search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Festivel"

    • புதுக்கோட்டையில் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய் உடைத்தார்

    புதுக்கோட்டை,

    விராலிமலை தாலுகா, பேராம்பூர் கிராமத்தில் குதிரைக்கார தங்கையா என்கிற அகோர வீரபத்திரர் சாமி மற்றும் வீர மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தொடர்நது வீர மகாலட்சுமி அம்மனுக்கு கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அகோர வீரபத்திரர் மற்றும் மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து தை பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். அப்போது வீரபத்திரர் கோவில் முன்பு வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காயை உடைத்தார்.பின்னர் பேய் பிசாசு உள்ளிட்ட கெட்ட ஆவிகள் அண்டியிருக்கும் நபர்களை கோவில் முன்பு நிறுத்தி கோவில் பூசாரி அவர்களை சாட்டையில் அடித்து கெட்ட ஆவிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கருப்பர் கோவிலில் கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அறந்தாங்கி வெளுவூர் சவுந்தரநாயகபுரம் கிராமத்தில் ஆடிமாத புரவி எடுப்பு விழா
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அறந்தாங்கி,

    ஆவுடையார்கோவில் தாலுகா வெளுவூர் சவுந்தரநாயகபுரம் கிராமத்தில் உள்ள குன்னமுடைய அய்யனார், காளியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 23ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழா தொடங்கியது முதல் குன்னமுடைய அய்யனார், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை மற்றும் காவடி எடுப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக குதிரை மற்றும் காளை எடுப்பு விழா நடைபெற்றது. சுள்ளணி கிராமத்திலிருந்து மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், காளைகள் மற்றும் மதலை சிலைகளை 3 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் தங்கள் தோள்களிலும், தலையிலும் சுமந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். மழை வளம் வேண்டியும், உலக மக்கள் நலன் வேண்டியும் நடைபெற்ற விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆடித்திருவிழாவை முன்னிட்டு பொம்மனப்பாடி கிராமத்தில் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம்
    • பாலகாட்டு அம்மனுக்கு பக்தர்கள் கூழ்படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அடுத்துள பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள பாலகாட்டு அம்மன் கோவிலில் ஆடிதிருவிழா நடைபெற்றது. கடந்த வியாழன் அன்று வானவேடிக்கையுடன், ஏரியில் குடி அழைத்தல் நிகழ்ச்சியோடு தொடங்கிய விழாவில், வெள்ளி அன்று அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், சிறப்பு மலர் அலங்காரமும் நடைபெற்றது. அப்போது மழை வேண்டிய சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பாலகாட்டு அம்மனுக்கு பக்தர்கள் கூழ்படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இறுதியாக மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று, அம்மன் குடிவிடுதல் நிகழ்ச்சியோடு ஆடி திருவிழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொம்மனப்பாடி கிராம மக்கள் செய்திருந்தனர். 

    • செம்பூதி குன்னத்திக்காட்டு அய்யனார் கோவிலில் ஆடி மாத புரவி எடுப்பு திருவிழா
    • 2 கிமீ தொலைவிற்கு மண் குதிரை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்த ஊர் மக்கள்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதியில் அமைந்துள்ளது குன்னத்திக்காட்டு அய்யனார், நல்ல அய்யனார், வீரமலை அம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களை உள்ளடக்கியதாக கோயிலாகும். இக்கோயில் ஆண்டுதோறும் ஆடிமாத புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இவ்வாண்டும் கடந்த ஆனி மாதம் பிடி மண் கொடுக்கப்பட்டு குதிரைகள் மதிலை சிலைகள்செய்யப்பட்டு ஊர் மந்தையில் வைத்து மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் ஊரின் எல்லைப் பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அய்யனார் கோவிலுக்கு தோளில் சுமந்தவாறு எடுத்துச்சென்று அங்கு வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.இவ்வாறு செய்வதன் மூலமாக மழை பெய்யும், விவசாயம் சிறப்பாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் பெருகும், ஊர் ஒற்றுமை பெருகும் என்பதனை ஐதீகமாக கொண்டு பல தலைமுறைகளாக தொன்று தொட்டு இந்த வழிபாட்டு முறையை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவ்விழாவை ஒட்டி பாதுகாப்பு பணியில் பொன்னமராவதி போலீசார் ஈடுபட்டிருந்தனர் செய்யப்பட்டு நடைபெற்றது.

    • கள்ளழகர் கோவில் ஆடி தேரோட்டம் நாளை நடக்கிறது.
    • முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    அலங்காநல்லூர்

    108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆடித்தேரோட்டம் நாளை (1-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு சுந்தர்ராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளுகிறார். அதன்பின் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    திருத்தேர் புதிய வண்ண அலங்கார திரைச்சீலை அமைத்தல், திருத்தேர் சக்கரங்கள், குதிரை உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதல் பிரேக் ஆகியவை புதுப்பித் தல் பணி மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்றது. மேலும் தேரோட்டத்தை பக்தர்கள் காண ஆங்காங்கே அகன்ற திரைமூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் பாதுகாப்பு வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவில் துணை ஆணையர் இராமசாமி மற்றும் உள்துறை அலு வலர்கள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து பணி களை துரிதப்படுத்தியும், பணியாளர்களுக்கு ஆலோ சனை வழங்கியும் வருகின்ற னர். ஆடி திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆவுடையார்கோவில் அமரடக்கி கிராமத்தில் சந்தனத்தாய் ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்

    அறந்தாங்கி, 

    ஆவுடையார்கோவில் தாலுகா அமரடக்கி கிராமத்தில் உள்ள புனித சந்தனத்தாய் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்டுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் ஆடி மாதம் 5ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி நேற்று நடைபெற்றது. தஞ்சை மறை மாவட்ட, பங்கு தந்தை சகாயராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மைக்கேல், செபஸ்தியார், சந்தியாகப்பர், பழைய சந்தன மாதா, சந்தன மாதா ஆகிய சொரூபங்கள் தாங்கிய, மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது. கிராமத்தின் முக்கிய வீதிகளில் சப்பரங்கள் வலம் வந்த போது ஏராளமான பொதுமக்கள் வணங்கினர். அதன் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை பங்கு பணியாளர் ஜோதி நல்லப்பர் உள்ளிட்ட பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.

    வீரமாகாளியம்மன் கோவில் 2-நாள் தேரோட்டவிழா நடைபெற்றது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய ஆடித்திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மூக்குடி கிராம மக்களால் கண்டெடு க்கப்பட்டு, அறந்தாங்கியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளி யம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்து சமய அறநிலைக்கு சொந்தமான ஆலயத்தில் 29 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 18ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய விழாவில் ஒவ்வொரு நாளும் மண்டக ப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தே ரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தினை ஊர் முக்கியஸ்தர்கள், இந்து சமய அறநிலை யத்துறையினர், கிராம மக்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் தொட்டு இழுத்தனர். திருத்தேரில் அமர்ந்து அருள் பாலித்து வந்த ஸ்ரீ வீரமாகாளியம்மனை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.இரண்டு நாட்கள் நடைபெறுகின்ற திருத்தே ரோட்டத்தில் முதல் கட்டமாக வாஉசி திடலிலிருந்து பெரியகடை வீதி வழியாக காளியம்மன் கோவில் அருகே திருத்தேர் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மாலை காளியம்மன் கோவில் அருகே இருந்து தொடங்கி பெரியப்ப ள்ளிவாசல் வழியாக தேரடியை அடையும்.

    • ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் சுந்நரருக்கு குருபூஜை விழா
    • 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி உடனுறை கழுமலைநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நாயன்மார்களில் நால்வர்களான அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் சுந்தரர் மூர்த்தி குரு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திருவாசகம் பாடல்களை பாடி கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.

    • கல்லாத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    • அம்மனுக்கு ௧௬ வகையான திரவிய பொடிகளில் சிறப்பு அபிஷேகம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக திருவிழாவில் அம்மனுக்கு பால். சந்தனம். திரவிய பொடி. உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கல்லாத்தூர் வண்ணான் ஏரியிலிருந்து கரகம் எடுத்துவரப்பட்டது. வாண வேடிக்கையுடன், மேள, தாளங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக கோயிலை சென்றடைந்தது. அதன் பின்னர் 300- க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வன், ஊர் நாட்டார்கள் குமார், பழனிச்சாமி, இளையராஜா ராஜேந்திரன், பொன்வடிவேல், சுந்தரம் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஒரு மாத காலமாக பூமுடையான் குடியாடு மகாபாரத ஆசிரியர் கொளஞ்சிநாதன் தலைமையில் மகாபாரதம் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. மேலும் 18 மண்டகப் பிடிகள் தினந்தோறும் திரௌபதி அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

    • வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
    • 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் புன்னம் சத்திரம் புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவி ல், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் ஆகிய கோவில்களில் உள்ள கால பைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் ஆடி மாத வளர்பிறை தேய்பிறையை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • பொன்னமராவதி அருகே புரவி எடுப்பு விழா நடைபெற்றது
    • மண் குதிரைகளை பொதுமக்கள் அரண்மனைக்கு சுமந்து சென்றனர்

    பொன்மராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் ஏன்காட்டு அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில்ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஆடி மாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டுகாப்பு கட்டப்பட்டு நாள்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜையும் அபிஷேகங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எட்டாம் நாளான மூலங்குடியில் இருந்து காட்டுப்பட்டி அரண்மனை குதிரை உள்ளிட்ட 10 குதிரைகள், ஏராளமான காளைகள், புறவிகள் சிலைகளுக்கு வேஸ்டி துண்டு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரெ மேளதாள முழக்கத்துடன் வெள்ளையாண்டிப்பட்டி, காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கோவில் திடலில் வைத்து வழிபாடு செய்தனர்.இவ்விழாவையொட்டி காட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டோர் மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

    • பூலாம்பாடி ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமார் கலந்து கொண்டார்

     அரும்பாவூர், 

    பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாக வேள்வியில் 96 வகை மூலிகை திரவிய பொருட்கள் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மஹாபூர்னாஹீதியும் தீபாரதனையும் நடைபெற்றது. இதனையடுத்து மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. மேலும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திரெளபதி அம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமார தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பூலாம்பாடி, கடம்பூர், கள்ளப்பட்டி, உடும்பியம், பெரியம்மாபாளையம் ,தழுதாலை, தொண்ட மாத்திரை, அரும்பாவூர், மேட்டூர், மலையாள பட்டி, சேலம் மாவட்டம் வீரகனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்த விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை தமிழ்ச்செல்வன்,வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு டாக்டர் பிரகதீஷ் குமார் நற்பணி மன்றத்தினர் அன்னதானம் வழங்கினர்பின்னர் மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழாநடைபெற்றது.இதற்காக பக்தர்கள் நல்ல தண்ணீர் குளத்திற்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர். தீமிதிப்பவர்கள் மஞ்சள்ஆடை அணிந்து நீராடி பயபக்தியுடன் அம்மனை வேண்டினர். பின்னர் பக்தர்கள் அருள்வந்து ஆடினர். பம்பை சப்தம் அதிர பக்தர்கள் சாமியாடியபடி கோவில் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.பின்னர் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மத்தியில் தீமிதி திருவிழா நடைபெற்றது.நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீமித்தனர். இந்த நிகழ்வு பூலாம்பாடி பகுதியில் கடந்த காலங்களில் நடந்திராத வகையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள்,டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். இன்று பொங்கல் மாவிளக்கு பூஜையும் இரவு ஏழு வாகனங்களில் ஏழு சுவாமிகள் திருவீதி உலா வான வேடிக்கை ஒயில் கும்மி கோலாட்டம் போன்ற கிராம வேடிக்கையும் நடைபெறுகிறது

    ×