என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Eknath Shind"
- கேபினட் மந்திரிகளான அனில் பரப், சுபாஷ் தேசாய் ஆகியோர் எம்.எல்.சி.க்கள் ஆவர்.
- சுபாஷ் தேசாயின் எம்.எல்.சி. பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது.
மும்பை :
சிவசேனாவை சேர்ந்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக கடந்த 20-ந்தேதி நள்ளிரவு ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்து அவர், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தி சென்று அங்குள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் 12 முதல் 15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களே இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் படிப்படியாக சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தனர். இதில் நேற்று மாநில உயர் கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த், ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தார்.
இவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்த 9-வது சிவசேனா கேபினட் மந்திரி ஆவார். தற்போது சிவசேனா சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான கேபினட் மந்திரிகளில், ஆதித்ய தாக்கரே மட்டுமே உத்தவ் தாக்கரேவுடன் உள்ளார். மற்ற கேபினட் மந்திரிகளான அனில் பரப், சுபாஷ் தேசாய் ஆகியோர் எம்.எல்.சி.க்கள் ஆவர்.
இதில் அனில் பரப் அமலாக்கத்துறை பிடியில் உள்ளார். சுபாஷ் தேசாயின் எம்.எல்.சி. பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது.
- மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- அதிருப்தி எம்.எல்.ஏ.வின் அலுவலகம் சிவசேனா தொண்டர்களால் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல் மந்திரியாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 40க்கு மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்களுடன் அசாமின் கவுகாத்தியில் ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்களைக் கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, புனேவில் உள்ள பாலாஜி நகரில் பராண்டா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. தனாஜி சாவந்த் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கினர்.
இதேபோல், பல்வேறு பகுதிகளில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் தனாஜி சாவந்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்