search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ekadasi"

    • சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டது

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை.
    • கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.

    முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வர பலத்தால் அவன் பல கொடுமைகளை செய்து வந்தான். குழந்தைகளை மிதித்தும். குணசீலர்களை கொடுமை படுத்தியும், யாகங்களை சிதைத்தும், பெண்களின் கர்ப்பை சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.

    அவனது கொடுமைகளை தாங்க முடியாமல் மண்ணவரும், விண்ணவரும்பெரும் துயரம் அடைந்தனர். சங்கசூடனை அழிக்க வழிதெரியாமல் திணறினார்கள். கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள். அதனால் கோபமடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கசூடனுக்கும் யுத்தம் நடந்தது. ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை.

    அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்று தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசம் ஆகும். அந்த கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாது என்று மும் மூர்த்திகளும் உணர்ந்தனர். சங்கசூடனின் மனைவி துளசி மகா பதி விரதை, கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.

    அழகு, அன்பு, கருணை, அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரணாக விளங்கியது. துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்பினுக்கு அரணாக விளங்கும் துளசியை புகழ்ந்து தோத்திரம் சொல்வதை தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.

    பிறகு 10 தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார். வைகுந்த வாசனே தன்னை துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள். நெஞ்சம் நெகிழ்ந்தாள் மிகவும் மகிழ்ந்தாள். அன்பை பொழிந்தாள். அவரை வாயார போற்றிப் பாடினாள். ஆடினாள்.

    கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார். அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றால் பிறகு ஸ்ரீமஹா விஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள். அவளது உயிர் மகா விஷ்ணு வின் பாதங்களில் ஒளி வடிவாக சென்றடைந்தது. அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது.

    அவளது கேசம் துளசி செடியாக துளசி வசமானது. ஸ்ரீமகா விஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து துவளத்தகமாக்க காட்சி அளிப்பவர் ஆனார். மனைவியை பிரிந்த சங்க சூடன் சக்தி அற்றவனாக மாறினான். அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன. அவனை ஸ்ரீ மகாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்கலங்கள் தந்தருளினார்.

    ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி, பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீ துளசி.

    சாதாரணமாக காண்பவர்களுக்கு செடியின் உருவமாகவும், பிணிகளைத் தீர்க்கும் மருந்து செடியாகவும் தெரிவாள். ஆனால் தெய்வீக நோக்குடன் காணும்போது உலகத்தை விளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவமாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீ துளசி மாதா. ஸ்ரீ மகாலட்சுமியே இந்த துளசி செடியாய் மாறி ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார்.

    துளசி இல்லாத பூஜையை மகா விஷ்ணு ஏற்றுக்கொள்வதில்லை. திருத்துழாய் என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜை பொருளாக விளங்குவது இந்த துளசியே. துளசி உள்ள இடத்தில் ஸ்ரீமகா விஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார். துளசியினால் விஷ்ணுவை பூஜித்தால் ஆயிரம் பால் குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகா விஷ்ணு அடைகிறார்.

    கடைசி காலத்தில் துளசி தீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும். துளசியினால் ஸ்ரீமகா விஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீ மகா தேவனையும் அர்ச் சிக்க லாம். ஏனெனில் அவர் ஸ்ரீ சங்கர நாராயணராக இருக்கிறார்.

    இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீ துளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வ மங்கலங்களையும் பெறலாம். கன்னிப்பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனை பெறுவார்கள். சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யம்தையும் சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும் படிப்பதை கேட்ப வருக்கும் ஸ்ரீ துளசி மாதாவின் பெரும் கருணையும் ஸ்ரீமகா விஷ்ணுவின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

    • மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள்.

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்.

    உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியி ருப்பதே உபவாசம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு மறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.

    குளிர்ந்த வயிறை சுத்தமாக்குகிறது. இந்நாளில் துளசி இலை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும்.

    • துளசி மாலை சார்த்துங்கள்.
    • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.

    அம்பாள் மட்டுமின்றி, மகாவிஷ்ணுவும் தன் பக்தர்களின் தேவைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார், இந்த ஆடி மாதத்தில்!

    ஆமாம்... அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் விரதம் இருந்து(துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சுக்ல பட்ச துவாதசி திதியில், காலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமமிடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து கேட்டு பெருமாளை வழிபடலாம்.

    துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். முடியுமெனில், சுக்ல பட்ச ஏகாதசியிலும் மறுநாள் துவாதசியிலும் என இரண்டு நாட்களும் பெருமாளை வழிபடலாம். காலையிலேயே நீராடி, பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து வழிபடுங்கள்.

    ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் என பிரித்துக் கொண்டு நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடுங்கள். ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும். உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து அருளுவார் வேங்கடாசலபதி.

    ஏகாதசி திதியில், மகாவிஷ்ணுவை வழிபட்ட பின்னர், ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தனம் - தானியம் பெருகும். அசையாப் பொருட்கள் வீடு மனை என வாங்கும் யோகம் கிட்டும்.

    வீட்டில் சிக்கல், பிரச்சினை என்றிருந்த கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். நல்ல உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி, துவாதசி என்றில்லாமல், மாதந்தோறும் ஏகாதசி, துவாதசியில் பெருமாள் வழிபாடு செய்வதும் ஏகாதசி திதி நாளில், ஐந்து பேருக்கோ உங்களால் முடிந்த அளவுக்கோ ஏதேனும் உணவுப்பொட்டலம் வழங்கி வருவதும் பாவங்களையெல்லாம் போக்கும். புண்ணிய பலன்கள் பெருகும்.

    வேங்கடவனை ஏகாதசியிலும் துவாதசியிலும் வேண்டுங்கள். வேதனைகளையெல்லாம் தீர்த்தருள்வார் ஸ்ரீமந் நாராயணர்.

    • அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
    • தர்ம தேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.

    `முரன்' என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

    அதோடு, எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான். முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரண் அடைந்தார். அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன், தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார்.

    அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார். தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.

    பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை. சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.

    பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.

    அவரை பின்தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலை கொல்வதற்காக, தன் உடைவாளை உருவினான். அப்போது, திருமாலின் உடலில் இருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள்.

    முரன் ஆயுதங்களை எடுத்து போருக்கு தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்து சாம்பலாக்கினாள். பிறகு தர்ம தேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.

    தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு `ஏகாதசி' என்று பெயரிட்டார். மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு `உற்பத்தி ஏகாதசி' என்று அருளினார்.

    இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

    • நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன.
    • பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை.

    திதி என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்பதம் `நிலவின் பிறை தினம்' என பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு திதிக்குமான வடமொழி பெயருக்கு நிகரான தமிழ் பெயர்கள் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதற்கான தகவல் அதில் இல்லை.

    அவை முறையே...

    பிரதமை - ஒருமை

    துதியை - இருமை

    திரிதியை - மும்மை

    சதுர்த்தி - நான்மை

    பஞ்சமி - ஐம்மை

    சஷ்டி - அறுமை

    சப்தமி - எழுமை

    அஷ்டமி - எண்மை

    நவமி - தொண்மை

    தசமி - பதின்மை

    ஏகாதசி - பதிற்றொருமை

    துவாதசி - பதிற்றிருமை

    திரையோதசி - பதின்மும்மை

    சதுர்த்தசி - பதினான்மை

    பவுர்ணமி - நிறைமதி

    அமாவாசை - மறைமதி

    என்பனவாகும்.

    பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை. அவை முறையே "நத்தை திதி", "பத்ரை திதி", "சபை திதி", "இருத்தை திதி", "பூரணை திதி" என அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் மூன்று திதிகளை உள்ளடக்கியது. இதன் படியே பொதுப் பலன்கள் கூறப்படுகிறது.

    • திதி என்பதே காலப்போக்கில் மருவி தேதி ஆகி இருக்கலாம்.
    • பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பர்.

    பிரதமை, துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும், கூர்ந்த அறிவுடையவர்களாகவும், பொருளுடையவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், எந்த செயலையும் சிந்தித்து சிறப்பாக செய்பவர்களாகவும், எந்த திசை நோக்கி சென்றாலும் அங்கு புகழ் பெற்றவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் சாதுவாகவும் இருப்பார்கள்.

    துவிதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    துதியை திதியில் பிறந்தவர்கள் வாய்மை தவறாதவர்களாகவும், பொய் சொல்லாதவர்களாகவும், புகழுடையவர்களாகவும், சொன்ன சொல்லைத் தவறாதவர்களாகவும், தன்னுடைய இனத்தவர்களகளை ரட்சிப்பவர்களாகவும், எவ்வித முயற்சியாலும் பொருள் தேடி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

    திரிதியை, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    திரிதியை திதியில் பிறந்தவர்கள் நற்குணமுடையவர்களாகவும், தீயசெயல்கள் செய்ய அஞ்சுபவர்களாகவும், சுத்தமுடையவர்களாகவும், எந்த ஒரு செயலையும் யோசித்து முடிக்க வல்லவர்களாகவும், பிரபு என்று புகழ் பெறுபவர்களாகவும், பலசாலியாகவும், தேவாலயங்களைத் தேடித்தேடி தருமம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் பூமியில் உள்ளவர்கள் யாவரும் புகழும் மணிமந்திரவாதியாகி பலருடைய நட்பையும் பெற்றவர்களாகவும். எந்த காரியங்களையும் முடிக்க வல்லவர்களாகவும். சித்தியுள்ளவர்களாகவும், பல நாடுகளுக்கு பயணம் செய்து புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

    பஞ்சமி, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ணுபவர்களாகவும், நுட்ப தேகமுடையவர்களாகவும், பெண்களின் மீது விருப்பமுடையவர்களாகவும், மண்ணாசை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

    சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சஷ்டி திதியில் பிறந்தவர்கள் சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவர்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவர்களாகவும், பிரபுக்களின் உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள்.

    திதி - பலன்கள்

    பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை `தேய்பிறை திதி' என்றும், பின்னர் அமாவாசை முதல் பௌர்ணமி வரையான பதினைந்து நாட்களை `வளர்பிறை திதி' என்றும் குறிப்பிடுவர்.திதி என்பதே காலப் போக்கில் மருவி தேதி ஆகியிருக்கலாம். இதனை சமஸ்கிருதத்தில் `கிருஷ்ணபட்சம்', `சுக்கிலபட்சம்' என்பர்.

    இவை முறையே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகும்.

    • தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
    • அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசி சுக்கில பட்ச ஏகாதசி.

    ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து கால கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.

    ஏகாதச எனும் வடமொழிச்சொல் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

    30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறை காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியை சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

    மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர்.

    கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை.

    ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றை தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

    ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினாராம்.

    பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினாராம் இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

    தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது என்றும் துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும், அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

    • பெருமாளின் ஆயுதங்களில் பிரதானமானது சுதர்சனச் சக்கரம்.
    • வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகிறார்கள்.

    பெருமாளின் ஆயுதங்களில் பிரதானமானது சுதர்சனச் சக்கரம். அதை வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகிறார்கள். பக்தர்களுக்குத் துயர் ஏற்படுகிற காலத்தில் ஓடிவந்து நம்மைக் காத்து அருள்பவர் அவரே. 13-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமமான திருப்புட்குழி கிராமத்தில் விஷ ஜுரம் வந்தது. நிறைய மக்கள் அதனால் மடிந்தார்கள்.

    அப்போது வாழ்ந்த மகான் வேதாந்த தேசிகர் அந்த ஜுரம் நீங்குமாறு சுதர்சனாழ்வாரை வேண்டிக்கொண்டு ஸ்தோத்திரம் ஒன்றைச் செய்தார். அதைப் பாடி வேண்டியதும் அந்த ஜுரம் விலகி ஓடியது என்று கூறுவார்கள். அந்த மகிமை மிகு அஷ்டகத்தை ஏகாதசி நாளில் பாடினாலோ, கேட்டாலோ சகல நன்மைகளும் கிடைக்கும்.

    தற்போது நம்மை அச்சுறுத்தும் இந்த நிலையில் இருந்து மீண்டு எழுந்துவர நமக்குத் தேவை இறைவனின் அருளும் மன வலிமையும். அதை நமக்கு அருள சுதர்சன அஷ்டகம் பாடி நாம் சக்கரத்தாழ்வாரை வேண்டிக்கொள்வோம்.

    விரத முறைகள்

    ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள் பெருமாளின் நாமம் ஒன்றினை உச்சரித்துக் கொண்டேயிருக்கலாம். '

    ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா... ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா' என்று 108 முறை சொல்லித் துதிக்க மன வலிமையும் ஆரோக்கியமும் மேம்படும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது.
    • ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.

    ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருப்பதுதான் ஏகாதசி. அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.

    ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், அந்தந்த ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.

    * சித்திரை மாத வளர்பிறையில் ஏகாதசி, 'காமதா ஏகாதசி' என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி 'பாப மோகினி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.

    * வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி, 'மோகினி ஏகாதசி' என்றும், தேய்பிறை ஏகாதசி 'வருதித் ஏகாதசி' என்றும் கூறப்படுகின்றன. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்த பலனைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

    * ஆனி மாத வளர்பிறை ஏகாதசி 'நிர்ஜலா ஏகாதசி' என்றும், தேய்பிறை ஏகாதசி 'அபரா ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் விரதம் மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

    * ஆடி மாத வளர்பிறை ஏகாதசி 'சயனி' என்றும், தேய்பிறை ஏகாதசி 'யோகினி' என்றும் பெயர்பெற்றுள்ளன. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

    * ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி - 'புத்ரஜா'; தேய்பிறை ஏகாதசி - 'காமிகா'. இந்த தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

    * புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, 'பத்மநாபா'; மற்றும் தேய்பிறை ஏகாதசி 'அஜா' ஆகும். இந்நாட்களில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

    * ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா'; தேய்பிறை ஏகாதசி 'இந்திரா'. இந்த ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

    * கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, 'பிரபோதின' எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலன் உண்டு. தேய்பிறை ஏகாதசியான, 'ரமா' தினத்தில் இறைவனுக்கு பழங்களை நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.

    * மார்கழி மாத ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இது மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'உத்பத்தி' ஏகாதசி எனப்படுகிறது. பரமபதம் கிடைக்கச் செய்யும் அற்புத நாட்கள் இவை.

    * தை மாத வளர்பிறை ஏகாதசி 'புத்ரதா' என்றும், தேய்பிறை ஏகாதசி 'சுபலா' என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

    * மாசி மாத வளர்பிறை ஏகாதசி 'ஜெயா' என்றும், தேய்பிறை ஏகாதசி 'ஷட்திலா' என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்கள் முக்தியடைய வழி செய்வார்கள்.

    * பங்குனி தேய்பிறை ஏகாதசி 'விஜயா' எனப்படும். இந்த நாளில் ஏழு வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். வளர்பிறை ஏகாதசி 'ஆமலகி' எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.

    * ஒரு ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி 'கமலா ஏகாதசி' எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

    • மகாவிஷ்ணு படம் வைத்து பூஜை செய்து வணங்க வேண்டும்.
    • ஏகாதசிகளில் உபவாசம் இருந்து ஸ்ரீ மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

    மாதம் இரண்டுமுறை வீதம் ஒரு வருடத்தில் சுமார் 24 ஏகாதசிகள் வந்தாலும் கூட அவைகளில் ஸ்ரீ விஷ்ணு படுத்துக் கொள்ளும் சயன (ஆஷாட) ஏகாதசி ஒன்று. மற்றொன்று ஸ்ரீ மகாவிஷ்ணு திரும்பிப்படுக்கும் பரிவர்த்தன ஏகாதசி. மூன்றாவது ஸ்ரீ மகாவிஷ்ணு எழுந்து கொள்ளும் உத்தான ஏகாதசி என்னும் மூன்று ஏகாதசிகளும் மிக முக்கியமானவை.

    கடவுள் விஷ்ணு, திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் மீது படுத்திருப்பதாக இந்துக்களால் நம்பப்படுகிறது. எனவே இந்த நாள் "தேவசயன ஏகாதசி" ("கடவுள்-உறங்கும் பதினொன்றாவது நாள்") அல்லது ஹரி-சயன ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணு, சயன ஏகாதசியில் தூங்கி, பிரபோதினி ஏகாதசி அன்று விழித்தெழுகிறார் என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த காலம் சாதுர்மாதம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், மழைக்காலத்துடன் ஒத்துப்போகிறது. சயன ஏகாதசி என்பது சாதுர்மாதத்தின் ஆரம்பமாகும். இந்த நாளில் விஷ்ணுவைப் பிரியப்படுத்த பக்தர்கள் சாதுர்மாத விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள்.

    சயன ஏகாதசி அன்று உண்ணாவிரதம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து தானியங்கள், பீன்ஸ், வெங்காயம், சில மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட சில காய்கறிகளை அன்று உண்ணாமல் விலகி இருக்க வேண்டும்.

    இந்த மூன்று ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்து ஸ்ரீ மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும். இதனால் அனைத்து பாவங்களும் விலகும். ஆனி அமாவாசைக்குப்பிறகு வரும் சயன ஏகாதசியான இன்று பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில், பஞ்சுமெத்தையில் ஸ்ரீமகாலட்சுமியுடன் கூடிய ஸ்ரீ மகாவிஷ்ணு படம் வைத்து பூஜை செய்து வணங்க வேண்டும்.

    • நாளை (புதன்கிழமை) சர்வ ஏகாதசி தினம்.
    • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள்.

    புதன் கிழமையும் ஏகாதசியும் இணைந்து வரும் அற்புதமான நாளில், பெருமாளை விரதம் இருந்து வணங்குவோம். ஒரு கை துளசியை பெருமாளுக்கு சார்த்துவோம். நம்மை செம்மையாகவும் சிறப்புடனும் குறைவின்றி வாழச் செய்வார் ஏழுமலையான்.

    பெருமாளை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் நாம் வரங்களைப் பெறுவதற்கும் எத்தனையோ நாட்கள் இருக்கின்றன. புதன் கிழமையும் சனிக்கிழமையும் பெருமாளுக்கு உரிய கிழமைகளாகச் சொல்லப்படுகின்றன.

    அதேபோல், மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம்.

    ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.

    இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தித்து, நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வளம் சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    நாளை (புதன்கிழமை) சர்வ ஏகாதசி தினம். புதன்கிழமையில் ஏகாதசியும் இணைந்து வருவது மிகவும் விஷேசமானது. முக்கியமாக, சர்வ ஏகாதசி நாளான நாளை, விரதம் இருந்து பெருமாளை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். பெருமாளின் திவ்ய நாமங்களைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள்.

    ஆண்கள், பெண்கள் என 8 வயதுக்கு மேல் 80 வயதுக்குட்பட்ட அனைவரும் ஏகாதசி நாளான நாளை காலை முதல் எந்த உணவும் சாப்பிடாமல் (சக்தியற்றவர்கள் உப்பு, காரம் இல்லாத உணவை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு) இரவில் பகவான் நாமாவைச் சொல்லிக் கொண்டு பகவத் கதையைக் கேட்டுக் கொண்டு ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

    உடலில் ஏற்படும் நோய்களும் அஜீரணக் கோளாறு முதலிய நோய்களும் மனதிலுள்ள ஆசை விருப்பு வெறுப்பு போன்றவைகளும் விலகி மகா விஷ்ணுவின் அருளால் தர்மத்துக்கு விரோதமில்லாத விரும்பும் அனைத்தும் கிட்டும்.

    புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். ஒரு கை துளசி பெருமாளுக்கு சார்த்துங்கள். அதேபோல், துளசி தீர்த்தம் பருகுங்கள். எல்லா நல்லதுகளும் தந்தருள்வார் வேங்கடநாதன். இன்னல் என்பதையெல்லாம் இல்லாது போகச் செய்வார் ஏழுமலையான்!

    ×