search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrical attack"

    தண்டராம்பட்டு அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள பாவப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 60) விவசாயி. இவரது மனைவி விருதாம்பாள் (55). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.

    நிலத்தில் பயிரிடபட்டுள்ள கரும்பிற்கு நீர் பாசனம் செய்வதற்காக தம்பதியினர் நேற்றிரவு நிலத்திற்கு சென்றனர்.

    அப்போது நிலத்தில் தாழ்வான பகுதியில் சென்ற உயர் அழத்த மின்சார கம்பி விருதாம்பாள் தலை மீது உரசியது இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து துடித்தார்.

    அதிர்ச்சியடைந்த சின்னதுரை அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தம்பதியினர் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மழைநீர் வடிகால் பணியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கீழ்ப்பாக்கம் தாசபிரகாஷ் சிக்னல் அருகே சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு முழுவதும் இதில் கம்பி கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை வேலை நடந்து கொண்டிருந்த போது திடீரென வடமாநில தொழிலாளி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இறந்து போன தொழிலாளியின்பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவரது உடல் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வீரகேரளம் அருகே உள்ள பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வர்குமார் (வயது 39). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பெருமாள் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள மோட்டார் சுவிட்சை போடுவதற்காக சென்றார்.

    அப்போது அதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஈஸ்வர்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடைக்கானலில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    கொடைக்கானல்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 50). இவர் தனது மனைவி சுப்புலெட்சுமி (45), மகன் பாண்டியன் (25) ஆகியோருடன் கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் தங்கி பிச்சை என்பவரது எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தார்.

    இன்று பாண்டியனுக்கு மதுரையில் பெண் பார்க்க செல்வதாக இருந்தது. அதற்காக அதிகாலையில் ரவி எழுந்து குளித்து விட்டு அருகில் இருந்த கொடி கம்பத்தில் துணியை எடுத்துள்ளார்.

    அவர்கள் தங்கியிருந்த குடிசை வீட்டில் இருந்து மின்சார கம்பி அறுந்து தொங்கியதை கவனிக்காமல் இரும்பு கம்பியை தொட்டதால் ரவி மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சத்தம் போட்டு கீழே விழுந்தார். உடனே பாண்டியன் தனது தந்தையை தூக்கி விட முயன்ற போது அறுந்து கிடந்த மின் கம்பி அவரது காலில் சுற்றியது.

    இதில் தந்தை, மகன் ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்ததும் சுப்புலெட்சுமி கதறி அழுதார். தன் மகனுக்கு பெண் பார்க்க புறப்பட இருந்த நிலையில் கணவனும் மகனும் பலியானதை பார்த்து கண்ணீர் விட்டார்.

    பின்னர் இறந்தவர்களின் உடல்கள் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு அருகே மாடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே பேய்கரம்பன்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள வயலுக்கு தனது மாடுகளை ஓட்டி சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அப்பகுதியில் புயலால் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தடைபட்டுள்ள நிலையில் ஆறுமுகம் எப்படி மின்சாரம் தாக்கி இறந்தார் என்று மின்வாரியத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விக்கிரமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது27). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

    இவர் பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட ஜெயபாண்டியை அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் ஜெயபாண்டி வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக ஜெயபாண்டி தாய் பாப்பம்மாள் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 65). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கண்ணாடி கடைக்கு சென்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த மின்சார விளம்பர பலகையை தொட்டார். அதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் உடல் கருகி உயிருக்கு போராடிய சின்னராஜை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சின்னராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலாந்துறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள இழுவை கல்லை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் போலுவாம்பட்டி- செம்மேடு ரோட்டில் தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்டத்தில் உள்ள மின்சார வேலியை தொட்டார். கண்இமைக்கும் நேரத்தில் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கு வீசியது. இதில் சம்பவஇடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி இறந்த விக்னேசின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூரில் இன்று நடந்த கோவில் திருவிழாவில் சாமி தேர் டிரான்ஸ்பார்மரில் உரசியதால் மின்சாரம் தாக்கி முதியவர் இறந்தார். 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை சுந்தரேஸ்வரர் கோவில் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 2 நாட்களாக வெகு விமரிசையாக நடந்தது.

    இன்று காலை சாமி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் அம்மன் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுந்தரேஸ்வரர் கோவில் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே வந்த போது தேர் டிரான்ஸ்பார்மரில் உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது. தீப்பொறியுடன் புகை மண்டலம் எழுந்தது.

    பக்தர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். தேரை அருகில் இருந்து பிடித்து கொண்டிருந்த தயாளன் (வயது 67). என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் இறந்தார். சீனிவாசன், பரசுராமன், சதீஷ்குமார், முருகன், சுந்தர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்தில் நின்று அழுதபடி கூச்சலிட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.சீனிவாசன் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தெற்கு போலீசார் பலியான தயாளன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விழாக்கோலம் பூண்டிருந்த அப்பகுதி இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியது.

    மின் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் ஆடு மேய்த்த பெண் இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகில் உள்ள கருவனூரை சேர்ந்த மலைச்சாமி மனைவி கச்சம்மாள் (வயது 50). ஆடு மேய்க்கும் பெண்.

    இவர் நேற்று மாலை அங்குள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கச்சம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக மலைச்சாமி எம்.சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×