search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric motorcycle"

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
    • விடா பிராண்டிங்கில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவாக விடா பிராண்டு உருவாக்கப்பட்டது. ஹீரோ விடா பிராண்டிங்கின் கீழ் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

    விடா பிராண்டில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ஸ்கூட்டரை தொடர்ந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளும் விடா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது.

    "ஒட்டுமொத்த சந்தையிலும் முதலில் ஸ்கூட்டர் அறிமுகம் செய்வதே வழக்கமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைவரும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், சிலர் மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளனர். அந்த வகையில், நாங்கள் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்வதை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். நிச்சயமாக மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்கிறோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சல் தெரிவித்து இருக்கிறார்.

    ஹீரோ விடா V1 மாடல் இந்திய சந்தையில் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஓவர் தி ஏர் அப்டேட்கள், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், கீலெஸ் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், எஸ்ஒஎஸ் அலெர்ட், டு-வே திராட்டில் என ஏராள அம்சங்கள் உள்ளன. இத்துடன் இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் ஆக்சோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த எலெக்ட்ரிக் பைக் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் ஆக்சோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹாப் ஆக்சோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஸ்டாண்டர்டு மற்றும் X என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரண்டு வேரியண்ட்களிலும் IP67 தர சான்று, 3.75 கிலோவாட் பேட்டரி, மல்டி மோட் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங், 4ஜி கனெக்டிவிட்டி, பிரத்யேக மொபைல் செயலி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் செயலியில் ஸ்பீடு கண்ட்ரோல், ஜியோ பென்சிங், ஆண்டி தெப்ட் சிஸ்டம் மற்றும் ரைடு விவரங்களை பார்க்க முடியும். இதன் பேஸ் வேரியண்ட்- இகோ, பவர் மற்றும் ஸ்போர்ட் மூன்று ரைடு மோட்களை கொண்டிருக்கிறது.

    ஹாப் ஆக்சோ X வேரியண்டில் கூடுதலாக டர்போ மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தை வெறும் நான்கே நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் ஆகும்.

    அறிமுக நிகழ்வுக்கு முன்பாகவே இந்த மோட்டார்சைக்கிளை வாங்க சுமார் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனர், தலைமை செயல் அதிகாரி கேத்தன் மேத்தா தெரிவித்துள்ளார். புதிய ஹாப் ஆக்சோ விற்பனை அந்நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர் மற்றும் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    • டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராடோஸ் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 75 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கட்டணத்தை அதிரடியாக குறைத்து இருக்கிறது. அந்த வகையில் டார்க் கிராடோஸ் மாடலை முன்பதிவு செய்வோர் ரூ. 75 மட்டுமே செலுத்தினால் போதும். இந்த சலுகை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பின் முன்பதிவு கட்டணம் ரூ. 999 என மாறி விடும்.

    இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் கிராடோஸ் R என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    கடந்த மாதம் தான் டார்க் கிராடோஸ் மாடலுக்கான வினியோகம் இந்தியாவில் துவங்கியது. முதற்கட்டமாக 20 யூனிட்கள் டார்க் மோட்டார்ஸ் தலைமையகமான பூனேவில் வினியோகம் செய்யப்பட்டன. அம்சங்களை பொருத்தவரை டார்க் கிராடோஸ் இரு வேரியண்ட்களிலும் வேறுபடுகிறது.

    இதன் R வேரியண்டில் 9 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 105 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் ஸ்டாண்டர்டு வேரியண்ட் 7.5 கிலோவாட் மோட்டார் கொண்டுள்ளது. இது அதிகபட்சம் 28 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுகத்தும். இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் செல்லும்.

    இரு வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு இருக்கும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 120 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. தற்போது டார் கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் பூனே, மும்பை, டெல்லி, சென்னை மற்றும் ஐதராபாத் என ஐந்து நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

    • பஜாஜ் மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணியில் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
    • இந்த மாடல் இந்தியாவிலேயே உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

    பஜாஜ் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை தாக்கலின் போது இந்த தகவலை ராகேஷ் ஷர்மா தெரிவித்தார். முதல் மாடலே ஹை-எண்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என ராகேஷ் ஷர்மா குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில், புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 390 சீரிசுக்கு இணையான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.


    புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பற்றிய இதர விவரங்கள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். எனினும், இந்த மாடலின் ஆயத்த பணிகள் தற்போது தான் துவங்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவை பொருத்தவரை சர்வதேச மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தாத நிலையை கடைபிடிக்கின்றன. எனினும், அனைத்து நிறுவனமும் திடமான எலெக்ட்ரிக் பைக்கை வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டம் கொண்டுள்ளன.

    இது தவிர பஜாஜ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் ஹஸ்க்வர்னா பிராண்டிங் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் ஹஸ்க்வர்னா வெக்டார் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த மாடல் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டு, மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
     

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அடுத்த ஆண்டு முதல் உருவாக்க இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். 

    முன்னதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் உருவாக்க இருப்பதாக அகர்வால் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது எலெக்ட்ரிக் பைக் மற்றும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். 

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சமீபத்தில் டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் டெஸ்ட் ரைடு செய்யப்படுகின்றன. ஏற்கனவே ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸ்ட் ரைடு செய்ய வழங்கப்படுகிறது.
    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது விற்பனையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது.


    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் கொல்கத்தா, கோயம்புத்தூர், மதுரை, விசாகபட்டினம் மற்றும் விஜய்வாடா என ஐந்து புதிய நகரங்களில் விற்பனையை நீட்டிக்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இதன் மூலம் ரெவோல்ட் மோட்டார்ஸ் நாடு முழுக்க 14 முக்கிய நகரங்களில் மொத்தம் 19 விற்பனை மையங்களை கொண்டிருக்கும்.

    முன்னதாக அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மூன்று நகரங்களில் விற்பனையை துவங்க இருப்பதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் அறிவித்தது. தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வருவதை ஒட்டி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. 

     ரெவோல்ட் மோட்டார்சைக்கிள்

    ரெவோல்ட் ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் 72 வோல்ட், 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    லைட்னிங் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வரை செல்லும் புதிய பேட்டரி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #LightningMotorcycles
    பேட்டரி வாகனங்கள் என்றாலே மெதுவாகச் செல்லும் என்ற தத்துவத்தை உடைத்து சூப்பர் மோட்டார்சைக்கிளை உருவாக்கியுள்ளது. லைட்னிங் என்ற பெயரில் வந்துள்ள இந்த பேட்டரி மோட்டார்சைக்கிள் வழக்கமான பெட்ரோலில் இயங்கும் சூப்பர் பைக்குகளைப் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறது.

    அதேபோன்று செயல்பாட்டிலும் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் கார்பன் எடிஷன் மாடல் விலை ரூ.13.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு உரித்தான அனைத்து சிறப்பம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன. ஏரோ டைனமிக் வடிவமே சீறிப் பாய்வதை உறுதி செய்வதாக உள்ளது. இதில் லிக்விட் கூல்டு ஏ.சி. இன்டக்‌ஷன் மோட்டார் உள்ளது. இது 90 பி.ஹெச்.பி. திறனும் 244 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இதன் கார்பன் எடிஷன் மாடல் 120 பி.ஹெச்.பி. பவர், 244 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ஸ்டாண்டர்டு மாடல் மணிக்கு அதிகபட்சம் 217 கி.மீ. வேகத்திலும், கார்பன் எடிஷன் மாடல் மணிக்கு 241 கி.மீ வேகத்திலும் சீறிப் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் 3 வெவ்வேறு அளவுகளிலான பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. 10 கிலோவாட், 15 கிலோவாட், 20 கிலோவாட் பேட்டரிகள் இதில் உள்ளன.


    இதில் 10 கிலோவாட் பேட்டரி வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 113 கி.மீ. தூரம் வரை செல்லும். 15 கிலோவாட் பேட்டரியை பயன்படுத்தினால் அது 169 கி.மீ. முதல் 241 கி.மீ. தூரம் வரை சென்றுள்ளது. 20 கிலோவாட் பேட்டரி 241 கி.மீ முதல் 322 கி.மீ. தூரம் வரை பயணித்துள்ளது.

    இந்த மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கும் மோட்டார் மணிக்கு 160 கி.மீ. வேகத்தை 20 வினாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் எடிஷனில் ஓஹ்லின்ஸ் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பிரெம்போ பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான லாகிங் வசதி உள்ளது.

    தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் பேட்டரி பைக் விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கிறது. #LightningMotorcycles
    ஜீரோ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மோட்டார்சைக்கிளின் விவரங்கள் தெரியவந்துள்ளது. #Electric Motorcycle



    சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் மோட்டார்சைக்கிளை கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பெயர் ஜீரோ. அதாவது எரிபொருளாக பெட்ரோல் தேவையில்லை, புகை கக்காது.

    இதனாலேயே இதற்கு ஜீரோ மோட்டார் சைக்கிள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேட்டரி மோட்டார்சைக்கிளில் புரட்சியை இது ஏற்படுத்தும் என்று நிறுவனம் உறுதிபடக் கூறியுள்ளது.

    ஜீரோ எஸ்.ஆர்.எப். என இதற்கு பெயரிட்டுள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் இது 35 சதவீதம் கூடுதல் சக்திகொண்டது. ஸ்டைலான வடிவமைப்பு, கண்ணைக் கவரும் நிறம் ஆகியவற்றுடன் பலவித பேட்டரி ஆப்ஷன்களைக் கொண்டதாக இது அறிமுகமாகிறது.



    உயர் திறன் கொண்ட பேட்டரி மாடல் மற்ற மாடல் மோட்டார்சைக்கிள்களை விட 50 கிலோ வரை எடை கூடுதலாகக் கொண்டிருக்கும். ஏற்கனவே உள்ள ஜீரோ எஸ்.ஆர். மாடலில் பேட்டரி அதன் பெட்ரோல் டேங்க் வடிவிலான முன்பகுதியில் உள்ளது. இந்த பேட்டரி திறனை 3.6 கிலோவாட் வரை அதிகரிக்க முடியும்.

    இது 70 ஹெச்.பி. திறனை வெளியிடுவதோடு 157 என்.எம். டார்க் திறனை வெளியிடக் கூடியது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 359 கி.மீ. தூரம் வரை செல்லும். பிப்ரவரி 25 ஆம் தேதி அமெரிக்காவில் அறிமுகமாக இருக்கும் இந்த மோட்டார் சைக்கிள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×