என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Egg Recipes"
- குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சீஸ் வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 3,
குடைமிளகாய் - 1,
முட்டைகோஸ் - 100 கிராம், (விருப்பப்பட்டால்)
கேரட்- 1,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
சீஸ் - ஒரு சிறு கட்டி,
எண்ணெய் - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை:
முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சீஸை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, கேரட், கோஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள்.
அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள்.
விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம்.
சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள் :
பிரெட் - 2
முட்டை - 1
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப
உப்பு - தேவையான அளவு
சீஸ் - விருப்பத்திற்கேற்ப
வெண்ணெய் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
சீஸை துருவிக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள். பின் அதில் துருவிய சீஸ் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றி மேலே மிளகு தூள் தூவி எடுக்கவும்.
அடுத்ததாக பிரெட்டை வெண்ணெய் தடவி இரு புறமும் டோஸ்ட் செய்து எடுத்து அதன் நடுவே ஆம்லெட்டை இரண்டாக பிரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.
மீண்டும் தவாவை அடுப்பில் வைத்து பிரெட்டை அழுத்தியவாறு இரு புறமும் வெண்ணெய் ஊற்றி வாட்டி எடுக்கவும்.
அவ்வளவுதான் சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் தயார்.
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- அந்த ரெசிபியை செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
சிக்கன் கொத்துக் கறி மசாலா - 100 கிராம்,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கன் கொத்துக் கறி மசாலாவில் இருக்கும் சிக்கனை பிய்ந்து வைக்கவும்,
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் முட்டையை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றவும்.
மூடிவைத்து மிதமான தீயில் பாதி அளவு முட்டையை வேகவிடவும்.
பிறகு அதில் பிய்ந்து வைத்த சிக்கனை முட்டையின் மேல் தூவி மூடிவைத்து 1 நிமிடம் வேகவிட்டு மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.
இப்போது சூப்பரான சிக்கன் ஆம்லெட் தயார்.
- முட்டை, மீன் வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மீன் ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் - 2
முட்டை - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
கொத்துமல்லி தழை - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
மிளகு - விருப்பத்திற்கேற்ப
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
மீன் சூடு ஆறியதும் முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை சிறிது சிறிதாக பிய்த்து வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் பிய்த்து வைத்த மீன், கொத்தமல்லி, மிளகு தூள் தூவவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான வித்தியாசமான மீன் ஆம்லெட் தயார்.
- இந்த சாண்ட்விச்சை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- காலையில் இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் - 4
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
சீஸ் ஸ்லைஸ் - விருப்பத்திற்கேற்ப
சில்லி ஃபிளேக்ஸ் - விருப்பத்திற்கேற்ப
வெண்ணெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முட்டை கலவை செய்ய
முட்டை - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
செய்முறை
பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்
2 பிரெட் துண்டுகளை எடுத்து அதில் ஒன்றின் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து, சில்லி ஃபிளேக்ஸ் தூவவும்.
மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.
தாவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, வெண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தாவாவை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் டோஸ்ட் செய்த சாண்ட்விச்'சை வைக்கவும்.
சான்விச் முழுவதும் ஆம்லெட் வரும் படி மூடவும். நன்றாக வேக விடவும்.
கடைசியாக அடுப்பிலிருந்து எடுத்து பாதியாக நறுக்கவும்.
இப்போது அருமையான ஆம்லெட் சீஸ் சாண்ட்விச் தயார்.
- வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இதை செய்யலாம்.
- காலையில் இட்லி, தோசைக்கு பதில் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள் - 5
முட்டை - 3
பெரிய வெங்காயம் -1
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
சில்லி ப்ளேக்ஸ் - ½ தேக்கரண்டி
மிளகு தூள் - ¾ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
வெண்ணை - 2 - 3 தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சில்லி ப்ளேக்ஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பிரெட்டை எடுத்து கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
தீயை குறைத்து வைக்கவும். அப்போது தான் உள்ளே நன்றாக வேகும்.
ஒவ்வொரு பக்கமும் 1 - 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும், அவ்வபோது திருப்பி போடவும். நன்றாக வெந்த பின்னர் எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான மசாலா பிரெட் ரோஸ்ட் தயார்.
- வீட்டில் முட்டை தோசை செய்து இருப்பீங்க.
- இன்று முட்டை மசாலா தோசை செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
முட்டை - 6
கடுகு - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லி தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
½ tbsp மிளகு தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
அதன் பின் இதனுடன் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து முட்டை உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடாகியதும் இரண்டு கரண்டி மாவை எடுத்து தோசைகளாக ஊற்றி சற்று தடிமனாக ஊற்றவும்.
பின் அதன் மேல் முட்டை மசாலாவை சேர்த்து பின் அதற்கு மேல் பொடியாக நறுக்கி வெங்காயம், கொத்தமல்லி தூவி தோசை கரண்டியால் மெதுவாக அமிக்கி விட்ட பின் சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சுவையான முட்டை மசாலா தோசை தயாராகி விட்டது.
- தோசை, இட்லிக்கும் தொட்டு கொள்ள அருமையான இருக்கும்.
- இந்த ரெசிபியை செய்ய 20 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
முட்டை - 6
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
மசாலா நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
பின்பு மறுபக்கம் திருப்பி விட்டு 2 நிமிடம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான முட்டை மசாலா தயார்!
- இந்த ஸ்வீட் செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களே போதுமானது.
- இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
முட்டை - 3,
பால் - 1 கப் ,
சர்க்கரை - 5 ஸ்பூன் ,
ஏலக்காய்பொடி - சிறிதளவு,
பாதாம், பிஸ்தா - 10 கிராம்
செய்முறை
பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும்.
முட்டையை நன்கு கலங்கி கொள்ளவும்.
ஆறவைத்த பாலை முட்டையில் ஊற்றி நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
அதன்பின் அதில் பொடி செய்ய சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அடுத்து அதில் சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்து அதனை வேறு ஒரு கிண்ணத்தில் மாற்றி இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் ஸ்டாண்ட் போல வைத்து அதன்மேல் கிண்ணத்தை வைக்கவும்.
அதனை மூடி 15 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
அடுத்து சூடு ஆறியதும் இறக்கி அதில் பிஸ்தா, பாதாமை தூவி 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடவும்.
இப்போது சூப்பரான மில்க் புட்டிங் ரெடி.
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும்.
- குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 5
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தாளிக்க
உப்பு - சுவைக்கு
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விட்டு கீறி வைக்கவும்.
வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து முந்திரி பருப்பு சேர்க்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.
பிறகு, இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மீண்டும் மற்றொரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..
பிறகு, அரைத்து வைத்த விழுது, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கூடவே, முட்டையை நான்கு பக்கத்தில் கீறிவிட்டு கலவையுடன் சேர்த்து கிளறி சுமார் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.
அவ்ளோதாங்க.. சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி..!.
- குழந்தைகளுக்கு ஏற்ற அருமையான டிபன் இது.
- இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்
முட்டை - 2
டொமேட்டோ கெட்சப் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - பாதி பழம்
உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், வெள்ளரிக்காயை நீளவாக்கில் மெல்லிதாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
மற்றொரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், சாட் மசாலா தூள், எலுமிச்சைபழச்சாறு ஊற்றி கலந்து வைத்துக்கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து பராத்தாவாக தேய்த்து வைக்கவும்.
தேய்த்த பராத்தாவை சூடான பானில் சேர்த்து இருபுறமும் நெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி முட்டை கலவையை ஊற்றவும்.
பின்பு அதன் மேல் வேகவைத்த பராத்தாவை வைத்து இரண்டு பக்கமும் வேகவிடவும்.
வேகவைத்த பராத்தாவை தட்டில் வைத்து அதில் நடுவில் வெங்காய கலவையை வைத்து, பிறகு சாட் மசாலாவை தூவி அதன் மேல் டொமேட்டோ கெட்சப்பை ஊற்றவும்.
பராத்தாவை நன்கு இறுக்கமாக உருட்டி, பட்டர் பேப்பரில் சுருட்டி வைத்து சூடாக பரிமாறவும்.
இப்போது சூப்பரான சப்பாத்தி முட்டை மசாலா ரோல் தயார்!
- முட்டையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று முட்டையில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 5
வெங்காயம் - 2
தக்காளி - 2
கேரட் - 1
முட்டைகோஸ் -
பச்சை மிளகாய் - 4
தனி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு- சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், முட்டைகோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிடவும், இருபக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான முட்டை வெஜிடபிள் பணியாரம் தயார்!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்