search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "facilities"

    • அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
    • தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் கடந்த 2010-11-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டு 2013-ம் ஆண்டுபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    தற்போதுதஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.

    அதை சீரமைத்து அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்படுவது குறித்து எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் அரங்கத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் நிருபர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், சீரமைக்க நிதி எவ்வளவு குறித்து ஆலோசனை நடத்தபட்டது. உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.

    அதேபோல், தஞ்சையில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணியிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

    அப்போது, தஞ்சை விமான படை தளத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு இடமா ற்றம் செய்வது குறித்து பிரச்சினை இருந்தது. தற்போது இதுகுறித்து, தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்தி ராவிடம் ஆலோசனை நடத்தினோம்.

    அவர் நில மாற்றம் குறித்து இரண்டு அமைச்சகமும், ஏற்றுக்கொண்டால் விரைவில் தீர்க்கப்பட்டு விமான சேவை தொடங்கப்படும் என்றார்.

    மேலும், தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்தவும், கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியா ளர் கார்த்திகேயன், மண்டல குழுத்தலைவர் நீலகண்டன், மாநகர நல அலுவலர் (பொ) அசோகன் ஆகியோர் உடன் உள்ளனர்.

    • தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
    • சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை நிறுவி தமிழர்களின் கட்டிடக்கலையை உலகறிய செய்த சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் "சதய விழா"வாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் விழா மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.

    அதன்படி நாளை தொடங்கும் விழா நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பெரிய கோவிலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது மேயர் சண். ராமநாதன் கூறியதாவது :-

    தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட , இந்த ஆண்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் வந்தாலும் அதற்கேற்றவாறு பல்வேறு வசதிகளை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 3 -ம் தேதி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா காரணமாக தொடர்ந்து 18 வாரங்கள் சந்தை நடக்காத நிலையில் நடப்பாண்டு மீண்டும் உயிர்ப்பெற்று சந்தை நடந்து வருகிறது.
    • தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 1945 முதல் கால்நடைச்சந்தை நடந்து வருகிறது. தென்னம்பாளையத்தில் நடந்து வந்த மாட்டுச்சந்தை தற்போது அமராவதிபாளையத்தில் நடந்து வருகிறது.வாரம் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் சந்தைக்கு ஆயிரம் முதல் 1,500 மாடுகள் கொண்டு வரப்படுகிறது. இவற்றை விலை பேசி வாங்க 2,500 பேர் வருகின்றனர். கேரளாவில் இருந்தும் திருப்பூருக்கு வியாபாரிகள் வருகின்றன்ர. உள்ளூர் வியாபாரிகளை விட, வெளிமாவட்ட, கேரள வியாபாரிகள் நம்பியே சந்தை நடக்கிறது. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4மணி வரை திருவிழா போல சந்தை நடக்கிறது. குறைந்தபட்ச விலை 3,000 ரூபாய் துவங்கி, அதிகபட்சம், 55 ஆயிரம் வரை மாடுகள் விலை போகிறது. காங்கயம் காளைகள் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படும்.

    சந்தைக்கு 800 முதல் ஆயிரம் கால்நடைகள் கொண்டு வரப்படுவதால் குறைந்தபட்சம் 80 லட்சம் முதல் 1.50 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது. கடந்த 2019ல் 50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. கொரோனா காரணமாக தொடர்ந்து 18 வாரங்கள் சந்தை நடக்காத நிலையில் நடப்பாண்டு மீண்டும் உயிர்ப்பெற்று சந்தை நடந்து வருகிறது.

    அரை நூற்றாண்டு கடந்தும் செயல்பட்டு வரும் இச்சந்தைக்கு பல்வேறு மாநிலத்தவர் வந்து செல்ல தேவையான அனுமதி, போக்குவரத்து வசதி அமைந்தால், திருப்பூரில் கால்நடை வணிகம் மேலும் சிறக்கும். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    கால்நடை விலை நிர்ணயத்துக்கு குழுவெல்லாம் கிடையாது. விவசாயி - வியாபாரி அல்லது இரு வியாபரிகள் இடையே நடக்கும் ஒரு நிமிடம் பேரம் மட்டுமே விலை. படிந்து விட்டால் விலையை கொடுத்து மாட்டை கயிறுடன் அவிழ்த்து லாரியில் ஏற்றிவிடுவார்கள். சுவராசியமான வாக்குவாதங்களும் நடக்கும். 50 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை சர்வசாதாரணமாக சட்டை, டவுசர் பாக்கெட்டில் வியாபாரிகள் பணம் வைத்திருப்பார்கள்.   

    • பணி பாதுகாப்பு ஆணையை வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • உணவு பாதுகாப்பு அலுவலகங்களுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சென்னை பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவ–மனையில் உள்ள அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியனை நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ நாகைமாலியுடன் தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் மு.சி.முருகேசன், பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன், பொருளாளர் ஜான்சிம்சன், மாநில நிர்வாகிகள் ஸ்டாலின் ராசரத்தினம், ஏ.முத்துராஜா, இரா.வேலவன், ஜெ.ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

    அப்போது, கடந்த ஆட்சியின் அதிகார மையம் எதிர்பார்த்ததை நிறைவேற்றாததால் 11 ஆண்டுகளாக பழிவாங்கும் வகையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பணிப் பாதுகாப்பு ஆணையை வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் உறுதியளித்தபடி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலகங்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    சமூக நீதியான இட ஒதுக்கீட்டையும், முதுநிலை பட்டியலின்படியும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமலும் சம வாய்ப்பு மறுக்கப்பட்டும் கடந்த ஆட்சியின் அதிகார மையத்திற்கு வேண்டியவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு, இப்போதும் தொடர்ந்து வரும் மாவட்ட நியமன அலுவலர்கள் பணிக்கான பணி விதியை உடன் உருவாக்கி, அதில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளில் தகுதிகளின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வழியாக நிரப்பிட உரிய சதவிகிதம் ஒதுக்கி மாவட்ட நியமன அலுவலர்களுக்கான பணிவிதி வெளியிட வேண்டும்.

    இந்திய அளவில் உணவு பாதுகாப்பில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திட காரணமான உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட வேண்டியுள்ள சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், இவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டது. பரிசீலனை செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    • கோடியக்கரை- வேதாரண்யம் சாலையில் ஒரு கி.மீட்டர் தூரம் சாலை மேம்படுத்தம் பணி நடைபெற்றது.
    • ரூ.4 கோடியே 50 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல், வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடியே 30 லட்சத்தில் சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலை யை பலப்படுத்தும்பணி நடைபெற்றது.

    இத்திட்ட த்தின் கீழ் வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் ஆதனூரில் 2 கிலோ மீட்டரும், கோடியக்கரை- வேதாரண்யம் சாலையில் ஒரு கி.மீட்டர் தூரமும் சாலையை மேம்படுத்தம் பணி நடைபெற்றது.

    இப்பணியை வேதாரண்யம் உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் மதன், சாலை ஆய்வாளர் கவிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் முதல் கோடியக்கரை வரை சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம் உட்கோட்டத்தில் ரூ.4 கோடியே 50 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல், வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

    முதற்கட்டமாக ரூ. 2 கோடி 30 லட்சத்தில் 3 கி.மீட்டர் தூரத்தில் தார் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்றுள்ளன.

    • நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தங்குமிடம், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதாரண்யம் தாலுகா கோடியக்க ரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    இக்காலத்தில் நாகை, காரைக்கால், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடித்து அண்டைய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவுக்கு மினி வேன்களில் விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள்.

    நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும்.

    இந்த ஆண்டு முன்கூ ட்டியே மீன்பிடி சீசன் காலம் தொடங்கியதால் வானகிரி, சின்ன மேடு, பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சாமாத்தான்பேட்டை, காரை க்கால், மடவாய்மேடு, அக்கம்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட படகுகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.

    மீனவர்கள் வருகையால் களை இழந்து காணப்பட்ட கோடியக்கரை மீன் பிடிதளம் தற்போது சுறுசுறுப்பாக காணப்படுகிறது.

    வெளியூ ரிலிருந்து வந்து தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தங்குமிடம், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கோடி யக்கரை மீனவர்நல சங்க முன்னாள் செயலா ளர் சித்திரவேல் கூறியதாவது:-

    நடப்பாண்டு முன் கூட்டியே மீன்பிடி சீசன் தொடங்கியதால் அதிகளவில் வெளியூர் படகுகள் வந்துள்ளன.

    வெளியூரிலிருந்து வரும் மீனவ குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளும் கிராமத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    இந்தாண்டு மீன்பிடி சீசன் நன்றாக இருக்கும் என்றும் சுமார் ரூ. 200 கோடிக்கு மீன் வர்த்தகம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சான்றிதழ் கிடைக்க பெற்றதால் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவை மத்திய அரசு வழங்கும்.
    • 350 படுக்கை வசதிகள் உள்ளதால், சுமார் ரூ.35 லட்சம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மாவ ட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இதற்கான சான்றிதழை மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயகுமார், லக்ஷயா மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்த சான்றிதழ் கிடைக்கப் பெற்றதால் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவை மத்திய அரசு வழங்கும்.

    அதன் அடிப்படையில் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 350 படுக்கை வசதிகள் உள்ளதால், சுமார் ரூ.35 லட்சம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அதுபோல் மகப்பேறு அறுவை சிகிச்சை அறைகளை சிறந்த முறையில் பராமரித்ததற்காக நடத்தப்பட்ட லக்ஷயா ஆய்வின் மூலம் பெறப்பட்ட சான்றிதழ் அடிப்படையில் ஆண்டுதோறும் சுமார் ரூ.5 லட்சம் சிறப்பு நிதி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • கீழக்கரையில் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வீரகுல தமிழர் படை நகர அமைப்பாளர் கீழை பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

    கீழக்கரை

    கீழக்கரையில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் பாஷித் அலி தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கீழக்கரை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், சுகாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், தெரு விளக்குகள் இருந்தும் மின் விளக்குகள் எரியாததை கண்டித்தும், கீழக்கரை மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வீரகுல தமிழர் படை நகர அமைப்பாளர் கீழை பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச் செயலாளர் தாரிக், பொருளாளர் ஹபீப், ம.ஜ.க. இப்ராஹிம், எஸ்.டி.பி.ஐ. மேற்கு நகர தலைவர் அசரப், தொகுதி செயற்குழு உறுப்பினர் சாதிக்அலி, மக்கள் செய்தி தொடர்பாளர் சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • சேலம் 29-வது வார்டு பகுதியில் மேயர், ஆணையாளர் ஆய்வு செய்தனர்.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் வார்டு எண்.29-ல் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ரத்தினசாமிபுரம், நாராயணசாமிபுரம், அரிசிப்பாளையம், தம்மண்ணன் ரோடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    அப்போது சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுது ஏற்பட்டு உள்ளதையும், போர்வெல் பழுது ஏற்பட்டு இருப்பதையும் ஆய்வு செய்த மேயர் உடனடியாக பழுதுகளை நிவர்த்தி செய்து அந்த பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கிடவும், பழைய குடிநீர் குழாய்களை அகற்றி புதிதாக அமைக்கவும் உத்தரவிட்டார்.

    மேலும் சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைத்திடவும், ஏற்கனவே உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரி கழிவுநீர் முறையாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறுவுறுத்தினார்.

    சிலபகுதிகளில் குப்பை தொட்டிகளை வைத்திடவும், மாநகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்திட வேண்டும் 

    • சேலம் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.
    • சென்னை வருவாய் நிர்வாக ஆணையரான கூடுதல் தலைமை செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் அரசு கலை கல்லூரி 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் இந்த கல்லூரி சேலத்தின் அடையாள சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    இந்த கல்லூரியில் கழிப்பிட வசதிகள், குடிநீர், சாக்கடை வசதி , பழுதடைந்த மின் விளக்குகள், மற்றும் கட்டிடங்கள் குறித்தும், புதிய பாடப்பிரிவுகள், கட்டிடங்கள், பேராசிரியர்கள் பணியமைப்பு ஆகியவைகள் குறித்து சேலம் மாவட்ட கலெக்டரின் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் குழு அமைத்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் புவனேஸ்வரி என்பவர் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அதன் அடிப்படையில் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலகம் சேலம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே தொடர்புடைய அலுவலர்களை ஒருங்கிணைத்து கூட்டாய்வு மேற்கொள்வதுடன் அந்தந்த துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன் அறிக்கையினை சமர்பிக்குமாறு சேலம் மாவட்ட கலெக்டருக்கு சென்னை வருவாய் நிர்வாக ஆணையரான கூடுதல் தலைமை செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • உள்ளூர் பயணிகள் உட்பட பல்வேறு ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
    • பாடல்கள் ஒளிபரப்ப ஒவ்வொரு பெட்டியிலும் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் எக்ஸ்பிரஸ், உள்ளூர் பயணிகள் உட்பட பல்வேறு ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதில் ஈரோடு - கோவை மற்றும் ஈரோடு - பாலக்காடு, சேலம் - கோவை வரை இயக்கப்பட்ட மெமு ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.இதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து, கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ஈரோடு - கோவை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவையை துவங்கியது.

    தற்போது விடப்பட்டுள்ள அதி நவீன மெமு ரெயிலில் கழிவறை, சீட் அமைப்புகள் வசதியாகவும், அனைத்து பெட்டிகளிலும் அதி நவீன கண்காணிப்பு கேமரா ஒவ்வொரு பெட்டியிலும் 4 வீதம் அனைத்து பெட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதோடு, ரெயிலில் நடக்கும் விரும்பத்தகாத செயல்களும் குறைந்துள்ளது‌.மேலும் கேமரா பொருத்தப் பட்டுள்ளதால் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகள் இதன் மூலம் கண்டுபிடிக்க உதவி கரமாக இருந்து வருகிறது.பயணிகள் ரெயிலில் கண்காணிப்பு கேமரா மட்டுமின்றி, அடுத்து வரும் ெரயில் நிலையம் பற்றி டிஜிட்டல் அறிவிப்பு பலகை,பாடல்கள் ஒளிபரப்ப ஒவ்வொரு பெட்டியிலும் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்த வசதி செய்து தர வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.
    • ரூ.80 லட்சம் மதிப்பில் 32 படகுகள் வாங்கி உள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:-

    போஸ் ( அனைத்து விசை படகுகள் சங்க தலைவர்):- ரூ.8 லட்சம் சொந்த பணம் செலுத்தி மத்திய-மாநில அரசுகளின் மானியத்துடன் ரூ.80 லட்சம் மதிப்பில் 32 படகுகள் வாங்கி உள்ளோம். அவற்றை நிறுத்த துறைமுகம் இல்லை. பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் படகுகளுக்கு பாதுகாப்பு இல்லை.

    இதனால் ஆழ்கடல் படகு வாங்க விண்ணப்பித்த பலர் வேண்டாம் என எழுதி கொடுத்துள்ளனர். ஆழ்கடல் படகுக்குரிய வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். முதலீட்டை திரும்ப தரவேண்டும்.

    கருணாமூர்த்தி (கடல் தொழிலாளர் சங்கம்):- கடல்பாசி சேகரிக்கும் செல்லும் பெண்களுக்கு வனத்துறையினர் பாது காப்பு என்ற பெயரில் நெருக்கடி தருகின்றனர்.

    27 தீவுகளில் கடல்பாசி எடுக்க உரிமம் வழங்க வேண்டும். நல்ல தண்ணி தீவு கோவில்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். விசைப்படகினர் ஆழ்கடலில் மீன் பிடிக்காமல் கரையோரங்களில் மீன்பிடிப்பதால் நாட்டு படகு மீனவர்கள் பாதிக்கப்ப டுகின்றனர். இதனால் 130 கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தேவதாஸ் (மீனவர் விசைப்படகு சங்க செய லாளர், ராமேசுவரம்):- உயிரை பணயம் வைத்து மீன்பிடிக்கிறோம். அதற்கு ரிய விலை கிடைக்கவில்லை. 800 விசைப்படகுகள், 3000 நாட்டுப்படகுகள் உள்ளன. 1500 லிட்டர் டீசல் மானியம் போதுமானதாக இல்லை, அதை உயர்த்த வேண்டும். சேமிப்பு நிவாரணத்துடன் மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    ரெஜிஸ் (தங்கச்சி மடம்):-ஆழ்கடல் படகை ரூ.80 லட்சம் கொடுத்து வாங்கவும், பயன்படுத்தவும் ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளோம். படகுகளை நிறுத்த முடியவில்லை. தூண்டில் வலை இல்லை. கேரளா, நாகர்கோவில் பகுதிகளில் நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளோம். இதைத்தொ டர்ந்து சில மீனவர்கள் எலி மருந்தை சாப்பிட்டு சாகப்போகிறோம் என்று தெரிவித்து எலி 'பேஸ்ட்' பாக்கெட்டை காண்பித்தனர்.

    உடனே உதவி இயக்குனர் கோபிநாத், விரைந்து சென்று அவர்களிடமிருந்து அதனை பறித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

    மேலும் மீனவர்கள் பேசும்போது, மூக்கையூர் துறைமுகத்தில் டீசல் பம்ப் நிலையம் திறக்க வேண்டும். மடிவேலை பார்க்கும் மையம் இல்லாததால் தூத்துக்குடி செல்ல வேண்டியுள்ளது. பெண்களின் பாதுகாப்பி ற்காக மூக்கையூர் கடற்கரை பகுதியில் போலீஸ் சோதனை சாவடி அமைக்க வேண்டும். மீனவர்களின் குழந்தைகளுக்குரிய கல்வி உதவி தொகை தரவில்லை. பாசி எடுக்க செல்லும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றனர்.

    மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் பேசும்போது, மீனவர்கள் தெரிவித்த குறை கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

    கூட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் கோபிநாத், சிவராமசந்திரன், அப்துல் கலாம் ஜெயிலானி, மரைன் கூடுதல் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உள்பட மீன்வளத்துறை அதிகாரி கள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×