search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish market"

    • கேரளா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது
    • மீன்களின் விலை குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை 

    கோவை மீன் மார்க்கெட்டிற்கு கடல் மீன்கள் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் தற்போது மீன் பிடிக்க தடைக்காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டி–னம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து மட்டுமே தற்போது மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    மேலும் தமிழகத்திலிருந்து மீன்கள் கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் மீன்களின் விலை குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    பெரிய வஞ்சரம் ரூ.1100க்கும், சின்ன வஞ்சரம் ரூ.900க்கும், விளமீன் ரூ.500க்கும் பாறை ரூ.550க்கும், சங்கரா ரூ.400க்கும், நெத்திலி ரூ.350க்கும், மத்தி ரூ.250க்கும்,கருப்பு வாவல் ரூ.1000க்கும், வெள்ளை வாவல் ரூ.1400க்கும், ராமேஸ்வரம் நண்டு ரூ.700க்கும், சாதா நண்டு ரூ.400க்கும், கிளிமின் ரூ.400க்கும் சாலமன்ரூ. 1100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மீன்கள் விலை உயர்வால் பொதுமக்கள் குறைந்த அளவிலான மீன்களை வாங்கி செல்கின்றனர். இது குறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் தடைக்காலம் என்பதால் தமிழகத்தில் பிடிக்கக்கூடிய மீன்களை கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் கோவை மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைவாக உள்ளது. கேரளாவில் தடைக்காலம் முடிந்த பின்னர் மீன்கள்விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • ஈரோடு ஸ்டோனிபாலம் மீன் மார்க்கெட்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வரத்தாகி இருந்தது.
    • இன்று மீன் மார்க்கெட்டில் வஞ்சரம் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.இதேபோல் மற்ற மீன்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனிபாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன.

    இங்கு கடல் மீன்கள் அதிகளவில் விற்கப்ப டுவதால் இங்கு எப்போதும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக மீன்கள் வரத்து அதிகமாக வருகிறது. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீண்டும் விலை சற்று குறைந்துள்ளது.

    ஈரோடு ஸ்டோனிபாலம் மீன் மார்க்கெட்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வரத்தாகி இருந்தது. இன்று 8 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது.

    கடந்த வாரம் 900-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சரம் மீன் இந்த வாரமும் அதே விலைக்கு விற்பனையானது. இன்று மீன் மார்க்கெட்டில் வஞ்சரம் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.இதேபோல் மற்ற மீன்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது.

    இன்று மார்க்கெட்டில் மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    கிளி-450, வவ்வால்-450, விளா-450, மஞ்சள் சாரை-500, சீலா-500, அயிலை-250, சங்கரா-350, மத்தி-200, கொடுவா-500, பெரியஇறால்-750, சின்ன இறால்-550, நண்டு-500, உளி-450, பாறை-450,

    இதேப்போல் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து இன்று அதிகமாக இருந்தது. அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர். இதனால் இன்று மீன் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    அரியானா, பஞ்சாப், சண்டிகார் ஆகிய மாநிலங்களிலும் பார்மாலின் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #Chemicalfish #Chemicallacedfish

    சண்டிகார்:

    இறந்தவர்களின் உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மாலின் என்ற ரசாயனத்தை கலந்து பாடம் செய்யப்படுகிறது.

    இந்த ரசாயனம் வி‌ஷத் தன்மை கொண்டதாகும். உணவு பொருட்களில் இவற்றை தொடர்ந்து பயன் படுத்தினால் புற்று நோய் ஏற்படும். உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    ஆனால், இந்த ரசாயனத்தை மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க பயன் படுத்துவதாக தெரிய வந்தது.

    தமிழ்நாட்டில் பல இடங்களில் இதுபோன்ற மீன்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து விற்பனைக்காக வர வழைக்கப்பட்ட மீன்களில் இந்த ரசாயனங்கள் கலக்கப்பட்டு இருந்தன.

    ஆந்திராவில் இருந்து அசாம் மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட மீன்களிலும் இதேபோன்று ரசாயனம் கலப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆந்திரா மீன்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அரியானா, பஞ்சாப், சண்டிகார் ஆகிய மாநிலங்களிலும் பார்மாலின் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சமூக அமைப்பு ஒன்று மீன்களை மாதிரிக்கு எடுத்து சென்று ஆய்வு செய்தது. அதில் 10 வகையான மீன்களில் பார்மாலின் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    பஞ்சாப், அரியானா, சண்டிகார் மாநிலங்களில் கடல் இல்லை. அங்கு பெரும் பாலும் ஆற்று மீன்கள் பயன் படுத்தப்படுகின்றன.

    இது தவிர, குஜராத், ஒடிசா, மராட்டியம், ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கடல் மீன்கள் வரவழைக்கப்பட்டு இந்த மாநிலங்களில் விற்கப் படுகின்றன.

    வெளி மாநிலங்களில் இருந்து கிழக்கு டெல்லியில் உள்ள காசிப்பூர் மார்க் கெட்டுக்கு மொத்தமாக கடல் மீன்கள் வருகின்றன. பின்னர் அவை அருகில் உள்ள பஞ்சாப், சண்டிகார், அரியானா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

    இந்த மீன்களில்தான் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர். #Chemicalfish #Chemicallacedfis

    சட்டத்துக்கு அப்பாற்பட்ட எந்த வித போராட்டத்தையும் ஏற்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ministerJayakumar
    அடையாறு:

    சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியை அடுத்துள்ள நடுக்குப்பத்தில் புதிதாக மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சந்தையில் 120 கடைகள் உள்ளன. இங்கு சுகாதார முறையில் மீன் விற்பனை செய்வதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மீன் சந்தையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று காலை திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மீனவர்கள் நலன் கருதியும், சுகாதாரமான முறையில் மீன்களை விற்பனை செய்யும் வகையிலும் சென்னையில் அரசு சார்பில் மேலும் 19 மீன் சந்தைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆட்சியின் போது, அரசியல் ரீதியாக நாங்கள் பார்க்காத சிறையே கிடையாது. அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    யாராக இருந்தாலும் சரி, சட்டத்துக்கு உட்பட்டு எந்த ஒரு போராட்டம் நடத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில் நடத்தப்படும் எந்தவித போராட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    காவல்துறையினர் தங்கள் கடமைகளை ஒழுங்காக செய்து வருகின்றனர். அவர்கள் பொதுமக்களுக்கு நண்பன், சமூக விரோதிகளுக்கு தான் எதிரி.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerJayakumar
    முத்துப்பேட்டையில் பா.ஜனதா பிரமுகர்கள் திடீரென கைது செய்யப்பட்டதால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் உள்ள மீன் மார்க்கெட் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை உடனடியாக அகற்றக்கோரியும் பா.ஜனதா சார்பில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த போராட்டத்திற்கு எதிராக சில அமைப்புகளும் போராட்டத்தை அறிவித்தனர். இதனால் முத்துப்பேட்டையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசார் இரு தரப்பினரின் அனைத்து போராட்டத்திற்கும் அனுமதி மறுத்து தடை செய்தனர். இருந்தும் போராட்டங்கள் அறிவிப்பதும், பின்னர் தடை செய்வதுமாக தொடர்ச்சியாக பரபரப்பான சூழ்நிலை உருவானது. இந்தநிலையில் இன்று பா.ஜனதா சார்பில் மீன் மார்க்கெட்டை உடன் அகற்றக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தில் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படலாம் என்ற நிலையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இரு தரப்பினரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் பா.ஜ சார்பில் திட்டமிட்டப்படி இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் எஸ்.பி. மயில்வாகனன், ஏ.டி.எஸ்.பி. ஜான்ஜோசப், முத்துப்பேட்டை டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், நன்னிலம் டி.எஸ்.பி. அருண் உள்ளிட்ட 5 டி.எஸ்.பி.க்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ஜாம்புவானோடை கிராமத்தில் உள்ள பா.ஜ. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.

    அதேபோல் பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா தலைமையிலான போலீசார் பேட்டை கிராமத்தில் உள்ள பா.ஜ. மாவட்ட தலைவர் பேட்டை சிவா வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். 

    மேலும் உண்ணாவிரதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கோட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் ராமலிங்கம், செல்வம், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் டி.ஐ.ஜி. லோகநாதன் சம்பவ இடங்களை பார்வையிட்டார்.

    ×