search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode News"

    • வீட்டில் இருந்த பீரோவின் அடியில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையம் சூலைத் தெருவில் வீட்டில் இருந்த பீரோவின் அடியில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

    இதனைக்கண்ட வீட்டின் உரிமையாளர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் சதீஸ்குமார் தலைமயைில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    5 அடி நீளம் கொண்ட அந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த சென்னிமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    • வேட்டி-சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    • இந்த பணி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையின் போது ஏழை எளியோருக்கு வழங்க அரசு சார்பில் இலவச சேலை -வேட்டி தயாரிக்கப்படுகிறது.

    மொத்தம் 1.68 கோடி வேட்டி, 1.68 கோடி சேலை தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் 228 விசைத்தறி சங்கங்களில் 60 ஆயிரம் விசைத்தறிகளில் நடந்து வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் தங்கவேல் கூறியதாவது:

    இலவச வேட்டி-சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. தற்போதைய நிலையில் 30 லட்சம் வேட்டிகள், 65 லட்சம் சேலைகள் மட்டும் தயாரிக்க வேண்டியுள்ளது.

    இந்த பணிகளும் 15 நாட்களுக்குள் முடிந்து விடும். இதன் பிறகு விசைத்தறிகளுக்கு வேலை இல்லாத நிலை ஏற்படும்.

    எனவே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சீருடை தயாரிப்பு பணியை முன்னதாகவே திட்டமிட்டு வழங்க வேண்டும். 96 லட்சம் மீட்டர் கேஸ்மெட் துணிகள் மட்டுமே விசைத்தறிக்கு வழங்கப்படும். மீதி 3 கோடி மீட்டர் துணி தானியங்கி தறிகளுக்கு வழங்கப்படுகிறது.

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான நீல நிற துணிகள் வெளியே ஆர்டர் போட்டு அரசு வாங்குகிறது. இது போன்றவற்றை விசைத்தறிகளுக்கே வழங்கினால் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.
    • உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

    பெருந்துறை:

    மேற்கு வங்காளம் மாநி லம் சுகேஷ் கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாஸ் சர்கார் (வயது 59). இவருடைய மகன் மீரின்மய் சர்க்கார் (26). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரு க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீரின்மய் சர்க்கார் குடும்பத்தை பிரி ந்து அவரது நண்பர்களுடன் ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று வீட்டை விட்டு வெளி யேறிய மீரின்மய் சர்க்கார் பின்னர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பணிக்கம்பாளையம் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவரது நண்பர்கள் மீரின்மய் சர்க்காரை மீட்டு பெருந்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மீரின்மய் சர்க்கார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அவரது தந்தை பிரபாஸ் சர்க்கார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • வனப்பகுதிக்குள் காட்டுயானை இறந்தது கிடந்ததை கண்டனர்.
    • குடல் புழுநோயால் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குன்றி பிரிவு கொளஞ்சி மடுவு வனப்பகுதியில் கடம்பூர் வனச்சராக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று காலை வனப்பணியாளர்கள் ரோந்து சென்றனர்.

    அப்போது வனப்பகுதி க்குள் காட்டுயானை இறந்தது கிடந்ததை கண்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சத்தியம ங்கலம் புலிகள் காப்பக கால்ந டை உதவி மருத்துவர் சதா சிவம் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்றனர்.

    பின்னர் தொண்டு நிறுவன பிரதிநிதி கிருஷ்ணகுமார், வனக்குழு தலைவர் மாரியப்பன், வனப்பணியாளர்கள் முன்னிலையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

    இறந்து கிடந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை எனவும், குடல் புழுநோயால் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போதை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மொடக்குறிச்சி, பவானி, காஞ்சிகோவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சாமிநாதபுரம், நஞ்சை ஊத்துக்குளி, கருக்கம்பாளையம், பவானி புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மொடக்கு றிச்சி சாமிநாதபுரம் கரட்டங்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜர் (வயது 32), நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமி மகன் முருகேசன் (57), பெத்தம்பாளையம் அடுத்த கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த நல்ல கவுண்டர் மகன் லோகநாதன் (26), பவானி காமராஜர் நகர் பெருமாள்புரம் சுரமணி மனைவி மலர்விழி (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், கூலிப், பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடியாக உயர்ந்துள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 593 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 593 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து நேற்று கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 1,700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.59 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.82 அடியாகவும் உள்ளது.

    • கடையின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது.
    • கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை, சிங்கம் பேட்டை பவானி- மேட்டூர் ரோடு பகுதியில் மளிகை கடை உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.

    அதே போல் அம்மா பேட்டை அருகே உள்ள குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 31) என்பவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    அவர் தினமும் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவில் கடையை மூடி விட்டு செல்வது வழக்கம்.

    அதே போல் அவர் நேற்று இரவும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை மீண்டும் திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது.

    இதையடுத்து அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதே போல் சுள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (50). இவர் சிங்கம்பேட்டை பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

    இவரது மளிகை கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து கடையில் இருந்த 3 சிப்பம் அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்று விட்டனர்.

    மேலும் அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து அங்கு வைத்து இருந்த ரூ.2700 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் குதிரைக்கல் மேடு பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது பவானி- மேட்டூர் மெயின் ரோட்டில் ஒரு ஆம்னி கார் அதிகாலை 2.30 மணி அளவில் வந்தது.

    அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர் அந்த பகுதியில் உள்ள பிரபா வதியின் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.

    தொட ர்ந்து அவர்கள் மேட்டூர் ரோட்டில் காரில் வந்து மேலும் 2 கடைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    காரில் வந்து கொள்ளை யடித்தவர்கள் யார் என்பது குறித்து அம்மாபேட்டை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்த தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் விவசாயிகள் 10,702 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்சமாக 28 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 32 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் போனது. நேற்றைய சராசரி விலையாக 31 ரூபாய் 41 காசு என நிர்ணயம் செய்யப்பட்டது.

    மொத்தம் 3523 கிலோ எடையுள்ள தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக விற்பனை கூடத்து நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    • இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர்.
    • மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே தினசரி ஜவுளி சந்தை வார ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை விடிய விடிய நடைபெற்று வருகிறது.

    வார ஜவுளி சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருவதால் ஜவுளி சந்தை வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.

    கடந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    ஆனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று வியாபாரிகள் வரவில்லை. இதனால் வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றது.

    உள்ளூர் வியாபாரிகளும் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் நாளாக நாளாக வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதேபோல் சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும், பி.பி. அக்ரஹாரம் பகுதியிலும் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    • இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை சாலையில் பிரபல கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டுமான நிறுவ னத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தியது போக டன் கணக்கில் பழைய இரும்பு பொருட்கள், உடைந்த இரும்புகள், இரும்பு பெயிண்ட் ட்ரம்கள் குடோனில் வைத்து அதனை பழைய இரும்பு வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி அலாவுதீன் பாஷா அங்கு பணியாற்றும் காவலாளி ராஜேஷ் என்பவர் மூலமாக கட்டுமான நிறுவனத்தில் இருந்து பழைய இரும்பு பொருட்களை ஏற்கனவே கொள்முதல் செய்து வந்துள்ளார்.

    இந்த நிறுவனத்தில் டன் கணக்கில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதை அறிந்து கொண்ட அலாவுதீன் பாஷா தனது நண்பர்கள் உதவியுடனும், இரவு நேரத்தில் காவலாளி ராஜேஷ் உதவியுடனும் உள்ளே புகுந்து 5 டன் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனத்தின் சார்பில் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கட்டுமான நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி அலாவுதீன் பாஷா, அகமது பாஷா, சிராஜுதீன் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் கட்டுமான நிறுவனத்தில் பழைய இரும்பு பொருட்களை திருடி சென்ற சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அரிசி கடத்தலில் ஈடுபடும் சக்திவேலை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    ஈரோடு:

    குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு த்துறை தலைவர் ஜோசி உத்தரவுப்படி கோவை மண்டல எஸ்.பி. பாலாஜி, ஈரோடு சரக டி.எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி பவானி அருகே உள்ள குருப்ப நாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (35) என்பவர் சம்பவத்தன்று காரில் 2 டன் ரேஷன் அரிசியை விற்பனை க்காக கடத்தி சென்றதாக ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சக்திவேல் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் நிலைமையில் உள்ளன.

    இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் சக்திவேலை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனையேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சக்திவேலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக்திவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

    • ணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டத்திற்காக பவானி போலீசார் கைது செய்தனர்.
    • ரொக்க பணம் 14,180 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள சின்னியம்பாளையம் கிராமத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்னியம்பாளையம் டாக்டர் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் பவானி சின்னியம்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மகன் மோகன் (40), ராமசாமி மகன் தர்மன் (40), சின்னுசாமி மகன் அய்யாசாமி (28), செல்வன் மகன் அய்யாதுரை மற்றும் சின்னுசாமி மகன் விஜயகுமார் (78) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 5 பேரும் 52 சீட்டுகள் கொண்ட சீட்டுக்கட்டு மூலம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டத்திற்காக பவானி போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ரொக்க பணம் 14,180 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    ×