search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric vehicle"

    • ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
    • 2017 ஆம் ஆண்டு ஒகினவா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் முன்னணி இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒகினவா உற்பத்தி ஆலையில் இருந்து 2.5 லட்சமாவது வாகனம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒகினவா நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் 2.5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது.

    2015 ஆம் ஆண்டு இந்தியாவில் பணிகளை துவங்கிய ஒகினவா 2017 ஆண்டு சந்தையில் களமிறங்கி தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த நிறுவனத்தின் ஒகினவா ரிட்ஜ் மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன்பின் ஒகினவா பிரைஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

     

    மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மாணியம் பெற்ற முதல் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக ஒகினவா ஆட்டோடெக் உள்ளது. ஒகினவா நிறுவனம் தற்போது ஐபிரைஸ் பிளஸ், ஐபிரைஸ் ப்ரோ, லைட் மற்றும் ஆர்30 போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 2020 வாக்கில் ஒகினவா நிறுவனம் இந்தியவின் முதல் கஸ்டமைசேஷன் வசசதி கொண்ட B2B எலெக்ட்ரிக் இருசக்கர வானத்தை 2020 வாக்கில் அறிமக செய்தது.

    2021 ஆண்டு இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்த ஒகினவா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒகினவா கேலக்ஸி ஸ்டோர்களை திறந்தது. இந்திய சந்தையில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் நிறுவனம், விற்பனையில் இத்தனை இலக்கை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஒகினவா பெற்று இருக்கிறது.

    • மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
    • இந்திய பயணத்தின் போது தன்னுடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆனந்த் மஹிந்திராவை பில் கேட்ஸ் சந்தித்தார்.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த பில் கேட்ஸ் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற ஆனந்த் மஹிந்திராவை பில் கேட்ஸ் சந்தித்தார்.

    இருவரின் சந்திப்பின் போது குழுக்களும் உடனிருந்தனர். ஐடி மற்றும் வியாபாரம் கடந்து இருவரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பில் கேட்ஸ் இந்திய பயணத்தின் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் பில் கேட்ஸ் மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் காட்சிகள் உள்ளன.

     

    இன்ஸ்டாகிராம் பதிவில், "புதுமைகளை படைப்பதில் இந்தியாவின் ஆசை எப்போதும் ஆச்சரியப்படுத்தாமல் இருந்தது இல்லை. நான் ஒரு எலெக்ட்ரிக் ரிக்ஷாவை ஓட்டினேன், அது 131 கிமீ (சுமார் 81 மைல்கள்) ரேன்ஜ் கொண்டிருப்பதோடு, அதிகபட்சம் நான்கு பேருடன் பயணம் செய்ய உகந்தது. போக்குவரத்து துறையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மஹிந்திரா போன்ற நிறுவனங்களை பார்ப்பது ஊக்கமளிக்கும் விஷயமாக இருக்கிறது. " என குறிப்பிட்டுள்ளார்.

    இதே போன்று இருவரின் சந்திப்பு குறித்து ஆனந்த் மஹிந்திராவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "பில் கேட்ஸ்-ஐ மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. மேலும், வரவேற்கும் வகையில் எங்களது குழுக்கள் இணைந்து பேசிய விவகாரங்களில் ஐடி மட்டுமின்றி எந்த வியாபாரத்திலும் எப்படி ஒருங்கிணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதை சார்ந்தே இருந்தது. (தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த சந்திப்பு லாபகரமாக இருந்தது, எனக்கு அவர் கையொப்பம் இட்ட புத்தகம் இலவசமாக கிடைத்தது)," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
    • புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் ஹீரோ கூட்டணி அமைக்கிறது.

    இந்திய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் ஜீரோ நிறுவனம் பவர்டிரெயின்களை உருவாக்குகிறது. உற்பத்தி, உதிரிபாகங்கள் மற்றும் விளம்பர பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் மேற்கொள்ள இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக குழு ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் 60 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 491 கோடியை முதலீடு செய்ய அனுமதி அளித்தது.

     

    எனினும், இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் வாகனங்கள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சர்வதேச வலைத்தளத்தில் ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு மாடல்களை பட்டியலிட்டுள்ளது. இவற்றில் ரோட்ஸ்டர், ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் அட்வென்ச்சர் பிரிவு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இடம்பெற்றுள்ளன.

    இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வினியோகம் செய்யும் பணிகளை துவங்கிவிட்டது. இதுதவிர பொது சார்ஜிங் உள்கட்டமைப்புகளையும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. முதற்கட்டமாக இந்நிறுவனத்தின் சார்ஜிங் சேவைகள் பெங்களூரு, டெல்லி மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் செயல்படுகிறது.

    தற்போது பெங்களூரு, டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிட்டத்தட்ட 300 சார்ஜிங் பாயிண்ட்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டு இருக்கிறது. 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உள்ளது.
    • டாடா நெக்சான் EV சீரிஸ் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய விற்பனையில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் டியாகோ EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இருக்கும் டாடா மோட்டார்ஸ், தனது வாகன உற்பத்தியை இருமடங்கு அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் 50 ஆயிரம் யூனிட்களை கடக்க இருக்கிறது.

    அந்த வகையில், அடுத்த சில மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபரத்தின் மூலம் பில்லியன் டாலர் வருவாய் எட்டி விடும். நெக்சான் மற்றும் டிகோர் EV மாடல்களின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆண்டிற்கு 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனிட்கள் வரை எட்டியிருக்கிறது. தற்போது 2024 நிதியாண்டு வாக்கில் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த 12-இல் இருந்து 18 மாதங்களுக்குள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவகதாக தகவல் வெளியாகி உள்ளது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையை சீராக வைத்திருக்கும் பட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் கோடிகளை வருவாயாக ஈட்ட முடியும்.

    இது மூன்று ஆண்டுகளுக்கு முன் கார் வியாபாரத்தில் இருந்து கிடைத்த வருவாய்க்கு இணையானது ஆகும். டியாகோ EV மாடலின் விலை அறிவிக்கப்பட்ட பத்தே நாட்களில், இந்த காரை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர். இதுதவிர 50 ஆயிரம் பேர் டியாகோ EV மீது விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 23 சதவீதம் பேர் முதல் முறை கார் வாங்குவோர் ஆவர்.

    • மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
    • சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக பிரிட்டன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது.

    இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா தனது பொலிரோ பிக்கப் டிரக்-இன் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

    டீசர் வீடியோவின் படி எலெக்ட்ரிக் பொலிரோ பிக்கப் டிரக் முழுக்க லைட்டிங் செய்யப்பட்டு சில பாகங்கள் மட்டும் காட்சியளிக்கிறது. இதன் டிசைன் அம்சங்கள் நீல நிற லைட்டிங் கொண்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் பொலிரோ போன்றே இருக்கிறது. இதில் சதுரங்க வடிவம் கொண்ட ஹெட்லைட் வழங்கப்படுகிறது.


    மேலும் இந்த வாகனத்தில் பழைய மஹிந்திரா லோகோ இடம்பெற்று இருக்கிறது. புது எலெக்ட்ரிக் பொலிரோ மாடல் பிக்கப் வாகனங்களின் எதிர்காலம் என டீசரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புது பொலிரோ பிக்கப் எலெக்ட்ரிக் மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

    தற்போது மஹிந்திரா நிறுவனம் ஐந்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயணிகள் வாகன பிரிவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது எலெக்ட்ரிக் வாகனங்கள் EV கோ நிறுவனத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயணிகள் வாகனம் மட்டுமின்றி பிக்கப் டிரக் மற்றும் வர்த்தக வாகனங்களையும் எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கும் பணிகளை மஹிந்திரா துவங்கி விட்டது. அந்த வரிசையில், பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக், வர்த்தக பிரிவில் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும்.

    • ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
    • மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், 532 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது

    பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, மத்திய அரசு கடந்த 2015 ஆண்டு ஃபேம் (FAME)இந்தியா என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

    தற்போது, இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ரூ.1000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா திட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 520 மின்னூட்டல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தான் பிரபல அம்பாசடர் மாடல்களை விற்பனை செய்து வந்தது.
    • இந்த நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருக்கிறது.

    இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்த அம்பாசடர் மாடல்களை விற்பனை செய்து வந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு புது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துவங்கும் போது இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 400 ஊழியர்களை பணி அமர்த்த முடிவு செய்து உள்ளது. தற்போது இரு நிறுவனங்கள் இணைந்து நிதி சார்ந்த திட்டமிடல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவு பெற இரண்டு மாதங்கள் ஆகும்.


    இதைத் தொடர்ந்து இரண்டு நிறுவனங்களும் இணைந்து முதலீட்டை ஈர்ப்பது, புது நிறுவனத்தை துவங்குவது என பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள இருக்கிறது. இது சார்ந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வாக்கில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிகரமாக கூட்டணி அமைத்த பின் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள மேலும் இரண்டு காலாண்டுகளே தேவைப்படும்.

    அந்த வகையில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் ஐரோப்பிய நிறுவன கூட்டணியில் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அடுத்த நிதியாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ×