search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Emmanuel Macron"

    • கடந்த ஜூலை மாதம் இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார்.
    • பிரான்ஸின் ராணுவ அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

    குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தின விழா நடைபெறும். டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றுவார். மேலும், நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அணிவகுப்புகள் நடைபெறும்.

    இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுப்பது வழக்கம். அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்ததாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக ஜோ பைடன் கலந்து கொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    2020-ல் அப்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2019-ல் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, 2018-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள், 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2014-ல் அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ, 2013-ல் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்திய பிரதமர் மோடி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இரு தலைவர்களும் சந்தித்து பேசினர்.

    • காசாவில் 45 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
    • இஸ்ரேல் அரசு இன்று முதல் 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.

    பாரீஸ்:

    காசாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா உதவியுடன் கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பு தாங்கள் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து இஸ்ரேல் மந்திரி சபை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியது.

    இந்நிலையில், காசாவில் போர் நிறுத்த அறிவிப்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காசாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை வரவேற்கிறேன். அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க அயராது உழைத்து வருகிறோம். காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவிகள் வழங்க மனிதாபிமான போர் நிறுத்தம் உதவிகரமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • இஸ்ரேல் சென்ற அதிபர் மேக்ரான் அந்நாட்டு அதிபர் ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    டெல் அவிவ்:

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் நாட்டில் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இஸ்ரேல் சென்றடைந்த மேக்ரான், அந்நாட்டு அதிபர் ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்தார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது அதிபர் இம்மானுவல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. இதில் இஸ்ரேல் தனியாக இல்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் ஹமாசுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போல, ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும். பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் இஸ்ரேல் தீர்வு கண்டால் மட்டுமே மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை ஏற்படும் என தெரிவித்தார்.

    • பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
    • பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்தார்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் ஜூலை 13, 14-ம் தேதிகளில் 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றார். பிரதமர் மோடி.

    நேற்று நடைபெற்ற பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர்.

    தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

    மேலும், பிரான்ஸ் நாட்டின் செனட் மற்றும் பார்லிமெண்ட் தலைவர்களை அவர் சந்தித்தார். பிரான்சில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். அதிபரின் மனைவி, அந்நாட்டு பாராளுமன்ற தலைவர், செனட் தலைவருக்கும் அவர் பரிசளித்தார்.

    இந்நிலையில், பிரான்சில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

    • இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.
    • பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார்

    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தேசிய தின விழாவில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில், பிளைபாஸ்ட் மூலம் பிரான்ஸ் தேசியக் கொடியின் வண்ணங்களில் வானத்தில் பறக்கவிட்டனர். இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர்.

    இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.

    மேலும் அதிபரின் மனைவிக்கு போச்சம்பள்ளி பட்டும், அந்நாட்டு பாராளுமன்ற தலைவருக்கு காஷ்மீரின் கார்ப்பெட்டும், செனட் தலைவருக்கு சந்தனத்தாலான யானைச் சிற்பத்தையும் பரிசளித்தார்.

    • பிரதமர் மோடி நேற்று அதிபர் மேக்ரான் அளித்த விருந்தில் கலந்து கொண்டார்
    • பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது வழங்கு கவுரவம்

    இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பங்கேற்றார். பிரான்சில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்தார். அந்நாட்டு பிரதமர், செனட்சபை தலைவர் ஆகியோரையும் சந்தித்தார்.

    இன்று பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் விழா கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மேக்ரான் ''உண்மை மற்றும் நட்பால் உருவான 25 வருட மூலோபாய நட்புறவை இந்தியா- பிரான்ஸ் கொண்டாடி வருகிறது. தற்போது அது இன்னும் வலிமையாவதற்கான நேரம் இது. அன்புற்குரிய மோடி, பாரீஸ்க்கு உங்களை வரவேற்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

    • பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த வரவேற்பைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

    தொடர்ந்து, இரவு 11 மணியளவில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.

    இதையடுத்து, பிரதமர் மோடி பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை அதிபர் இம்மானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார். அவரது மனைவி பிரிகர் மேக்ரானும் உடனிருந்தார். அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார். ராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும். இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

    • பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்றார். சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதற்கிடையே, இரவு 11 மணியளவில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை அதிபர் இம்மானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார். அவரது மனைவி பிரிகர் மேக்ரானும் உடனிருந்தார். இதையடுத்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.

    • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

    பீஜிங்:

    உக்ரைன் மற்றும் ரஷியா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி அரசும் ரஷியாவிடம் இருந்து சீனா விலகி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியதுடன், இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் சீனாவுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று திடீர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில், அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசினார்.

    இதுபற்றி மேக்ரான் கூறுகையில், அமைதியை கட்டமைப்பதில் சீனா ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனாலேயே நான் ஆலோசனை நடத்துவதற்காக சீனாவுக்கு வருகை தந்துள்ளேன் என தெரிவித்தார்.

    மேலும் வர்த்தகம், பருவநிலை மற்றும் உயிர்ச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசிக்க இருக்கிறேன் என மேக்ரான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • பிரான்ஸ் அதிபர் மேக்ரானும், பிரதமர் மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர்
    • உக்ரைன் பிரச்சினைக்கு மோடி தலைமையிலான இந்தியாவால் தீர்வு காணமுடியும் என்றார் பிரான்ஸ் அதிபர்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில் ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் எழுந்துள்ள கடினமான சூழலில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் வெற்றி பெற நாங்கள் உழைத்து வருகிறோம்.

    உங்கள் (பிரதமர் மோடி) தலைமையின் கீழ் இந்தியா, முழு உலகையும் அணிதிரட்டக்கூடிய ஒன்றாக இருக்க முடியும். அத்துடன் நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய பிரச்சினையை (உக்ரைன் விவகாரம்) தீர்க்க நமக்கு உதவ முடியும்.

    ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியாவின் ஒப்பந்தமானது, இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஆழமான உறவு மற்றும் நட்பில் விளைந்த மைல்கல் சாதனைகளில் ஒன்றாகும். ஏர்பஸ் மற்றும் சப்ரான் உள்பட அதன் பங்காளிகள் அனைத்தும், இந்தியாவுடன் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை உருவாக்க முழு அர்ப்பணிப்புடன் இருப்பதையும், விண்வெளி முதல் சைபர் வரை, பாதுகாப்பு முதல் கலாசாரம் வரை, ஆரோக்கியம் முதல் ஆற்றல் மாற்றம் வரை பல துறைகளில் இந்தியாவுடன் நாங்கள் சாதித்துள்ளோம் என்பதையும் இந்த சாதனை காட்டுகிறது.

    இந்தியாவிற்கு அதிநவீன மற்றும் மிகவும் திறமையான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், இந்தியாவில் தயாரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் பிரான்சிடம் ஆழமான உறுதிப்பாடு உள்ளது. பிரெஞ்சு தொழிற்துறைக்கு புத்துயிர் அளிப்பதில் எங்கள் அரசு முழு ஆற்றலையும் செலுத்தியுள்ளது. அத்துடன் அணுசக்தி, மைக்ரோசிப்ஸ், சைபர் மற்றும் பயோடெக் ஆகிய துறைகளில் ஒரு புதிய லட்சியத்தை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    • ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவிற்கு அதிபர் மேக்ரான் பாராட்டு
    • இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் தோற்றதால் மிகவும் ஏமாற்றமடைந்ததாக பேட்டி.

    லுசைல்:

    கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேரில் கண்டு ரசித்தார். தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர் ஆதரவு தெரிவித்தார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும், அதன் வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    இறுதி ஆட்டத்தில் தோற்றதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம், மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம் என்றும் அவர் கூறினார். முன்னதாக எம்பாப்பே உள்பட தோல்வியால் துவண்டிருந்த பிரான்ஸ் வீரர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். எங்கள் அனைவரையும், நீங்கள் மிகவும் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இறுதி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவின் ஆட்டம் அசாதாரணமானது என்றும், 24 வயதான அவர், ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் என்றும் மேக்ரான் தெரிவித்தார். இந்நிலையில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் வீரர்கள் இன்று கத்தாரில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். உலக கோப்பையை பெறும் வாய்ப்பை இழந்த போதிலும் பாரீசில் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என மேக்ரான் தெரிவித்துள்ளார். 

    • ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
    • இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.

    பாரிஸ்:

    இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து, ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.

    இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம். ஜி20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றியது! எனது நண்பர் நரேந்திர மோடி, உலகில் சமாதானத்தை உருவாக்கிட, அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    ×