கிராமங்களில் மக்கள் பரிதவிக்கின்றனர். 

    • 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.
    • திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும்.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவிக்கும் 500 பயணிகளை மீட்க அரசும், ரெயில்வே துறையும் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரெயிலில் உள்ள பயணிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர்.

    அங்கிருந்து அவர்களை அழைத்து வர 13 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் ரெயில் நிலையம் அருகில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மணியாச்சிக்கு 38 கி.மீ. தூரமாகும். அங்கு வந்து சேரும் பாதிக்கப்பட்ட பயணிகள் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக சிறப்பு ரெயில் ஒன்றை தெற்கு ரெயில்வே இயங்குகிறது. இந்த ரெயில் முழுக்க முழுக்க வெள்ளத்தால் வழியில் சிக்கிக் கொண்ட பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயில் மணியாச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயிலில் உணவு, குடிநீர், பிஸ்கட் பாக்கெட் போன்றவை உள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் சென்னை வந்து சேரும் வரையில் உணவு அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறிய வது:-

    திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும். எத்தனை பெட்டிகள், எப்போது ரெயில் புறப்படும் என்பது போன்ற தகவல்கள் பயணிகள் முழுமையாக மீட்கப்பட்டு வந்த பிறகு தான் தெரிய வரும் என்றார்.

    • கோவையில் தயாரான ஒரு டன் உணவு பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.
    • உணவு வினியோகம் மற்றும் மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக முப்படைகளும் களம் இறக்கப்பட்டு உள்ளன.

    சூலூர் விமானப்படை தளம், மண்டபம், கொச்சி கடற்படை தளங்களில் இருந்து 6 ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    கோவையில் தயாரான ஒரு டன் உணவு பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.

    காலை 10.15 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் உணவு பொட்டலங்களை போட்டனர். அதில் பிஸ்கட், உலர் பழங்கள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.

    மற்ற 5 ஹெலிகாப்டர்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீரில் சிக்கி உள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்களை வினியோகித்தது.

    இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல பகுதிகளில் வினியோகிக்கப்படுகிறது.

    விமானப்படை தரப்பில் கூறும்போது, உணவு வினியோகம் மற்றும் மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தெரி விக்கப்படும் இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது என்றனர்.

    • புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
    • மழை பெய்யாத காரணத்தினால் பாளையங்கோட்டை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    தாமிரபரணியில் வரும் நீர்வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளதால் நெல்லை சந்திப்பில் உள்ள பஸ் நிலைய பகுதியில் நீர் வடிய தொடங்கி உள்ளது. ஆனால் வாகனங்கள் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடிய வில்லை.

    டவுன் ஸ்ரீபுரம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் பகுதிகளில் நீர் முற்றிலுமாக வடிந்து, இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. சில பகுதிகளில் தேநீர் மற்றும் மற்ற கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    கோவிலை சுற்றியுள்ள வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதியில் சாலையில் நீர் வடிந்துள்ளது. தெற்கு ரத வீதியில் மட்டும் சிறிதளவு நீர் உள்ளது.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. சேரன்மகாதேவி சங்கன்திரடு, முக்கூடல், பொட்டல்புதூர் வழியாக கடையம் செல்கின்றன.

    பாபநாசம் செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் வழக்கமாக செல்லும் வழித்தடமான சேரன்மகா தேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் வழியாக பாபநாசம் செல்கின்றன.

    நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் , சேரன்மகா தேவி போன்ற பகுதிகளுக்கு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தின் எதிரே உள்ள எஸ்.டி.சி. காலேஜ் ரோட்டில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. வாகனங்கள் சென்று வருகின்றன.

    புதிய பஸ் நிலையம் பின்னே உள்ள சேவியர் காலனியில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. நெல்லை சந்திப்பு செல்லும் பஸ்கள் வழக்கமான வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    மழை பெய்யாத காரணத்தினால் பாளையங்கோட்டை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

    வழக்கம்போல நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தென்காசிக்கு இன்னும் பஸ் சேவை தொடங்கப்படவில்லை.

    • புயல் வெள்ள பாதிப்பால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு இரு தினங்களாக ஆய்வு செய்தது. மிச்சாங் புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு அதிகாரி தெரிவித்தார்.

    இதற்கிடையே, மிச்சாங் புயலால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. இதற்காக வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களில் டோக்கன் வினியோகம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன்கடைகளில் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் வெள்ள பாதிப்புகளால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், 2ம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடியும் சேத மதிப்பாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

    • ஒருநாள் முழுக்க சென்னையில் தேங்கிய மழைநீர் கடலுக்குள் செல்வதில் பிரச்சினை இருந்தது.
    • ஆக்கிரமிப்பு எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை அகற்றுகிறோம்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எடப்படி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோருக்கு தார்மீக உரிமை இல்லை. சென்னை, காஞ்சிபு ரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருவர் கூட விட்டுப்போகாத வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும். சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் தொற்றுநோய் பாதிப்பு குறைந்து உள்ளது.

    சென்னையை பொருத்தவரை புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களில் தண்ணீர் முழுமையாக போய்விட்டது. முதல் நாளில் கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய ஆறுகளில் சென்ற மழைநீர் கடலில் உள்வாங்கவில்லை. கடலின் சீற்றம் மற்றும் மையம் கொண்டிருந்த புயல் ஆகியவை காரணமாக கடல் அலைகள் 7 முதல் 8 அடி வரை உயர்ந்து தண்ணீரை உள்வாங்கவில்லை. அதன் காரணமாக ஒருநாள் முழுக்க சென்னையில் தேங்கிய மழைநீர் கடலுக்குள் செல்வதில் பிரச்சினை இருந்தது.

    அன்று இரவு 12 மணிக்கு மழை முடிந்தவுடன் வெள்ளம் சீராக கடலுக்குள் செல்ல ஆரம்பித்துவிட்டது. அது கடலுக்குள் செல்ல ஆரம்பித்தவுடன் சென்னை நகருக்குள் இருக்கும் 22 நீரோடைகளான கால்வாய்களின் நீர் கடலுக்குள் போக வேண்டும். இந்த கால்வாய்களில் இருந்து நீர் 4 பிரதான கால்வாய்களுக்கு சென்று அங்கிருந்து கடலுக்கு செல்ல வேண்டும். இதனால் தண்ணீர் வடிவதில் 2 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டது.

    அதன் பிறகு சென்னை நகருக்குள் எங்கும் தண்ணீர் இல்லை. தாழ்வான பகுதிக ளில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து மோட்டார்களின் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இப்போது எங்கும் தண்ணீர் இல்லை. எந்த பிரச்சினையும் இல்லை. எனவே இன்னும் சென்னை நகருக்குள் தண்ணீர் இருக்கிறது என்று சொல்லாதீர்கள். ஆக்கிரமிப்பு எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை அகற்றுகிறோம்.

    வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு காரணம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீர் வழிந்தோடியதால் ஏற்பட்டதாகும். 7 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் வந்த நீராகும்.

    இதுவரை வரலாறு காணாத வகையில், வேறு எந்த பருவ மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் டிசம்பர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 58 செ.மீ. மழை பெய்துள்ளது. இது கடந்த பருவமழை காலங்களில் பெய்த மழையை காட்டிலும் 12 மடங்கு கூடுதலாகும். இதனால் தான் தண்ணீர் தேங்கியது. ஆனால் 2 நாளில் வெள்ளம் வடிந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்படியே தேங்கி நிற்கிறது.
    • தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    மிச்சாங் புயல் சென்னை நகரை புரட்டிப்போட்டு உள்ளது. இடைவிடாது பெய்த கனமழை காரணமாக திரும்பும் திசை எல்லாம் வெள்ளக்காடாக மாறியது. இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    கொரட்டூர் பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் அப்பகுதி முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி குடியிருப்புகள் வெள்தத்தால் சூழப்பட்டது. தற்போது வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் கொரட்டூர் பகுதியில் சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர்.

    குறிப்பாக கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழை வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் திக்குமுக்காடினர். பலத்த மழை காரணமாக பட்டாபிராம் ஏரி, ஆவடி ஏரி, அயப்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி வழிந்து கொரட்டூர் ஏரிக்கு வந்தபோது கொரட்டுர் ஜீரோ பாயிண்ட் நிரம்பி உபரி நீரானது கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் புகுந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது ஏற்கனவே பள்ளமான பகுதி என்பதால் 4 நாட்கள் ஆகியும் தண்ணீர் இன்னும் குறையவில்லை. மழை நின்று 3 நாட்கள் ஆகியும் மழை நீர் வெளியேறாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வடக்கு பகுதியில் 55 முதல் 67 தெருக்கள் மற்றும் மத்திய நிழற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. இன்னும் ஒரு அடி கூட குறையவில்லை. 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்படியே தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 4 நாட்களாக அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.

    தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். அவர்களுக்கு பால், உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்காததால் தவித்து வருகிறார்கள். தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.அவர்களுக்கு நிவாரண உதவி செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழையால் எங்கள் வாழ்வாதம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்பு முழுவதுமே தண்ணீரால் சூழப்பட்டு இருக்கிறது. உணவுக்கும் தண்ணீருக்கும் மிகவும் கஷ்டப்படுகிறோம். நிவாரண உதவி எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் வீட்டிற்குள்ளே 5 நாட்களாக அடைபட்டு இருக்கிறோம். கீழே வந்தால் எங்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. வீட்டில் இருந்த மளிகை பொருட்களை வைத்து சமாளித்தோம். இனிமேல் என்ன செய்வோம். எங்களுக்கு பால் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு மழைக்காலத்திலும் நாங்கள் இப்படி அவதிப்பட வேண்டுமா? எங்களுக்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாதா? கேட்டால் ஏரியை உடைத்து விட்டோம் என்கிறார்கள். எந்த ஏரியை உடைத்து விட்டார்கள் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். முதலில் பால், குடிநீர், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    பட்டரைவாக்கம் பால்பண்ணையில் மழைநீர் புகுந்துள்ளதால் 3-வது நாளாக அம்பத்தூர், கள்ளிகுப்பம், ஒரகடம், பாடி, புதூர், மண்ணூர் பேட்டை, திருமங்கலம், உட்பட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பால் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    கொரட்டூர் ரெயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் நிரம்பி வழிகிறது. இதனால் கொரட்டூர் வடக்கு அக்கரகாரம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    டிடிபி காலனி, மேனாம்பேடு மெயின் ரோடு, பட்டரைவாக்கம் பிரதான சாலை பகுதிகளில் மழைவெள்ளம் குறைந்ததால் அங்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. சிட்கோ தொற்பேட்டை பகுதியான பட்டரைவாக்கம் பகுதியில் சுமார் 1000- மேற்பட்ட தொழிற்சாலைகளில் மழை நீர் புகுந்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டறைவாக்கம் கொரட்டூர் சாலையில் பட்டரைவாக்கம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கம் போல் வாகனங்களை இயக்கப்படுகின்றன.

    இதற்கிடையே இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீரால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து தொழிற்சாலையின் உரிமையாளரிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். அப்போது எம்.எல்.ஏ.ஜோசப் சாமுவேல், மண்டலகுழுத் தலைவர் பி கே மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 4-ந் தேதி முதல் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • ஓரிரு வாரங்களுக்கு வீடு வீடாக குப்பைகளை பெற வரமாட்டோம். அருகில் உள்ள பொது இடங்களில் குப்பைகளை கொட்டுங்கள்.

    சென்னை:

    சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பணியாளர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 4-ந் தேதி முதல் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது மழைநீர் வடிந்து வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் வீடு வீடாக குப்பை அகற்றும் பணி நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக சேர்த்து வைத்திருந்த குப்பையை தெருவோரங்கள், காலி நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் கொட்டி வருகின்றனர். மாநகரின் பல இடங்களில் குப்பை குவியல் குவியல்களாக காட்சி அளிக்கின்றன.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் குப்பை லாரிகளை இயக்க முடியவில்லை. கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்குள் லாரிகளை கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை நிறுத்தும் நிலையங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகே, அவற்றை சீர் செய்து இயக்கமுடியும். இருப்பினும், பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பணியாளர்கள் வாகனங்களுடன் வந்து உள்ளனர். அவர்கள் உதவியுடன் குப்பையை அகற்றும் பணிகளை தொடங்கி இருக்கிறோம்.

    வெள்ளம் வடிந்த பிறகு, நனைந்த கட்டில், மெத்தை, சோபா, புத்தகங்கள், துணி மணிகள் உள்ளிட்டவை கழிவாக அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. அவற்றை அகற்றவும் பணியாளர்கள் தயார் நிலையில் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே எலி, நாய், பூனை போன்றவை உயிரிழந்து உள்ளன. அவற்றையும் அப்புறப்படுத்தி வருகிறோம். அப்பகுதிகளில் குப்பையை அகற்றிவிட்டு, பிளீச்சிங் பவுடர் தூவி வருகிறோம்.

    ஒருசில தினங்களில் நிலைமை சீரடையும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். சில குடியிருப்பு பகுதிகளில், ''ஓரிரு வாரங்களுக்கு வீடு வீடாக குப்பைகளை பெற வரமாட்டோம். அருகில் உள்ள பொது இடங்களில் குப்பைகளை கொட்டுங்கள். மழை பாதிப்புகள் முடிந்த பிறகு, மொத்தமாக அகற்றிக் கொள்கிறோம்'' என்று குடியிருப்புவாசிகளிடம் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் எம்.எல்.ஏவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர்.
    • சம்பவத்தால் எம்.எல்.ஏ.வும் அவருடன் வந்திருந்த கட்சி தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அம்பாலா:

    டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அரியானா மாநிலத்திலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அம்பாலா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

    வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றார். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.

    இந்நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜனநாயக் ஜனதா என்ற கட்சியின் எம்.எல்.ஏ. இஸ்வார்சிங் குலா என்ற பகுதிக்கு வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக சென்றார், அவருடன் கட்சி தொண்டர்கள் மற்றும் போலீசார் சென்றனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எம்.எல்.ஏவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தடுப்பணை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகவும், ஆனால் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கோபத்துடன் அவர்கள் கூறினார்கள்.

    அந்த சமயம் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் திடீரென ஆவேசத்துடன் இஸ்வார்சிங் எம்.எல்.ஏ வை பார்த்து "இப்ப எதுக்கு இங்கே வந்தீங்க" எனக்கூறி அவரை தாக்கினார். உடனே போலீசார் அந்த பெண்ணை மேலும் தாக்கிவிடாமல் இருப்பதற்காக தடுத்து நிறுத்தினார்கள்.

    இந்த சம்பவத்தால் எம்.எல்.ஏ.வும் அவருடன் வந்திருந்த கட்சி தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தன்னை தாக்கிய போதும் அந்த பெண்ணை மன்னித்து விட்டதாகவும், அதனால் அவர் மீது சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் இஸ்வார் சிங் எம்,எல்.ஏ போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.

    அரியானாவில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 40 வீடுகள் பாதிப்பு
    • உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து ஆய்வு

    வேலூர்:

    மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாநகராட்சி கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் தேங்கி மழை நீர் தேங்கியது.

    இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வழியாக செல்லும் நிக்கல்சன் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கால்வாயில் செல்லும் நீரின் அளவு அதிகரித்ததால் குடியிருப்புக்குள் புகுந்து கழிவு நீருடன் சேர்ந்து மழை நீரும் தெரு முழுவதும் தேங்கியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் தண்ணீரின் அளவு உயராத வண்ணம் மாநகராட்சி ஊழியர்கள் மணல் மூட்டைகளை அடுக்கினர். ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்தின் போதும் இப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் சம்பத் நகர் பகுதியில் மழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதேபோல் நிக்கல்சன் கால்வாய் பகுதியில் குப்பைகள் தேங்காத வாரும் அதனை தூர்வாரும் பணியினையும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்

    வேலூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் காற்றின் வேகம் குறைவாகவும் மழையின் அளவு குறைவாகவும் உள்ளது. மாலை வரை மழை தொடரும் என கூறி இருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    மாவட்டம் முழுவதும் 35 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுவரை தெருக்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகவில்லை. இருந்த போதும் முகாம்களை தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றனர்.

    • தூர்வாரபடாததால் தெ௫க்கள் மற்றும் பள்ளியில் தேங்கியது
    • குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கலசபாக்கம்:

    கலசபாக்கம் தொகுதி நயம்பாடி அண்ணாமலைநகரில் நேற்று பெய்த மழையில் வடிகால் சரியாக தூர்வாரபடாததால் தெ௫க்கள் மற்றும் பள்ளியில் வெள்ளம் தேங்கியது.

    இதுகுறித்து ஊராட்சி அலுவலரிடம் முறையிட்டபோது:-

    2 நாட்களில் வற்றி விடும் அதை பொறுட்படுத்தார்கள் என்று கூறியுள்ளனர். குழைந்தைகள் மற்றும் வயது முதியோர்கள் நடமாடும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை குறுகிய காலத்தில் எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×