search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exit polls"

    தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இங்கு அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிகளும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 34 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு 29 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 9 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், கருக்கலைப்புக்கு ஆதரவாக பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Irishabortionlaws
    டப்ளின்:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார்.

    இந்த விவகாரம் அயர்லாந்து மக்களிடையே  கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அத்துடன், கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது.

    அதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் 6500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.



    இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

    அயர்லாந்து தேசிய தொலைக்காட்சி மற்றும் ஐரிஷ் டைம்ஸ் சார்பில் தனித்தனியாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஐரிஷ் டைம்ஸ் சார்பில் நாடு முழுவதும் 160 வாக்குச்சாவடிகளில் 4000 பேரிடமும், தேசிய தொலைக்காட்சி சார்பில் 175 மையங்களில் 3800 பேரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

    தேசிய தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், கருக்கலைப்புக்கு ஆதரவாக 69.4 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஐரிஷ் டைம்ஸ் வாக்கெடுப்பில் 68 சதவீதம் பேர் கருக்கலைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள், கடுமையான கருக்கலைப்பு தடைச் சட்டத்தை ரத்து செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Irishabortionlaws
    ×