search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employees arrest சோழவரம்"

    சோழவரம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.19 ஆயிரம் கொள்ளைபோனதாக நாடகமாடிய 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    செங்குன்றம்:

    சோழவரம் செங்காளம்மன் கோவில் அருகே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது.

    இங்கு சோழவரத்தை அடுத்த ஞாயிறு கிராமத்தை சேர்ந்த முருகன், சுரேஷ் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு அவர்கள் 2 பேரும் பணியில் இருந்தனர்.

    இந்தநிலையில் நள்ளிரவு அவர்கள் சோழவரம் போலீசுக்கு போன் செய்து, ‘‘மர்மகும்பல் கண்ணாடி கதவை உடைத்து புகுந்து ரூ.19 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்’’ என்று பதட்டத்துடன் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஊழியர்கள் முருகன், சுரேஷ் இருவரும் கொள்ளை நடந்ததாக நாடகமாடி ரூ.19 ஆயிரத்தை சுருட்டியது தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    ×