என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Enforcement"
- நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- விசாரணையை நிறுத்தவில்லை என்றால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்ம் நடத்துவோம் என்றனர்.
நெல்லை:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்க த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அமலாக்கத்துறை மூலமாக மத்திய அரசு ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 3 நாட்களில் 30 மணி நேரத்திற்கு மேலாக ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தி உள்ளது. மத்திய அரசு திட்டமிட்டே அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது.
உடனடியாக அமலாக்க த்துறை விசாரணையை நிறுத்த வேண்டும். நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். விசாரணையை நிறுத்தவில்லை என்றால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்ம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், ஓ.பி.சி.பிரிவு மாவட்ட தலைவர் டியூக்துரைராஜ், துணைத்தலைவர்கள் கவிபாண்டியன், பேட்டை சுப்பிரமணி, மண்டல தலைவர்கள் அய்யப்பன், கெங்கராஜ், நிர்வாகிகள் முகமது அனஸ்ராஜா, குறிச்சி கிருஷ்ணன், ஐ.என்.டி.யூ.சி. கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் செயல்பட்ட நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி ரூ.380 கோடி மோசடி செய்ததாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்புள்ள 37 அசையா சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #NathellaJewellery
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்