search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finance"

    • நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • உட்கட்டமைப்பு வசதிக்கான பொருட்செலவுகளை நன்கொடை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற "நம்ம ஸ்கூல்"- நம்ம ஊரு பள்ளி திட்டம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திட்டப்பணிகளுக்கு நிதி அளிப்பது, பொருட்களாக வழங்குவது, தன்னார்வ சேவைபுரிவது வாயிலாக அரசுபள்ளிகளின் அடிப்படை தேவைகளை சமூக பங்களிப்புடன் நிறைவேற்றிட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    சமூகபங்களிப்பு நிதியினை பெற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி அன்று "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" (nammaschool.tnschools.gov.in) என்ற இணையதளம் மற்றும் தனிவங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

    வங்கிக்க ணக்கு அரசு பள்ளி களின் மேம்பாட்டிற்காக பெரு, சிறு, குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அளித்திட உறுதுணையாக உள்ளது.

    இணையதளம் வழியாக பெறப்படும் நிதியானது பள்ளிகளுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற இன்றியமையாத தேவைகளுக்கான செலவினம் மேற்கொள்ளப்பட்டு நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டு ள்ளது.

    அரசு பள்ளிகளுக்கென தனிநபர்கள், முன்னாள் மாணவர்கள் குறு மற்றும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி போன்றவை இணையதளம் வாயிலாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.

    இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் வங்கி கணக்கு தொடங்கவும் பள்ளிக் கல்வித்துறையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியை மேற்குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக தேர்ந்தெடுத்து உட்கட்ட மைப்பு வசதிக்கான பொருட்செலவுகளை நன்கொடை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    • நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராசு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஞானமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிவச்சந்திரன், ஒன்றிய தலைவர் ராஜா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.29,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    மத்திய அரசின் பட்ஜெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் உணவு மானியம் ரூ.1 லட்சம் கோடி குறைக்கப்பட்டதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.29000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இது போல் பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறி இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி தஞ்சை ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பக்கிரிசாமி, கோவிந்தராஜ், அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோஷங்கள் எழுப்பியவாறே பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் எரிந்து கொண்டிருந்த நகலை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

    • சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் சீரமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே மீண்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் தாமரைக் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் புகுந்து குளத்தை பாழாக்கி வருகின்றனர்.

    எனவே அந்த சுவரை கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    அத்துடன் இதர சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.6000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
    • தமிழக அரசு உடல் உழைப்பு நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் 22-வது பேரவை கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    முருகேசன், பானுமதி, கார்த்திக் ஆகியோர் தலமை தாங்கினர். பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர்மணி மூர்த்தி பேரவை கொடியினை ஏற்றி வைத்தார்.

    அஞ்சலி தீர்மானத்தை சங்கத் துணைத் தலைவர்பரிமளா வாசித்தார். சங்க துணை செயலாளர்சேவையா வரவேற்று பேசினார். ஏ .ஐ. டி. யூ .சி மாநில செயலாளர் சந்திரகுமார் பேரவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் கோவி ந்தராஜன் முன்வைத்தார். மாவட்ட பொருளாளர்சுதா வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

    ஏஐடியூசி மாவட்ட செயலாளர்தில்லைவனம் பேரவையினை நிறைவு செய்து பேசினார்.

    இந்த பேரவையில் நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 6000 மாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர்அன்பழகன், போக்குவரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன், சுமை தூக்கும் சங்கத்தின் மாநில தலைவர் சாமிக்க ண்ணு, தெருவியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்கு மரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர்செந்தில்நாதன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர்கோடீஸ்வரன், தலைவர்இளஞ்செழியன், நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர்தியாகராஜன், கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.
    • பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.இந்தநிலையில் குழுவில் இருந்த ஒரு பெண் இறந்துவிட்டார். மேலும் இருவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் மாதத்தவணை கட்ட காலதாமதம் ஆனதால் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

    கடன் தவணை செலுத்த வந்த பெண்களிடம், கடன் தவணை செலுத்தாத இருவரின் பணத்தையும் செலுத்த கூறி மிரட்டியுள்ளனர்.இதையடுத்து வேறு இடத்தில் குடியிருக்கும் அந்த பெண்களிடம் போன் மூலம் பேசியதில் கடன் தவணை செலுத்துவதாக அவர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் தொகைக்காக தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பெண்களை சிறை பிடித்து வைத்திருப்பது குறித்த தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் வந்தனர்.இது குறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் இரவு நேரத்தில் இப்படி கூட்டமாக வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

    ஒன்றிய குழு துணை தலைவர்வாசுதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூபாய் 78.10 லட்சத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட 2021-22ம் ஆண்டு 15-வது மத்திய நிதிக்குழு சுகாதார தலைப்பு ஒதுக்கீட்டு மான்ய நிதி ரூபாய் 60 லட்சம் போக பற்றாக்குறை நிதியான ரூபாய் 18.10 லட்சத்தை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து வழங்கவும் வடகிழக்கு பருவமழையில் பழுதடைந்த அரித்துவாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 569 மதிப்பீட்டில் பழுது ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்நீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகையாக ரூபாய் 58 ஆயிரத்து 569-ம்.

    கேத்தனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 671 மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ரசூல் நஸ்ரின் பேசுகையில் மூன்று ஆண்டுகாலமாக ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கின்றனர் நாங்கள் என்ன பதில் சொல்வது என கேள்வி எழுப்பினார்

    இதற்கு பதில் அளித்து அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் சங்கர் பேசுகையில் அரசாங்கம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும் பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் எனப் பேசினார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி நன்றி கூறினார்.

    • முதல்- அமைச்சர் உத்தரவின் பேரில் புதிய கட்டிடம் கட்ட ரூ. 1.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • 4200 சதுரடியில் 2 தளங்களுடன் பல்வேறு வசதியுடன் புதிய மாதிரி நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உலக நூலகத் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்து, வளர்ந்தார். இவர் பிறந்த சீர்காழியில் உள்ள கிளை நூலக கட்டிடம் பல ஆண்டுகளாக குறுகிய இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அவதி அடைந்ததோடு, மழைக்காலங்களில் நூல்கள் நனைந்து சேதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக வாசகர்கள் கோரிக்கை வைத்தனர்.அதனைஏற்று எம்.பன்னீர்செல்வம்எம்.எல்.ஏ சட்டசபையில் இதனை வலியுறுத்தி புதிய நூலகம் கட்டிடம் கட்டித் தர முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். முதல் அமைச்சர் உத்தரவின் பேரில் புதிய கட்டிடம் கட்ட ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து 4200 சதுரஅடியில் 2 தளங்களுடன் பல்வேறு வசதியுடன் புதிய மாதிரி நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

    நகர்மன்றதலைவர் துர்காபரமேஸ்வரி தலைமை வகித்தார். பொது–ப்பணித்துறை (கட்டிடம்) உதவி செயற்பொறியாளர் நாகவேல், உதவிபொறியாளர் ஜான்டிரோஸ்ட், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் ராமு, வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முத்துக்குமரன், பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலு, ரோட்டரி சாசன தலைவர் பாலவேலாயுதம், பொறியாளர் சிவகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ 6000 பெற பதிவு செய்தவர்கள் மற்றும் தங்கள் வங்கிக் கணக்கில் மேற்கண்ட நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.
    • தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண் வங்கி கணக்கு எண் நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் (அடங்கல் தேவையில்லை) எடுத்து சென்று பொது சேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ 6000 பெற பதிவு செய்தவர்கள் மற்றும் தங்கள் வங்கிக் கணக்கில் மேற்கண்ட நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.

    தங்கள் பதிவினை புதுப்பித்தல் மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும்.

    புதுப்பிக்க தவறிய வர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும். தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண் வங்கி கணக்கு எண் நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் (அடங்கல் தேவையில்லை) எடுத்து சென்று பொது சேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    வங்கி கணக்குடன் ஆதார் எண் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்கள் தற்பொழுது இணை த்துக்கொ ள்ளலாம்.

    பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ளது. தனியார் பொது சேவை மையங்களிலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மனுதாரர் பெயரில் சிட்டா இருக்க வேண்டும் கூட்டுபட்டாவாகவும் இருக்கலாம்.

    குத்தகை போக்கிய நிலங்கள் பதிவு புதுப்பிக்க இயலாது. மனுதாரர் பதிவை புதுப்பிக்க பொது சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும். ஒருவர் பெயரில் இருப்பதை மற்றவர்கள் புதுப்பிக்க இயலாது.

    கைரேகைவைக்க வேண்டும். இந்த செய்தி யினை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உரிய காலத்திற்குள் பதிவினை புதுப்பித்து நிதி உதவியினை தடங்கலின்றி தொடர்ந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய மந்திரிசபையில் முதல்முறையாக முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாட்டின் தலையெழுத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியும் பொறுப்பும் வாய்ந்த அரசின் முக்கிய துறையாக மத்திய நிதி அமைச்சகம் இருந்து வருகிறது. பல்வேறு மந்திரிகளின்கீழ் வரும் பலதுறைகளுக்கான நிதி நிர்வாகங்கள் அனைத்தையும் கண்காணித்து ஆண்டுதோறும் பாராளுமன்றத்தில் வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்யும் நம் நாட்டின் மத்திய நிதி மந்திரி பதவியை பெரும்பாலும் ஆண்களே ஆக்கிரமித்து வந்துள்ளனர்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1970-71-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரேயொருமுறை இந்த நிதித்துறை இலாகாவை கூடுதல் பொறுப்பாக கவனித்தார். மற்றபடி இதுவரை நிதி அமைச்சகத்துக்கு வேறெந்த பெண்மணியும் மந்திரியாக நியமிக்கப்பட்டதில்லை.

    இந்த குறையை தீர்க்கும் வகையில் மத்திய மந்திரிசபையில் முதல்முறையாக முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த பொறுப்பை ஏற்றதன் மூலம் ஆண்-பெண்ணுக்கு இடையிலான சரிநிகர் சமத்துவத்துக்கான பழைய அளவுகோல்களை எல்லாம் நிர்மலா சீதாராமன் தகர்த்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி இன்று குறிப்பிட்டுள்ளார்.
    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளச்சேதத்துக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் அம்மாநில மந்திரிகளின் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. #Keralafloods #Centredeniespermission #Keralaministers
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத பெருமழையின் எதிரொலியாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் 493 பேர் உயிரிழந்தனர்.

    லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும், தொழிலதிபர்கள், நடிகர்-நடிகைகள், விளையாட்டு உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் நிதியுதவி அளித்தனர்.

    கேரள மக்கள் அதிகமாக பணியாற்றிவரும் வளைகுடா நாடுகளும் பண உதவி செய்ய முன்வந்தன. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 700 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியை அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு மறுத்து விட்டது.



    இதற்கிடையே, வெளிநாடுகளில் வாழும் கேரள மாநிலத்து மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்ட முதல் மந்திரி பினராயி விஜயன் தீர்மானித்தார். இதன்படி, இம்மாதம் 17-ம் தேதி (இன்று) முதல் 21-ம் தேதிவரை அம்மாநிலத்தை சேர்ந்த 17 மந்திரிகள் ஆளுக்கொரு நாடாக சென்று கேரள மக்களிடம் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிடப்பட்டது.

    இதில் ஒரு பகுதியாக முதல் மந்திரி பினராயி விஜயன் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்று புறப்பட்டு செல்வார். 21-ம் தேதி அவர் நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், பினராயி விஜயன் பயணத்துக்கு மட்டும் அனுமதி அளித்த மத்திய அரசு இதர மந்திரிகள் செல்ல அனுமதி மறுத்து விட்டதாக கேரள அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. #Keralafloods #Centredeniespermission #Keralaministers 
    ×