search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Face Pack"

    • சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
    • சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.

    சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். வறட்சியை தவிர்த்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்...

     மஞ்சள் சாமந்திப்பூ:

    சாமந்திப்பூவில் இயற்கையான பிளேவனாய்டுகள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய எண்ணெய்கள் உள்ளன. சாமந்திப்பூவின் இதழ்களை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக்கொள்ளவும். அதை சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

     சீமை சாமந்திப்பூ:

    சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கின்றன. சீமை சாமந்திப்பூவை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி, குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். சீமை சாமந்திப்பூ உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.

     பப்பாளி:

    பப்பாளியில் வைட்டமின் 'ஏ' சத்து அதிக அளவில் உள்ளது. இது சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தை ஸ்கிரப்பராக சருமத்துக்கு பயன்படுத்தலாம். பப்பாளிப் பழத்தை கூழாக அரைத்து சருமத்தில் பூசி வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

     கற்றாழை:

    சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சரும வறட்சியைத் தடுத்து இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கும். தூங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை சருமத்தில் பூசிக்கொள்வது சருமப் பொலிவை மேம்படுத்தும்.

     வாழைப்பழம் மற்றும் தேன்:

    வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து பசை போல கலந்து சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணில் கழுவவும். இந்த சிகிச்சை முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

     பார்லி:

    பார்லி மாவுடன் மஞ்சள்தூள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து சருமத்தில் பூசவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் வறட்சியை நீக்கி சருமத்தை பொலிவோடும், மென்மையாகவும் மாற்றும்.

     சந்தனம்:

    சந்தனம் இயற்கையாகவே எண்ணெய்ப்பசை கொண்டது. இதை ரோஜா பன்னீருடன் சேர்த்து பசை போல தயாரித்து சருமத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கும். சருமம் பளபளப்பாகும்.

     மூலிகைத் தேநீர்:

    சீரகம், தனியா விதைகள் மற்றும் சோம்பு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஆறவைத்து அந்த தண்ணீரை சருமத்தில் பூசவும். இது சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

    • உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.
    • வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசினால் கரும்புள்ளிகள் மறையும்.

    * வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

    * பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

    * தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

    * கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

    * தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

    * முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

    * முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

    * ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

    * கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

    * உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

    * எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

    * வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

    * முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

    * முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

    * வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

     * சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

    * தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

    • முகத்தின் அழகினை கெடுப்பது கருவளையங்கள்.
    • இரவு முழுவதும் முகத்தில் வைக்க வேண்டும்.

    கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான். முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க இந்த ஒரே ஒரு கிரீம் மட்டும் போதும். இந்த நைட் கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 1

    பாதம் பொடி - 1 ஸ்பூன்

    கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

    தயாரிக்கும் முறை:

    * முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி இதனை நன்கு துருவி கொள்ள வேண்டும்.

    * பின்னர் துருவிய உருளை கிழங்கை வடிகட்டி கொண்டு அதன் சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * உருளைக்கிழங்கு சாறை ஒரு சின்ன பவுலில் சேர்த்து அதில் பாதம் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்தால் கிரீம் ரெடி.

     பயன்படுத்தும் முறை:

    முதலில், தினமும் இரவில் முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னர் தயார் செய்து வைத்துள்ள நைட் கிரீமை முகத்தில் தடவ வேண்டும். அப்படியே இரவு முழுவதும் முகத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் முகத்தில் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மறைந்துவிடும்.

    • சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
    • ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது. வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

     க்ளென்சிங்

    ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும். தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.

     ஸ்கிரப்

    க்ளென்சிங் செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் ஸ்கிரப் செய்யவேண்டும். அதற்கு, பொடித்த சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல ஸ்கிரப் செய்யவும். கவனிக்க... சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து ஸ்கிரப் செய்யலாம். ஸ்கிரப் செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும்.

     மசாஜ்

    கடைகளில் ஃபேஷியல் க்ரீம் வாங்கிக்கொள்ளவும். அல்லது, இயற்கையான பொருளைக் கொண்டு செய்வதென்றால் நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். க்ரீம்/பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும்.

    தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும். கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும்.

     ஃபேஸ் பேக்

    மசாஜ் செய்த பின் முகத்தில் ஊடுருவக்கூடிய காட்டன் துணியான காஸ் (gauze) போடவும். அதன் மேல் பேக் போட வேண்டும். பேக் ரெடி செய்ய, நல்ல பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் தூய்மையான தேன் ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை, முகத்தில் போடப்பட்டிருக்கும் காஸ் மீது அப்ளை செய்து கொள்ளவும்.

    முகம் முழுவதும் அப்ளை செய்த பின் அதன் மீது சில்வர் ஃபாயில் கொண்டு மூடிவிடவும், 10 நிமிடங்களுக்கு இந்த சில்வர் ஃபாயிலை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் காஸ் துணியை நீக்கவும். முகத்தை துடைத்துக் கொள்ளவும். பின் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். முகம் அவ்வளவு மென்மையாக, பளிச்சென்று ஆனதை உணர்வீர்கள்.

    • முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும்.
    • வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும்.

    முகத்தில் சுருக்கங்கள் தோன்றும் என்பதுடன், முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும். இப்படியாகத்தான் வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும். இத்துடன், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், மாசு போன்ற காரணங்களும் சேரும்போது, 'ஏஜிங்' விரைவுபடுத்தப்படுகிறது. வயதாகும் தோற்றத்தை தள்ளிப்போடுவதற்கான இயற்கையான அழகுப் பராமரிப்பு வழிகளை பார்க்கலாம்.

     1. விளக்கெண்ணெய், சருமப் பிரச்சினைக்கான சிறப்பான தீர்வைக் கொடுக்கவல்லது. தினமும் இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர, சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

     2. வாரம் ஒருமுறை, சில அன்னாசிப் பழத்துண்டுகளை அரைத்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ, அதில் உள்ள புரொமிலைன் என்சைம் இறந்த செல்களை நீக்கி இளமைக்கான பளபளப்பை சருமத்துக்குத் தரும்.

     3. உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட். வயதாவதால் முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறப்புள்ளிகள் தென்படலாம். அதை நீக்கி சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது பேஸ்ட் முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம்.

    4. கரும்புச்சாறுடன் மஞ்சளைக் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்துக்கு பேக் மாதிரி போட்டு வர, முதுமைத்தோற்றம் எளிதில் அண்டாது. கண்களின் கீழ் தோன்றும் கருவளையத்தை நீக்கவும், அந்த இடத்தில் சருமம் தளர்வதைத் தடுக்கவும் அங்கு தேனை தடவி வரலாம்.

    5. காய்ச்சி ஆறிய பாலுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து இரவு உறங்கச்செல்லும் முன் நெற்றி, கண்களின் ஓரம் என முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர, சுருக்கங்கள் மறையும்.

     6. கடலை மாவு, தேன் மற்றும் பால் கலந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்கி இளமைத் தோற்றம் தரும்.

    7. நல்லெண்ணய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து, இரவு முகத்தில் தேய்த்து ஊறவைத்து, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தின் ஈரப்பதம் மீட்கப்படும், வறட்சியும் தொய்வும் தவிர்க்கப்படும். இதேபோல ஆலிவ் ஆயிலையும் இரவில் முகத்தில் தடவி காலையில் கழுவலாம்.

    8. உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, சரும பளபளப்புக்கான சுலபமான வழி. அது இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும்.

     9. கேரட், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள, அது வயதானாலும் முதுமையைத் தள்ளிவைக்கும்.

    10. தக்காளியில் அதிகளவு ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது. தக்காளிச் சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகம், கழுத்து, கை, கால் என அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதைத்தொடர்ந்து செய்துவர, உங்கள் வயதை எப்போதும் 5, 10 வருடங்கள் குறைத்தே மதிப்பிட வைக்கலாம்.

    • டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.
    • தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

    நாம் அதிகமாக வெளியில் சூரிய ஒளியில் பயணிக்கும்போது நமது முகம், கை மற்றும் கால்களில் டேன் ஏற்படுவது சகஜம். பொதுவாக வெளியில் வேலை செய்பவர்களுக்கு இது சிரமமானதாக கூட இருக்கலாம். வீட்டிலேயே இந்த டானை எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

    சருமப் பராமரிப்பு என்றாலே முகத்தை ஆரோக்கியமாகவும் பளிச்செனவும் வைத்துக் கொள்வது முக்கியம். நம்முடைய முகம், கை மற்றும் கால்களின் ஒரு சில பகுதிகளில் மட்டும் சருமம் அதிக கருமையுடன் டேனாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.

    நம் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தக்காளி. தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளதால் இது இயற்கையான சன் ஸ்கிரீனாக நமது சருமத்தில் செயல்படுகிறது. மேலும் வயதானது போல தோற்றத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    கடலைமாவு

    தேங்காய் எண்ணெய்

    கஸ்தூரி மஞ்சள்

    தயிர்

    தக்காளி சாறு

    எலுமிச்சை சாறு

    செய்முறை:

    ஒரு பவுலில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து இதில் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி ஃபேஸ் பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இதை நீங்கள் குளிக்கச் செல்வதற்கு முன் இந்த கலவையை உங்கள் முகம், கழுத்து, கைகளில் தடவி குறைந்தது 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும், அதன்பிறகு மிதமான நீரில் கழுவலாம்.

    இந்த பேஸ்டை தொடர்ந்து வாரத்திற்கு 2 தடவை பயன்படுத்தி வர முகம், கழுத்து, கைகளில் உள்ள கருமை நிறம் நீங்கி பளபளப்பாகும். தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

    • முக அழகை மேம்படுத்த உதவுகின்றன.
    • பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம்.

    ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, கிரான்பெர்ரி என பல்வேறு வகைகளில் இருக்கும் பெர்ரி பழங்கள், உடல் ஆரோக்கியயத்தை பாதுகாப்பதோடு, முக அழகையும் மேம்படுத்த உதவுகின்றன. இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சரும பிரச்சினைகளை போக்கி, முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

    வீட்டிலேயே பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இதோ..

    ஃபேஸ்பேக், தேன் பேஸ்பேக்:

    முதலில் பெர்ரி பழங்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும், அந்த கூழுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இது சருமத்தை சுத்தம் செய்து, சருமம் பளபளப்பாக இருக்க உதவும்.

    பெர்ரி, ரோஸ் வாட்டர் பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைகழுவவும். இந்த ஃபேஸ்பேக், திறந்திருக்கும் சருமத் துளைகளை இறுகச்செய்து, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.

    பெர்ரி, எலுமிச்சை பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பசைபோல தயாரிக்கவும். இதை முகத் தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால், முகத்தில் இயற்கையான பொலிவு மற்றும் பளபளப்பு உண்டாகும்.

    பெர்ரி அரிசி மாவு பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு தயிர், அரிசி மாவு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும், இந்த ஃபேஸ்பேக் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

    பெர்ரி, ஓட்ஸ் ஃபேஸ்பேக்:

    பழக்கூழுடன், 2 டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து அரைக்கவும். அதனுடன் மண்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல தயாரிக்கவும். பின்பு அதை முகத்தில் தடவி 10 முதல் 12 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

    பெர்ரி, தேங்காய் எண்ணெய் ஸ்கிரப்:

    பெர்ரி பழங்களுடன், அரை டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும், இந்த ஸ்கிரப் முகப்பரு, வடுக்கள் மற்றும் கறைகளை விரைவாக அகற்ற உதயும்.

    • வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள்.
    • தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன.

    தேன் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இது சருமத்திற்கு ஊட்டம் அளித்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரசாயனமில்லாத மேக்கப்புக்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டி ஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தை பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தயிர், தேன் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து சுத்தமான முகத்தில் தடவும். பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தயிர் சருமத்தின் வறட்சியை போக்குவது மட்டுமின்றி அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோ பயாடிக்குகள் வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தடுக்கும், தேன் முகம் மிருதுவாக இருப்பதற்கும் மற்றும் ஈரப்பதத்தை அளிப்பதற்கும் வழங்குகிறது.

    சமையல் அறையில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம். வீட்டில் உள்ள ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவைத்தரும். ஒரு டீஸ்பூன் ஓட்சை மிக்சியில் அரைத்து அதில் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி கைகளால் மென்மையாக தேய்க்கவும் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும் இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் போதுமானது.

    தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய்யை சுத்தம் செய்து புதிய பொலிவைத்தரும். அதேசமயம் தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

    முட்டையின் வெள்ளைக்கரு ஒரு டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், கற்றாழை ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அடித்துக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த மாஸ்கை முகத்தில் பூசுவதால் வறண்ட தன்மை நீங்கி முகத்துக்கு பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறட்சி தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

    ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவலாம் முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும் சிறந்த டோனராகவும் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற இந்த பேக் உதவி செய்யும்.

    • பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம்.
    • சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள்.

    வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.

    ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.

    பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.

    பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.

    மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.

    சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்: வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.

    சருமத்திற்கான மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.

    சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்: சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.

    • இது உங்கள் சருமத்தை குளிர்விக்க செய்கிறது.
    • சருமத்தை நன்கு சுத்தம் செய்ய தினமும் ஒரு முறை செய்யவும்.

    உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி விட்டாலே நம் முகத்திற்கு தனி பொலிவு ஏற்பட்டுவிடும். முகத்தை அழகுபடுத்தும் ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதனங்களை விட்டுவிட்டு மோர், தயிர் இவற்றை கொண்டு நம் முகத்தை மசாஜ் செய்து கொள்ளலாம். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கும். சருமத்தை மென்மையாகவும் மாற்றும்.

    மோர் இது சருமத்திற்கு சிறந்த க்ளென்சராக செயல்படுகிறது. இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த பயன்படுகிறது. இதன் லாக்டிக் அமிலம் உங்கள் சருமத்தின் உள் துளைகளில் பதிக்கப்பட்டிருக்கும் அழுக்கு, தூசி, அழுக்கு மற்றும் சகதி ஆகியவற்றை வெளியேற்றுகிறது. மோரில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தை இறுக்கமாக்கவும், வயதை குறைக்கவும் உதவுகிறது. சருமத்தை வெண்மையாக்க மோர் பயன்படுத்துவது எப்படி என்பதை விவாதிக்க இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    பல தோல் பிரச்சனைகளுக்கு எதிராக மோர் ஒரு சிறந்த தீர்வாக இருப்பதற்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்று, அதில் இயற்கையான ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் அல்லது AHA கள் இருப்பதுதான். இந்த மூலப்பொருள் உங்கள் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் இறந்த சருமத்தின் மேல் அடுக்கை நீக்கி முகப்பருவை தடுக்கிறது. உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தில் இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது, தற்போதுள்ள வடுக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் முற்றிலும் தெளிவான மற்றும் களங்கமற்ற சருமத்தை வழங்குகிறது.

    நீங்கள் நீண்ட நேரம் வெயிலில் இருந்தால், ஒரு கிளாஸ் மோர் எடுத்து உங்கள் வெயிலில் எரிந்த சருமத்திற்கு சிகிச்சையளிக்கவும். இது உங்கள் சருமத்தை குளிர்விக்க செய்கிறது.

    கடலை மாவு, மஞ்சள், சந்தனப் பொடி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஆரஞ்சு தோல் பொடியுடன் போதுமான அளவு மோர் கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் போட்டு குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு அதை வைத்திருங்கள். உங்கள் தோல் இறுக்கமாக உணருவீர்கள்(இயற்கையாகவே, முகமூடி காய்ந்து வருவதால்). ஒரு மாதத்திற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த பேக்கை திரும்பத் திரும்ப போட்டு, உங்களை இளமையாக வைத்துக் கொள்ளுங்கள்.

    2 டீஸ்பூன் உலர் ஆரஞ்சு தோல் பொடியை எடுத்து, தேவையான அளவு மோர் சேர்த்து மிருதுவான பேஸ்ட் செய்து கொள்ளவும். அதை தோலில் தடவி வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் அதை ஸ்க்ரப் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால், பிடிவாதமான புள்ளிகள் மற்றும் புள்ளிகள் குறையும்.

    அரை டீஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து சம அளவு ரோஸ் வாட்டருடன் கலக்கவும். அதில் சில துளிகள் பாதாம் எண்ணெயைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். ஒரு காட்டன் பந்தைக் கொண்டு, இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். சருமத்தை நன்கு சுத்தம் செய்ய தினமும் ஒரு முறை செய்யவும்.

    இந்த மோர் மற்றும் ரோஸ் வாட்டர் கலவையானது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் அசுத்தங்களின் ஒவ்வொரு தடயத்தையும் அகற்ற உதவுகிறது. கூடுதலாக, இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    • வெண்ணையில் மிக அதிக அளவில்வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
    • உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பினைத் தரும்.

    வெண்ணையில் மிக அதிக அளவில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்து உள்ளதால் இது உங்கள் சருமத்தினை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மற்றும் ஒளிரும் தன்மையுடையதாகவும் மாற்றும் பண்பினை கொண்டுள்ளது.

    பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் கலந்து கிரீம் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிரீமை முகம் முழுவதும் தடவி அப்ளை செய்து பின் துடைத்து எடுத்தால் ஆரம்பத்தில் முகத்தில் எண்ணெய் ஒட்டிக் கொண்டிருப்பது போல தோன்றினாலும், சிறிது நேரத்தில் நல்ல ரிசல்ட் தெரியும். வாரம் இரண்டு முறை இதை செய்யலாம்.

    ஒரு கப் தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வறண்ட சருமத்தினர் இதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவி, உலர விட்டு கழுவினால் மெத்தென்று மிருதுவாக ஈரப்பதத்துடன் உங்களுடைய சருமம் நீடிக்கும்.

    ஒரு வாழைப்பழம் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெயை மிக்ஸியில் போட்டு அரைத்து அந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் அலசுங்கள். இந்த மாஸ்கினை கழுவிய பின்பு முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பினைத் தரும்.

    ஒரு தேக்கரண்டியளவு ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து காட்டன் பஞ்சினை எடுத்து அதில் நனைத்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவி மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம். ரோஸ் வாட்டர் மற்றும் வெண்ணெய் இரண்டும் கலந்த கலவை உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி புதுப்பிக்கிறது. அத்துடன் ரோஸ் வாட்டர் சருமத்தினை நீரேற்றமாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் வைக்க உதவுகிறது.

    இவற்றுள் எது உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றோ அதனைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

    • வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும்.
    • வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    நாம் ஒவ்வொருவரும் அழகாக இருக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். அந்த வகையில், இயற்கை நமக்கு பல்வேறு தீர்வுகளையும் வழிகளையும் கொடுக்கிறது. அத்தகைய ஒரு தீர்வு வேம்பு. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். வேம்பு உங்கள் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதோடு, தெளிவான மற்றும் பொலிவான சருமத்தையும் உங்களுக்கு கொடுக்கிறது. வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு வேம்பு ஃபேஸ்பேக் பயன்படுத்துவது இயற்கையான சிறந்த வழியாகும். வேப்பம்பூ ஃபேஸ்பேக்கை வழக்கமாகப் பயன்படுத்துவது சரும வீக்கத்தைக் குறைக்கவும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.

    வேப்பம்பூ அல்லது வேப்பம் இலைகளை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது தேன் போன்ற கேரியர் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டாகவும் தயாரித்து முகப்பரு உள்ள இடத்தில் இந்த பேஸ்ட்டை போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதை அடிக்கடி போட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை நீங்கள் பார்ப்பீர்கள்.

    வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

    ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

    வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.

    வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

    ×