search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering College"

    தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #TNMinister #Anbazhagan
    நெல்லை:

    நெல்லையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் உயர் கல்வியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. அகில இந்திய அளவில் உயர்கல்வி பயில்வோர் 25.2 சதவீதம் ஆகும். ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு உயர்கல்வி பயில்வோர் 46.8 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு அது மேலும் 2.1 சதவீதம் உயர்ந்து 48.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு முடிந்து, அடுத்த கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களை விட விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை குறைவு. எனவே எல்லோருக்கும் இடம் கிடைக்கும்.

    வருகிற செப்டம்பர் 1-ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர்களை சேர்க்கவும், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் அதிகம் மாணவர் சேர்கைக்கும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதம் அதிகம் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க தனியார்கள் சார்பாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க பரிசீலனை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Anbazhagan
    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #TNEA2018 #Engineering #AnnaUniversity #TNEAOnlineCounselling

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த அரசு முடிவு செய்தது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அடுத்த மாதம் ஆன்லைன் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் தொடங்கியது.

    இந்நிலையில், ஆன்லைன் கலந்தாய்வுக்கு எதிராக திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆன்லைன் கலந்தாய்வால் கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஆன்லைன் கலந்தாய்வுடன் பழைய முறையையும் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.  இதேபோல் வழக்கறிஞர் பொன் பாண்டியனும் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட், இந்த வழக்கில், தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

    இந்த வழக்கில் நேற்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் முறையை மக்கள் ஏற்றுக்கொண்டதால் தடை விதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNEA2018 #Engineering #AnnaUniversity #TNEAOnlineCounselling
    ×