search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flag"

    • இடையன்குளம் கிராமத்தில் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
    • ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் பள்ளிக் கல்வி துறையின் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் 75-வது சுதந்திர தின நிறைவைக் குறிக்கும் வகையில் வீடுதோறும் தேசிய கொடி வைக்க வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக நடந்தது.

    இடையன்குளம் கிராமத்தில் சுமார் 650 குடியிருப்பு உள்ளது. இங்கு 5 இ்ல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 140 மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள்.

    தன்னார்வலர்கள் சித்ரா, மதனா, மனோன்மரியா, லதாபிரியா, சந்திராஆகியோர் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய கொடி ஏந்தி கிராமத்தின் தெருக்களின் வழியே வீடுதோறும் தேசிய கொடியை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் தங்கள் வீடுகளில் தேசிய கொடிகளை மாணவர்கள் வைத்து மரியாதை செய்தனர். மேலும் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளிலும் தேசிய கொடி வைக்கப்பட்டது.

    பாட்டக்குளம் கிராமத்தில் உள்ள திருமலாபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் தன்னார்வலர் மீனாட்சி தலைமையில் மாணவ- மாணவிகள் தேசிய கொடியேந்தி வீடுதோறும் தேசிய கொடியை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.

    நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதி மணிராஜன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் , ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

    • பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.
    • வீடுகளில் ஏற்றுவதற்கான வழிமுறைகளை தெரிவித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் ஆகியோரின் அறிவுரைபடி 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி பேரூராட்சியில் வருகிற 15-ம் தேதி வரை வீடுகளில் ஏற்றுவதற்கு வீடு வீடாக தேசிய கொடி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்குவதற்கு பணியாளர்களுக்கு ஆணையிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடியினை வழங்கி வீடுகளில் ஏற்றுவதற்கான வழிமுறைகளை தெரிவித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் செயல் அலுவலர் மாணிக்கராஜ், துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வார்டு உறுப்பினர்கள் இலக்கியா, கார்த்திக், உலகம்மாள், புணமாலை, பசுமதி, முத்துமாரி, நமச்சிவாயம், விமலாராணி, சிந்துமொழி, வெங்கடேஷ், அருள் வளர்மதி, ஷோபா, பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
    • தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகின்ற 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளு க்கும் தேசியக்கொடிவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 2562 வீடுகளுக்கு சென்று தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுர ங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா 18 இடங்களில் நடைபெற்றது.
    • அனைத்து இடங்களிலும் இனிப்பு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவரான காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு காயல்பட்டினத்தில் 18 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.

    முஸ்லிம் லீக் நகர தலைவர் முகமது ஹசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மஹ்மூத் ஹசன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகரச் செயலாளர் அபுசாலிஹ், பொருளாளர் சுலைமான், மாவட்ட துணைச்செய லாளர்பெத்தப்பா சுல்தான், மாவட்ட நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், காதர் சாகிப் மற்றும் முகைதீன் தம்பி, முகமது அலி, லெப்பையப்பா ரஹமத்துல்லா, காயிதே மில்லத் பேரவை செயலாளர் வாவு சம்சுதீன் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கொடி ஏற்றினர்.

    அனைத்து இடங்களிலும் இனிப்பு வழங்கப்பட்டது. நகர நிர்வாகிகள் சித்திக், அப்துல் கரீம், கடலூர் ஜாபர், முகமது முகைதீன், அப்துல் ரகுமான், உமர் அப்துல் காதர், சுகைல் இப்ராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×