search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode News"

    • புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது.
    • பொதுமக்கள் திரண்டு வந்து சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னிமலை:

    சென்னிமலை நகர பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெருசலை கட்டுப்படுத்த சென்னி மலை-நகர பகுதிக்கு கனரக வாகனங்கள் வராமல் காங்கேயம், பெருந்துறை செல்லும் படி புறவழி ச்சாலை அமைக்க நெடுஞ்சா லை துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதில் பசுவபட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் புறவழிசாலை வந்து பசுவபட்டி பிரிவு அருகே காங்கேயம் மெயின் ரோட்டில் இணைக்கும் படி அளவீடு செய்துள்ளனர்.

    அந்த பகுதியில் புறவழி சாலை வேண்டாம். பசுவபட்டி பிரிவு, வெப்பிலி பிரிவு அருகே தற்போது அதிக அளவில் விபத்துகள் நடக்கிறது.

    மேலும் புறவழி சாலை வந்தால் நாங்கள் அதிகம் பாதிக்கப்படுவோம் என கூறி திருவள்ளுவர் நகர், காமராஜ் பதி குடியிருப்பு பகுதி, தட்டாங்காடு குடியிருப்பு, பசுவபட்டி பிரிவு பகுதி பொது மக்கள் திரண்டு வந்து, சென்னி மலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் புறவழிச்சாலை போடப்பட உள்ளது. இதற்காக பசுவப்பட்டி, திருவள்ளுவர் நகர் வழியாக நில அளவை பணிகள் நடைபெறுகிறது.

    இந்த வழியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளுவர் நகர், கே.சி.நகர், காமராஜர் நகர், தட்டங்காடு ஆகிய 4 கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மிக ப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

    இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்காமால் மாற்று வழியில் அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

    • விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
    • தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது.

    இதையடுத்து ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    ஈரோடு சத்தி ரோடு, ஈரோடு மார்க்கெட் பகுதியில் வரும் சரக்கு வாகனங்கள் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனையடுத்து ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் இன்று அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மார்க்கெட் பகுதி மற்றும் சத்தி ரோடுகளில் விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதித்தனர்.

    தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடியாக உயர்ந்துள்ளது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 477 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து நேற்று கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1700 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.52 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.79அடியாகவும் உள்ளது.

    • மழை மற்றும் பனியால் சுரைக்காய் விளைச்சல் குறைந்து வரத்து குறைந்துள்ளது.
    • ரூ.20 முதல் ரூ. 22 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பெருந்துறை:

    பெருந்துறை தினசரி மார்கெட்டிற்கு சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுரைக்காயை கொண்டு விற்பனை செய்து வருகிறார்கள்.

    அவர்களிடம் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சில்லரையில் மக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு சுரைக்காய் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது மழை மற்றும் பனியால் சுரைக்காய் விளைச்சல் குறைந்து மார்க்கெட்டிற்கு வரும் சுரைக்காய் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் ஒரு சுரைக்காய் விலை ரூ.20 முதல் ரூ. 22 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1.26 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,358 மூட்டைகளில் 1,55,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 73.70-க்கும், அதிகபட்சமாக ரூ.88.05-க்கும் விற்பனையானது. 2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.33.19-க்கும், அதிகபட்சமாக ரூ.86.15-க்கும் விற்பனையானது.

    மொத்தம் ரூ.1.26 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    • விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 499-க்கு விற்பனையானது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மஞ்சள் சந்தை யில் கடந்த ஜூலை முதல் மஞ்சள் விலை உயரத் தொடங்கியது. குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு கீழ் விற்பனையாகி வந்த மஞ்சள் விலை ரூ.14 ஆயிரத்தை தொட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனையானது. 13 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்தை கடந்து உச்ச த்தை தொட்டது. தொடர்ந்து மஞ்சள் விலையில் சரிவு ஏற்பட்டு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனையானது.

    இந்நிலையில் கோபி கூட்டுறவு சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் விரலி மஞ்சள் அதிகபட்சமாக குவிண்டால் ஒரு ரூ.14 ஆயிரத்து 499-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த விலை உயர்வு மற்ற சந்தைகளில் எதிரொலிக்கவில்லை என்றாலும் வரும் காலங்களில் மஞ்சள் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

    பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 878 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 797 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,192 முதல் ரூ.13 ஆயிர த்து 569, கிழங்கு மஞ்சள் ரூ.8,599 முதல் ரூ.11,889 வரை விற்பனையானது.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 2397 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 1,050 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8,589 முதல் ரூ.13 ஆயிரத்து 589, கிழங்கு மஞ்சள் ரூ.7,599 முதல் ரூ.11,913 வரை விற்பனையானது.

    ஈரோடு கூட்டுறவு சங்கத்துக்கு 382 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 264 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7,189 முதல் ரூ.13 ஆயிரத்து 600, கிழங்கு மஞ்சள் ரூ.6,879 முதல் ரூ.12,200 வரை விற்பனையானது.

    • தடையை நீக்கி கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.
    • ஜனவரி 21-ந் தேதி திட்டமிட்டபடி தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    உலக அளவில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளுக்கான தடை தொடர்கிறது.

    மனித உணவில் கள் ஒரு பகுதியாகும். கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உணவு தேடும் உரிமைகளில் ஒன்றாகும். கள்ளில் கலப்படம் செய்யப்படுகிறது என ஒற்றை காரணத்தை கூறி அனுமதி வழங்க மறுப்பது தவறாகும்.

    கேரளாவில் கள்ளுக்கு அனுமதியும், முழுமையாக பயன்படுத்த வழிகளும் உள்ளது. அங்கு எந்த கலப்படமும், தவறும் நடக்கவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக கள்ளுகளுக்கான தடையை நீக்கி கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.

    இல்லையென்றால் வரும் ஜனவரி 21-ந் தேதி திட்டமிட்டபடி தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். எனவே கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல் பயிர்களில் இலை சுருட்டுப் புழுக்களின் தாக்குதல் பொருளாதார சேத அளவுக்குள் காணப்படுகிறது.
    • வரப்புகளை களைகள் இன்றி பராமரித்தால் இதன் பாதிப்பு குறைகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் நடவுப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுக்களின் தாக்கு தல் ஆங்காங்கே காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து ஈரோடு மாவட்ட வேளா ண்மை இணை இயக்குநர் எஸ்.வெங்கடேசன் தெரிவித்துள்ளதாவது:-

    கடந்த 15 நாள்களுக்கு முன்பு நடவு செய்த நெல் பயிர்களில் ஆங்காங்கே இலை சுருட்டுப் புழுக்களின் தாக்குதல் பொருளாதார சேத அளவுக்குள் காணப்படுகிறது.

    பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் போதும் தழைச்சத்து குறிப்பாக யூரியா அதிகமாக இடும் போதும் இந்த புழுவின் தாக்குதல் அதிகரிக்கும்.

    இதன் தாக்குதலின்போது இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டு வெண்மை நிறமாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது, நெல் வயல் வெண்மை நிறத்தில் காய்ந்ததுபோல இருக்கும். இலைகள் நீளவா க்கில் சுருண்டு புழுக்கள் அதற்குள் இருக்கும்.

    இதன் அந்துப்பூ ச்சியானது மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளை கொண்டது. அதில் கருப்பு அலை போன்ற கோடுகள் காணப்படும். இறக்கை களின் ஓரத்தில் கருப்பு நிற பட்டையான கோடுகள் காணப்படும்.

    தொடர்ந்து நெற்பயிரை சாகுபடி செய்வதாலும், பரிந்துரையை விட அதி கமாக தழைச்சத்து இடுவதா லும், வரப்புகளில் களைகள் அதிகமாக இருந்ததாலும், பரிந்துரை செய்யப்படாத பூச்சி க்கொல்லி மருந்து களை தெளிப்பதாலும் இதன் தாக்குதல் அதிகரிக்கிறது.

    நாற்றுகளை போதிய இடைவெளிவிட்டு நடுவதால் காற்றோட்டம், சூரிய ஒளி நன்கு கிடைக்கிறது. அதனால் பூச்சிகளின் தாக்குதல் குறைகிறது.

    வரப்புகளை களைகள் இன்றி பராமரித்தால் இதன் பாதிப்பு குறைகிறது. முந்தைய பயிரின் அடித்தாள் கட்டை மூலம் பூச்சிகள் அடுத்த பயிருக்கு பரவுவதால் அடித்தாள் கட்டைகளை நன்கு உழவு செய்து அமுக்கிவிட வேண்டும்.

    யூரியா, அமோனியம் குளோரை, அமோனியம் சல்பேட் ஆகிய உரங்களைத் தேவையான அளவில் மட்டுமே இட வேண்டும். வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் அல்லது 3 சதம் வேம்பு எண்ணெயை தெளிக்கலாம்.

    டிரைகோ கிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டு ண்ணியை ஒரு ஏக்கருக்கு ஒவ்வொரு முறையும் 2 சிசி என்ற அளவில் நடவு செய்ததில் இருந்து 37, 44, 51 ஆகிய நாள்களில் 3 முறை விடுவது நல்ல பலனைத் தரும்.

    இந்த ஒட்டுண்ணிகள் தேவைப்படும் விவசாயிகள் கோபி கரும்பு ஒட்டுண்ணி மையத்தை அணுகலாம்.

    மேலும் புழுக்களின் தாக்குதல் அதிகரித்தால் ஏக்கருக்கு 20 கிராம் புளுபென்டிமைடு அல்லது 60 கிராம் குளோரான் டிரனிளிபுரோல் என்ற அளவில் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்து இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த லாம்.

    மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மனுநீதிநாள் முகாமில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
    • 135 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் ஊராட்சி, கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மனுநீதிநாள் முகாமில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

    இம்மனு நீதிநாள் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 11பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களும், 28 பயனாளிகளுக்கு மின்னணு வாக்காளர் அடையான அட்டையினையும்,

    23 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் குடும்ப அட்டையில் தொலைபேசி எண் மாற்றம் செய்யப்பட்ட தற்கான ஆணையினையும், 24 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களையும், 8 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டையினையும்,

    11 பயனாளிகளுக்கு புதிய ஆதார் அட்டை யினையும் மற்றும் 33 பயனாளிகளுக்கு ஆதார் அட்டை புதுப்பித்த ஆணையினையும் என 135 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    மேலும் மாணவ, மாணவி களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற சிறப்பு வகுப்பினையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து கத்திரிமலை மாதம்பட்டி மற்றும் மலையம்பட்டி ஆகிய பழங்குடியினர் பகுதியில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் 15 வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும்,

    பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 20 வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் இப்பகுதிமக்கள் பயன்பெறும் வகையில் தன்னார்வலர்கள் மூலமாக ரூ.2.65 லட்சம் மதிப்பீட்டில் மாவு அரைக்கும் எந்திரம் வழங்கப்பட்டு அதன் பயன்பாடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இம்முகாமில் தனித்துணை கலெக்டர் ராஜ கோபால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், அந்தியூர் தாசில்தார் பெரிய சாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாயாத்தாளை காணவில்லை.
    • ஈரோடுக்கு வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள செஞ்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (68). இவரது மனைவி தாயாத்தாள் (65). இவருக்கு கடந்த சில வருடமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டி ருந்த தாயாத்தாளை காணவில்லை. அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கணவர் பழனிசாமி தேடி வந்துள்ளார்.

    இந்த நிலையில் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட வேலப்பகவுண்டன் வலசு, செம்பாளி தோட்டம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து மூதாட்டி உடல் ஒன்று மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று உடலை பார்த்தபோது அது தனது மனைவி தாயாத்தாள் தான் என்பது தெரியவந்தது.

    நோய் கொடுமையால் மனமுடைந்த தாயாத்தாள் ஈரோடுக்கு வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கோபி, கவுந்தப்பாடி, ஈரோடு வடக்கு, கொடுமுடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோபி அரசு மருத்துவமனை, சேந்தம்பா ளையம் நேரு வீதி, அசோக புரம், கொடுமுடி பனப்பாளையத்தார் வீதி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த கோபிசெட்டிபாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் பரமசிவம் (வயது 74),

    பவானி சேந்தம்பாளையம் நேரு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாணிக்கம் (63), ஈரோடு வீரப்பன் சத்திரம் அசோகபுரத்தைச் சேர்ந்த ராமசாமி (70),

    கொடுமுடி வெங்கம்பூர் வடக்கு புதுப்பாளையம் பழனியப்ப செட்டியார் மகன் பாலகிருஷ்ணன் (63) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த பான் மசாலா, கூலிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்தோடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்காணிக்க தமிழக முழுவதும் உள்ள காவல்துறையினர் மூலமாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீசார் சித்தோடு அருகே உள்ள சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள சத்தியமங்கலம் செல்லும் மேம்பாலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றை சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தி சோதனை செய்த போது காரில் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான 130 கிலோ குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்களை கொண்டு சென்ற ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த தண்டபாணி (40) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×