search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exercise"

    • உடற்பயிற்சி செய்வதால் மனமும் வலிமை பெறுகிறது.
    • உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உதவுகிறது.

    நமது அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நம்மால் எந்த வேலைகளையும் செய்ய முடியும்.

    உடற்பயிற்சி செய்வதால், நமது உடல் மட்டுமல்லாமல், மனமும் வலிமை பெறுகிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

    கண்களுக்கான உடற்பயிற்சி

    இரு உள்ளங்கைகளையும், இரு கண்கள் மீது வைத்து மூடி அழுத்திக் கொள்ள வேண்டும். பின் ஐந்து வினாடிகள் கழித்து கைகளை எடுத்து விட வேண்டும். இதுபோல் ஐந்து முதல் ஆறு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் நனைத்த டவலைக் கொண்டு கண்களை மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    காலுக்கான உடற்பயிற்சி

    இப்பொது அதிகம் பேர் பிளாட் வீடுகளில் தான் குடியிருக்கின்றனர். மாடிப்படிகளில் தொடர்ந்து ஏறி இறங்குவதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, மாடிப்படிகளில் வேகமாக ஏறி இறங்கும் போது, முழங்கால்களுக்குள் காணப்படும் பிரச்சனைகளை நீக்கி, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது. எனவே முடிந்த வரை படிகளின் வழியே ஏறி இறங்குங்கள். லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. வயதான பெண்களுக்கு இது பொருந்தாது.

    கழுத்திற்கான உடற்பயிற்சி

    பெண்களின் கழுத்து பகுதி அழகுடன் திகழவும், கழுத்து எலும்புகளில் வலி ஏற்படாமல் இருக்கவும், இந்த பயிற்சி உதவுகிறது. நேராக நிமிர்ந்து தலையை மெதுவாக சுழற்ற வேண்டும். இதேபோல் வலது, இடது என மாறி மாறி கழுத்தை மெதுவாக சுழற்றும் போது கழுத்து தசைகள் வலுப்பெற்று நல்ல வனப்புடன் அழகாக இருக்கும்.

     சோம்பேறித்தனம்

    இன்று நாம் கடைக்கு சென்று கூட பொருள் வாங்க வேண்டாம். ஏனென்றால் அனைத்து பொருட்களுக்கும் டோர் டெலிவரி ஆகிவிடுகிறது. நமது உடலுக்கு வேலையை கிடையாது. இது நமது வாழ்வில் மிகப்பெரிய சோம்பேறித்தனத்தை உண்டாக்குகிறது. சோம்பேறித்தனத்தை சரி செய்ய தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், சோம்பேறித்தனம் மற்றும் சோர்வு ஆகியவற்றை முறித்து புத்துணர்வு பெற முடியும்.

    தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும். அதனால் ஒரு நாளைக்கு தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் பணி புரிந்து வருகின்றனர். வீட்டில் உள்ள பணிகள் மற்றும் அலுவலக பணிகள் என அனைத்திலும் உள்ள பெண்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்க்கு நேரம் கிடைப்பது இல்லை. ஆனால் அனைத்து பணிகளையும் செய்வதற்கு, நமது உடல் ஆரோக்கியம் அவசியமான ஒன்று. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று.

    நாம் செய்யும் வேலைகளை எவ்வளவு அவசியமானதாக கருதுகிறோமோ, அதுபோல பெண்கள் உடற்பயிற்சி செய்வதும் அவசியமான ஒன்று. உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் வலி, அசதி, மற்றும் உடலில் தேங்கி உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது.

    • உடற்பயிற்சி மூலம் தலைவலியை சரிசெய்ய முடியும்.
    • தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் உதவிபுரிகின்றன.

    இன்றைக்கு அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய சாதரணமானதாக தலைவலி மாறிவிட்டிருக்கிறது. இதனை சரியாக கையாண்டால், நம்முடைய வாழ்க்கை முறையில் தலைவலி வராமல் தடுக்க முடியும். தலைவலி ஏற்ப்பட்டால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் எப்படி அதனை சமாளிக்கலாம் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

    உடற்பயிற்சி மூலம் தலைவலியை சரிசெய்ய முடியும். நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை தலைவலி ஆகும். தலைவலி வந்துவிட்டால் போதும் நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. இந்த தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன. தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் எந்த வகையில் உதவிபுரிகின்றன என்பதை பார்க்கலாம்

     உத்தானபாத ஆசனம்:

    தலைவலியை குணப்படுத்த சிறந்த ஆசனம் உத்தானபாத ஆசனம் ஆகும்.இந்த ஆசனம் செய்வதால் ஜீரண கோளாறு, மலச்சிக்கல், தலைவலி போன்றவை நீங்கும்.

    செய்முறை :

    * முதலில் தரையில் ஒரு துணியை விரித்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் அப்படியே இரு கால்களையும் கைகளையும் சேர்த்து வைத்து கொண்டு மல்லார்ந்து படுக்க வேண்டும்.

    * பின்னர் அப்படியே இரு கால்களையும் கைகளையும் மேல்நோக்கி தூக்க வேண்டும். பின்பு தலையை மட்டும் கீழே இருக்கும்படி வைத்துக் கொண்டு உடலை தூக்கி அப்படியே கண்களை திறந்து பின்புறம் பார்க்க வேண்டும்.

    * இவ்வாறு மூச்சை அடக்கி பத்து வினாடிகள் கழித்து மூச்சை மெதுவாக விட்டுக்கொன்டே கால்களை மெதுவாக இறக்க வேண்டும். ஒரு நிமிடம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் ஒரு முறை இந்த ஆசனத்தை செய்யவும்.

    இவ்வாறு செய்வதால் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள நரம்புகள் அனைத்தும் சிறப்பாக இயங்கும். வாயுத் தொந்தரவு, ஜீரணக்கோளாறு, மலச்சிக்கல், தலைவலி நீங்க இது ஒரு சரியான ஆசனமாகும்.

    • சுகப்பிரசவம் ஆவதற்கும் ஒரு சில ஆசனமுறைகள் உள்ளது.
    • ஆசனம் செய்தால் தான் சுகப்பிரசவம் என்பது இல்லை.

    பெண்களின் வாழ்நாளில் முக்கியமான ஒரு கால கட்டமே அவர்களின் பிரசவ காலம் தான். கர்ப்பகாலம் பெண்களின் வாழ்க்கையில் மிக இனிமையான ஒரு காலமும் கூட, இந்த நேரத்தில் சில சங்கடங்களை அனுபவித்தாலும், இது அனைவருக்குமே மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒன்று. இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கக்கூடிய பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இதனால் மட்டும் சுகப்பிரசவம் ஆகிவிடுவதில்லை.

    பொதுவாக அனைத்து பெண்மணியும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்றே விரும்புகின்றனர். கர்ப்பம் தரித்த அனைத்து பெண்களும் முதல் மூன்று மாதங்களுக்கு எந்த ஒரு பயிற்சியும் செய்ய கூடாது. சுகப்பிரசவம் ஆவதற்கும் ஒரு சில ஆசனமுறைகள் உள்ளது. 7 மாதத்தில் இருந்து ஆசன முறையை கடைபிடிக்கலாம்.

    ஆசனம் செய்தால் தான் சுகப்பிரசவம் என்பது இல்லை. தகுந்த நேரத்தில் வீட்டு வேலை செய்தாலே சுகப்பிரசவம் ஆகிவிடும்.

    கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

     வீரபத்ராசனம்:

    வீரபத்ராசனம் என்பது உடல் முழுவதற்கும் ஆற்றலை அளிக்க உதவுவதுடன், இது கர்ப்பமாக இருப்பவர்களின் மனநிலையில் மேம்பாட்டை கொண்டு வர உதவுகிறது. மேலும் இவை தொடை மற்றும் தோள்பட்டை தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

     வ்ருக்ஷாசனா:

    உடல் அழகை அதிகரிக்கவும், முதுகு வலியை நீக்குவதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் சந்திக்க கூடிய நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை போக்கவும் இது உதவுகிறது.

     உத்திதா திரிகோணாசனம்:

    இது இடுப்பு, தொடை மற்றும் முதுகு தசை வலிகளை நீக்குவதற்கு உதவுகிறது. மேலும் மன அழுத்தத்தை நீக்குவதற்கு இவை பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மிகப்பெரும் பிரச்சனையாக உள்ள செரிமான பிரச்சனை நீக்குவதற்கும் இது உதவுகிறது.

     வஜ்ராசனம்:

    பெரும்பாலான பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ள கூடிய பிரச்சனைகளாகிய வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்க இந்த ஆசனம் உதவுகிறது.

     மலாசனம்:

    இந்த மலாசனத்தை செய்வதன் மூலமாக கர்ப்பிணிகள் எளிதில் சுகப்பிரசவம் அடைவதற்கு உதவுகிறது. இந்த ஆசன முறையை தொடர்ந்து செய்வது மிகவும் நல்லது. சுகப்பிரசவத்தை விரும்புபவர்கள் நிச்சயம் இந்த ஆசனத்தை தினமும் செய்யலாம்.

    இது மட்டுமல்ல மேற்குறிப்பிட்டுள்ள ஆசனங்கள் அத்தனையையும் கர்ப்பிணிகள் செய்வது மிகவும் நல்லது. கர்ப்ப காலங்களில் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனையை தடுக்க உதவும் இந்த ஆசனங்கள் தான் நமக்கு பிரசவ நேரத்தில் சுக பிரசவத்தை

    ஏற்படுத்தவும் உதவும்.

    • தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.
    • இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    தயிர் என்பது லேக்டோபேசிலஸ் பாக்டீரியாவால் நொதிக்கப்பட்டு லேக்டிக் அமிலம் லேக்டோஸாக மாற்றப்படுகிறது. தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும். தயிர் கைக்குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை எல்லோருக்கும் உகந்த உணவு. ஒவ்வாமை இருப்போர் விதிவிலக்கு.

    அதே சமயத்தில் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், மீன், காடை, கவுதாரி என எந்தவொரு அசைவ உணவுடனும் தயிரை சாப்பிடகூடாது. அதிலும் மிக முக்கியமாக மீனையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் தோல் சம்பந்தமான ஒவ்வாமை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.

    தயிர் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் டயட்டில் நிச்சயமாக தயிரை சேர்த்துக் கொள்ளலாம். புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் இருக்கும் தேவையற்ற எடையை இழக்க மிகவும் உதவும். தயிரில் புரதம் நிறைவாக உள்ளது. கால்சியம், வைட்டமின் பி -2, வைட்டமின் பி -12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

    வயிற்றில் வெப்பம் அல்லது எரிச்சல் இருந்தால் தயிரில் இருந்து தயாரிக்கப்படும் லஸ்ஸி குடிப்பது நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, ஒருவருக்கு வயிற்றுப்போக்கு அல்லது உடல் சூடு காரணமாக ஏற்படும் வயிற்று வலி நீங்க ஒரு கப் தயிரில் சிறிதளவு வெந்தயம் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தயிர் சாதம் சாப்பிடலாம்.

    தயிரில் நல்ல பாக்டீரியா உள்ளது. இது உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. தயிர் சாப்பிடுவது குடலுக்கு நன்மை உண்டாகும். இது நம் உடலுக்குள் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது, இந்த நல்ல பாக்டீரியா அல்சர் (வயிற்றுப்புண்) போன்ற பிரச்சனைகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது.

    • இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    • 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    நாளை உடல் பருமன் தினம். இந்தியாவில் 1¼ கோடி இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    உலக அளவில் விஞ்ஞானிகளை கொண்ட `என்.சி.டி.' என்ற அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து உடல் பருமன் குறித்து ஒரு ஆய்வில் ஈடுபட்டன. அதன் முடிவுகள், `லான்செட்' பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

    கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே உடல் பருமனும், குறைந்த எடை பாதிப்பும் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை கண்டறிவதே இதன் நோக்கம் ஆகும். 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் இளம் வயதினராகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர்.

    இந்தியா உள்பட 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இப்பணியில் 1,500 ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். எடை, உயரத்தை பயன்படுத்தி, `பாடி மாஸ் இன்டெக்ஸ்' கணக்கீடு அடிப்படையில், உடல் பருமன் கணக்கிடப்பட்டது.

    அதன்படி, 2022-ம் ஆண்டு உலக அளவில், 15 கோடியே 90 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினரும், 87 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதாவது, 100 கோடிக்கு மேற்பட்டோர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர்.

    1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது. ஆனால், சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை, 2022-ம் ஆண்டில், 1 கோடியே 25 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமனுடன் இருந்தனர். இவர்களில், 73 லட்சம்பேர் ஆண்கள், 52 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.

    மேலும், இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 4 கோடியே 40 லட்சம் பெண்களும், 2 கோடியே 60 லட்சம் ஆண்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    1990-ம் ஆண்டில், 1.2 சதவீதமாக இருந்த உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 9.8 சதவீதமாகவும், 0.5 சதவீதமாக இருந்த ஆண்கள் எண்ணிக்கை 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜித் எஸ்சாடி கூறியதாவது:-

    உடல் பருமனும், குறைந்த எடையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரு வடிவங்கள் ஆகும். இரண்டுமே மக்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதலானவை. இந்த ஆய்வு, கடந்த 33 ஆண்டுகளில் இருவகையான ஊட்டச்சத்து குறைபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

    கடந்த 1990-ம் ஆண்டில், பெரியவர்கள்தான் உடல் பருமனுடன் இருந்தனர். ஆனால், இப்போது, பள்ளி செல்லும் சிறுவர்களும், இளம்வயதினரும் உடல் பருமன் கொண்டவர்களாக மாறியிருப்பது கவலை அளிக்கிறது.

    இருப்பினும், ஏழை நாடுகளில் இன்னும் கோடிக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் கையாள ஆரோக்கியமான, ஊட்டச்சத்து கொண்ட உணவு தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரியசஸ் கூறியதாவது:-

    குழந்தை பருவம் முதலே உடல் பருமனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்துகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அக்கறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை தடுக்க வேண்டும். இதில், அரசுகளுக்கு மட்டுமின்றி தனியார் துறையினருக்கும் பொறுப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடல் பருமன் என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.
    • உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

    உடல் பருமன் என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். நீங்கள் உடல் எடை இழப்பு பயணத்தில் இருந்தால், இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்க பல வழிகள் இருந்தாலும், உங்கள் அன்றாட வாழ்க்கையில் முதலில் மாற்ற வேண்டியது உங்கள் காலை பழக்கம்தான்.

    எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது உங்கள் காலை நேரத்தில் ஒரு நல்ல வழக்கத்தைச் சேர்ப்பது முக்கியம். எடை இழப்பு பானமான இஞ்சி மற்றும் எலுமிச்சை தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    இஞ்சி, எலுமிச்சை நீர் சமீப காலங்களில் இயற்கையாகவே உடல் எடையை குறைக்கும் சூப்பர் உணவாக உருவெடுத்துள்ளது. இந்த நேரடியான பானம், வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது, அதன் பல நன்மைகளுடன் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

    காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி எலுமிச்சை தண்ணீரை முதலில் குடிப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். இஞ்சி மற்றும் எலுமிச்சை பானம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. மேலும் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த கலவையானது எடை இழப்புக்கு உதவுகிறது.

    இஞ்சி எலுமிச்சை நீர் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, சிறந்த செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது. வயிற்று உப்புசம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை நிர்வகிப்பதில் எலுமிச்சை, சிட்ரிக் அமிலம் நிறைந்தது, செரிமான சாறுகளை உற்பத்தி செய்கிறது. இஞ்சியில் உள்ள பண்புகளும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகின்றன.

    உடல் எடையை குறைப்பதில் நச்சு நீக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி எலுமிச்சை நீர் அதற்கு திறம்பட பங்களிக்கிறது. இஞ்சி மற்றும் எலுமிச்சை பானம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துகின்றன, இது உடலின் சிறந்த நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கிறது. வெற்றிகரமான எடை இழப்புக்கு, சுத்தமான உள் அமைப்பு இன்றியமையாதது.

    இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் இந்த பானம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவும்.

    இஞ்சி எலுமிச்சை நீர் இயற்கையான ஆற்றல் எழுச்சியை வழங்குகிறது. இஞ்சி மற்றும் எலுமிச்சை இரண்டும் ஊக்கமளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை உடல் சோர்வை நீக்கி, ஆற்றலை அதிகரிக்கிறது.

    எனவே இந்த எளிய மற்றும் பயனுள்ள பானத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இது உங்கள் உடல் அதிகப்படியான கொழுப்புகளை அகற்றி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சீரான உணவுடன் சேர்த்து தொடர்ந்து குடிக்கவும், ஒரு மாதத்திற்குள் எடை குறைவதை நீங்கள் கவனிக்கலாம்.

    • யோகா என்பதற்கு ஒன்றிணைதல் என்பது அர்த்தம்.
    • கிரியா என்பதற்கு உள்நிலை செயல்பாடு என்பது அர்த்தம்.

    யோகா என்பதற்கு ஒன்றிணைதல் என்பது அர்த்தம். யோகா செய்யும்போது நம் உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவை ஒன்றிணைந்து மன அழுத்தங்களை குறைத்து மனதில் அமைதி நிலவச்செய்யும். யோகாவில் கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா, பக்தி யோகா என நான்கு வகை உள்ளன. இதில் கிரியா யோகா பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

    கிரியா என்பதற்கு உள்நிலை செயல்பாடு என்பது அர்த்தம். கிரியா யோகா செய்யும்போது உங்கள் உள்நிலை செயல்பாட்டை மட்டுமே உள்ளடக்கி செய்தலாகும். கிரியா யோகாவை மேற்கொள்ளும்போது ஆன்மீகப் பாதையில் நடப்பது சக்தி வாய்ந்தது. ஆனால் உங்கள் ஈடுபாடும், ஒழுக்கமும் அதில் அதிகம் தேவைப்படும். அவ்வளவு எளிதாக கிரியா பயிற்சி இருக்காது.

    ஆனால் இரக்கத்துடனும் பொறுமையுடனும் செய்தால், உங்கள் மனதின் உள்ஞானத்தை உண்மையிலேயே ஒளிரச் செய்யலாம். கிரியா யோகாவை மேற்கொள்ள எளிய முறைகளை கீழே கூடுத்துளோம். அவற்றை சிறந்த நிபுணரின் வழிகாட்டுதல் மூலமாக மேற்கொள்வது அவசியம்.

     கிரியா யோகா செய்யும் முறை:

    * முதலில் நின்றபடி, கைகளை ஒன்று சேர்த்து மார்பினை ஒட்டி வணங்கிய நிலையில் அரை வினாடிகள் கண்களை மூடி நிற்க வேண்டும்.

    * அதன் பிறகு, முட்டிக் கால் இட்டு, முன்புறமாக கைகளை ஒன்று சேர்த்து வணங்க வேண்டும். இந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும்.

    * அடுத்து, கைகளை பக்கவாட்டில், வைத்து உள்ளங்கைகளை நெஞ்சுக்கு நேரே குவித்து இருக்குமாறு வணங்க வேண்டும். அந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும்.

    * மீண்டும், கைகள் இரண்டையும் முன்புறமாக கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

    * நின்றபடி, நமக்கு பிடித்த தெய்வத்தை மனதில் கொள்ள வேண்டும்.

    * மண்டியிடும் போது யோகா குருவினை மனதில் கொள்ள வேண்டும்.

    யோகாசனம் செய்வதற்கு முன்பாக, நாம் நம் உடலை எளிய பயிற்சிகள் மூலம் ஆயத்தப்படுத்துதல்

    * நம் கால்களை 'V' வடிவில் விரித்து நிற்க வேண்டும்.

    * கைகளை முன்புறமாக தோள்பட்டை அளவிற்கு உள்ளங்கைகளைச் சேர்த்து நீட்ட வேண்டும்.

    * பக்கவாட்டில், நம்முடைய உள்ளங்கைகள் பூமியை நோக்கி இருக்குமாறு விரித்து வைக்க வேண்டும்.

    * இவ்வாறு மேற்குறிப்பிட்ட நிலையில், பத்து எண்ணிக்கை மனதில் கொண்டு முன்புறமாகவும், பக்கவாட்டிலும் மாறி மாறி கைகளை மாற்றி, சாதாரண பயிற்சி செய்ய வேண்டும்.

    • நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
    • உணவுகளில் அதிகமான கலோரி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    எடை இழப்பு என்று வரும்போது நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அதே நேரம் சாப்பிடும் உணவுகளில் அதிகமான கலோரி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பதிவில் உங்களது எடை இழப்பு இலக்கை அடைய உதவும் சுவையான குறைந்த கலோரி நிறைந்த தின்பண்டங்கள் பற்றி பார்க்கலாம். இதை எளிதாக நீங்களே வீட்டில் செய்து விட முடியும். எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக, இவற்றை சாப்பிடும்போது, திருப்திகரமாகவே உடல் எடையைக் குறைக்கலாம்.

     முளைக்கட்டிய பச்சைப் பயறு:

    முளைகட்டிய பச்சைப் பயரில் நார்ச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கிப் போட்டு, சிறிதளவு உப்பு மற்றும் கரம் மசாலாவை இதில் கலந்து, சாட் போல தயாரித்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.

     வேகவைத்த வெஜிடபிள் கட்லட்:

    உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை நன்கு வேக வைத்து, பின்னர் அவற்றை கட்டலெட்டுகளாக செய்து சாப்பிடலாம். இதை செய்வதற்கு கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவற்றை வேக வைத்து நன்றாகப் பிசைந்து, தட்டையாக்கி, பிரெட் தூளில் தொட்டு இருபுறமும் வேகும்படி தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால், வெஜிடபிள் கட்லெட் ரெடி.

     வறுத்த மசாலா கொண்டைக்கடலை:

    சென்னா என அழைக்கப்படும் கொண்டைக்கடலை ஒரு ஆரோக்கியமான உணவாகும். நன்கு காய்ந்த கொண்டக்கடலையை தண்ணீரில் நனைத்து, கொத்தமல்லி மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம் போன்ற மசாலாக்களை சேர்த்து மிதமான சூட்டில் வாணலியில் வறுத்து சாப்பிட்டால், புரதச்சத்து நிறைந்த சூப்பர் ஸ்னாக் தயார்.

     வெள்ளரிக்காய் ரைத்தா:

    வெள்ளரிக்காய் பயன்படுத்தி செய்யப்படும் ரைத்தா ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் தயிர் சார்ந்த சைடு டிஷ் ஆகும். இது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடக்கூடிய சிறந்த ஸ்னாக். இதை செய்வதற்கு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி, தயிருடன் கலந்து சீரகத்தூள், புதினா இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

     சுண்டல்:

    சில குறிப்பிட்ட பருப்பு வகைகளை வேகவைத்து செய்யப்படும் புரதம் நிறைந்த உணவுதான் இந்த சுண்டல். கொண்டைக்கடலை, காராமணி அல்லது பச்சை பயறு போன்ற பயர் வகைகளை ஊற வைத்து, பின்னர் வேக வைக்க வேண்டும். அடுத்ததாக அதில் கொஞ்சம் கடுகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு பிழிந்து தாளித்தால் சூப்பர் சுவையில் சுண்டல் ரெடி. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நார்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதே நேரம் கலோரியும் குறைவுதான் என்பதால், உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

     மசாலா பொரி:

    உங்களுக்கு மேலே குறிப்பிட்ட எந்த ஸ்நாக்கும் செய்ய முடியவில்லை என்றால், கடைக்கு சென்று பத்து ரூபாய் கொடுத்து பொரி வாங்கி சாப்பிடுங்கள். இதை நேரடியாக அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, தக்காளி, வெங்காயம், துருவிய கேரட், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து, சாட் மசாலா தூவி அப்படியே கலந்து மசாலா பொரியாக்கி சாப்பிட்டால், இதைவிட அற்புதமான குறைந்த கலோரி உணவு இருக்கவா போகிறது?.

    இவை அனைத்துமே குறைந்த கலோரியை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளாகும். இதை அதிகமாக சாப்பிட்டாலும் உங்கள் உடல் எடை கூடாது. எனவே இவற்றை சாப்பிட்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க முயலுங்கள்.

    • சைவ உணவுதான் ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
    • நாள்பட்ட நோய் பாதிப்புகளை குறைக்க முடியும்.

    சைவ உணவுதான் ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதனை சாப்பிடுவதன் மூலம் பல நாள்பட்ட நோய் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகிறார்கள். அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை தேர்ந்தெடுப்பவர்கள் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

    அசைவ உணவு பிரியர்களுக்கு அதனை கைவிடுவது கடினமானதாகத் தோன்றலாம். ஒரு மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக அசைவ உணவையும் புறக்கணித்துவிட்டு சைவ உணவை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    ஒரே மாதிரியான சத்துகள்:

    அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏதேனும் உடல்நல காரணங்களுக்காக சைவ உணவுக்கு மாறும்பட்சத்தில் சில நாட்களை கடப்பதற்கு கடினமாகவே இருக்கும். அசைவ உணவுகளில் கிடைக்கும் சத்துக்களை சைவ உணவுகளில் இருந்தும் பெறலாம். இரண்டு உணவுத் திட்டங்களிலும் ஒரே மாதிரியான சத்துகளே கிடைக்கும். உணவு தேர்வு முறையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    செரிமான செயல்முறை:

    சைவ உணவு தாவர அடிப்படையிலானது. அதில் நார்ச்சத்து நிறைந்திருக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது செரிமான செயல்முறையை மேம்படுத்தும். மேலும் தாவர அடிப்படையிலான சைவ உணவு மலச்சிக்கல் பிரச்சினையை கட்டுப்படுத்தும். குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு வழிவகை செய்யும்.

    கொழுப்பைக் குறைக்கும்:

    இறைச்சி உணவுகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடியவை. அதே சமயம் தாவர அடிப்படையிலான சைவ உணவுகளில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. கெட்ட கொழுப்பை வெளியேற்றுவதற்கு உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. சைவ உணவை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்டரால் அளவை சீராக பேண முடியும்.

    நாள்பட்ட நோய்களை குறைக்கும்:

    சைவ உணவை உண்பதால் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயங்களைக் குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் உறுதிபட கூறுகிறார்கள்.

    அழற்சியை கட்டுப்படுத்தும்:

    இறைச்சி சார்ந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அழற்சி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உட்கொள்பவர்களுக்கு பல நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். சைவ உணவை சாப்பிடுவது அழற்சி சார்ந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.

    உடல் எடையை குறைக்கும்:

    உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சைவ உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாவர அடிப்படையிலான இந்த உணவுகள், விலங்கு வகை இறைச்சி உணவுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கலோரிகளை கொண்டுள்ளன. மேலும் சைவ உணவு வயிற்றுக்கு நிறைவாக சாப்பிட்ட உணர்வை தரும். அதனால் பசியை குறைக்க உதவும்.

     ஆற்றலை அளிக்கும்:

    தாவர அடிப்படையிலான சைவ உணவுகளில் ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடலிலின் ஆற்றல் அளவை அதிகரிக்கச்செய்யும். ஆனால் அசைவ உணவுகள், குறிப்பாக `ரெட் மீட்' எனப்படும் சிவப்பு இறைச்சி வகைகளை அதிகம் சாப்பிடுவது

    புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும். அதிலும் பன்றி இறைச்சி மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தொடர்ந்து அதிகம் சாப்பிடுவது மலக்குடல் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். மாட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கக்கூடும்.

    • ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது.
    • அத்தகைய உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது.

    உடல் நலனை பாதுகாப்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது. அத்தகைய உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது. நிறைய பேர் விரும்பிய நேரத்தில் உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இரவு உணவை தாமதமாக உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    அலுவலகம் முடியும் நேரத்திலோ, வீடு திரும்பும் வழியிலோ நொறுக்குத்தீனிகளை உட்கொண்டுவிட்டு இரவு உணவு உண்ணும் நேரத்தை தாமதப்படுத்துகிறார்கள். 9 மணிக்கோ, அதற்கு பிறகோ சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடுவது செரிமான செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதுதான் சரியானது. அதுதான் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது என்பது உணவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. முன்னோர்களும் அப்படி சாப்பிடும் வழக்கத்தைத்தான் பின்பற்றினார்கள். அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

     இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * தூக்கத்திற்கும், செரிமானத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இரவு தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லும்போது செரிமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும். அது தன் வேலையை செய்வதில் தொய்வு ஏற்படும். தூக்கமும் தடைபடும். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு பிறகு தூங்கச் செல்லும் வழக்கத்தை பின்பற்றினால் செரிமானம் சீராக நடைபெறும். உடல் உறுப்புகளுக்கும் எந்தவித பாதிப்பும் நேராது. அவை ஓய்வெடுத்து ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும். காலையில் எழும்போது சோர்வு எட்டிப்பார்க்காது.

    * இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பது உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும். இரவு 7 மணிக்குள் உணவு உட்கொள்ளும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    * இரவு உணவை 7 மணிக்கு உண்ணும்போது உடலில் உள்ள கலோரிகளை எதிர்த்து போராடுவதற்கு உதவும். உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.

    * இரவு தாமதமாக சாப்பிடும்போது விரைவாக செரிமானம் ஆவதற்கு செரிமான மண்டலம் ஒத்துழைப்பு கொடுக்காது. இரவு உணவுக்கும், தூங்கச் செல்லும் நேரத்திற்கும் இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். தாமதமாக சாப்பிடும்போது அந்த இடைவெளி குறைந்துவிடும். அதன் காரணமாக அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

    * இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது கூடுதல் கலோரிகளை எரிப்பதற்கு போதிய நேரமில்லாமல் போய்விடும்.

    * நீரிழிவு, இதயம், தைராய்டு சார்ந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும். மேலும் இரவில் சீக்கிரமாகவே சாப்பிட்டுவிடுவதும் நல்லது.

    • உடலில் வைட்டமின் டி குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறையும்.
    • அதிக அளவில் வைட்டமின் டி நிறைந்த ஒரே உணவு காளான்தான்.

    எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், நம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சவும் வைட்டமின் டி அவசியமாகிறது. எலும்புகளின் ஆரோக்கியம், தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு நமக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது.

    சூரிய ஒளி இல்லாத காரணத்தாலோ அல்லது தவறான உணவு முறையாலோ கூட உடலுக்குத் தேவையான வைட்டமின்கள்கிடைக்காமல் போனாலும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படலாம். குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். இந்த சமயங்களில் வைட்டமின் டியை எப்படி, எதன் மூலம் பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    சருமத்தின் மீது சூரிய ஒளி படும்போது அதில் இருக்கும் புற ஊதாக்கதிர்களை கொண்டு வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது.

    உடலில் வைட்டமின் டி குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உண்டு. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் பெரிதும் பாதிக்கப்படும். எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்பட வழி வகுக்கும்.

     சூரிய ஒளியைத் தவிர வைட்டமின் டி நிறைந்த உணவுகள்:

    1. காளான் (மஷ்ரூம்கள்): சைவ உணவுகளில் அதிக அளவில் வைட்டமின் டி நிறைந்த ஒரே உணவு காளான்தான்.

    2. கடல் உணவுகள்: கடல் உணவுகளில் ஒமேகா 3 அதிக அளவில் இருப்பது போல் வைட்டமின் டியும் நிறைந்துள்ளது. குறிப்பாக சால்மன் மற்றும் மத்தி மீன் வகைகள்.

    3. முட்டை: முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

    4. ஆரஞ்சு ஜூஸ்: மேற்கத்திய நாடுகளில் வைட்டமின் டிக்கு ஆரஞ்சு ஜூசை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸில் கிட்டத்தட்ட நூறு யூனிட் அளவுகள் வைட்டமின் டியை பெற முடியும்.

    5. பசும்பால், பாதாம் பால், சோயா பால்: பாதாம் பால், சோயா பால் மற்றும் பசும் பாலில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின் டியையும் ஓரளவு பெற முடியும்.

    6. ஓட்ஸ் மற்றும் செரல் வகைகள்: ஓட்ஸ் மற்றும் செரல் வகைகளில் நார்ச்சத்துக்களுடன் வைட்டமின் டியும் நிறைந்துள்ளது. ஓட்மீலில் கிட்டத்தட்ட நூறு யூனிட் அளவு வைட்டமின் டி கிடைக்கும்.

    7. காட் லீவர் ஆயில்: சைவ உணவு சாப்பிடுபவர்கள் மீன் சாப்பிட முடியாது. இவர்கள் காட் லீவர் ஆயில் எடுத்துக் கொள்ளலாம். இவை மாத்திரைகளாகவும் கிடைக்கின்றது.

    இவை தவிர, செறிவூட்டப்பட்ட தானியங்கள், பாதாம் போன்ற பருப்பு வகைகள், சீஸ் வகைகளிலும் வைட்டமின் டி உள்ளது. மேலும், கீரைகள், வெண்டைக்காய், கேரட், புரோக்கோலி, தயிர் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

    • பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது.
    • ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.

    வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது. நமக்கு மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கும் சில காய்கறிகளில் மட்டும் ஜூஸ் செய்து குடிக்கலாம். அப்படிப் பார்த்தால் வாழைத்தண்டும், வெள்ளைப் பூசணியும் ஜூஸ் செய்து குடிக்க ஏற்றவை.

     இவை இரண்டையும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம். வாழைத்தண்டை பொடியாக நறுக்கிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். வாழைத்தண்டிலேயே நிறைய நீர்ச்சத்து இருக்கும் என்பதால் அதிக தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அரைத்தடுத்த ஜூசில் சிறிது சீரகத்தூள், சிறிது மிளகுத்தூள், சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கலாம்.

     இதேபோல வெள்ளைப் பூசணியை ஜூஸ் செய்து குடிக்கலாம். இவற்றை வெறும் வயிற்றில் காலையில் குடிப்பது சிறந்தது. குடித்து முடித்த அடுத்த ஒரு மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. நீங்கள் கேட்டிருந்தபடி சுரைக்காய் ஜூஸ் குடிப்பதை மட்டும் தவிர்க்கவும்.

    சுரைக்காய் ஜூசில் உள்ள கசப்புத்தன்மை காரணமாக வயிறு மற்றும் குடல்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் பற்றிக்கூட கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே அதைத் தவிர்க்கவும்.

    நெல்லிக்காய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்த ஜூசும் குடிக்கலாம். காய்கறி ஜூஸ் நல்லது என்ற எண்ணத்தில் எல்லா காய்கறிகளிலும் ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது. எனவே மேற்குறிப்பிட்ட மூன்று ஜூஸ் மட்டும் குடித்துப் பார்த்து உங்கள் உடலுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்று கவனியுங்கள். ஏற்றுக்கொண்டால் தொடரலாம். கூடவே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்களையும் பின்பற்றினால் நிச்சயம் எடைக்குறைப்பு முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

    ×