என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fire in the garden"
- ரமேஷ் (வயது 45). விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டிருந்தார்.
- இந்நிலையில் நேற்று திடீரென கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கூடச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்பு வெட்டும் தருவாயில் இருந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை . இதுகுறித்து ரமேஷ் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று, கரும்பு தோட்டத்தில் பரவிய தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அருகாமையில் உள்ள தோட்டங்களுக்கு தீ பரவாமல் தடுத்ததால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான கரும்பு பயிர் தீயில் எரிந்து நாசமாயின.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்