search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire service officer"

    • தீயணைப்பு நிலைய சார்பு நிலைய அலுவலர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
    • மகள் பிறந்தநாள் அன்று கேக் வாங்கி வைத்து விட்டு தீயணைப்பு அதிகாரி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் வித்யாபதி (வயது 48). திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் சார்பு நிலைய அலுவலராக உள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், திவ்யதர்ஷிணி (24) என்ற மகளும், தட்சணாமூர்த்தி (20) என்ற மகனும் உள்ளனர்.

    திவ்யதர்ஷிணி இன்று நடக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். மேலும் தனது மகளுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு தேர்வு எழுதி வந்தவுடன் வாழ்த்து சொல்வதற்காக கேக் வாங்கி வைத்துவிட்டு தயார் நிலையில் இருந்தார்.

    இன்று காலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த சக ஊழியர்கள் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இன்னும் 2 ஆண்டுகளில் அவர் நிலைய அலுவலராக பதவி உயர்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகள் பிறந்தநாளில் கேக் வாங்கி வைத்துவிட்டு அவருக்கு வாழ்த்துக்கூட சொல்ல முடியாமல் தீயணைப்பு அதிகாரி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×