search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fertilizer"

    • விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
    • நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் உழவுப்பணியை துவக்கியுள்ளனர்.பயிர் சாகுபடிக்கு தேவையான, விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், தமிழக முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மற்றும்விதை கிராமத்திட்டத்தின் வாயிலாக வேளாண் இடுபொருட்களான, விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில், மக்காச்சோளம் கோ.எச்.எம்.,8, சோளம், கோ-32, கம்பு, கோ-10, உளுந்து, வம்பன் 8,9, பாசிபயறு, கோ-8, கொண்டைக்கடலை என்.பி.ஜி., -119, 47, நிலக்கடலை - தரணி ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    மேலும் நுண்ணுயிர் உரங்களான, அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம், திட வடிவத்திலும், திரவ நிலையிலும் இருப்புள்ளது.நுண்Èட்ட உரங்களான தானிய வகை, பயறு வகை,பருத்தி வகைநுண்ணுாட்டங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது.தேவைப்படும் விவசாயிகள், சிட்டா, ஆதார் அட்டை நகலுடன் வந்து, மானிய விலையில், விதை,உரங்களை பெற்றுபயனடையலாம்.

    மேலும் தென்னை மரத்திற்குநுண்Èட்டச்சத்து பற்றாக்குறையால் குரும்பை உதிர்வதை தடுக்க நுண்Èட்ட உரம் இடுவதற்கு சரியான தருணமாகும்.ஒரு தென்னை மரத்திற்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை அரைக்கிலோ இட வேண்டும். குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான தென்னை நுண்ணுாட்ட உரமும், போதிய அளவு இருப்பு உள்ளது. இதனையும்,தென்னை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,300 டன் கிரிப்கோ யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் சேலத்துக்கு வந்தது.
    • 4,374 டன் உரம் இருப்பு உள்ளது. என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்.

    சேலம்:

    சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,300 டன் கிரிப்கோ யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் சேலத்துக்கு வந்தது. இந்த உர மூட்டைகள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    அதில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 600 டன் உரமும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 300 டன் உரமும் அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 1,464 டன் யூரியா, டி.ஏ.பி. 916 டன் டி.ஏ.பி., பொட்டாஸ் 364 டன், காம்ளக்ஸ் 1,630 டன் என மொத்தம் 4,374 டன் உரம் இருப்பு உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் உரத்தை பெற்று பயன் அடைய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். 

    • ஆண்டுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாசியம் உரம் கிடைக்கும்.
    • உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விலையை பராமரிக்கவும் இது உதவும்.

    நாடு முழுவதும் உணவு பாதுகாப்புக்காக விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இதற்காக வெளிநாட்டு உர நிறுவனங்களுடன் இந்திய உர நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் ராஷ்டிரிய ரசாயன உர நிறுவனமும், ஜெர்மனியின் கே.பிளஸ்.எஸ்.நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.  இந்த புரிந்துணரவு ஒப்பந்தத்திற்கு ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி பகவந்த் குபா அப்போது உடனிருந்தார்.

    இந்த ஒப்பந்தம், கலப்பு உரங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு எம்.ஓ.பி. உரம் கிடைப்பதை மேம்படுத்தவும் வகை செய்கிறது. உர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளுடன் நீண்டகால நட்புறவுக்கும் வழிவகை செய்கிறது.

    மேலும் உரம் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை நம்பியிருக்கும் இந்தியா, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், நிலையான விலையை பராமரிக்கவும் இது உதவும்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கே.பிளஸ்.எஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாசியம் உரங்களை 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை சப்ளை செய்யும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • பயிர்களுக்குத் தேவையான பேரூட்டச்சத்துக்களில் முக்கியமானது தழைச்சத்து ஆகும்.
    • இவைகளில் குருணை வடிவ யூரியாவே மிக அதிகளவில் உபயோகிக்கும் தழைச்சத்து உரமாகும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்

    பதாவது :-

    பயிர்களுக்குத் தேவையான பேரூட்டச்சத்துக்களில் முக்கியமானது தழைச்சத்து ஆகும். இதனை பொதுவாக யூரியா அல்லது அமோனியாக்கல் வகை உரங்கள் மூலம் பயிர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இவைகளில் குருணை வடிவ யூரியாவே மிக அதிகளவில் உபயோகிக்கும் தழைச்சத்து உரமாகும்.

    இதில் 46 சதவீதம் தழைச்சத்தான நைட்ஜன் உள்ளது. நாம் அதிகளவு செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண்வளம் பாதிப்படைவதோடு, சுற்றுச்சூழல் மாசுபட்டு, உற்பத்தியாகும் உணவுப்பொருளில் நச்சுத்தன்மையும் அதிகரிக்கின்றது. ஆகவே விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் சென்றடைய வேண்டி இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) திரவ வடிவில் நானோ யூரியாவினை விற்பனை செய்து வருகின்றது.

    நானோ யூரியாவானது பயிர்களின் 2 முக்கிய வளர்ச்சி நிலைகளில் இலைவழியாக தெளிப்பதற்கு ஏற்றது. இதன் மிக நுண்ணிய துகள்களானது இலைகளில் உள்ள துவாரங்கள் மற்றும் பிறதிறப்புகளின் வழியாக பயிர்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    இதன் மூலம் தழைச்சத்து பயன்படுத்தாத இலைகளின் வெற்றிடத்தில் சேமிக்கப்பட்டு பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான போது மெதுவாக தழைச்சத்து கிடைக்கச் செய்கிறது. மேலும் 500 மி.லிட்டர் கொண்ட ஒரு நானோ யூரியா பாட்டிலானது 45 கிலோ எடை உள்ள குருணை வடிவ யூரியா மூட்டைக்கு சம்மானதாகும். ஏக்கருக்கு தேவையான 500 மி.லிட்டர் நானோ நைட்ரஜனை 125 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிரின் இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

    1-ம் தெளிப்பு பயிர் வளர்ச்சிப் பருவம் 30-35 நாட்களில் அல்லது கிளைக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். 2-ம் தெளிப்பு பூக்கும் பருவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவோ அல்லது முதல் தெளிப்பிலிருந்து 20-25 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

    இவ்வாஅறு அவர் கூறியுள்ளார்.

    • இயற்கையான உரங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியும் எடுத்து கூறினார்.
    • பொது இ-சேவை மையத்திற்கு ஆதார் எண்ணுடன் நேரடியாக சென்று புதுபித்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே, ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு அங்கக சான்று குறித்த ஒரு நாள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது கூறுகையில் இப்பயிற்சி பயன் படுத்தி அங்கக சான்று பற்றியும் விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது, இயற்க்கையான உரங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியும் எடுத்து கூறினார்.

    மேலும் இப்பகுதியிலுள்ள பிரதம மந்திரியின் கௌரவ நிதி ஆண்டுக்கு ரூ.6000 பெறும் விவசாயிகள் தங்களுடைய பதிவை அருகிலுள்ள பொது இ-சேவை மையத்திற்கு ஆதார் எண்ணுடன் நேரடியாக சென்று புதுபித்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.

    துணை வேளாண்மை அலுவலர் பிரபாகரன், அனைவரையும் வரவேற்றார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி த.அருணஜெடேசன் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை எவ்வாறு சாகுபடி செய்யலாம் என்பது பற்றியும் அதன் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

    இப்பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலை வகித்தார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் அட்மா திட்டங்கள் பற்றியும், உழவன் செயலி பற்றியும் இப்பயிற்சியில் விளக்கி கூறினார்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் மற்றும் மதுமினா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    நிகழ்ச்சி முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • சிறு குறு விவசாயிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, குறுவை சாகுபடி விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • உரம் தெளிப்பதற்கு விவசாயிகள் நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, அணுகி விவசாயிகள் கேட்கும் பொழுது, உரம் வரவில்லை என்ற தகவலை தெரிவிக்கின்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், சிறு குறு விவசாயிகளுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ், இலவச உரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட நிலையிலும், தற்போதைய இயற்கை சூழல், மேலடுக்கு சுழற்சியில் மாற்றம், காரணமாக மழை பொழிந்து வருகிறது. இதனை சிறு குறு விவசாயிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, குறுவை சாகுபடி விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தங்களது நிலத்தை நீர்பாய்ச்சி, உழுது, நிலத்தைப் பண்படுத்தி, நாற்றங்கால் அமைத்து, நாற்று நடும் தருவாயில், அடி உரம், மற்றும் மேலுரம், நாற்றங்கால் சிறப்பாக அமைய உரம் தெளிப்பதற்கு விவசாயிகள் நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, அணுகி விவசாயிகள் கேட்கும் பொழுது, உரம் வரவில்லை என்ற தகவலை தெரிவிக்கின்றனர்.

    அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில், மெத்தனம் காட்டுவதாக, விவசாயிகள் தங்களுடைய கவலைகளையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    எனவே நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு வழங்க கூடிய உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முத்துப்பேட்டை வட்டாரத்தில் 2315 ஏக்கர் பரப்பிற்கு விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் முழு மானியத்தில் உரம் பெற்று பயன்பெறலாம்.
    • ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி.ஏ.பி. 25 கிலோ பொட்டாஷ் உரம் வழங்கப்படுகிறது.

    திருத்துறைபூண்டி:

    திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறி ப்பில் கூறியிருப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில்கடந்த ஆண்டை விட இவ்வருடம் கூடுதல் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு ள்ளது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 3955 ஏக்கர் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 2315 ஏக்கர் பரப்பிற்கு விவசாயிகள் குறுவை தொகுப்புதிட்டத்தில் முழு மானியத்தில் உரம் பெற்று பயன்பெறலாம்.

    ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி 25 கிலோ பொட்டாஷ் உரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தேவை யான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறுவை தொகுப்பு திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படுவதால் விவசாயிகள் உடனடியாக தங்களுக்கு வந்த ஓடிபி நம்பரை தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கிகளில் தெரிவித்து உரத்தினை எடுத்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. காலதாமதம் இன்றி உடனடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருந்து உரத்தினை எடுத்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தியாகதுருகம் பகுதி உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி எச்சரிக்கை விடுத்தாார்.
    • அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பகுதியில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையொட்டி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முறையாக உர உரிமம் பெற்று விற்பனை செய்யப்படுகிறதா? உரம் இருப்புப் பதிவேட்டில் உள்ளவாறு உரக்கடையில் இருப்பு உள்ளதா? மேலும் விற்பனை முனையக் கருவியில் உள்ளவாறு உரங்கள் இருப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் விவசாயிகளுக்கு ரசாயன உரங்களை விற்பனை செய்யும் போது அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் கடைகளுக்கு முன்பாக ரசாயன உரங்களின் விலை பட்டியலை வைக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு, வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்ட ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உரங்களை எம்.எல்.ஏ, வழங்கினார்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள மாரநேரி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்ட ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் தலைமையில் நடைபெற்றது. பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வரவேற்றார்

    நிகழ்ச்சியில் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ, குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பூதலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், வேளாண்மை துணை இயக்குனர் ஈஸ்வர், மாரநேரி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடி நிலுவைத்தொகையை பெற்றுத் தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள விவசாய சங்க கூட்டு இயக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் மற்றும் விவசாயிகள் உர சாக்குகளை சட்டைக்கு மேல் அணிந்து கொண்டும், கையில் கரும்புகளோடும் வந்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் கொடுங்கள் என கூறினர்.இதையடுத்து அவர்கள் தங்களது மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது ;-

    குறுவை சாகுபடி பணிகள் டெல்டா மாவட்டங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால் தற்போது உரத்தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. மேலும் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே உரத்தட்டுப்பாட்டை போக்கி விலையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். மேலும் பருத்தி கொள்முதலை அரசே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. விவசாய சங்க நிர்வாகிகளின் நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விழாவிற்கு விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா குற்றாலத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட துணை செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், இஸ்மாயில், பூசைத்துரை, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் காமாட்சி ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி வேளாண்மை துணை இயக்குனர் தமிழ் மலர், மாவட்ட மத்திய மாநில திட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அதன்படி தென்காசி மாவட்ட சங்கத்தின் புதிய தலைவராக சக்கராஜா, செயலாளராக ராஜகுரு, பொருளாளராக முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    விழாவில் பல்வேறு விவசாய இடுபொருள் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக தமிழ்நாடு விவசாய இடுபொருட்கள் வியாபாரிகள் சங்க நிறுவனர் மறைந்த ரெங்கசாமி உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. துணைத் தலைவர் ஆறுமுகசாமி நன்றி கூறினார்.

    • கும்பகோணம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் உரக்கடைகளில் தரக்கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
    • ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் போது கூடுதலாக மற்ற பொருட்களை விற்பணை செய்வது கண்டறியப்பட்டால் உர உரிமம் நிரந்திரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்ட த்தில் குறுவை சாகுபடித ற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால்உரக்கடை களில்திடீர் ஆய்வுகளை வேளாண்மை அதிகாரிகள் நடத்தினர்.

    வேளாண்மைஇணை இயக்குநர்அ றிவுரைக ளின்படி தஞ்சாவூர் மாவட்டம் முழு வதும் மொத்த விற்பணையா ளர்கள்

    சில்லரை கடைகளில்திடீர் ஆய்வு செய்தனர்.இந்த நிலையில் கும்பகோணம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் உரக்கடைகளில்தரக்கட்டு ப்பாடுகளைஆய்வு செய்த னர்.

    ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் போது கூடுதலாக மற்ற பொருட்களை விற்பணை செய்வது கண்டறியப்பட்டாலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது

    உர உரிமம் நிரந்திரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் தேவிகலாவதி, வேளாண்மை அலுவலர்கள் உள்பட பலர் இருந்தனர்.

    ×