search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enforcement"

    • நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விசாரணையை நிறுத்தவில்லை என்றால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்ம் நடத்துவோம் என்றனர்.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்க த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அமலாக்கத்துறை மூலமாக மத்திய அரசு ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 3 நாட்களில் 30 மணி நேரத்திற்கு மேலாக ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தி உள்ளது. மத்திய அரசு திட்டமிட்டே அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது.

    உடனடியாக அமலாக்க த்துறை விசாரணையை நிறுத்த வேண்டும். நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். விசாரணையை நிறுத்தவில்லை என்றால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்ம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், ஓ.பி.சி.பிரிவு மாவட்ட தலைவர் டியூக்துரைராஜ், துணைத்தலைவர்கள் கவிபாண்டியன், பேட்டை சுப்பிரமணி, மண்டல தலைவர்கள் அய்யப்பன், கெங்கராஜ், நிர்வாகிகள் முகமது அனஸ்ராஜா, குறிச்சி கிருஷ்ணன், ஐ.என்.டி.யூ.சி. கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான வீடு, நிலம் உள்ளிட்ட 3.68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன. #EDAttaches #OmPrakashChautala
    புதுடெல்லி:

    இந்திய லோக்தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா முன்னர் அரியானா மாநில முதல் மந்திரியாக  பதவி வகித்தபோது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பான வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த ஊழல் வழக்கில் அவர் டெல்லி திகார் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் மீது பொருளாதார அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான டெல்லி பஞ்சகுலா மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள வீடு, நிலம் உள்ளிட்ட 3.68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை இன்று தெரிவித்துள்ளது. #EDAttaches #OmPrakashChautala
    பாரத ஸ்டேட் வங்கி மோசடியில் ஈடுபட்ட நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. #NathellaJewellery
    சென்னை:

    சென்னையில் செயல்பட்ட நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி ரூ.380 கோடி மோசடி செய்ததாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்புள்ள 37 அசையா சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #NathellaJewellery
    ×