search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity Board employee killed"

    மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 50). சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகத்தில் அக்கவுண்ட் சூப்பர்வைசவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா.

    நேற்று மாலை இருவரும் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    பொன்னேரியை அடுத்த சயனாவரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பக்தவச்சலத்தின் மீன் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.

    சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சித்ரா சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×