search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Bike"

    • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழ் நாட்டின் செய்யாறு பகுதியில் புதிய உற்பத்தி ஆலை கட்டமைக்க இருப்பதாக கூறப்பட்டது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் எலெக்ட்ரிக் மாடல்களும் அடங்கும். பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் அனைத்து மாடல்களையும் களமிறக்கி வரும் ராயல் என்பீல்டு, எலெக்ட்ரிக் வாகனங்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    சில மாதங்களுக்கு முன், எலெக்ட்ரிக் ஹிமாலயன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இது தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்றும் கூறப்பட்டது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை பொருத்தவரை முதலில் அதிக விலை கொண்ட மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

     

    பின் இதைத் தொடர்ந்து பிரத்யேக மோட்டார்சைக்கிள், இறுதியில் குறைந்த விலை பைக் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இவை வரும் ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகமாகும். தற்போது இருக்கும் ராயல் என்பீல்டு மாடல்களின் அடிப்படையில், இந்த திட்டம் நிறுவன மாடல்களுக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு உருவாக்கி வரும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் L1A எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் மற்றொரு பிளாட்ஃபார்மை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த பிளாட்ஃபார்ம் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை.

    கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான ஸ்டார்க்-இல் ராயல் என்பீல்டு நிறுவனம் கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இந்த திட்டம் அமலுக்கு வர அதிக காலம் ஆகும் என்றே தெரிகிறது.

    Photo Courtesy: Autocar 

    • ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் RV400 மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 499 ஆகும்.
    • ரெவோல்ட் RV400 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி, 5 கிலோவாட் பவர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது RV400 எலெக்ட்ரிக் பைக் மாடலுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது. புதிய ரெவோல்ட் RV400 முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாடலுக்கான வினியோகம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வினியோகம் செய்யப்படுகிறது.

    சமீபத்தில் தான் ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தை ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனம் முழுமையாக விலைக்கு வாங்கியது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரெவோல்ட் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

     

    ரெவோல்ட் RV400 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி, 5 கிலோவாட் பீக் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 54 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் யுஎஸ்டி ஃபோர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.

    இத்துடன் முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் CDS வழங்கப்பட்டுள்ளது. ரெவோல்ட் RV400 மாடல் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்கிறது. இதில் உள்ள பேட்டரியை 4.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். ரெவோல்ட் RV400 மாடல்- ரெவோல்ட், ரிபெல், ரேஜ் மற்றும் ரோர் என நான்கு வித சத்தங்களை வெளிப்படுத்துகிறது.

    ரைடிங் மோட்களை பொருத்தவரை இகோ, ஸ்போர்ட் மற்றும் பவர் என மூன்று வித ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மற்ற அம்சங்களாக எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் கன்சோல், கீலெஸ் இக்னிஷன், மாற்றக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. தற்போது ரெவோல்ட் RV400 விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க பிரத்யேக குழுக்களை நியமித்து இருக்கிறது.
    • இந்த குழுவில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் மூத்த தொழில்நுட்ப அதிகாரி இடம்பெற்று இருக்கிறார்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனக்கென சொந்த எலெக்ட்ரிக் வாகன பிரிவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 18 முதல் 24 மாதங்களில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் மூத்த தொழில்நுட்ப அதிகாரி உமேஷ் கிரிஷ்னப்பாவை நியமித்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கென பிரத்யேக குழு இந்தியா மற்றும் லண்டனில் செயல்பட்டு வருகிறது என்றும் இந்த குழு எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது குறித்த திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 100 முதல் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.

    இந்த முதலீட்டின் மூலம் பிரத்யேக பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் தற்போதைக்கு L என நிறுவனத்திற்குள் அழைக்கப்படுகிறது. சர்வதேச வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் ஏராளமான வாகனங்களை உருவாக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் சந்தையில் களமிறங்குவதில் இருந்து ஆண்டுக்கு 1.2 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 1.8 லட்சம் வாகனங்களை உள்ளடக்கிய வியாபாரம் செய்ய ராயல் என்பீல்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்வதேச வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு புது பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த 12 மாதங்களில் இந்த பிளாட்பார்மிற்கான ப்ரோடோடைப் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வாகனத்தை தயார்படுத்தி, அடுத்த ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

    • சுசுகி நிறுவனம் எட்டு புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருகிறது.
    • சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக எலெக்ட்ரிக் அக்சஸ் மாடல் இருக்கலாம்.

    சுசுகி நிறுவனம் 2030 ஆண்டு வரையிலான சர்வதேச செயல் திட்டம் மற்றும் வாகனங்கள் வெலியீடு திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் சில சுவாரஸ்யமான எலெர்ட்ரிக் மாடல்களும் இடம்பெற்றுள்ளன. சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்டிரீட் மாடலை டெஸ்டிங் செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், அக்சஸ் எலெக்ட்ரிக் மாடலே சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    அக்சஸ் மாடல் சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும். மேலும் இது பர்க்மேன் ஸ்டிரீட் IC என்ஜின் வேரியண்டை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. அந்த வகையில் இது சுசுகியின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும். இதோடு எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்டிரீட் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

    சுசுகியின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் 2030 ஆண்டிற்குள் மொத்தம் எட்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியாகும் போதிலும், தொடர்ந்து IC என்ஜின் வாகனங்கள் பிரிவிலும் சுசுகி கவனம் செலுத்த இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் IC என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முறையே 75:25 முறையில் அறிமுகமாகிறது.

    மோட்டார்சைக்கிள் பிரிவில் சுசுகி நிறுவனம் எந்த மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், ஜிக்சர் சீரிஸ் தான் எலெக்ட்ரிக் வடிவம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக S1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூவ் ஒஎஸ் 2 வெளியிட்டது.
    • 2023 ஆண்டு இந்திய சந்தையில் மேலும் புது வாகனங்களை அறிமுகப்படுத்த ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டு வருகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு புது மைல்கல்களை இந்த ஆண்டு எட்டியது. முன்னதாக ஒலா S1 ஏர் பெயரில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூவ் ஒஎஸ் 2 அப்டேட்டை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டது. இதுதவிர இந்திய விற்பனையில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது. சமீபத்தில் மூவ் ஒஎஸ் 3 அப்டேட்டை ஒலா எலெக்ட்ரிக் தற்போது வெளியிட்டு வருகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்கு வந்துவிட்ட நிலையில், ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் 2023 ஆண்டுக்கான ஒலா எலெக்ட்ரிக் நிறுவன திட்டங்கள் பற்றி தெரிவித்து இருக்கிறார். இது குறித்த பதிவில், புது எலெக்ட்ரிக் வாகனங்களை 2023 ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மாஸ் மார்கெட் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் மற்றும் பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவைகளை 2023 வாக்கில் அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    "இருசக்கர வாகன உற்பத்தி சீராக நடைபெற்று வருவது, மிக முக்கிய எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பங்கள், மென்பொருள், எலெக்டிரானிக்ஸ், பேட்டரி மற்றும் பவர்டிரெயின் உள்ளிட்ட பிரிவுகளில் அதிக போட்டியை ஏற்படுத்தும் வாய்ப்பை கொடுக்கும். இதன் மூலம் உலக தரம் மிக்க நான்கு சக்கர வாகனங்களை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலை பிரிவில் அறிமுகம் செய்ய வழி வகுக்கும்," என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

    இதுதவிர புது எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீட்டு காலம் பற்றியும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். அதில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 2027 இறுதியில் ஆறு வெவ்வேறு வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்திருக்க ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. புது வாகனங்கள் மட்டுமின்றி, ஒலா எலெக்ட்ரிக் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகள் பற்றியும் தெரிவித்துள்ளார்.

    • ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது.
    • புதிய எலெக்ட்ரிக் பைக் அதிக சக்திவாய்ந்த பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது ரோஸ் பரேட்-க்காக புது டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரில் இருப்பது ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது. ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன திட்டம் அனைவரும் அறிந்ததே. இது பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி விட்டன. இதில் சர்வதேச சந்தையில் ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கும் பல்வேறு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விவரங்கள் இடம்பெற்று இருந்தன.

    இதே தகவல்களில் இந்தியாவுக்காக ஆக்டிவா எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹோண்டா அறிமுகம் செய்ய இருப்பதும் அம்பலமானது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் சந்தையில் பெருமளவு வாடிக்கையாளர்களை குறிவைத்து வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இவை அதிக செயல்திறன் மற்றும் மகிழ்ச்சியை வழங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என தெரிகிறது.

    அமெரிக்க சந்தைக்காக திட்டமிடப்பட்டு இருக்கும் புது எலெக்ட்ரிக் பைக் மிட்-பெர்ஃபார்மன்ஸ் ஸ்டிரீட் மாடல் ஆகும். இந்த மாடல் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதில் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார், 150 முதல் 200 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    • முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாக பல ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்து தற்போது வெளியான தகவல்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் ஆரம்பகட்ட எலெக்ட்ரிக் வாகன ப்ரோடோடைப் மாடல்களை இந்தியாவில் சோதனை செய்ய ராயல் என்பீல்டு துவங்கி இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் இந்த எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடல் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை துவங்கி உள்ள நிலையில், தற்போது விற்பனை செய்து வரும் சில மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கடந்த ஆறு முதல் எட்டு மாத காலமாக முதலீடு செய்து வருவதாக ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது. இதற்காக ப்ரிட்டன் மற்றும் இந்தியாவில் இருந்து புது திறமையாளர்களை பணியில் சேர்த்து இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை முழுமையாக அறிந்து கொள்ளும் முன் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் எண்ட்ரி லெவல் பிரிவில் எந்த மாடல்களையும் ராயல் என்பீல்டு விற்பனை செய்யவில்லை. அந்த வகையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிங்கும் இந்திய நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு இணைய இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை கவரும் மாடல்களை எதிர்பார்க்கிறது. எனினும், ராயல் என்பீல்டு இந்த பிரிவில் எந்த மாடலையும் கொண்டிருக்கவில்லை.

    • அல்ட்ராவைலட் நிறுவனத்தின் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்பதிவு விவரம் வெளியாகி உள்ளது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனம் அல்ட்ராவைலட், தனது F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அடுத்த மாதம் இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. இந்த நிலையில், அல்ட்ராவைலட் F77 மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக அல்ட்ராவைலட் F77 மாடல் இந்தியாவில் நவம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருந்தது.

    மேலும் புதிய அல்ட்ராவைல்ட F77 மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 23 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அல்ட்ராவைலட் F77 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ராவைலட் F77 பல்வேறு காரணங்களுக்காக விற்பனைக்கு வராமல் இருந்தது. இந்த நிலையில், இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.

    முந்தைய திட்டப்படி அல்ட்ராவைலட் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் இரண்டாம் தலைமுறை மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருந்தது. எனினும், இதன் முதல் தலைமுறை மாடலே அடுத்த மாதம் தான் விற்பனைக்கு வர இருக்கிறது. 2019 அறிமுகம் செய்யப்பட்ட மாடலை விட தற்போது விற்பனைக்கு வரும் மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    2019 மாடலுடன் ஒப்பிடும் போது, F77 மாடலில் தற்போது புதிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் செல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 130 முதல் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருந்தது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • புது எலெக்ட்ரிக் வாகனத்திற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என ஈச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்தா லால் தெரிவித்து இருக்கிறார்.

    "எலெக்ட்ரிக் வாகன பிரிவு குறித்த திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்த மிக எளிய வழியை தேர்வு செய்ய மாட்டோம். இதன் பின்னணியில் அதிக வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன," என்று அவர் தெரிவித்தார். அந்த வகையில் ராயல் என்பீல்டு பெயரில் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக அதிக ஆண்டுகள் ஆகும் என்றே தெரிகிறது.


    "தற்போது ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சில பிரச்சினைகளை சரி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் இப்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. நகர பயன்பாட்டுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்."

    "தற்போதைய பிளாட்பார்மில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கும் எண்ணம் இல்லை. இது முழுக்க ராயல் என்பீல்டு மாடலாகவே இருக்கும். அறிமுகமாகும் போது சிறப்பான ஒன்றாக இருப்பதோடு, அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையிலஅ இருக்கும்," என சித்தார்தா  லால் தெரிவித்து இருக்கிறார்.

    • பைக்குகளுக்கு சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பற்றி பைக்குகள் எரிந்து நாசாமானது.

    மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது இ பைக் ஷோரூம். இங்கு, ஏராளமான இ பைக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகின. நேற்று இரவு பைக்குகளுக்கு சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

    விபத்து குறித்து தீயணபை்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பைக்குகள் சார்ஜ் செய்வதற்காக இணைக்கப்பட்டிருந்தன. அப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பிடித்து பைக்குகள் எரிந்து நாசாமானது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.வி.எஸ். மற்றும் பி.எம்.டபிள்யூ. இணைந்து எலெக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செய்கின்றன.
    • டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டி.வி.எஸ். நிறுவனம் தனது எதிர்கால எலெக்ட்ரிக் வாகன திட்டம் பற்றி அறிவித்து இருக்கிறது.

    தற்போது டி.வி.எஸ். நிறுவனம் ஐகியூப் பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்துடன் இணைந்து 15 கிலோவாட் ஹவர் ரேன்ஜ் பிரிவில் புது மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இத்துடன் 5 முதல் 25 கிலோவாட் ஹவர் ரேன்ஜில் எலெக்ட்ரிக் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் டி.வி.எஸ். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.


    டி.வி.எஸ். மட்டுமின்றி அதன் துணை நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் ஒன்றை உருவாக்கி வருகிறது. இது பிரீமியம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அறிமுகமாகிறது. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் ஸ்விஸ் இ மொபிலிட்டி குழுமத்தை விலைக்கு வாங்கி இருந்தது. இதை கொண்டு எலெக்ட்ரிக் வாகன வளர்ச்சியில் டி.வி.எஸ். கவனம் செலுத்தும் என தெரிகிறது.

    முன்னதாக டி.வி.எஸ். நிறுவனம் ஜியோ பி.பி. உடன் இணைந்து நாடு முழுக்க சார்ஜிங் மையங்களை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட முடிவு செய்தது. இரு நிறுவனங்கள் இணைந்து வழக்கமான AC சார்ஜிங் நெட்வொர்க் மட்டுமின்றி DC பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்-யையும் அமைக்க உள்ளன.

    • புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கியது.
    • இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

    பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் ஈவ்ட்ரிக் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஈவ்ட்ரிக் ரைஸ் என அழைக்கப்படும் எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.


    புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஈவ்ட்ரிக் ரைஸ் மாடலில் 2000 வாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 70v/40ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

    ஈவ்ட்ரிக் ரைஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரெட் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    ×