search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly death"

    ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சங்ககிரியை அடுத்த வீரபாண்டிய ரெயில் நிலையத்திற்கும் மகுடஞ்சாவடி ரெயல் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரெயில் மோதி இறந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

    அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ஓடும் ரெயிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்றும் தெரியவில்லை.

    கிருமாம்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

    பாகூர்:

    சிதம்பரத்தை அடுத்த சீர்காழியை சேர்ந்தவர் முருகன் (வயது35), என்ஜினீயர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிலரும் சென்னையில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்கள். இவர் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்து பின்னர் மோட்டார் சைக்கிள்களில் செல்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவு முருகன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் வழியில் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது சுமார் 50 வயதுமதிக்கதக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குபதிவு செய்து இறந்த முதியவர் யார்-எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அம்மாப்பேட்டை அருகே தீயில் கருகிய மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரப்ப கந்தசாமி தெருவை சேர்ந்தவர் சுசிலா (வயது 80). இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டில் உள்ள அடுப்பில் வைத்து பால் காய்ச்சு கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் இருந்த தீ, அவரது சேலையில் பிடித்துக் கொண்டது. இதனால் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் பலத்த காயம் அடைந்த சுசிலாவை, அக்கம், பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்ட சுசிலாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுசிலா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    காரைக்குடி பகுதி ஆத்தங்குடியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 83). இவர் தனது மகன் நாராயணனுடன் ஒரு காரில் புறப்பட்டார். காரை நாராயணன் ஓட்டி வந்தார்.

    அந்த கார் தஞ்சை அருகே அற்புதாபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரில் இருந்த நாச்சியப்பன் மற்றும் அவரது மகன் நாராயணன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாச்சியப்பன் பரிதாபமாக இறந்தார். நாராயணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே சித்த வைத்தியரை யானை மிதித்து கொன்றது.இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள முள்ளங்காடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் கிட்டி (75). சித்த வைத்தியர். நேற்று இவர் மூலிகை பறிக்க வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றார்.

    ஆனால் இரவு நேரமாகியும் கிட்டி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடி வெள்ளியங்கிரி மலை பகுதிக்கு சென்றனர்.

    இன்று காலை முள்ளங்காடு ஊர் தலைவர் ரமேஷ் அத்தி மரக்குட்டை ஜல்லி மேடு பகுதியில் கிட்டியை தேடி சென்றார். அப்போது அங்கு கிட்டி பிணமாக கிடந்தார். அவரது குடல் வெளியே தள்ளியபடி இருந்தது.

    கிட்டியை யானை மிதித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து போளூவாம் பட்டி வனத்துறையினருக்கும் ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வருவாய் ஆய்வாளர் குபேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினார்கள்.

    யானை தாக்கி பலியான கிட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இப்பகுதியில் கடந்த 4 வருடத்தில் 7 பேர் யானை தாக்கி இறந்து உள்ளனர். இதனால் ஆதிவாசி மக்கள் பீதியில் உள்ளனர்.

    கோவை அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை காந்திபார்க் அருகே உள்ள சலீவன் வீதியை சேர்ந்தவர் மோகன் (வயது 61). கூலித் தொழிலாளி. நேற்று மதியம் இவர் தனது சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். ராகவேந்திரா கோவில் அருகே சென்ற போது திடீரென சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மோகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெம்பாக்கம் அருகே ஆட்டோ மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 80). விவசாயி. இவர் நேற்று வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த லோடு ஆட்டோ முதியவர் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த ஆதிநாராயணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SwineFlu

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எருக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து கடந்த 24-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    டாக்டர்கள் கந்தசாமியின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கந்தசாமியை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை கந்தசாமி பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 23 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேரும் என மொத்தம் 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #SwineFlu

    முத்துப்பேட்டை அருகே ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாகர் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ராஜமாள் (வயது 65).

    இவர் நேற்று அப்பகுதியில் உள்ள வளவனார் ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தடுமாறி ஆழத்திற்கு சென்று மூழ்கி இறந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ராஜமாள்ளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அருகே ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல்பஷித் (வயது 76). இவர் சம்பவத்தன்று புதூர் ரெயில்வே கேட்டினை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயில் அப்துல்பஷித் மீது மோதியது. இதில் அவர் பலத்தகாயமடைந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள் படுகாயமடைந்தவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அப்துல் பஷித் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஜேலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த கிருஷ்ணாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ். இவரது மனைவி பத்மாவதி (வயது 65).

    இவருடைய கணவர் எத்திராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    வாலாஜா அரசு பெண்கள் கல்லூரி பின்புறம் உள்ள அம்மனந்தாங்கல் ஏரிக்கு 100 நாள் வேலைக்காக சென்றார்.

    அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து மேட்டுரூக்கு சென்ற தனியார் பஸ் பத்மாவதி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பத்மாவதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பத்மாவதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி அருகே நிவாரண முகாமில் தங்கியிருந்த 85 வயது மூதாட்டி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாமில் கடந்த 9 நாட்களாக தங்கி உள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோமாளபேட்டை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கி உள்ளனர். இந்த முகாமில் அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் மனைவி பக்கிரிஅம்மாள் (வயது85) என்பவரும் தங்கி இருந்தார்.

    கூலித் தொழிலாளியான இவரது கூரை வீடு புயலால் இடிந்து விட்டதால் 9 நாட்களாக முகாமில் தங்கி இருந்து வந்தார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அவர் 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பக்கிரி அம்மாள் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென இறந்து விட்டார்.

    இதையடுத்து முகாம் பணியை பார்வையிட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி அவரது மகள் மல்லிகா என்பவர் கோட்டூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #Gajastorm

    ×